Posted in Uncategorized

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி

கொஸ்கொட பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் கொஸ்கொட, துவே மோதர கங்கையில் நீச்சல் பழகிய போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா மற்றும் அவரின் பேரன்களான 6 வயதுடைய இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையின் சுழியோடிகளால் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

    Posted in Uncategorized

    பிறந்த சிசுவை கடித்து கொன்ற வளர்ப்பு நாய்

    பிறந்த சிசுவை கடித்து கொன்ற வளர்ப்பு நாய்

    அவுஸ்ரேலியாவில் பிறந்து ஐந்து வாரமான சிசு ஒன்றை அவர்கள் வளர்த்து வந்த வளர்ப்பு நாய் ஒன்று ,இரவு வேளை கடித்துள்ளது

    நாயின் கோர கடியில் பாதிக்க பட்ட சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து மேற்படி சம்பவம் உலக

    மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

      Posted in Uncategorized

      ஆற்றுக்குள் கவிழ்ந்த ரயில்


      ஆற்றுக்குள் கவிழ்ந்த ரயில்

      Salzburg. பகுதியில் ஆற்று அருகில் உள்ள ரயில் சாலை வழியாக பாடசாலை பிள்ளைகளை ஏற்றியவாறு பயணித்த தொடரூந்து தடம் புரண்டது ,இதில் சிலர் காயமடைந்துள்ளனர்

      எனினும் ஏனையவர்கள் உயிராபத்து இன்றி தப்பித்துள்ளனர்

      சீரற்ற கால் நிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        Posted in Uncategorized

        இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸ்

        இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸ்

        டெல்டா வைரசின் பரவும் தன்மை அதிகரித்துள்ளதே தவிர, மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

        இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸ் – பொதுமக்கள் அச்சம்
        கொரோனா வைரஸ்

        உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் பரவத்தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் பின்னர் படிப்படியாக உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது.

        முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என தொடர்ச்சியாக ஒவ்வொரு நாடுகளிலும் பொதுமக்களை கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.

        உலகம் முழுவதும் இதுவரை 18 கோடிக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அவர்களில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் பலியாகி உள்ளனர்.

        கொரோனா வைரஸ்

        கொரோனா வைரஸ் தன்னை தற்காத்துக் கொள்ள அவ்வப்போது உருமாறி வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரசின் டெல்டா ரகம் தற்போது தெற்காசிய நாடுகள் மட்டுமல்லாமல் இங்கிலாந்திலும் பரவி வருகிறது. தற்போது உலகத்தையே இந்த டெல்டா ரகம் அச்சுறுத்தி வருகிறது.

        இந்நிலையில், டெல்டா வகை கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வாரம் 54 ஆயிரத்து 268 புதிய நோயாளிகள் உருவாக்கியுள்ளனர் என இங்கிலாந்து சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

        இதுதொடர்பாக, இங்கிலாந்து சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஜெனி ஹாரிஸ் கூறுகையில், வைரசின் பரவும் தன்மை அதிகமாகியுள்ளதே தவிர, மரணங்களின் எண்ணிக்கை

        அதிகரிக்கவில்லை. தடுப்பு மருந்துகள் நூறு சதவீத பாதுகாப்பு தராது. எனவே மக்கள் சமூக விலகலைப் பின்பற்றி கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றார்.

        இங்கிலாந்தில் டெல்டா பிளஸ் ரகம் குறைவாகவே காணப்படுகிறது. வெறும் 44 பேர் மட்டுமே கடந்த 24 மணி நேரத்தில் டெல்டா பிளஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

          Posted in Uncategorized உலக செய்திகள்

          விமானப்படை விமானம் அவசரமாக தரையிறக்கம்

          விமானப்படை விமானம் அவசரமாக தரையிறக்கம்

          இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

          விமானப்படை விமானம் அவசரமாக தரையிறக்கம் – திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பரபரப்பு
          விமானப்படை விமானம்

          இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்று கேரள வான்பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

          இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போர் விமானத்தை திருவனந்தபுரம் விமான

          நிலையத்தில் விமானி அவசரமாக தரையிறக்கினார். அதில் இருந்த விமானப்படை அதிகாரிகள் எந்தவித பிரச்சினையும் இன்றி தப்பினர்.

            Posted in Uncategorized

            சல்மான் கான் மீது மோசடி புகார்

            சல்மான் கான் மீது மோசடி புகார்

            சல்மான்கான், அவரது சகோதரி அல்விராகான் மற்றும் பீயிங் ஹ்யூமன் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

            சல்மான் கான் மீது மோசடி புகார்… சம்மன் அனுப்பிய போலீஸ்
            சல்மான் கான்


            இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் ஏற்கனவே அரிய வகை மானை வேட்டையாடிய வழக்கில் சிக்கினார். தற்போது அவர் மீது புதிதாக மோசடி புகார் கூறப்பட்டு உள்ளது.

            சண்டிகார் நகரை சேர்ந்த தொழில் அதிபர் அருண் குப்தா என்பவர் சல்மான்கான் மற்றும் அவரது சகோதரி அல்விராகான் ஆகியோர் மீது போலீசில் அளித்துள்ள புகார் மனுவில், ‘’நான் சண்டிகாரில்

            2018-ல் சல்மான்கானின் பீயிங் ஹ்யூமன் நிறுவனம் பெயரில் அதிக பணம் செலவழித்து நகைக்கடை தொடங்கினேன். கடைக்கு தேவையான பொருட்களை அளிப்பதாக சல்மான்கான் தரப்பில் தெரிவித்தனர். ஆனால் சொன்னபடி செய்யவில்லை.

            கடை திறப்பு விழாவில் சல்மான்கான் கலந்து கொள்வார் என்று கூறினர். ஆனால் அவர் வரவில்லை. கடைக்கு தேவையான பொருட்களை அனுப்பாததால் கடந்த வருடம் பிப்ரவரி மாதம்

            முதல் கடை பூட்டப்பட்டு எனக்கு பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டு உள்ளது’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

            சல்மான் கான்

            இந்த புகாரின் பேரில் சல்மான்கான், அவரது சகோதரி அல்விராகான் மற்றும் பீயிங் ஹ்யூமன்

            அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் வருகிற 13-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

              Posted in Uncategorized

              2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை – அரசு அதிரடி

              2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை – அரசு அதிரடி

              உத்தரபிரதேச மாநில மக்கள் தொகை கட்டுப்பாட்டில் மற்றும் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. அதற்காக உத்தேச மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவை தயாரித்து உள்ளது.

              2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை – உத்தரபிரதேச அரசு அதிரடி

              இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை குறைத்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை உள்ளிட்டவை உத்தரபிரதேச அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

              உத்தேச மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவின் வரைவின் படி, உத்தரபிரதேசத்தில் இரு குழந்தைக் கொள்கையை மீறும் எவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில்

              போட்டியிடுவதிலிருந்தும், அரசு வேலைகளில் பதவி உயர்வு பெறுவதிலிருந்தும் அல்லது எந்தவொரு அரசாங்க மானியத்தையும் பெறுவதிலிருந்து தடை செய்யப்படுவார்கள் என கூறப்பட்டு உள்ளது.

              2 குழந்தைகளுக்கு மேல் இருந்தாலும் 4 பேருக்கான ரேஷன் கார்டு மட்டுமே வழங்கப்படும், அவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது ஆகிய அம்சங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

              உத்தரபிரதேச மாநில சட்ட ஆணையம் (யுபிஎஸ்எல்சி) இணையத்தளத்தில் வரைவு மசோதா குறித்து கூறி இருப்பதாவது:-

              மாநில சட்ட ஆணையம், உத்தரபிரதேச மாநில மக்கள் தொகை கட்டுப்பாட்டில் மற்றும் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. அதற்காக உத்தேச மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவை தயாரித்து உள்ளது.

              வரைவு மசோதாவை மேம்படுத்த பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகள் கேட்கப்படுகின்ற அதற்கான கடைசி தேதி ஜூலை 19 என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

              இரண்டு குழந்தை விதிமுறைகளை பின்பற்றும் அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் :-

              இரண்டு குழந்தை விதிமுறைகளை பின்பற்றும் அரசு ஊழியர்களுக்கு முழு சேவையின் போது இரண்டு கூடுதல் ஊதிய உயர்வுகள் கிடைக்கும், மகப்பேறு அல்லது விடுப்பு 12 மாதங்கள், முழு

              சம்பளம் மற்றும் அலவனஸ் மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முதலாளியின் பங்களிப்பு நிதியில் மூன்று சதவீதம் அதிகரிக்கும்.

              ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொள்பவர்களுக்கு இவை தவிர மேலும் பல சலுகைகள் வழங்கப்படும் எனவும் வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

              அரசாங்கத்தின் சேவைகள்:-

              வரைவு மசோதா அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் மகப்பேறு மையங்கள் நிறுவப்படும் என்று கூறுகிறது. இந்த மையங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கருத்தடை

              மாத்திரைகள், ஆணுறைகள் போன்றவற்றை விநியோகிக்கும். சமூக சுகாதார பணியாளர்கள் மூலம் குடும்பக் கட்டுப்பாடு முறைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதோடு, மாநிலம்

              முழுவதும் கர்ப்பம், பிரசவம், பிறப்பு மற்றும் இறப்புகளை கட்டாயமாக பதிவு செய்வதை உறுதி செய்யும்.

              அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான கட்டாய பாடத்தை அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

              Posted in Uncategorized

              வீழ்ந்து நொறுங்கிய விமானம் – ஒன்பது பேர் மரணம்

              வீழ்ந்து நொறுங்கிய விமானம் – ஒன்பது பேர் மரணம்

              சுவீடன் நாட்டின் எல்லை பகுதியில் பறந்து கொண்டிருந்த இலகு ரக விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது

              இதன் பொழுது அதில் பயணித்த ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்

              மேற்படி விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                Posted in Uncategorized

                தாலிபான்களிடம் வீழ்ந்த Tajikistan எல்லை – தப்பி ஓடும் இராணுவம்

                தாலிபான்களிடம் வீழ்ந்த Tajikistan எல்லை – தப்பி ஓடும் இராணுவம்

                ஆப்கனிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் வெளியேறிய நிலையில்

                தாலிபான்கள் தமது மண் மீட்பு தாக்குதலை விரிவு படுத்தினர்

                தற்பொழுது Tajikistan எல்லை தாலிபான்களிடம் வீழ்ந்துள்ளது ,தொடர்ந்து உக்கிர மோதல்கள்

                இராணுவம் மற்றும் தாலிபான்களுக்கு இடையில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                Posted in Uncategorized

                அமெரிக்கா மாடி கட்டட இடிபாட்டில் சிக்கி 64 பேர் மரணம்

                அமெரிக்கா மாடி கட்டட இடிபாட்டில் சிக்கி 64 பேர் மரணம்

                அமெரிக்காவில் உடைந்து வீழ்ந்த அடுக்குமாடி கட்டடத்தில் சிக்கி இதுவரை அறுபத்தி நான்கு பேர் மரணமாகியுள்ளனர்

                மேலும் நூறுக்கு மேற்பட்டவர்களை காணவில்லை

                தொடர்ந்து தேடும் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                காணாமல் போன அனைவரும் இறந்திருக்க கூடும் என நம்ப படுகிறது

                  Posted in Uncategorized

                  தீயில் கருகி 52 பேர் மரணம்

                  தீயில் கருகி 52 பேர் மரணம்

                  பங்களாதேஷில் உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்ஜில் சிக்கி அங்கு பணியாற்றிய ஐம்பத்தி இரண்டு பேர் உடல் கருகி பலியாகினர்

                  மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
                  மேற்படி தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                    Posted in Uncategorized

                    சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபன் கைது

                    சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபன் கைது

                    மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விராளிபத்தனைப் பகுதியில் தனது ஒன்றுவிட்ட 14 வயது சகோதரி ஒருவரை, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 25 வயது இளைஞன் மடுல்சீமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

                    அத்துடன் அச்சிறுமியை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் தாயாரை கைது செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

                    சிறுமிக்கு நோய் ஏற்பட்டதையடுத்து, அச்சிறுமி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற வேளையில், அச் சிறுமி மூன்று மாத கர்ப்பிணியென்று தெரிய வந்துள்ளது.

                    இதனை சிறுமியின் தாய் அறிந்து, அச்சிறுமியை ஹொப்டன் பெருந்தோட்டத்தில் தமது உறவினர் வீடொன்றில் மறைத்து வைத்திருந்தார்.


                    இந்நிலையில்,சிறுமி கர்ப்பிணியாகிய விடயம், பிரதேச குடும்பநல தாதி அறிந்து, மடுல்சீமை பொலிஸ் நிலையத்தின் மகளிர் பிரிவிற்கு புகார் செய்துள்ளார். இதையடுத்து மடுல்சீமை பெண்

                    பொலிசார் ஹொப்டன் தோட்டத்துக்குச் சென்று, சிறுமியிடம் முன்னெடுத்த விசாரணைக்கமைய, சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன் குறித்த தகவல் கிடைக்கப்பெற்று, அவ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

                    இதைத் தொடர்ந்து சிறுமியை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் தாயையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


                    கர்ப்பிணியான சிறுமி தொடர்பான வைத்திய அறிக்கையைப் பெற சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                    கைது செய்யப்பட்ட இளைஞன், விசாரணையின் பின்னர் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.

                    Posted in Uncategorized

                    மனைவியுடன்சண்டை – கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை

                    மனைவியுடன்சண்டை – கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை

                    மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் ஆண் ஒருவர் வீட்டின் கூரையில் தூக்கிட்டுத் தற்கொலை

                    செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

                    இன்று (10) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

                    தாழங்குடா சமுர்த்தி வங்கி வீதியைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான விக்டர் சுஜித்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

                    கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையை அடுத்து சம்பவ தினமான நேற்று (09) மனைவி பிள்ளைகளுடன் அவரது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் தனிமையில் இருந்த

                    குறித்த நபர் வீட்டின் கூரையில் கயிற்றின் உதவியுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

                    Posted in Uncategorized

                    தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்

                    தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

                    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 12-ந்தேதியுடன் முடிவடைகிறது.

                    இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

                    தமிழக அரசு

                    வருகிற 19-ந்தேதி காலை 6 மணி வரை புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                    Posted in Uncategorized

                    5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

                    5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

                    காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

                    சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள 10 பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதல் கட்ட அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

                    இதற்கிடையில், களனி, களு, ஜின் மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் பல பகுதிகளில் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

                    இதன் காரணமாக, ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள நிலைமை குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

                    களனி கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் இதுவரை 150 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்துள்ளது.

                    இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தெஹியோவிட, ருவான்வெல்லை, சீதாவத, தொம்பே, கடுவலை, பியகம, கொலன்னாவை மற்றும் வத்தளை பிரதேச செயலகங்களில் உள்ள களனி கங்கையின் தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

                    Posted in Uncategorized

                    20 வருடங்களின் பின்னர் -பிரிட்டன் படைகள் ஆப்கானில் இருந்து விலகல்

                    பிரிட்டன் படைகள் ஆப்கானில் இருந்து விலகல்

                    இருபது வருடங்களாக ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டு அந்த நாட்டின் வளங்களையும்

                    ,மக்களையும் படுகொலை புரிந்த அமெரிக்கா ,மற்றும் பிரிட்டன் படைகள் தற்போது வெளியேறியுள்ளன

                    இவர்கள் கட்டு பாட்டு பகுதிகள் அனைத்தும் தற்போது தாலிபான்கள் வசம் வீழ்ந்துள்ளது ,மேற்படி

                    படை விலக்கல் நிரந்தரமானதா..? அல்லது மீண்டும் அங்கு இந்த இராணுவம் குவிக்க படுமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது

                      Posted in Uncategorized

                      உலகில் மிக பெரிய வைரம் கண்டு பிடிப்பு

                      உலக

                      உலகில் மிக பெரிய வைரம் கண்டு பிடிப்பு

                      தெற்கு ஆப்பிரிக்காவில் அகழ்வில் ஈடுபட்ட சுரங்க பணியாளர்களினால் உலகில் மிக பெரிய மூன்றாவது வைர கல் ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது

                      இது ஐம்பது வ்ருடம் பழமை வாய்ந்த ஒன்று என தெரிவிக்க பட்டுள்ளது

                      மேற்படி பகுதியில் தொடர்ந்து அகழ்வு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                        Posted in Uncategorized உலக செய்திகள்

                        அமெரிக் தூதரகம் மீது ரொக்கட் தாக்குதல்

                        அமெரிக் தூதரகம் மீது ரொக்கட் தாக்குதல்

                        ஈராக்கில் உள்ள அமெரிக்கா தூதரகம் மீது ஆள் இல்லா உளவு விமான மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது


                        மேற்படி தளத்தின் அருகே ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

                        தொடராக கிரீன் சூன் பகுதி தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

                          Posted in Uncategorized

                          தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறைமையில் மறுசீரமைப்பு

                          தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறைமையில் மறுசீரமைப்பு

                          தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவுக்கு 115 முன்மொழிவுகள் மற்றும் யோசனைகள்

                          கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்குழுவின் தலைவர் சபை முதல்வரும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்தன 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அந்தக் குழுக் கூட்டத்தின் போது தெரிவித்தார்.

                          இலங்கை பாராளுமன்ற பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

                          ஏற்றுக்கொள்ளப்பட்ட 07 அரசியல் கட்சிகளின் மூலம் யோசனைகள் முவைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அந்தக் கட்சிகளுக்கு யோசனைகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

                          அந்த யோசனைகளை sec.pscelectionreforms2021@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது செயலாளர், பாராளுமன்ற விசேட குழு, இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே எனும் முகவரிக்கோ அனுப்பிவைக்க முடியும்.

                          தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேகொள்வது தொடர்பில் 2021 ஜூன் 30 ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற பொதுமக்களின் யோசனைகளை சபைக்கு

                          சமர்ப்பித்தல் மற்றும் அந்த யோசனைகள் பற்றிய சாராம்சம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.

                          உத்தேச மறுசீரமைப்புகள் தொடர்பில் நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

                          இந்தக் குழுக் கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற

                          உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க, கபீர் ஹஷீம், ரஞ்சித் மத்தும பண்டார, எம். ஏ. சுமந்திரன், மதுர விதானகே மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

                          Posted in Uncategorized

                          கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

                          கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

                          கேரளாவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளே இன்னும் மறையாமல் இருக்கும் நிலையில், சிகா வைரசும் தலைகாட்டி இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

                          முதல் முறையாக கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

                          குமரி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரளாவை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ஒருவர் காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டு அங்குள்ள தனியார்

                          ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கடந்த மாதம் 28-ந்தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த 7-ந்தேதி குழந்தையும் பிறந்தது.

                          தொடர்ந்து அவதிப்பட்டு வந்த அந்த பெண்ணின் ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

                          இதன் மூலம் கேரளாவில் இந்த தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டு இருக்கிறது. இதை மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் நேற்று தெரிவித்தார்.

                          கேரளாவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளே இன்னும் மறையாமல் இருக்கும் நிலையில், சிகா வைரசும் தலைகாட்டி இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.