Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
இராணுவம் மக்கள் மோதல் – விசாரணை ஆரம்பம்
இராணுவம் மக்கள் மோதல் – விசாரணை ஆரம்பம்
இராணுவ சேவையிலிருக்கும் சிரேஸ்ட அதிகாரி ஒருவருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிலருக்கும் இடையில் கடந்த ஜூன் 25 ஆம் திகதி ஹபரனை பகுதியில் ஏற்பட்ட
முறுகல் நிலைமை வலுவடைந்ததன் காரணமாக அது தொடர்பிலான உண்மையான விடயங்களை அறிவதற்கான விசாரணைகளை நடத்துவதற்காக, உரிய பொலிஸ் நிலையத்தில்
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு முறைபாடொன்று செய்யப்பட்டுள்ளமையாலும் அது தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிகைகளை
முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல்
ஷவேந்திர சில்வா அவர்களினால் சிரேஸ்ட மேஜர் ஜெனரல்கள் இருவர் அடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விசாரணைகளுக்கு அவசியமான தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் விசாரணை
குழுவினால் திரட்டப்பட்டு வருகின்றது. இது தொடர்பான அறிக்கை விரைவில் இராணுவ தளபதியிடம் கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பா ஒன்றியத்திடம் மண்டியிட்ட இலங்கை
ஐரோப்பா ஒன்றியத்திடம் மண்டியிட்ட இலங்கை
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வழக்கமான ஈடுபாடு மற்றும் உரையாடலின் ஒரு பகுதியாக, நல்லிணக்கத்தின் குறிப்பிட்ட துறைகளிலான முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, தற்போதுள்ள சட்டங்கள், கடந்தகால நடைமுறைகள் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்தல் உட்பட 1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து, ஜூன் 25ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் முன்னுரிமையை மீளாய்வு செய்வதற்காகவும், ஒரு அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்காகவும், அமைச்சரவை துணைக்குழுவுக்கு உதவும் முகமாக அமைச்சரவை துணைக்குழு மற்றும் அதிகாரிகள் குழுவை
நியமிப்பதற்காகவும் ஜூன் 21ஆந் திகதி அமைச்சரவை எடுத்த தீர்மானம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்த நோக்கத்திற்காக, நீதித்துறை, பாதுகாப்பு, வெளிநாட்டு
உறவுகள், பொது பாதுகாப்பு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய புலனாய்வு தலைமை அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதிநிதிளுடன் ஜூன் 24ஆந் திகதி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற மற்றும் தண்டனை அனுபவித்த பதினாறு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர்களுக்கு, அரசியலமைப்பின் 34வது பிரிவின் படி ஜூன்
24ஆந் திகதி ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மேலும் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், நீண்ட காலமாக நீதித்துறைக்
காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய நல்லிணக்க வழிமுறைகளில் முன்னேற்றம் குறித்து தெரிவிக்கையில், 1,230 இழப்பீட்டு உரிமைக்கோரல்களைத் தீர்ப்பதற்காக, ஜூன் மாதத்தில் ரூபா. 79 மில்லியன் தொகையை இழப்பீட்டு அலுவலகத்திற்கு விடுவித்தமையை அரசாங்கம் ஐரோப்பிய
ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது. 3,389 மொத்த இழப்பீட்டு உரிமைக்கோரல்களில், 1,451 இழப்பீட்டு உரிமைக்கோரல்களைத் தீர்ப்பதற்காக மேலதிகமாக ரூபா. 80 மில்லியன் தொகை ஜூன் 29ஆந் திகதி ஒதுக்கப்பட்டது.
வழக்கமான, நல்ல மற்றும் பன்முகத்தன்மையானதொரு உரையாடலை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை அரசாங்கம் பேணி வருகின்றது. 27 சர்வதேச சாசனங்களுடன் நாட்டின்
ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. + வரிச்சலுகையை மீளாய்வு செய்வதில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கும் இடையில் உள்ள ஆக்கபூர்வமான ஒத்துழைப்பும் இதில் உள்ளடங்கும்.
