Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
அஜித்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண்
அஜித்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண்
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது ‘வலிமை’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டின் முன்பு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
போலீசார் கைது செய்த போது தனது சாவிற்கு அஜித் தான் காரணம் என சொல்லிக் கொண்டே சென்றார். இவர் நடிகர் அஜித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்த போது வீடியோ
எடுத்து வெளியிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்ததால் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
மகிந்தா -இந்தியாவுக்கு இடையில் பேச்சு
மகிந்தா -இந்தியாவுக்கு இடையில் பேச்சு
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா நான்கு நாள் அரசுமுறை பயணமாக இலங்கை சென்றுள்ளார்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்தார் இந்திய வெளியுறவு செயலாளர்
பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் சந்திப்பு
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன், கொழும்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை நேற்று சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக ஹர்ஷ்வர்தன் கூறுகையில், இந்தியாவின் நெருங்கிய நண்பரான இலங்கை பிரதமர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினேன்.
இந்த பேச்சு இருநாடுகளின் பரஸ்பர நல்லுறவுக்கு வலு சேர்க்கும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது. தொடர்ந்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவையும் சந்திக்க உள்ளேன் என தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணம் பலாலிக்கு சென்ற ஹர்ஷ்வர்தன், அங்கு இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டு வரும் விமான நிலையப் பணிகளைப் பார்வையிட்டார்.
பிரிட்டனில் -தொடரும் எரிபொருள் தட்டு பாடு – இராணுவ சாரதிகள் களத்தில் குதிப்பு
பிரிட்டனில் -தொடரும் எரிபொருள் தட்டு பாடு – இராணுவ சாரதிகள் களத்தில் குதிப்பு
பிரிட்டனில் தொடர்ந்து எரிபொருள் தட்டு பாடு நிலவி வருவதால் இராணுவ சாரதிகள் களத்தில்
குதித்துள்ளனர் ,தொடர்ந்து மக்கள் பீதியடைந்து வருவதால் இந்த நிலை ஏற்படுவதாக தற்போது
ஊடகங்கள் மூலம் பரப்புரை நடக்கிறது ,எனினும் உரிய முறையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அரசு தவறி வருவதாக குற்றம் சுமத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்காது
ரசியா புதிய hypersonic ஏவுகணை சோதனை
ரசியா புதிய hypersonic ஏவுகணை சோதனை
ரசியா கடலடி நீர்மூழ்கி கப்பலில் இருந்து புதியவகை hypersonic ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது
குறித்த ஏவுகணையானது தனது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்து வெற்றியை தேடி தந்துள்ளதாக ரசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
இதே போன்ற ஏவுகணையை வடகொரியாவும் சோதனை சையது இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
மோஸ்க்கோவில் 8 தீவிரவாதிகள் கைது – பெரும் முறியடிப்பு
மோஸ்க்கோவில் 8 தீவிரவாதிகள் கைது – பெரும் முறியடிப்பு
மோஸ்க்கோவில் பெரும் தாக்குதலை நடத்தும் முகமாக ஊடுருவி இருந்த 8 தீவிரவாதிகளை தாம் கைது செய்துள்ளதாக ரசிய உளவுத்துறை தெரிவித்துள்ளது
நன்கு திட்டமிட்ட பெரும் தாக்குதலை நடத்திட இவர்கள் தயாராக இருந்த நிலையில் இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
Facebook, Whatsapp and Instagram உலகம் முழுவதும் தடை
Facebook, Whatsapp and Instagram உலகம் முழுவதும் தடை
Facebook, Whatsapp and Instagram என்பன உலகம் தழுவிய நிலையில் தடை பட்டுள்ளது ,இதனால் பல மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
பேஸ்புக் நிறுவனத்தின் உயர் தொழில் நுப்ட பிரிவினர் தலைவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது
விரைவில் இவை செயல் பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்
2019 ஆம் ஆண்டு 14 மணித்தியாலங்கள் இவ்வாறூ தடை பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
லண்டனில் -பள்ளியில் சிறுவர் மரணம் – அடித்து பூட்டு
லண்டனில் -பள்ளியில் சிறுவர் மரணம் – அடித்து பூட்டு
லண்டன் கென்ட் பகுதி elly Beans Day Nursery in Ashford சிறகை பாடசாலை ஒன்று திடீரென அடித்து மூட பட்டுள்ளது
அங்கு கல்வி பயின்று மாணக்கர் ஒருவர் பலியான நிலையில் இந்த அடித்து பூட்டு இடம்பெற்றுள்ளது ,தொடர்ந்து இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
தாய்வான் மேலாக பறந்த சீன விமானங்கள்
தாய்வான் மேலாக பறந்த சீன விமானங்கள்
தாய்வான் நாட்டின் மேலாக சீன விமானங்கள் பறந்துள்ள நிலையில் நாடுகளுக்கு இடையில் பெரும் போர் பதட்டம் இடம்பெற்று வருகிறது
சீனாவின் இந்த அத்துமீறலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
தாய்வான் தொடர்ந்து தங்களின் நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறி வரும் நிலையில் இந்த சர்ச்சை வெடித்துள்ளது
கருப்பு பணம் மூலம் வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த 35 உலக தலைவர்கள்
கருப்பு பணம் மூலம் வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த 35 உலக தலைவர்கள்
அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்து உள்ளதும், சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும் அம்பலமாகி உள்ளது.
