Posted in Uncategorized

தலிபான்கள் ஆட்சியில் இரட்டை குண்டு வெடிப்பு

தலிபான்கள் ஆட்சியில் இரட்டை குண்டு வெடிப்பு

ஆப்கான் நாட்டில் தற்போது தலிபான்கள் ஆண்டு வருகின்றனர் ,இவர்களது ஆட்சியில் தற்போது இரட்டை குண்டு தாக்குதல் ஒரே நாளில் இடம் பெற்றுள்ளது

சம்பவ இடத்தில் பத்து பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றமை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது

Posted in Uncategorized

கணவரை பிரிந்தார் சமந்தா

கணவரை பிரிந்தார் சமந்தா

முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது – கணவரை பிரிந்தார் சமந்தா
நாக சைதன்யா – சமந்தா


தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள்

ஆகும் நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பிரியப் போகிறார்கள் என்று வெகுநாட்களாகவே செய்திகள் உலவுகிறது. இதுகுறித்து இருவரும் எந்தவித

கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தனர்.
நாக சைதன்யா – சமந்தா

தற்போது சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், நாங்கள் இருவரும் கடந்த 10 வருடங்களாக

நட்பாக பழகி வருகிறோம். இந்த நட்பு எங்கள் திருமணம் வரை சென்றது. தற்போது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். இந்த இக்கட்டான

சூழ்நிலையில் எங்கள் முடிவுக்கு ரசிகர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் மதிப்பு கொடுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் என்று பதிவு செய்து இருக்கிறார்கள்.

    Posted in Uncategorized

    இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு

    இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு

    கொவிட்- 19 ஜனாதிபதி செயலணியின் பிரதானியும் இராணுவ தளபதியுமான இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா முக்கிய அறிப்பொன்றை விடுத்துள்ளார்.

    மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

    அதனால் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை இன்னும் தளர்த்த எதிர்பாத்துள்ளதாக அவர் மேலு‌ம் தெரிவித்தார்.

    Posted in Uncategorized இலங்கை செய்திகள்

    ஜந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    ஜந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    பலத்த மழையின் காரணமாக ஜந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    காலி , களுத்துறை , கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு மாலை 06 மணிவரை ஏற்புடையது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Posted in Uncategorized

    மிரட்டும் வடகொரியா -ஒரு கிழமையில் 4 ஏவுகணை சோதனை

    மிரட்டும் வடகொரியா -ஒரு கிழமையில் 4 ஏவுகணை சோதனை

    வடகொரியா உலக சண்டியர் அமெரிக்காவுக்கு சவாலாக வலம் வருகிறது ,பலத்த பொருளாதார

    தடை விதிக்க பட்ட பொழுதும் அது தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு என கூறிய படி ஏவுகணை சோதனையை புரிந்து வருகிறது

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்காவது ஏவுகணை சோதனையை புரிந்துள்ளது

    இது வடகொரியாவின் பலத்தில் நான்கு மடங்கு உயர்வானது என சர்வதேச நிபுணர்கள்

    கருத்துரைத்துள்ளனர் ,மேற்படி ஆயுத சோதனைக்கு அமெரிக்கா பலத்த கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      விமான இறக்கையில் நடந்து செல்லும் பயணி – வைரலாகும் காட்சி

      விமான இறக்கையில் நடந்து செல்லும் பயணி – வைரலாகும்
      காட்சி

      அமெரிக்காவின் விமான நிலையத்தில் அதில் பயணித்த பயணி ஒருவர் அந்த விமானத்தின்

      அவசரகால கதவினை திறந்து அதன் வழியூடாக இறக்கையில் நடந்து செல்லும் காட்சி வெளியாகியுள்ளது

      மேற்படி சம்பவம் போலீசாருக்கு அறிவிக்க பட்ட நிலையில் பறந்து வந்த போலீசார் அவரை கைது செய்தனர் ,மேற்படி காணொளியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

        Posted in Uncategorized

        ஏழை குடும்பத்திற்கு உணவு வழங்கிய சிறி எம்பி

        ஏழை குடும்பத்திற்கு உணவு வழங்கிய சிறி எம்பி

        பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக கரைச்சி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் வேளமாலிகிதன் அவர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி

        மாவட்டத்தில் வாழும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சட்டத்தினால் பாதிக்கப்பட்டு அரசியல் கைதிகளாக உள்ள 19 குடும்பங்களுக்கு கரைச்சி பிரதேச சபை மற்றும் கனடிய தேசத்து நண்பர்