இது சம்பந்தமாக, 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான ஜி.எஸ்.பி. + கண்காணிப்பு செயற்பாட்டில் இலங்கையின் மூன்றாவது சுழற்சி மீளாய்வு நடைபெற்று வருகின்றது. இந்த செயன்முறையின் ஒரு பகுதியாக, இராஜதந்திர இணைப்புக்களின் மூலமாக, ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவைக்
கடைப்பிடித்து, தற்போதைய ஜி.எஸ்.பி. + கண்காணிப்பு சுழற்சியில் பின்தொடர்தல் கேள்விகளுக்கான இலங்கை அரசாங்கத்தின் விரிவான பதிலை வெளிநாட்டு அமைச்சு ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளது. 26 வரிசை அமைச்சுக்கள் / இராஜாங்க
அமைச்சுக்கள் / முகவர் நிலையங்கள் மற்றும் ஆணைக்குழுக்களுடன் கலந்தாலோசித்து வெளிநாட்டு அமைச்சு பதிலளித்தது. மூன்றாம் சுழற்சிக்கான ஜி.எஸ்.பி. + கண்காணிப்புக்
குழுவினர் 2021 செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில் பரஸ்பரம் வசதியான திகதிகளில் இலங்கைக்கு வருகை தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வழக்கமான ஈடுபாட்டின் பிரகாரம், இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட திகதிகளில் ஆட்சி,
ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்ட விதி தொடர்பான செயற்குழுவைக் கூட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மீளாய்வு
செய்வதற்காக 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 24வது அமர்வை ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்தாலோசித்து கூட்டுவதற்கு வெளிநாட்டு அமைச்சு எதிர்பார்க்கின்றது.
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளில் நாட்டின் கணிசமான முன்னேற்றத்தை நிரூபிக்கும் அதே வேளையில், இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதன் நெருக்கமான மற்றும் நல்லுறவு உரையாடலைத் தொடரும்.
இலங்கையின் இணைந்த ஆடை சங்க மன்றம், இலங்கையின் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகளை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே
ஆகியோர் சந்தித்து, நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் ஜி.எஸ்.பி. + வரிச்சலுகையை தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேணுவதை உறுதி செய்வதிலான அரசாங்கத்தின்
உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தினர். ஐரோப்பிய ஒன்றியத்துடனான அரசாங்கத்தின் ஈடுபாட்டைப் புதுப்பிக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட வணிக சபைகளுடனான சந்திப்புக்களும் திட்டமிடப்பட்டுள்ளன.
வெளிநாட்டு அமைச்சு
யாழில் தெரு ரவுடிகள் வீடு புகுந்து அட்டகாசம்
யாழில் தெரு ரவுடிகள் வீடு புகுந்து அட்டகாசம்
மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் ஒருவரைத் தாக்கியுள்ள நிலையில் வீட்டிலிருந்த
பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்தி விட்டு கும்பல் தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் நேற்று (01) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
4 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.
வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவில் காவல்துறை அதிகாரி தற்கொலை
முல்லைத்தீவில் காவல்துறை அதிகாரி தற்கொலை
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (01) பதிவாகியுள்ளது.
கண்டி மாவட்டத்தை சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன்,
குடும்ப பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
துரத்தும் கொரனோ – ஐந்து கிராமங்கள் முடக்கம்
துரத்தும் கொரனோ – ஐந்து கிராமங்கள் முடக்கம்
நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச்
சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
போதை விருந்தில் கலந்துகொண்ட கவர்ச்சி நடிகை கைது
போதை விருந்தில் கலந்துகொண்ட கவர்ச்சி நடிகை கைது
பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போதை விருந்தில் கலந்துகொண்ட கவர்ச்சி நடிகை கைது
ஹீனா பாஞ்சல்
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி மலை அருகே உள்ள சொகுசு பங்களாவில் ரகசியமாக போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து அந்த பங்களாவில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி
பார்ட்டி நடத்தப்பட்டதும், போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது. அதில் கலந்து கொண்ட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நடிகை ஹீனா பாஞ்சலும் ஒருவர். பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர், தமிழில் யாகாவாராயினும் நாகாக்க, கன்னட படமான லொட்டு, தெலுங்கில்
மல்லிபு போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானார்.
நடிகை ஹீனா பாஞ்சல் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே மரத்தில் காய்க்கும் 121 வகையான மாம்பழங்கள்
ஒரே மரத்தில் காய்க்கும் 121 வகையான மாம்பழங்கள்
முகலாயர் மன்னர்கள் ஆட்சியில் பாரசீகத்தில் இருந்து பல்வேறு வகையான மரங்கள் வட மாநிலங்களுக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டன.