கருப்பு பணம் மூலம் வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த 35 உலக தலைவர்கள்
இம்ரான்கான்
பிரபலங்கள் முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதும், சொத்துக்களை வாங்கி குவித்து உள்ளதும் தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியாகி உள்ளது.
சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மூலம் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களில் இருந்து கசிந்த ஒரு கோடியே 19 லட்சம் ஆவணங்களை 600-க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டு உள்ளனர்.
இதில் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்து உள்ளதும், சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும் அம்பலமாகி உள்ளது.
இந்த பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஜோர்டான் மன்னர், செக்குடியரசு பிரதமர் உள்ளிட்ட சுமார் 35 தற்போதைய மற்றும் முன்னாள் அரசியல் தலைவர்கள் பெயர் இடம் பெற்று உள்ளன.
இம்ரான்கானுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இம்ரான்கான் அமைச்சரவையில் நிதி மந்திரியான பயாஸ் அகமது கரீப், அவரது குடும்பத்தினர் மற்றும் சில மந்திரிகள் கோடிக்கணக்கான பணத்தில் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை ரகசியமாக வைத்திருப்பது தெரிய வந்தது.
ஜோர்டான் மன்னர் அப்துல்லா வெளிநாடுகளில் ரூ.745 கோடிக்கு சொத்து குவித்ததற்கான ஆவணங்களும் வெளியாகி உள்ளது. அவர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 14 ஆடம்பர பங்களாக்களை ரகசியமாக வாங்கி உள்ளார். மேலும் 38 போலி கம்பெனிகளை உருவாக்கி உள்ளார்.
செக்குடியரசு பிரதமர் ஆந்த்ரே பேபிஸ் பிரான்சின் தெற்கு பகுதியில் ரூ.163 கோடி மதிப்பில் ஆடம்பரமான சொத்துக்களை வாங்கி இருந்ததும் தெரிய வந்தது. இந்த சொத்துக்களை அவர் முறையாக தெரிவிக்காததும் அந்த ஆவணத்தில் இடம் பெற்று உள்ளது.
இந்த வார இறுதியில் செக் குடியரசில் தேர்தல் நடக்கிறது. இந்தநேரத்தில் அவரது பெயர் பண்டோரா பேப்பர்ஸ் பட்டியலில் இடம் பெற்றது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
அஜர்பைஜான் அதிபர் இல்காம் அலியேனின் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் இங்கிலாந்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக்களை ரகசியமாக வாங்கி உள்ளனர்.
கென்யா அதிபர் உஹுரு கென்யாட்டா மற்றும் அவரது குடும்பத்தினர் ரகசியமாக வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
புதின்
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பெயர் நேரடியாக இடம் பெறவில்லை. ஆனால் மொனாக்கோவில் அவரது கூட்டாளிகள் ரகசியமாக சொத்து சேர்த்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பிரதேச சபை உறுப்பினர் கைது
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பிரதேச சபை உறுப்பினர் கைது
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரெழு பகுதியில், நேற்றைய தினம் (03) இரவு, பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக்கவசமின்றி பயணித்துள்ளனர்.
அவர்களை வழிமறித்த பொலிஸார், சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கி, அபராத பத்திரத்தை எழுத முற்பட்ட போது, அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர், பொலிஸாருடன் முரண்பட்டார்.
அவரது நடவடிக்கை எல்லை மீறிச் சென்றதனால் பொலிஸ் உத்தியோகத்தர் வானத்தை நோக்கி இரண்டு தடவை சூடு நடத்தி எச்சரித்தனர்.
அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவரையும், தமது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் எனும் குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் தன்னை ஈபிடிபி கட்சி என அறிமுகப்படுத்தி பல தடவைகள் பொலிஸாருடன் முரண்பட்டு, கடமைக்கு இடையூறு விளைவிப்பவர் என்றும் பொலிஸார் கூறினர்.
உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட ஊழல் பட்டியலில் நிரூபமா ராஜபக்ஷ
உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட ஊழல் பட்டியலில் நிரூபமா ராஜபக்ஷ
உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு, கோடிக் கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் ‘பென்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் நேற்று (03) வெளியானது.
இதில் இலங்கையின் பிரபல பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசனின் மனைவியும், ராஜபக்ஷர்களின் நெருங்கிய உறவினரும், நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடங்கியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில், நிரூபமா ராஜபக்ஷ, பிரதியமைச்சராக பதவி வகித்தார்.
2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நிரூபமா ராஜபக்ஷ பிரதி நீர்வளங்கள் அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், சொந்த நாட்டில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்யும் தகவலின் இரகசிய ஆவணங்கள், 2016 இல் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த ஆவணங்கள் வெளியானது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட ஆலோசனை நிறுவனமான மொசாக் போன்செகா, ஒரு கோடிக்கும் அதிகமான இரகசிய ஆவணங்களை, ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் 201 இ6ல் வெளியிட்டது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும் இந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தனர்.
பல தனி நபர்கள், நிறுவனங்களின் முறைகேடுகள் இதில் வெளியாகின. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் அதேபோல் பென்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் இரகசிய ஆவணங்கள் நேற்று (03) வெளியிடப்பட்டன.
பாகிஸ்தான் அமைச்சர்கள் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ளதாகவும், அறக்கட்டளை என்ற பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மற்றும் அவரது மனைவி ஷெரி பிளேயர் , ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் . செக் குடியரசு பிரதமர் எண்ட்ரேஸ் பாபிஸ், கென்ய ஜனாதிபதி உஹுரு உள்ளிட்டோர் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சொத்து குவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சைப்ரஸ் நாட்டு ஜனாதிபதி நிக்கோஸ் அனஸ்தேசியேட்ஸ், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஈக்வடார் ஜனாதிபதி கில்லர்மோ லாசோ உட்பட பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் செய்துள்ள முறைகேடுகள் குறித்த ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக இலங்கையில் பிரபல பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசனின் மனைவியும், ராஜபக்ஷர்களின் நெருங்கிய உறவினருமான நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பூ ஏற்றியவர்களுக்கு மாத்திரமே வவுனியா பிரதேச செயலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி
தடுப்பூ ஏற்றியவர்களுக்கு மாத்திரமே வவுனியா பிரதேச செயலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி
கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே வவுனியா பிரதேச செயலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு சேவைகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என வவுனியா பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
குறித்த நடைமுறை இன்றைய (04) தினத்திலிருந்து நடைமுறைக்கு வரும்.
சேவை பெறுவதற்கு வருகை தருவோர் தடுப்பூசி அட்டையினையும், தேசிய அடையாள அட்டையினையும் தம்வசம் வைத்திருப்பது அவசியமாகும்.
குறைந்தது ஒரு தடுப்பூசியினையாவது பெற்றிருக்க வேண்டும்.
அவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாமல் அட்டை இன்றி வருகை தருவோருக்கு நுழைவாயிலில் வைத்தே சேவை வழங்கப்படும் என்றும் வவுனியா பிரதேச செயலகம் மேலும் அறிவித்துள்ளது.
இலங்கை பயணிகளுக்கு தடை நீக்கம்
இலங்கை பயணிகளுக்கு தடை நீக்கம்
இலங்கை பயணிகளுக்கு கட்டார் அரசாங்கம் விதித்திருந்த தடையை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 6 ஆம் திகதியில் இருந்து இலங்கை மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சில நாட்டவர்கள் தமது நாட்டிற்குள் பிரவேசிக்கலாம் என கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.