        ஒருவரின் பங்களிப்புடன் சுமார் மூவாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் நேற்றும் இன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

          Posted in Uncategorized

          ஒரு பெண் பாம்பிற்கு சண்டை போட்ட மூன்று ஆண் பாம்பு

          ஒரு பெண் பாம்பிற்கு சண்டை போட்ட மூன்று ஆண் பாம்பு

          அவுஸ்ரேலியாவில் வீடொன்றுக்குள் நுழைந்த பெண் பாம்பு ஒன்றுக்கு மூன்று ஆண் பாம்புகள் சண்டை போட்ட சுவாரசியம் நடந்துள்ளது

          கோல்டன் வகை என குறிக்க படும் இந்த பாம்புகள் மிக அரிதானவை என தெரிவிக்க படுகிறது

          மனிதன் மட்டும் அல்ல பாம்புகளும் பெண்ணுக்கு அடிமை என்பது இதன் மூலம் தெரிகிறது

            Posted in Uncategorized

            பிரிட்டனில் அகதிகள் வேலை செய்ய புதிய சட்டம் வருகிறது

            பிரிட்டனில் அகதிகள் வேலை செய்ய புதிய சட்டம் வருகிறது

            பிரிட்டனில் இதுவரை அகதிகளாக வருகை தந்தவர்கள் வேலை செய்திட அனுமதி வழங்கப்படவில்லை ,தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக

            கைதிகளை வேலை செய்திடவும் ,அகதிகள் வேலை செய்திதிடும் புதிய சட்டம் ஒன்றி அமூல் படுத்திட அரசு ஆராய்ந்து வருகிறது

            இதற்கு அதிக அமைச்சர்கள் ,எம்பிக்கள் ஆதரவு வலுத்து வருகிறது

            புலம்பெயர் ஐரோபாய நாட்டு சாரதிகள் ஒரு லட்சம் பேருக்கு விசா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ள வெளிநாட்டு அமைச்சு ,,மேற்படி புதிய சட்டத்தை அமூல் படுத்தும் ஆலோசனையை கையிலெடுத்துள்ளது பிரிட்டன் அகதிகளுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைகிறது

            இந்த சட்டம் அமூல் படுத்த பட்டால் அகதிகள் நன்மை பெறுவதுடன் தொழிலாளர் பற்றாக்குறை தீர்க்க படும் என்பதாக உள்ளது

              Posted in Uncategorized

              ஊரடங்கு சட்டம் நாளை முதல் நீக்கம்

              ஊரடங்கு சட்டம் நாளை முதல் நீக்கம்

              தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) நீக்கப்பட்ட போதிலும் மாகாணங்களுக்கு

              இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

              அதனடிப்படையில் இரண்டு வார காலத்திற்கு மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து அல்லது புகையிரத சேவைகள் இடம்பெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

              மாகாணங்களுக்குள் பேருந்து சேவைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

              Posted in Uncategorized

              வாகனங்கள் விபத்து – 6 பேர் காயம்

              வாகனங்கள் விபத்து – 6 பேர் காயம்

              நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (30) காலை ஏற்பட்ட விபத்தொன்றில் 6 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

              நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி

              விபத்துக்குள்ளாகி அருகில் இருந்த மண்மேட்டுடன் மோதி வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி குடைசாய்ந்துள்ளது.

              குறித்த முச்சக்கரவண்டி தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

              இவ்விபத்தில் குடைசாய்ந்த வேனில் பயணித்த நால்வரும், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

              நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாரே இந்த விபத்திற்கான காரணம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

              இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன

              Posted in Uncategorized

              பால்மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

              பால்மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

              துறைமுகத்தில் சிக்கியுள்ள 360,000 கிலோகிராம் பால்மாவை விடுவிக்க வணிக வங்கிகளுக்கு அரசாங்கம் இன்னும் டொலர்களை வழங்கவில்லை என்று, பால்மா இறக்குமதியாளர்களின் செய்தி தொடர்பாளர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

              இதன் காரணமாக, பாலமாக்கள் பழுதடையக் கூடிய அபாயம் இருப்பதால் அருகிலுள்ள நாட்டிற்கு பால்மாவை வழங்குவதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்றதாகவும் அப்படியானால், நாட்டில் மேலும் பால்மாக்கான பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

              இன்று பிற்பகல் வணிக வங்கிகளுடனான கலந்துரையாடலின் போது, பால்மாவை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்கு, தங்களுக்கு டொலர்கள் கிடைக்கவில்லை என்று கூறிய வங்கிகள், வங்கிகளில் பணத்தை வைப்பிலிட்டு, டொலர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறியது என, லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

              சில ஏற்றுமதியாளர்கள் ஒரு டொலருக்கு 238 டொலர் கொடுக்க முன்வருவதாகவும், பால்மா இருப்பு 35 டொலருக்கு கூடுதலாக வெளியிடப்பட்டால், ஒரு கிலோவுக்கு 4.10 டொலர் கூடுதல் செலவு ஆகும் எனவும், அவர் தெரிவித்தார்.

              Posted in Uncategorized

              இலங்கையில் புதிய நடைமுறை – மகிழ்ச்சியில் மக்கள்

              இலங்கையில் புதிய நடைமுறை – மகிழ்ச்சியில் மக்கள்

              1. மாகாணங்களுக்குள் பஸ்கள் ஓடும்
              2. அமர்ந்திருக்கு மட்டுமே பயணிக்க முடியும்
              3. பதிவு திருமணங்களுக்கு அனுமதி: ஐவர் பங்கேற்கலாம்
              4. பொதுக்கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு இல்லை
              5. சாப்பாட்டு விடுதிக்கு அனுமதி இல்லை

              6.மரண வீட்டில் ஒரே தடவையில் 10 பேர் பங்கேற்கலாம்

              7..உடற்பயிற்சிக் கூடங்களுக்கு அனுமதி ஐவர் பங்கேற்கலாம்.

              Posted in Uncategorized

              கால நிலை மக்களுக்கு விசேட அறிவித்தல்

              கால நிலை மக்களுக்கு விசேட அறிவித்தல்

              இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

              2021 செப்டம்பர்30ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

              2021 செப்டம்பர்29ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது

              இலங்கைக்கு தென்கிழக்காக ஒரு கீழ் வளிமண்டல தளம்பல் நிலை உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்துஅவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

              நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

              நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

              வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

              இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

              Posted in Uncategorized

              பெங்களூருவில் 60 மாணவர்களுக்கு கொரோனா

              பெங்களூருவில் 60 மாணவர்களுக்கு கொரோனா

              ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், வருகிற 20-ந்தேதி வரை பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

              பெங்களூருவில் 60 மாணவர்களுக்கு கொரோனா: அக். 20-ந்தேதி வரை பள்ளி மூடல்

              கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்கள், ஸ்டாஃப்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

              இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளியில் 500 மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 60 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

              செய்யப்பட்டுள்ளது. 60 மாணவர்களில் இரண்டு பேருக்கு அறிகுறி இருந்தது. இதனால்

              மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

                Posted in Uncategorized

                புடவை அணிந்து வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த ரெஸ்டாரன்

                புடவை அணிந்து வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த ரெஸ்டாரன்ட்

                டெல்லியில் புடவை அணிந்து வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த ரெஸ்டாரன்ட், அதிகாரிகளால் மூடும் நிலைக்கு ஆளாகியுள்ளது.

                புடவை அணிந்து வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த ரெஸ்டாரன்ட்: அதன்பின் நடந்தது என்ன?

                தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரெஸ்டாரன்ட் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த ரெஸ்டாரன்டுக்கு புடவை அணிந்த பெண் ஒருவர் சென்றுள்ளார். அந்த பெண்ணை

                ரெஸ்டாரன்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். தன்னை உள்ளே அனுமதிக்க மறுப்பது ஏன்? என அந்த பெண் கேட்க, புடவை அணிந்தவர்களுக்கு அனுமதி கிடையாது எனத் தெரிவித்துள்ளனர்.

                இதனால் அந்த பெண்மணி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதை வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார். ஆனால், அந்த சம்பவம் சித்தரிக்கப்பட்டவை என ரெஸ்டாரன்ட் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

                இந்தநிலையில் ரெஸ்டாரன்டை நடத்துவதற்கு சரியான உரிமம் பெறவில்லை. அதனால் ரெஸ்டாரன்டை மூடுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். உரிமையாளரும் ரெஸ்டாரன்டை மூடுவதற்கு சம்மதம் தெரிவித்தள்ளார்.

                அந்த பகுதி சுகாதார இன்ஸ்பெக்டர் சுகாதார வர்த்தக உரிமம் இல்லாமலும், சுகாதாரமற்ற நிலையிலும் ரெஸ்டாரன்ட் இயங்கி வந்ததை கண்டு, அதை மூடுவதற்கு நோட்டீஸ் அனுப்பினார்.

                பின்னர், பொது சுகாதார இன்ஸ்பெக்டர் மீண்டும் நேரில் சென்று ஆய்வு செய்தபோது அதே நிலையில் இயங்கி வந்ததால் நடவடிக்கை மேற்கொண்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

                  Posted in Uncategorized

                  வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள்

                  வெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள்

                  சிரியா அலப்போ Jarabulus பகுதியில் திடீரென குண்டு வெடித்ததில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியானார் ,மேலும் பதின் ஐந்து பேர் படு காயமடைந்துள்ளனர்

                  தொடரும் உள்நாட்டு ,சர்வதேச படை மோதல்களில் சிக்கி இதுவரை ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளமை குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    பிரிட்டனில் எரிபொருள் பவுசர் ஓட்ட களத்தில் குதித்த இராணுவம்

                    உலக

                    பிரிட்டனில் எரிபொருள் பவுசர் ஓட்ட களத்தில் குதித்த இராணுவம்

                    பிரிட்டனில் எரிபொருள் டாங்கிகளை செலுத்தி செல்ல சாரதிகள் போதாமை உள்ளதினால்

                    தற்போது ,இராணுவ சாரதிகள் எரிபொருட்களை விநியோகிக்க களத்தில் இறக்க பட்டுள்ளனர்

                    எரிபொருள் நிலையங்கள் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று எரிபொருளையே நிரப்பி செல்கின்றனர்
                    இதனை அடுத்தே இந்த அவசர நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது

                      Posted in Uncategorized

                      தலை முடி ஆடம்பரமாக வெட்டினால் சிறை -தலிபான்கள் அதிரடி அறிவிப்பு

                      தலை முடி ஆடம்பரமாக வெட்டினால் சிறை -தலிபான்கள் அதிரடி அறிவிப்பு

                      ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பு, அடுத்தடுத்து தடை அறிவிப்புகளையும், அதிர்ச்சி நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.

                      அந்த வகையில் அந்த நாட்டில் ஹெல்மண்ட் மாகாணத்தில் ஆண்களின் தாடியை வெட்டுவதற்கோ, மழிப்பதற்கோ முடிதிருத்தம் செய்யும் தொழிலாளிகளுக்குத் தடை விதித்து தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

                      அதேபோல வித வித வடிவிலான சிகை அலங்காரம் செய்து கொள்வதையும் தலிபான்கள், ஹெல்மண்ட் மாகாணத்தில் தடை விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

                      இது குறித்து வெளியிடப்பட்ட உத்தரவில், சலூன்களில் பாட்டு மற்றும் இசை சார்ந்து எதையும் ஒலிக்கச் செய்யக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

                      தலிபான் அமைப்பின் பழமைவாத கொள்கைகளால் பல்வேறு மனித உரிமை மீறல்கள் அரங்கேறி வருவதாக தொடர்ந்து

                      செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், முடி திருத்தம் செய்வதிலும் அந்த அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன..

                        Posted in Uncategorized

                        பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திடீர் ராஜினாமா

                        பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திடீர் ராஜினாமா

                        பஞ்சாப் காங்கிரஸில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான அமரீந்தர் சிங்கிற்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது.

                        பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீர் ராஜினாமா
                        நவ்ஜோத் சிங் சித்து
                        இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                        பஞ்சாப்:

                        பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

                        இதுகுறித்து அவர் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

                        ஒரு மனிதன் எப்போது சமரசங்கள் செய்து கொள்கிறானோ அப்போது அவனது நன்மதிப்பும் பாதிப்புக்கு உள்ளாகும். நான் பஞ்சாப்பின் எதிர்காலம் மற்றும் பஞ்சாப்பின் நலனில் என்றும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்.

                        காங்கிரஸ்

                        எனவே, பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். நான் தொடர்ந்து காங்கிரஸுக்கு தொண்டாற்றுவேன்.

                        இவ்வாறு அவர் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

                        பஞ்சாப் காங்கிரஸில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான அமரீந்தர் சிங்கிற்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது. இதன்

                        காரணமாகவே அமரீந்தர் சிங், தன் முதல்வர் பதவியை சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து தற்போது சித்துவும், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்