உத்தரபிரதேசத்தில் அதிசயம்- ஒரே மரத்தில் காய்க்கும் 121 வகையான மாம்பழங்கள்
மாமரம்
உத்தரபிரதேசத்தின் சகரான்பூரில் உள்ள கம்பெனி தோட்டம் என்ற இடத்தில் அதிசய மாமரம் ஒன்று வளர்ந்துள்ளது. முகலாய மன்னர்கள் காலத்தில் நிறுவப்பட்ட இந்த தோட்டத்தில் வேளாண் கல்வி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த தோட்டத்தில் சுமார் 10 வருடங்களுக்கு முன் 121 வகையான மாமரக்கன்றுகள் ஒன்றாக இணைத்து நடப்பட்டிருந்தது. இந்த மரக்கன்றுகளை உத்தரபிரதேச வேளாண் பயிற்சி நிலைய இணை இயக்குனர் ராஜேஷ் பிரசாத் என்பவர் நட்டார். ஆய்வுக்காக நடப்பட்ட இந்த மரத்தை பராமரித்து காப்பதற்காக தனியாக ஒரு பணியாளரும் அமர்த்தப்பட்டிருந்தார். இந்த மரத்தில் தற்போது 121 வகையான மாம்பழங்கள் கிடைத்துள்ளன.
மாம்பழங்கள்
அதாவது ஒரே மரத்தில் தசேரி, லங்கடா, சவுசா, ராம்கீலா, அமர்பாலி, சஹரான்பூர் அருண், சகரான்பூர் வருண், எல்.ஆர்.ஸ்பெஷல், ஆலம்பூர் உள்ளிட்ட 121 வகை மாம்பழங்கள் உள்ளன. இந்த அதிசய மரத்தை பற்றி அறிந்து அதை காண சகரான்பூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
முகலாயர் மன்னர்கள் ஆட்சியில் பாரசீகத்தில் இருந்து பல்வேறு வகையான மரங்கள் வட மாநிலங்களுக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டன. இவற்றில் பலவகையான மாம்பழங்கள் உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் இன்றும் கிடைத்து வருகின்றன. இதில் குறிப்பிட்ட சில மாம்பழ வகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது நினைவுகூரத்தக்கது.
யாழில் வன்முறை – கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை
யாழில் வன்முறை – கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன்
சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், பொலிஸ் காவலரண்களையும் அதிகரிக்குமாறு சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைய நாள்களாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
வீடுகளுக்குள் அத்துமீறும் வாள்வெட்டுக் கும்பங்கள் அங்குள்ளோரை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகேயிடம் வினவிய போது, வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்கப்படுகின்றன. வன்முறையில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள்.
அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன் சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸ் காவலரண்களை அதிகரிக்குமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்குப் பணித்துள்ளேன் என்று தெரிவித்தார்.
அத்துடன், சில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவை தொடர்பில் விசாரணைகளை இடம்பெறுகின்றன.
பொதுமகன் ஒருவர் தனது முறைப்பாட்டை ஏற்க பொலிஸ் நிலையத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் எனது வட்ஸ்அப் இலக்கத்துக்கு தகவல் அனுப்பியிருந்தார். அவரது முறைப்பாட்டை ஏற்க மறுத்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. அத்துடன், முறைப்பாட்டாளர்கள் பலரது முறைப்பாடுகள் தேங்கிக் கிடைக்கின்றன. அவை தொடர்பில் எனது கண்காணிப்பின் கீழ் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே பொதுமக்கள் வன்முறைச் சம்பவங்கள், பொலிஸ் அலுவலகர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் எனது 0718 592 200 என்ற வட்ஸ்அப் எண்ணுக்கு தகவல்களை வழங்கினால் உடனடி நடவடிக்கைக்கு அறிவுறுத்தல் வழங்குவேன் என்றும் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே தெரிவித்தார்.
