கறுப்பு ஜூலை 38 வது ஆண்டு இன படு கொலையை நினைவு கூர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் photo
தமிழ் மக்களின் அழிப்புக்கு நீதி வேண்டி கண்டன போராட்டம் ஒன்றை சட்ட விதிகளை பின் பற்றி அமைதியான முறையில்
தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் மற்றும் தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பும் இணைந்து இன்று 23/07/2021 மதியம் ஒரு மணிக்கு பிரித்தனியாவில் உள்ள இலங்கை
தூதரகத்துக்கு முன்னால் ,பிரித்தானிய காவல்துறையினர் முன்னிலையில், மாபெரும் கண்டன
போராட்டத்தை நடத்தினர் ..
இதன் போது
கறுப்பு ஜூலை கொலை வெறியின் நினைவு படங்ககளை தாங்கிய வண்ணம் போராட்டங்கள் இடம்பெற
அங்கு நடை பெற்ற நிகழ்வுகளை உள்ளே இருந்து ஜன்னல் வழியாக
சிங்கள அதிகாரிகள் படம் பிடித்ததாக பங்கு பற்றியவர்கள் தெரிவித்தனர் .