12 வயதிற்கு மேற்பட்ட முழுமையாகத் தடுப்பூசி ஏற்றியவர்கள் 2 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கட்டார் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
மனைவியை அடித்து கொன்ற கணவர் – சோகத்தில் உறைந்த கிராமம்
மனைவியை அடித்து கொன்ற கணவர் – சோகத்தில் உறைந்த கிராமம்
குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் களவஞ்சிக்குடி பகுதியில் பதிவாகியுள்ளது.
மஹிலுர் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கணவரின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கணவன் கடந்த 14 ஆம் திகதி வௌிநாட்டில் இருந்து வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வௌிநாட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் அவர் குரல் பதிவு ஒன்றின் மூலம் மனைவியை கொலை செய்வதாக தெரிவித்திருந்ததாக உயிரிழந்த பெண்ணின் சகோதரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு திருமணமான 8 வருடங்கள் ஆவதுடன் 7 வருடமாக கணவர் வௌிநாட்டில் இருந்ததாகவும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் களவஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரூந்துகள் பறிக்க படும் – அவசர எச்சரிக்கை
பேரூந்துகள் பறிக்க படும் – அவசர எச்சரிக்கை
ஆசனங்களின் எண்ணிக்கையை மீறி, அதிகளவான பயணிகளை பஸ்களில் ஏற்றிச் சென்றால், குறித்த பஸ்களை மறு அறிவித்தல் வரை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியதாகத் தெரிவித்த அவர், குறித்த பஸ்களின் அனுமதிப்பத்திரமும் இரத்துச் செய்யப்படும் என்றார்.
மேலும் நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் 6,000 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட வேண்டிய நிலையில், 900 பஸ்களே சேவையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளதுடன், இதற்கான காரணம் பஸ்களில் சேவையில் ஈடுபட்டவர்கள்,தற்போது வேறு தொழில்களில் ஈடுபடுகின்றமையே காரணம் என்றார்.
அத்துடன், 3,000 இ.போ.ச பஸ்கள் சேவையில் ஈடுபட தயார்படுத்தப்பட்ட நிலையில், 1,500 பஸ்களே சேவையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.
வவுனியாவில் மக்களை வாள் – கோடரியால் வெட்டிய கும்பல்
வவுனியா – கோவில்குளம் பகுதியில், இளைஞர் குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில், நால்வர் காயமடைந்துள்ளனர்.
மதுபோதையில் நின்றிருந்த குறித்த நபர்கள், வீதியால் செல்பவர்களை தாக்கியதுடன், வீடுகள் சிலவற்றுக்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.
இதனால் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில், அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற அவர், நிலைமை தொடர்பாக ஆராய்ந்ததுடன், தாக்குதலை மேற்கொண்டவர்களை கைதுசெய்யுமாறு, பொலிஸாருக்கு பணித்தார்.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொரனோ அட்டை – வெடிக்கும் சர்ச்சை
கொரனோ அட்டை – வெடிக்கும் சர்ச்சை
பொது இடங்களுக்குச் செல்லும் போது கொரோனா தடுப்பூசியின் இரண்டையும் பெறப்பட்டதாக உறுதிப்படுத்தப்படும் அட்டையை பொதுமக்கள் வைத்திருப்பதை கட்டாயமாக்குவதற்கான முடிவை, மேலும் தாமதப்படுத்தலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு அளவுகளும் பெறப்பட்டதாகக் குறிப்பிடும் தடுப்பூசி அட்டையை, கட்டாயமாக்கப்பட்டு, பரிசோதிக்கும் நடவடிக்கை செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அத்தகைய சட்டத்தை ஒரே நேரத்தில் அமல்படுத்த முடியாது என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறினார்.
வீட்டுக்குள் நுழைந்து நபரை அடித்து கொன்ற ரவுடிகள்
வீட்டுக்குள் நுழைந்து நபரை அடித்து கொன்ற ரவுடிகள்
வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை, லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரும்பு கம்பியால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை, லிதமுல்ல பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பதுளை பகுதியை சேர்ந்த 21, 24 மற்றும் 31 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.
மனித உரிமைகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை இடையில் பேச்சு
மனித உரிமைகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை இடையில் பேச்சு
- நல்லாட்சி, சட்டம் மற்றும் மனித உரிமைகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை செயற்குழு 2021 செப்டம்பர் 29ஆந் திகதி கொழும்பில் ஒன்று கூடியது.
- ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கைக்கு இடையேயான வழக்கமான இருதரப்புப் பரிமாற்றங்களின் பின்னணியில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஒரு நாள் சந்திப்பின் போது, இருதரப்பு மற்றும் திறந்த சூழ்நிலையில், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சியைக் கடைபிடித்தல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தமது உறுதிப்பாட்டை இரு கூட்டாளர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பான பொதுவான நலன்கள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடியதுடன், சம்பந்தப்பட்ட விடயங்களில் ஒத்துழைப்பைத் தொடருவதற்கு ஒப்புக்கொண்டனர்.
- கோவிட்-19 தொற்றுநோயை நிர்வகிப்பதில் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் தமது அனுபவங்களைப் பரிமாறிக்கொண்டன. சமமான தடுப்பூசி மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு நன்மைகளை அளித்தல் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் கோவெக்ஸ் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்த பங்களிப்பை இலங்கை பாராட்டியது.
- நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளடக்கத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியது. 20வது திருத்தம், நீதித்துறையின் சுதந்திரம், அதிகாரங்களைப் பிரித்தல் மற்றும் சுயாதீன நிறுவனங்களின் தற்போதைய பணிகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர். சுயாதீன நிறுவனங்களின் திறமையான செயற்பாட்டின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.
- அதிகாரிகள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற சட்ட உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் ஆலோசனை செயன்முறைகள் ஆகியவற்றின் மூலம், நீதி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விரிவான சட்ட சீர்திருத்தத் திட்டம் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை வழங்கியது. இந்த முயற்சியில் பரந்த ஆலோசனை செயன்முறையொன்றை பரிசீலினை செய்வதற்குஇலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவித்தது.
- சிவில் சமூகத்தை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் அதன் அனைத்து பன்முகத்தன்மையிலும் செயற்படத் தேவையான இடத்தை வழங்குவதை ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஒப்புக்கொண்டன. இந்த முயற்சிகளில் இலங்கையை தொடர்ந்தும் ஆதரிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது தயார்நிலையை வெளிப்படுத்தியது.
- சிறுபான்மையினர் தொடர்பான விடயங்கள் மற்றும் வெறுப்புணர்வைத் தீர்க்கும் நடவடிக்கைகள் குறித்து செயற்குழு கலந்துரையாடியது. அனைத்து சமூகங்களினதும் உரிமைகளுக்கும் அரசியலமைப்பால் சமமாக உத்தரவாதமளிக்கப்படும் நாட்டின் பன்முக அமைப்பை இலங்கை முன்னிலைப்படுத்தியது.
- பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கான நடவடிக்கை குறித்த அறிவிப்பை இலங்கை வழங்கியதுடன், சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப காலவரையறையொன்றுக்குள் கொண்டுவருவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் அடுத்த சந்திப்பின் மூலம் இது தொடர்பான முன்னேற்றத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஒப்புக்கொண்டன. பயங்கரவாதம் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் போது சர்வதேச விதிமுறைகள் மற்றும் மனித உரிமைகளின் தரங்களை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியமும் சுட்டிக் காட்டப்பட்டது.
- அனைத்து சூழ்நிலைகளிலும் மரண தண்டனைக்கான தனது எதிர்ப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியது. தொடர்ச்சியான தடையை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியம், மரண தண்டனையை முறையாக ஒழிக்க நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கையை ஊக்குவித்தது.
- உடன்படிக்கை அமைப்புக்கள், சிறப்பு நடைமுறைகள் மற்றும் உலகளாவிய காலாந்தர மீளாய்வு உட்பட மனித உரிமைகள் பேரவையுடனான ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர். ஐக்கிய நாடுகள் கட்டமைப்பில் 2030ஆம் ஆண்டுக்குள் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வது உட்பட, பலதரப்பு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பணியாற்றுவதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
- இலங்கை வெளிநாட்டு அமைச்சின் ஐரோப்பா பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. மனிஷா குணசேகர மற்றும் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் திரு. இயோனிஸ் கியோகரகிஸ்-ஆர்கிரோபோலஸ் ஆகியோர் இந்த செயற்குழுவிற்கு இணைத்தலைமை தாங்கினர்.
25 ஐ எஸ் தீவிரவாதிகளை மடக்கி பிடித்த இராணுவம்
25 ஐ எஸ் தீவிரவாதிகளை மடக்கி பிடித்த இராணுவம்
ஈராக்கிய இராணுவத்தினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தாக்குதலில் இருபத்தி ஐந்து ஐ எஸ் தீவிரவாதிகள் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது






