Posted in Uncategorized

கணவன் வெளிநாட்டில் – பிறந்த சிசுவை எரித்த மனைவி

கணவன் வெளிநாட்டில் – பிறந்த சிசுவை எரித்த மனைவி

இலங்கைகந்தளாய் பகுதியதில்க் 35 வயதுப் பெண் ஒருவர் குழந்தையை பெற்று அதனை எரித்துள்ள சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

இவரது கணவர் வெளிநாட்டில் உள்ளநிலையில் கள்ள காதல் மூலம் இந்த குழந்தை பிறந்துள்ளது ,இதில் இருந்து தான் தப்பித்து கொள்ளும் நோக்குடன் சிசுவை எரித்துள்ளது தெரிய வந்துள்ளது

இப்பொழுது கணவணும் இல்லை ,கள்ள காதலானும் இல்லை ,அம்மணி சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

உள்ளாடை அவிழ்க்கையில உன்னை நீ நினைக்கவில்லை ,வெள்ளாடை புகுந்த பின்ன வெருண்டு நின்று அழுததென்ன

    Posted in Uncategorized

    கொழும்பில் 14 வகையான கொரனோ வைரஸ் கண்டு பிடிப்பு

    கொழும்பில் 14 வகையான கொரனோ வைரஸ் கண்டு பிடிப்பு

    இலங்கை கொழும்பு பகுதியில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட நோய் தோற்று வைரஸ் சோதனையில்

    கொரனோ மரபணு மமாற்ற பட 14 வகையான தொற்றுக்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது

    இது இலங்கையில் சீனா புதிய வகை உயிக்கொல்லி நோயினை பரப்புகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

      Posted in Uncategorized

      புலிகளை மீள் உருவாக்கிய குற்ற சாட்டில் நபர் கைது

      புலிகளை மீள் உருவாக்கிய குற்ற சாட்டில் நபர் கைது

      முல்லைதீவில் புலிகளை மீள் உருவாக்கினார் என்ற குற்ற சாட்டில் 41 வயதுடைய தமிழர் ஒருவரை சிங்கள அரசு கைது செய்துள்ளது

      2019 ஆண்டு இந்த செயலை இவர் புரிந்ததாக கூறி ,இராணுவம் தேடுதலில் ஈடுபட்ட நிலையில் இலங்கையில் இருந்து

      தப்பி சென்று கட்டாரில் பதுங்கி இருந்த நிலையில் ,நீதி மன்ற உத்தரவின் பின்னர் இவர் இலங்கைக்கு நாடு கடத்த பட்டு கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        Posted in Uncategorized

        கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வா் தீவிர நடவடிக்கை

        கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வா் தீவிர நடவடிக்கை

        கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறாா் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

        தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஊரகப் பகுதியில் நடைபெற்ற பல்வேறு பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதுதொடா்பாக தொடா்ந்து ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

        திமுகவின் தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி கச்சத்தீவை மீட்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா்.

        தமிழக அரசு தடுப்பூசி கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது. இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி செய்யும் மையத்தை தமிழக அரசே திறக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

        திமுக ஆட்சியில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வழங்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத் தேரை கடந்த அதிமுக அரசு முடக்கி வைத்திருந்தது. இந்த தங்கத் தேரின் சீரமைப்புப்

        பணிகளை விரைந்து மேற்கொள்ள கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

          Posted in Uncategorized

          எமது நாட்டை விட்டு துருக்கி இராணுவம் வெளியேற வேண்டும் – தாலிபான்கள் எச்சரிக்கை

          எமது நாட்டை விட்டு துருக்கி இராணுவம் வெளியேற வேண்டும் – தாலிபான்கள் எச்சரிக்கை

          ஆப்கானில் அமெரிக்கா மற்றும் பல்நாட்டு படைகள் வெளியேறிய நிலையில் தற்பொழுது துருக்கிய இராணுவம் அங்கு நிலை கொண்டுள்ளது

          மேற்படி துருக்கிய படைகள் குவிப்புக்கு எதிராக தாலிபான்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன

          உடனடியாக விலக வேண்டும் தவறின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தாலிபான்கள் எச்சரித்துள்ளது பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது

            Posted in Uncategorized

            அமெரிக்காவில் எரியும் காடு -1,200 ஏக்கர் நாசம்

            அமெரிக்காவில் எரியும் காடு -1,200 ஏக்கர் நாசம்

            அமெரிக்காவில் நிலவி வரும் அதிக வெப்பம் காரணமாக ஆயிரத்து இருநூறு ஏக்கர் காடு எரிந்து

            அழிந்துள்ளது ,இங்கு வசித்த பல உயிரினங்களும் பலியாகியுள்ளன

            மேலும் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்களும் வெப்பம் காரணமாக பலியாகியுள்ளனர் என சுயாதீன தகவல்களை தெரிவிக்கின்றன

              Posted in Uncategorized

              சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர ஆர்வமாக உள்ளேன் – ஜாக்கி சான்

              சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர ஆர்வமாக உள்ளேன் – ஜாக்கி சான்

              நடிகர், தற்காப்புக் கலை நிபுணராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என்றும் முத்திரை பதித்தவர் ஜாக்கி சான்.

              சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர ஆர்வமாக உள்ளேன் – ஜாக்கி சான்

              ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் அதிரடிப் படங்களில் நடித்து அசாத்தியமான சண்டைக் காட்சிகளின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர். அதன்மூலம் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

              தனது 8 வயது முதல் நடிக்கத் தொடங்கிய அவர் எழுத்தாளராகவும், இயக்குநராகவும் பல திரைப்படங்களை ஹாங்காங்கில் எடுத்துள்ளார். இந்தியாவிலும் குறிப்பாக, தமிழகத்திலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

              இதற்கிடையே, ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்த அங்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு நடைமுறைப்படுத்தியது. இதை எதிர்த்து ஹாங்காங் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு

              வருகின்றனர். இந்த விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக நடிகர் ஜாக்கி சான் கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தார். இதனால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

              சீன கொடி

              சீன திரைப்பட சங்கத்தின் துணைத்தலைவராக பதவி வகித்து வரும் ஜாக்கி சான், பீஜிங்கில் நேற்று நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

              கடந்த சில ஆண்டுகளில் சீனா மிக வேகமாக முன்னேறி வருகிறது. இதை பல நாடுகளுக்குச் செல்லும்போது நேரடியாக நான் உணர்ந்துள்ளேன். சீன குடிமகனாக இருப்பதில் பெருமை

              அடைகிறேன். ஐந்து நட்சத்திரங்களை உடைய நமது சிவப்புக் கொடிக்கு உலகம் முழுதும் மரியாதை கிடைக்கிறது.

              சீன கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை மிக குறைந்த காலத்திலேயே நிறைவேற்றி வருகிறது. எனவே, அக்கட்சியில் உறுப்பினராக சேர ஆர்வமாக உள்ளேன் என்றார்.

                Posted in Uncategorized

                அந்தமானில் நில நடுக்கம் -சுனாமி தவிர்ப்பு

                அந்தமானில் நில நடுக்கம் -சுனாமி தவிர்ப்பு

                இன்று அதிகாலை வேளை அந்தமான் பகுதியில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது
                ,இது ரிக்டர் அளவுகோலில் 4.2 பதிவாகியுள்ளது

                இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

                  Posted in Uncategorized

                  கட்டம் கட்டமாக கூடிய விரைவில் பாடசாலைகளை அரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

                  கட்டம் கட்டமாக கூடிய விரைவில் பாடசாலைகளை அரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

                  சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கட்டம் கட்டமாக கூடிய விரைவில் பாடசாலைகளை

                  அரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பிரீஸ் தெரிவித்தார்.

                  இதன் முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகளை வழங்கிய பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் கூறினார்.

                  இன்று (12) ஆரம்பமான ‘இலங்கையில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி’ என்ற திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் இதனை தெரிவித்தார்

                    Posted in Uncategorized

                    சகோதரனை அடித்து கொன்ற குடும்பம் – அதிர்ச்சியில் கிராம மக்கள்

                    சகோதரனை அடித்து கொன்ற குடும்பம் – அதிர்ச்சியில் கிராம மக்கள்

                    மினிபோ, ஹசலக, அத்தேஎல பகுதியில் தந்தை, தாய், சகோதரி மற்றும் சகோதரியின் கணவன் இணைந்து தடியால் தாக்கியதில் 28 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

                    இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இறந்தவரின் தந்தை, தாய், சகோதரி மற்றும் சகோதரியின் கணவன் ஆகியோர் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

                    மஹியங்கனை நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

                    சுனில் நிஷங்க என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

                    இந்த சம்பவம் கடந்த 06ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 08ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

                      Posted in Uncategorized

                      தாயை கோடாரியால் கொத்தி கொன்ற மகான்


                      தாயை கோடாரியால் கொத்தி கொன்ற மகான்

                      போதைபொருளுக்கு அடிமையான மகனால் மேற்கொள்ளப்பட்ட கோடரி தாக்குதலில் படுகாயமடைந்த தாய் உயிரிழந்துள்ளார்.

                      கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                      களுத்துறை பலாதொட்ட பகுதியை சேர்ந்த தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

                      கடந்த மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தையடுத்து, குறித்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

                      சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மகன் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

                        Posted in Uncategorized

                        வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட -கோட்டாபய கடற்படை முகாமுக்கு காணிகள் அபகரிப்பு

                        வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட -கோட்டாபய கடற்படை முகாமுக்கு காணிகள் அபகரிப்பு

                        முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கிருக்கும் கோட்டாபய ராஜபக்‌ஷ

                        கடற்படை முகாமுக்காக அபகரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ள வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான துரைராசா ரவிகரன் தமிழ் மக்களின் காணிகள்

                        அவ்வாறு அபகரிக்கப்படுமாயின் மக்களோடு இணைந்து எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் இறங்குவோம் என எச்சரித்தார்.

                        முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன் 08.07.2021 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலமாக காணிகளை மீண்டும் அளவீடுசெய்து

                        கடற்படைக்கு வழங்க இருப்பதாக காணிகளுக்குரிய தமிழ் மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

                        இது தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

                        “முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மக்களுக்குரிய 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை 2017, 2018 ஆம் ஆண்டுகளில் அபகரிக்க முயற்சிகள்

                        மேற்கொள்ளப்பட்டன. அதற்காக 2017இல் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருந்தது” என்றார்.

                        இருப்பினும் அப்போது இந்த அபகரிப்பு முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணிகளுக்குரிய தமிழ் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர் என

                        நினைவூட்டிய அவர் அதனால் அப்போது அந்த ஆக்கிரமிப்பு முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன என்றார்.

                        நிலஅளவை செய்வதற்காக 2021.07.29 ஆம் திகதி காலை 9 மணிக்கு வருகைதந்து தங்கள் காணிகளின் எல்லைகளையும் விபரங்களையும் இனங்காட்டும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் எனக்குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                        மேலும் தங்களினது காணியினை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் ஆவணத்தின் பிரதி ஒன்றையும் எடுத்துவரும்படியும் குறித்த கடிதத்தின் மூலம் காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

                        இந்நிலையில் கோட்டாபய ராஜபக்‌ஷ கடற்படை முகாம் அமைந்துள்ள தமிழ் மக்களின் காணிகளை அளவீடுசெய்து சட்டரீதியாக ஆக்கிரமிப்புச்செய்யும் முயற்சிகளை உரியவர்கள்

                        கைவிடவேண்டும் எனத் தெரிவித்த ரவிகரன் அந்தக் கடற்படை முகாம் அங்கிருந்து அகற்றப்படவேண்டும் என வலியுறுத்தினார்.

                        “இவற்றுக்கு மாறாக காணி ஆக்கிரமிப்பு முயற்சிகள் தொடர்ந்தால் எமது மண்மீட்புப் போராட்டங்களும் தொடரும்” என்றார்.

                        முல்லைத்தீவு – கரைத்துறைபற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதிகளிலுள்ள 271,6249 ஹெக்டேயர் விஸ்தீரனமுடைய காணிகள்

                        எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அரசாங்கம் எடுத்துக்கொள்ள இருப்பதாக 2017ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதியன்று வௌியான 2030/44ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிப்பொன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

                          Posted in Uncategorized

                          தாலிபான் கட்டு பாட்டுக்குள் வீழ்ந்து கொண்டிருக்கும் ஆப்கான்

                          தாலிபான் கட்டு பாட்டுக்குள் வீழ்ந்து கொண்டிருக்கும் ஆப்கான்

                          ஆப்கனிஸ்தானில் தாலிபான்களின் கட்டு பாட்டுக்குள் அந்த நாட்டின் அதி முக்கிய மாகாணங்கள்

                          வீழ்ந்துள்ள ,இதனை அடுத்து அதிகமான பகுதிகள் தமது கட்டுப் பாட்டுக்குள் உள்ளதாக தாலிபான் அறிவித்துள்ளது

                          அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் அந்த மண்ணில் இருந்து விலகிய நிலையில் இருபது

                          வருடங்களின் பின்னர் தாலிபான்கள் தமது தாக்குதல்களை வேகப்படுத்தி வருகின்றனர்

                          அமெரிக்காவின் ஆதரவில் செயல் பட்டு வந்த ஆளும் அரசு ,கவிழ்க்க படும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது

                            Posted in Uncategorized

                            மக்களுக்குள் புகுந்த கார் – 13 பேர் காயம்

                            மக்களுக்குள் புகுந்த கார் – 13 பேர் காயம்

                            ஒஸ்ரியாவில் மக்கள் கூட்டத்துக்குள் வேகமாக வந்த கார் ஒன்று புகுந்துள்ளது ,இந்த கார் நுழைந்ததினால் சுமார் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                            இந்த காரை செலுத்தி வந்த 87 வயது முதியவர் மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

                            இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                              Posted in Uncategorized

                              ரஷியா மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் – அமெரிக்கா

                              ரஷியா மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் – அமெரிக்கா

                              கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அரசின் முக்கிய துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

                              ரஷியா மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் – அமெரிக்கா எச்சரிக்கை
                              அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

                              ரஷியாவில் இருந்து வரும் சைபர் தாக்குதல்களை தடுக்க முறையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

                              அமெரிக்காவில் சமீப காலமாக சைபர் தாக்குதல் மிக பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.‌ கடந்த ஆண்டு டிசம்பர்

                              மாதம் அமெரிக்க அரசின் முக்கிய துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

                              அமெரிக்காவின் உள்துறை, பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் போன்ற 9 அரசு துறைகள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார்

                              நிறுவனங்கள் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷியா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ரஷியா அதனை திட்டவட்டமாக மறுத்தது.

                              இந்த நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான ‘கசேயா’ மீது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ‘ரான்சம்வேர்’ தாக்குதல் நடத்தப்பட்டது. இது கடந்த டிசம்பர் மாதம் அரசு

                              துறைகளை குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலை விட பல மடங்கு பெரிது என சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவித்தனர்.

                              ‘கசேயா’ நிறுவனம் பெரிய மற்றும் சிறிய வர்த்தக நிறுவனங்களின் மென்பொருள் பாதுகாப்பு

                              மற்றும் பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் நிறுவனம் என்பதால் இந்த நிறுவனம் மீதான சைபர் தாக்குதலால் 1,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.

                              இதனிடையே ரஷியாவை சேர்ந்த ஆர்இவில் எனும் ஹேக்கர் குழுதான் இந்த ‘ரான்சம்வேர்’ தாக்குதலை நடத்தியதாகவும், அந்த ஹேக்கர் குழுவுக்கு ரஷிய அரசு பாதுகாப்பு வழங்கி

                              வருவதாகவும்‌ குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ரஷியா வழக்கம்போல் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

                              இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷிய அதிபர் புதினை நேற்று முன்தினம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். இருவருக்கும் இடையிலான இந்த தொலைபேசி உரையாடல் சுமார் 1 மணி நேரம் நீடித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

                              புதின்

                              இந்த உரையாடலின்போது ரஷியாவில் இருந்து வரும் சைபர் தாக்குதல்களை தடுக்க முறையான

                              நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜோ பைடன் புதினை எச்சரித்தார்.

                              புதினுடனான தொலைபேசி உரையாடலுக்கு பின் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜோ பைடன் இது குறித்து கூறுகையில், “அவரது (புதின்) மண்ணில் இருந்து சைபர்

                              தாக்குதல் வரும்போது, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ரஷிய அரசிடம் இருந்து அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்பதை அவருக்கு மிக தெளிவுப்படுத்தினேன். அந்த சைபர்

                              தாக்குதலில் ரஷிய அரசுக்கு தொடர்பு இல்லை என்றாலும், தாக்குதல் நடத்தியது யார் என்பதை

                              உறுதி செய்ய போதுமான தகவல்களை நாங்கள் அவர்களுக்கு வழங்கினால், அதனைக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.

                              அதனை தொடர்ந்து நிருபர் ஒருவர், “இந்த விவகாரத்தில் ரஷியா ஏதேனும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுமா?” என கேள்வி எழுப்பினார்.

                              அதற்கு பதில் அளித்த ஜோ பைடன், “ஆம், சைபர் தாக்குதல்களை தடுக்க ரஷிய அரசு நடவடிக்கை

                              எடுக்காத பட்சத்தில் அந்த நாடு பொருளாதார தடை உள்ளிட்ட மிகவும் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” என்றார்.

                                Posted in Uncategorized

                                விண்வெளியில் இந்திய பெண்ணுடன் பறந்த பிரிட்டன் பணக்காரன்

                                விண்வெளியில் இந்திய பெண்ணுடன் பறந்த பிரிட்டன் பணக்காரன்

                                இந்த பயணத்தின்மூலம் விண்வெளிக்கு பறந்த மூன்றாவது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை ஸ்ரீஷா பாண்ட்லா பெற்றுள்ளார்.

                                விண்வெளிப் பயணம் வெற்றி… பாதுகாப்பாக திரும்பிய ரிச்சர்டு பிரான்சன் குழு
                                ரிச்சர்ட் பிரான்சன்

                                உலக அளவில் பெரு நிறுவனங்களுக்கு இடையில் விண்வெளி போட்டி நிலவி வரும் நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விர்ஜின் கேலடிக் நிறுவனம், தனது விண்வெளி சுற்றுலா திட்டத்திற்கான இறுதிக்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

                                விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் யுனிட்டி-22 விண்கலம், விஎம்எஸ் ஈவ் என்ற இரட்டை விமானம் மூலம் விண்ணுக்கு அனுப்பபட்டது.

                                இரட்டை விமானத்தில் அனுப்பப்பட்ட விண்கலம்

                                இதில், விர்ஜின் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீஷா பண்ட்லா உள்ளிட்ட 6 பேர் பயணம் மேற்கொண்டனர்.

                                யூனிட்டி விண்கலம் விமானத்தில் இருந்து பிரிந்து, விண்வெளியை நோக்கி தனியாக பறந்தது. விண்வெளியை நெருங்கியதும், அங்கு புவிஈர்ப்பு விசை கொஞ்சம் குறைவாக உள்ள இடத்தில்

                                விண்கலம் மிதந்தது. விண்கலத்தில் இருக்கும் வீரர்கள் விண்வெளி அனுபவத்தை உணர்ந்தனர். விண்வெளியில் இருந்தபடி விர்ஜின் கேலடிக் குழுவினருக்கு பிரான்சன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

                                விண்கலம் சிறிதுநேரம் வெற்றிகரமாக மிதந்தபின் எஞ்சின்கள் எதிர் திசையில் இயக்கப்பட்டு, பூமியை நோக்கி திரும்பி விமானம் போன்று தரையிறங்கியது. விண்கலத்தில் இருந்து வெளியே

                                வந்த குழுவினரை அனைவரும் வாழ்த்தினர். இது தனது வாழ்நாளின் சிறந்த அனுபவம் என பிரான்சன் தெரிவித்தார். விண்வெளியில் பயணம் செய்த அனுபவத்தை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான திட்டங்களையும் அறிவித்தார்.

                                ஸ்ரீஷா பாண்ட்லா

                                இந்த பயணத்தின்மூலம் விண்வெளிக்கு பறந்த மூன்றாவது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை ஸ்ரீஷா பாண்ட்லா பெற்றுள்ளார்.

                                  Posted in Uncategorized

                                  யூரோ கால்பந்து – இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இத்தாலி

                                  யூரோ கால்பந்து – இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இத்தாலி

                                  யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிச்சுற்றில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இத்தாலி.

                                  யூரோ கால்பந்து – இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இத்தாலி
                                  கோல் அடித்த மகிழ்ச்சியில் இத்தாலி வீரர்கள்

                                  16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது.

                                  இன்று அதிகாலை நடந்த போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி, இங்கிலாந்து அணியுடன் மோதியது.

                                  ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா 2-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இத்தாலிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் யாரும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.

                                  கோல் அடித்த லூக் ஷா

                                  ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67-வது நிமிடத்தில் இத்தாலி அணியின் லியனார்டோ போனுக்கி ஒரு கோல் அடித்தார். இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

                                  கூடுதல் நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

                                  இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்றது.

                                    Posted in Uncategorized

                                    15 வயது சிறுமியை கற்பழித்த எம்பி – கைது செய்ய வலைவீச்சு

                                    15 வயது சிறுமியை கற்பழித்த எம்பி – கைது செய்ய வலைவீச்சு

                                    இணையத்தளத்தின் ஊடாக பாலியல் செயற்பாடுகளுக்காக, 15 வயதான சிறுமியொருவர் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                                    இவ்வாறு அச்சிறு​மியை கொள்வனவு செய்து, பாலியல் தேவைக்காக பயன்படுத்திக்கொண்டார் என்றக் குற்றச்சாட்டு

                                    தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் கைது செய்வதற்கு வலைகள் விரிக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

                                    இந்நிலையில், சிறுமிகள் பெண்கள் உள்ளிட்ட 5,000க்கும் அதிகமானவர்களை பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்வதற்கு இணையத்தளங்களின் ஊடாக, விளம்பரம்

                                    செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

                                      Posted in Uncategorized

                                      சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் மரணம் – நடந்தது என்ன ..?

                                      சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் மரணம் – நடந்தது என்ன ..?

                                      யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

                                      சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்த இராமாவில்

                                      கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கஜேன் (வயது 28) என்பரே உயிரிழந்துள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் அவருடைய சடலம் காணப்பட்டுள்ளது.

                                      அவருடைய மரணம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                                      சிவகுமார் கஜேன் யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுவதாக

                                      தமிழ் காங்கிரஸ் கட்சியினரால் ஏற்கனவே கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பட்டியலில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

                                        Posted in Uncategorized

                                        இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ்

                                        இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ்

                                        இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன் தெரிவித்தார்.

                                        இது தடுப்பூசியுடன் தொடர்பான விடயம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

                                        “இதுதொடர்பா விடயம் பத்திரிக்கையொன்றில் தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது. இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நாம் கவனம் செலுத்தும் போது சில விடயங்களை

                                        புரிந்துகொள்ளமுடியும். குறிப்பிட்ட இந்திய நிறுவனம் ஒன்றினால் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் இவ்வாறான எய்ட்ஸ் கூறு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதனால்

                                        இந்தியாவில் இருந்து பெறப்படவிருந்த தடுப்பூசி பெறுகையை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இடை நிறுத்தியது.

                                        அமைச்சரவை விசேட பெறுகை குழுவிடம் இந்த விடயம் முன்வைக்கப்பட்டது. இந்த குழு விரிவாக ஆராய்ந்த பின்னரே நாம் நடடிக்கை மேற்கொண்டோம்.

                                        இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் இவ்வாறான எய்ட்ஸ் கூறு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட விடயம் தொடர்பிலேயே இந்த தலைப்பு செய்தி எழுதப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

                                        பொறுப்பற்ற விதத்தில் பொறுப்பான பத்திரிகை நிறுவனம் இவ்வாறு செய்தி வெளியிடுவதையிட்டு நாம் கவலையடைகின்றோம். தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் பொது

                                        மக்களுக்குள்ள ஆர்வம் மற்றும் நம்பகத்தன்மையை இவ்வாறு சீர்குலைக்கப்படுவதையிட்டு வருந்துகின்றோம் என்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன் கூறினார்.