அதிகூடிய 50C வெப்பம் -250 பேர் மரணம்
அதிகூடிய 50C வெப்பம் -250 பேர் மரணம்
அமெரிக்கா மற்றும் கனடா ,பசுபிக் பகுதிகளில் தற்போது நிலவி வரும் அதிக கூடிய வெப்பம் காரணமாக 250 பேர் மரணமாகியுள்ளனர்
இந்த வெப்பமானது தற்போது 50C நிலையை எட்டியுள்ளது ,இதனால் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன ,நீர் நிலைகள் வற்றி ,காடுகள் பற்றி எரிகின்றன
காட்டு தீயினை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருகின்றன
உலக
மாட்டுக்கார மணியக்காவுக்கு – மணியடிக்கும் பதிவி – உருட்டு கட்டையோடு அம்மணி
மாட்டுக்கார மணியக்காவுக்கு – மணியடிக்கும் பதிவி – உருட்டு கட்டையோடு அம்மணி
தமிழ் தேசிய விடுதலை போராளிகள் தமிழீழ மண்ணில் வீழ்ந்த பின்னர் அதன் பின்னர் முளைத்தது
நாடு கடத்தும் அரசு ,அதற்குள் எதிர்கட்சி இல்லாத வெட்டு குத்து தாராளமாக நடந்துவருகிறது ,அணி சார் அரசியல் கேவலம் இங்கே தொடர்கிறது
தேசிய நலனில் அக்கறை கொண்டு அர்ப்பணிப்புடன் செயல் பட்டவர்கள் அதில் இருந்து விரட்ட பட்டு
மோசடி மன்னர்கள் கோர தாண்டவம் தலைவிரித்தாடுகிறது
இவ்வாறான நிலையில் மக்களுக்கு மாடு வாங்கி கொடுத்ததாக கூறி அந்த பணத்தை ஆட்டை போட்ட மாட்டுக்கார மணியக்காவுக்கு இப்பொழுது மணி அடிக்கும் பதவி வழங்க பட்டுள்ளதாம்
இந்த பதவியை அடுத்து கரும்புலி சங்கூத ,மணியக்க மணியடிக்க ,உருட்டு கட்டையுடன் ஊர்வலம் வருகிறார் , மேலும் இதற்குள் உள்ள பலருக்கு உருட்டு கட்டை அடி விழ போவதாக உள்ளே தகவல்கள் தெரிவிக்கின்றன
நாடு கடத்தும் அவையில் அங்கம் பெற விரும்பினால் ,லஞ்சம் ,ஊழல்,மோசடி செய்தவர்கள் தாராளமாக பதவி வகிக்கலாம் ,அது தான் அதனை வழி நடத்தும் பிதா மகனின் தத்துவ கொள்கையாக உள்ளது
அப்புறம் என்ன நீங்களும் விண்ணப்பிக்கலாம் ,மணியக்கா நல்லா தண்ணி குடிப்பாராம் ,ஒரு பாட்டியில் அம்மணி கிளாஸுடன் நின்ற காட்சிகள் அந்த காலத்தில் பிரபலமானது
போத்தல் ஒன்றை வேண்டி கொடுத்து மணி அடித்தால் ,நீங்களும் மன்னர் ஆகலாம் .
கரும்புலி காட்டில் சிங்கங்கள் ,ஓடி விளையாடுகின்றன
சட்டம்பி அந்த மாட்டுக்கார மோசடி கணக்கை ஒருக்கா விசாரிக்க வேணும் ,
அப்புறம் என்ன இனி எல்லாத்தையும் அவிழ்க்கலாம்
- தகவல் -மாட்டுக்கார மணி –
- தகவல் -குஞ்சு –
1.717 சிறை கைதிகளுக்கு கொரனோ
1.717 சிறை கைதிகளுக்கு கொரனோ
இலங்கை சிறைகளில் உள்ள சுமாரா 1,717 கைதிகளுக்கு கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக சிறைச்சாலை ஆணையர் தெரிவித்துள்ளார்
இவர்களுக்கு மேற்கொள்ள பட்ட மருத்துவ சோதனையின் பொழுது மேற்படிவிடயம் தெரிய வந்துள்ளது
மேலும் இருபதுக்கு மேற்பட்ட சிறை கைதிகள் இந்த நோயினால் மரணமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கையர்கள் தமது நாட்டுக்குள் நுழைய துருக்கி தடை
இலங்கையர்கள் தமது நாட்டுக்குள் நுழைய துருக்கி தடை
தமது நாடடுக்குகள் இலங்கையர்கள் உள்ளிட்ட ஆறு நாட்டவர்கள் உள்நுழைய தற்காலிக தடையினை துருக்கிய அரசு விதித்துள்ளது
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்க பட்டுள்ளது
ஆறு கிராமங்கள் ,முடக்கம் – இராணுவம் குவிப்பு
ஆறு கிராமங்கள் ,முடக்கம் – இராணுவம் குவிப்பு
இலங்கையில் பரவி வரும் இரண்டாம் அலை கொரனோ நோயின் தாக்குதல் காரணமாக நான்கு
மாவட்டங்களை சேர்ந்தஆறு கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன
இவ்விதம் அறிவிக்க பட்ட பகுதிகளில் இராணுவம் காவல்துத்துறையினர் குவிக்க பட்டு கண் காணிப்பு பலப்படுத்த பட்டுள்ளது
சிறுவர்களை மிரட்டி கற்பழித்த பெண் கைது – தொடரும் விசாரணை
சிறுவர்களை மிரட்டி கற்பழித்த பெண் கைது – தொடரும் விசாரணை
கண்டி பஹிரவகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள மிட்டாய் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் சிறுவன் ஒருவனை கொடூரமாக தாக்கி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் குறித்த நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி கெடவல விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான அரச தொழில் பயிற்சி நிறுவனத்தினால் குறித்த சிறுவன் அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.
குறித்த மிட்டாய் உற்பத்தி நிறுவனத்திற்கு இவ்வாறு மூன்று சிறுவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவர்களை வீடுகளுக்கு செல்ல விடாமல் நாளாந்தம் கொடூரமாக தாக்கி பணியில் ஈடுபடுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த பெண் ஊழியர் அவரது பாலியல் ஆசையை தீர்த்துக் கொள்வதற்காக குறித்த சிறுவர்களை பலவந்தப்படுத்தியுள்ள நிலையில், அதற்கு இணங்காத சிறுவர்களை கொடூரமாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான மேலும் இரண்டு சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்ற சிறுவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய நிறுவனத்தில் இருந்த மற்றைய சிறுவனின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் கண்டி பொலிஸார் குறித்த இடத்தை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, மீட்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.
கைது செய்யப்பட்ட 41 வயதுடைய பெண்ணுக்கு மேலதிகமாக குறித்த மிட்டாய் நிறுவனத்தின்
உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் சிறுவர்களுக்கு ஆபாச படங்களை காண்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை மிட்டாய் நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸில் சரணடைந்துள்ள நிலையில்
அவருக்கு எதிராக பெண் துஸ்பிரயோக வழக்கு ஒன்று தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேக சாலையில் கார் மேலே வீழ்ந்த மின்னல்
வேக சாலையில் கார் மேலே வீழ்ந்த மின்னல்
Waverly, Kansas. அதிக வேக சாலை ஒன்றில் பயணித்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மின்னல் திடீரென தாக்கியது ,இதன் பொழுது அந்த கார் பலத்த சேதமடைந்துள்ளது
குறித்த கார் மீது மின்னல் தாக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது ,மேற்படி சம்பவ நிகழ்வு பார்ப்பவர்களை மிரள வைக்கிறது
சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் – சசிகலா மீது வழக்குப்பதிவு.
சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் – சசிகலா மீது வழக்குப்பதிவு.
சசிகலா தினந்தோறும் கட்சி தொண்டர்களிடையே தொலைபேசியில் பேசி பரபரப்பு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் – சசிகலா மீது வழக்குப்பதிவு
விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கடந்த 9-ம் தேதி திண்டிவனம் ரோஷணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 7-ம் தேதி வி.கே.சசிகலா குறித்து ஊடகங்களில் சில கருத்துகளைத் தெரிவித்தேன். அதற்கு வி.கே.சசிகலா நேரடியாக பதிலளிக்காமல், தன் அடியாட்களை வைத்து செல்போன்
மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசியும், பதிவிட்டும் வருகிறார்கள். மேலும் செல்போனிலும் என்னை அச்சுறுத்தும் வகையில் 500 பேர் கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்
செல்போன், சமூக ஊடகங்கள் மூலம் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. வி.கே.சசிகலா பற்றி பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்து
விடுவோம் எனவும் மிரட்டுகிறார்கள். இதற்கு வி.கே.சசிகலாவின் தூண்டுதலே காரணமாகும். எனவே கொலை மிரட்டல் விடுக்கவும், ஆபாசமாக பேசவும் காரணமாக இருந்த வி.கே.சசிகலா
மீதும், என் செல்போனுக்கு வந்த அழைப்புகளில் பேசிய மர்ம நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
புகாரின்படி வி.கே.சசிகலா உள்பட 501 பேர் மீது 506(1)-கொலை மிரட்டல், 507- எங்கு இருந்து பேசுகிறோம் என்று குறிப்பிடாமல் அநாகரிகமாக பேசுதல், 109-அடுத்தவரை தூண்டிவிட்டு
கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசுதல், 67 (ஐ.பி. சட்டம்)-தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் வகையிலான தகவலைப் பதிவிடுதல்
உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
லண்டன் எலிபன்ட் காஸ்டல் ரயில் நிலையத்தில் தீ – 6 பேர் காயம்
லண்டன் எலிபன்ட் காஸ்டல் ரயில் நிலையத்தில் தீ – 6 பேர் காயம்
நேற்று திங்கட்கிழமை லண்டன் Elephant and Castle ரயில்வே நிலையத்தில் தீடிரென தீ பரவல்
இடம்பெற்றது இதனை பொழுது அந்த தீயில் சிக்கி ஆறு பயணிகள் காயமடைந்தனர்
மேற்படி தி விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இதனால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்க படுகிறது
வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் – தேடி வரும் மரணம் – மக்கள் கவலை
வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் – தேடி வரும் மரணம் – மக்கள் கவலை
வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் உடல் நிலை குறித்து அண்மை காலமாக சர்வதேச இடங்களில் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய சமயத்தில் கிம் ஜாங் அன் பல மாதங்கள் வெளியுலகில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.
கொரோனா வைரஸ்
இதனால் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், இறந்து விட்டதாகவும் பல்வேறு தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் உலா வந்தன. எனினும் கிம் ஜாங் அன் சில மாதங்களுக்கு பின் பொதுவெளியில் தோன்றி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் மீண்டும் சில மாதங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த கிம் ஜாங் அன், அண்மையில் ஆளும் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றார்.
இதையும் படியுங்கள்…இங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – புதிதாக 22,868 பேருக்கு பாதிப்பு
அப்போது கிம் ஜாங் அன் வழக்கத்தை விடவும் மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டார். இதனால் அவரது உடல்நிலை குறித்து சர்வதேச ஊடகங்களில் மீண்டும் பல்வேறு யூகங்கள் எழ தொடங்கி உள்ளன.
இந்த நிலையில் கிம் ஜாங் அன்னின் தற்போதைய தோற்றம் கண்டு மனமுடைந்த வடகொரிய மக்கள் அவரது உடல்நிலை குறித்து மிகுந்த கவலை கொண்டிருப்பதாக அந்த நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தனது அடையாளங்களை வெளியிட விரும்பாத வடகொரிய பிரஜை ஒருவர், “கிம்மின் தோற்றத்தை நாங்கள் பார்த்தபோது எங்கள் மக்களின் இதயம் மிகவும் வேதனை அடைந்தது. அவரை
பார்க்கிறபோது இயற்கையாகவே தங்கள் கண்ணில் கண்ணீர் வழிவதாக எல்லோரும் கூறுகின்றனர்” என தெரிவித்தார்
இரு கைகளை இழந்து டிக் டாக்கில் கலக்கும் இளம் பெண் – வீடியோ
இரு கைகளை இழந்து டிக் டாக்கில் கலக்கும் இளம் பெண் – வீடியோ
நேபாளத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவ விபத்தொன்றில் சிறு வயதில் இரு கைகளை இழந்த
போதும் தற்போது டிக் டாக் செயலி மூலம் இவர் இரண்டரை மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர்
தன் நம்பிக்கையின் உச்சமாக செயல்ப்பட்டு வரும் அந்த பெண்ணின் வீர செயலை நீங்களும் பாருங்கள்
யாழில் கோட்டா அரசுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்
யாழில் கோட்டா அரசுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் வலி தென்மேற்கு பிரதேசசபை முன்பாக தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்
சிங்கள ஆளும் அரசு அடக்குமுறை ,கைது ,காணி அபகரிப்பு ,தமிழ் கைதிகள் விடுதலை ,எரிந்த
கப்பலினால் ஏற்பட்ட மீனவர்கள் பாதிப்பு ,எரிபொருள் விலையேற்றம் போன்ற கோரிக்கைகள் முன்வைத்து இந்த போரட்டம் இடம்பெற்றுள்ளது
பதவியை பறிகொடுத்த மாவை எம்பி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டன
கொரனோ விதிகளை மீறி ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர் என்ற குற்ற சாட்டில் இவர்கள் கைது செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது






