Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
கொரானாவுக்கு இலங்கையில் 22 பேர் மரணம்
கொரானாவுக்கு இலங்கையில் 22 பேர் மரணம்
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 22 பேர்
பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
மேலும் நோயானது பரவாமல் தடுக்க பல பாதுகாப்பு வழிமுறைகள் பேணப்பட்டு வருகின்ற
பொழுதும் நோயினை கட்டு படுத்த முடியாது அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது
சிறையில் தீ – 38 கைதிகள் உடல் கருகி மரணம்
சிறையில் தீ – 38 கைதிகள் உடல் கருகி மரணம்
புருண்டி சிறையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 கைதிகள் உடல் கருகி பலியாகினர் ,மேலும்
68 பேர் பலத்த தீ ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,மேற்படி
விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
பாம்புக்கு பயந்து வீட்டை கொளுத்திய தொழிலதிபர்
பாம்புக்கு பயந்து வீட்டை கொளுத்திய தொழிலதிபர்
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதா’ என்கிற பழமொழியை பலரும் கேட்டிருப்போம். ஆனால் இந்த பழமொழியை உண்மையாக்கும் வகையில் பாம்புக்கு பயந்து ஒருவர் தனது
வீட்டையே கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இது இங்கு இல்லை அமெரிக்காவில்.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு 10 ஆயிரம்
சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்ட ஆடம்பர சொகுசு வீடு சொந்தமாக இருந்தது. இதன் மதிப்பு
பாம்புக்கு பயந்து வீட்டை கொளுத்திய தொழிலதிபர்
சுமார் 12 கோடியாகும். இவரது வீட்டுக்கு அடிக்கடி பாம்புகள் அழையா விருந்தாளியாய் வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
அதன்படி சம்பவத்தன்று வழக்கம்போல் பாம்பு ஒன்று அவரது வீட்டுக்குள் வந்துள்ளது. பாம்பை விரட்டியடிக்க யோசித்த தொழிலதிபர் நிலக்கரி மூலம் புகையை ஏற்படுத்தி பாம்பை விரட்ட முடிவு செய்தார்.
அதன்படியே அவர் வீட்டுக்குள் நிலக்கரியை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக
வீட்டில் தீப்பிடித்தது. பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தொழிலதிபர் திகைத்துபோய்
நின்றுவிட்டார். கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியதால் ஒட்டுமொத்த வீடும் கொழுந்துவிட்டு எரிந்தது.
சில நிமிடங்களிலேயே 12 கோடி மதிப்புடைய அந்த ஆடம்பர வீடு இருந்த இடம் தெரியாத
அளவுக்கு சாம்பலாகி போனது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள சலுகைகள் அறிவிப்பு
சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள சலுகைகள் அறிவிப்பு
சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு
மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாகாண அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன.
உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள நாடு சீனா. ஆனால் அங்கு குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள சலுகைகள் அறிவிப்பு
இதை சரிக்கட்ட சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அந்த நாட்டு அரசு கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தது.
இந்த நிலையில் சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாகாண அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன.
மேலும் பீஜிங், சிச்சுவான் மற்றும் ஜியாங்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மகப்பேறு
விடுப்பு மற்றும் திருமண விடுமுறையை நீட்டித்தல் மற்றும் தந்தைவழி விடுப்பை அதிகரிப்பது
போன்ற தம்பதிகளுக்கு அதிகரித்த விடுமுறையை முன்னிலைப்படுத்தும் ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ரஷியாவில் துப்பாக்கி சண்டை -இருவர் மரணம் – மூவர் காயம்
ரஷியாவில் துப்பாக்கி சண்டை -இருவர் மரணம் – மூவர் காயம்
ரசிய அ தலைநகர் மோஸ்க்கோவில் அரச கட்டடம் மீது நபர் ஒருவர் திடீர் துப்பாக்கி சூட்டு
தாக்குதலை நடத்தினர் ,இதில் சம்பவ இடத்தில இருவர் பலியாகினர் ,மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்
உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது ,மேற்படி தாக்குதலுக்குரிய
காரணம் உடனடியாக தெரியவில்லை ,விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன
சவூதி ஊடகநபரை கொன்ற கொலையாளி – பிரான்சில் கைது
சவூதி ஊடகநபரை கொன்ற கொலையாளி – பிரான்சில் கைது
துருக்கியில் வைத்து சவூதி நாட்டு முக்கிய ஊடக நபரை கொலை புரிந்த கொலை குற்றவாளி
பிரான்சில் வைத்து பிரான்ஸ் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்
சவுதி மன்னர் ஒருவருடன் தொடர்புகளை பேணி வந்த நபர்களினால் இவர் படு கொலை
செய்ய பட்டுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் மேற்படி நபர் கைது செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
காதலியின் நிர்வாணப்படத்தை இணையத்தில் வெளியிட்ட காதலன் கைது
காதலியின் நிர்வாணப்படத்தை இணையத்தில் வெளியிட்ட காதலன் கைது
காதலியின் நிர்வாண படத்தை, இணையளத்தில் தரவேற்றம் செய்துவிட்டு, தலைமறைவாகியிருந்த காதலன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மொனராகலை ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வெட்டமண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது காதலியை அறையொன்றுக்கு அழைத்துச் சென்ற காதலன், அங்கு அப்பெண்ணை
துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அதன்பின்னர். எடுக்கப்பட்ட நிர்வாணப் படத்தை, இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதன்பின்னர், அங்கிருந்து தலைமறைவாகி கொழும்பில் மறைந்து இருந்துள்ளார். எனினும்,
விசாரணைகளை முன்னெடுத்த மொனராகலை குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் குழுவினர்,
பாதிக்கப்பட்ட யுவதி பேசுவதைப் போல, தொலைப்பேசி அழைப்பை எடுத்து, இளைஞனை ஒக்கம்பிட்டியவுக்கு வரவழைத்துள்ளனர்.
.ஒக்கம்பிட்டிய வீட்டுக்கு. இளைஞன் வரும்போது, இடைநடுவிலேயே மறித்த பொலிஸார், அவரை
கைது செய்துள்ளனர். இவர், பல பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அச்சம்பவங்களுக்காக தேடப்பட்டவர் என்றும் அறியமுடிகின்றது.
அவர், பல பெண்களை காதலித்துள்ளார். அந்த காதலிகளை நிர்வாணமாக புகைப்படம் எடுத்தும்,
வீடியோக்களை எடுத்தும் வைத்துள்ளார். அவற்றை, உறவினர்கள் மற்றும்
இணையத்தளங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளார் என்பதும் விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக,புத்தள பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்..
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
பாகிஸ்தான் காஸ்மீர் பகுதி எல்லையோரமாகி பறப்பில் ஈடுபட்ட பாகிஸ்தான் இராணுவத்திற்கு
சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில்
பயணித்த இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர்
எனினும் இது விபத்து அல்ல எனவும் இந்தியா இராணுவம் சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது
வெடித்து சிதறிய குண்டு 11 பேர் மரணம் – 22 பேர் காயம்
வெடித்து சிதறிய குண்டு 11 பேர் மரணம் – 22 பேர் காயம்
சோமாலிய Baidoa பகுதியில் ரிமோர்ட் கொன்றால் மூலம் நடத்த பட்ட வெடி குண்டு தாக்குதலில்
சிக்கி சம்பவ இடத்தில 11 பேர் பலியாகினர் ,மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இராணுவம்
குவிக்க பட்டு தேடுதல் நடவடிக்கை முடக்கிவிட பட்டுள்ளது
கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ்
கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ்
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், சில தினங்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார்.
கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ்
கமல்
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது.
கமலுக்குப் பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பூரண நலம் பெற்ற கமல்ஹாசன் 4-ந் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டார். மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டு நேராக பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
கமல்
இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனையில் இருந்து கொரோனா
விதிமுறைகளை மீறி நேராக படப்பிடிப்புச் சென்றது தொடர்பாக கமலுக்கு தமிழக மருத்துவத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபடும் என்று கூறியிருக்கிறார்
இடிந்து வீழ்த்த சலூன் – மூவர் காயம்
இடிந்து வீழ்த்த சலூன் – மூவர் காயம்
அமெரிக்கா Bronx பகுதியில் உள்ள சலூன் ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது
இதன்பொழுது மூவர் படுகாயமடைந்தனர்
நூறு வருட பழமை வாய்ந்த மேற்படி கட்டடம் உரிய முறை பாதுகாப்பு ,மற்றும் சீரமைப்பு
பேணப்படாத நிலையில் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக கூற படுகிறது
கள்ளக் காதலியை மண்வெட்டியால் வெட்டி கொன்ற காதலன்
கள்ளக் காதலியை மண்வெட்டியால் வெட்டி கொன்ற காதலன்
இலங்கை குமாரகம பகுதியில் கள்ள காதலிக்கும் ,காதலன் ஒருவருக்கும் இடையில் தகராறு
ஏற்பட்டுள்ளது ,இவ்வேளை ஆத்திரமுற்ற காதலன் ,கள்ள காதலனை மண்வெட்டியால் வெட்டி
கொன்று விட்டு தப்பி சென்றுள்ளார்
இறந்த பெண் சடலம் மீட்க பட்டு, மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,தற்போது
கொலை குற்ற சாட்டில் காதலனை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – நால்வர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – நால்வர் மரணம்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் பறந்து கொண்டிருந்த இலகு ரக விமானம் ஒன்று
திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில் பயணித்த நால்வரும் பலியாகியுள்ளனர்
இதுவரை இந்த விமான விபத்திற்குரிய காரணம் தெரியவரவில்லை ,குறித்த விபத்து
தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
வெடித்து சிதறிய எரிமலை – 18 பேர் மரணம் -98 பேரை காணவில்லை
வெடித்து சிதறிய எரிமலை – 18 பேர் மரணம் -98 பேரை காணவில்லை
இந்தோனேசிய மலை பகுதியில் அமைந்துள்ள எரிமலை அதிக வெப்பம் காரணமாக வெடித்து
சிதறியது, இதன் பொழுது அதனை சுற்றியுள்ள கிராமங்கள் பலத்த சேதமடைந்துள்ளன ,வீடுகள் உடைந்து தரை மட்டமாகியுள்ளன
இந்த அனர்த்தத்தில் சிக்கி இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 98 பேர் காணாமல்
போயுள்ளனர் ,காணாமல் போனவர்களை தேடும் பணி ஆரம்பிக்க பட்டுள்ளது
அமெரிக்கா இராணுவம் முகாம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை
அமெரிக்கா இராணுவம் முகாம் வீழ்ந்து வெடித்த ஏவுகணை
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் மிக முக்கிய இராணுவ முகாமாக விளங்கி வரும் Koniko
முகாம் மீது மூன்று ரொக்கட் துல்லியமாக வீழ்ந்து வெடித்துள்ளது
இதன் போது அந்த முகாமிற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் ,அங்கிருந்த உலங்கு
வானூர்திகள் அடிக்கடி பறப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்க படுகிறது
வளமை போன்று தமது இழப்புக்களை அமெரிக்கா இராணுவம் மூடி மறைத்து வருவதாக தகவல்கள் வைரலாக பரவி வருகிறது
வீழ்ந்து நொறுங்கிய ஈரான் விமனம் – சுட்டு வீழ்த்த பட்டதா ..?
வீழ்ந்து நொறுங்கிய ஈரான் விமனம் – சுட்டு வீழ்த்த பட்டதா ..?
மத்திய ஈரான் மேலாக கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த மிக முக்கிய முதல்தர உளவு
விமான ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,ஆள் இல்லா இந்த விமானம் திசை மாற்றி செல்ல
வல்லது ,அவ்வாறன இந்த விமானம் எவ்வாறு வீழ்ந்து நொறுங்கியது என்பது ஈரான் இராணுவ தலைமையகத்தை உலுப்பியுள்ளது
வீழ்ந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் எடுத்து செல்ல பட்டு ஆய்வு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
ஆழ ஊடுருவும் இஸ்ரேல் தாக்குதல் பிரிவால் ஈரானுக்குள் வைத்து இந்த உயர் ரக விமானம் சுட்டுவீழ்த்த பட்டிருக்க கூடும் என்ற ஐயம் நிலவுகிறது
கடந்த இரு நாட்களில் லாரிகள் மற்றும் கப்பல்கள் மூலம் கடத்தி வரப்பட்ட இஸ்ரேல்
தயாரிப்பிலான ஆயுதங்கள் மீட்க பட்டதன் பின்னர் இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது சந்தேகத்தை அதிகரித்துள்ளது
விமான நிலையத்தில் நடிகைதடுத்து நிறுத்தம்
விமான நிலையத்தில் நடிகைதடுத்து நிறுத்தம்
குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெயர் சேர்க்கப்பட்டதையடுத்து அவர், நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.
நாட்டை விட்டு வெளியேற தடை… மும்பை விமான நிலையத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தடுத்து நிறுத்தம்
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய்
மோசடி செய்ததாக, டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் இந்த மோசடியில் தொடர்புடைய அவரது காதலிகள் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கில் சுகேஷ் மற்றும் அவரது காதலியும் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் 7000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சுகேஷ் தனது காதலி ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு கொடுத்த ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசுகளில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரையும் ரூ.9 லட்சம் மதிப்புள்ள பாரசீக பூனையும் அடங்கும் என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதையடுத்து ஜாக்குலின் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது.
இந்நிலையில், நடிகை ஜாக்குலின் துபாய் செல்வதற்காக இன்று மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். துபாயில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டார்.
ஆனால், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பதால், அவரை மும்பை விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
சிறிது நேர விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை டெல்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பவுள்ளது.
லண்டனுக்குள் கடல் வழியாக 100 அகதிகள் நுழைவு
லண்டனுக்குள் கடல் வழியாக 100 அகதிகள் நுழைவு
லண்டனுக்குள் பிரான்சில் இருந்து கடல்வழியாக தொடர்ந்து அகதிகள் நுழைந்த வண்ணம்
உள்ளனர் ,இவ்விதம் நூறு அகதிகள் கடந்த தினம் வந்தடைந்துள்ளார்
தொடர் அகதிகள் நுழைவால் பிரிட்டன் பெரும், நெருக்கடியில் சிக்கியுள்ளது ,இந்தஅகதிகளை
பராமரிக்க குடிவரவு குடியகல்வு அமைச்சு பல லட்சணங்களை செலவு செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது
ஏழு இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்
ஏழு இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்
நையீரியாவில் இராணுவத்தினரை இலக்கு வைத்து தீவிரவாதிகள் நடத்திய
தாக்குதலில் ஏழு பேர் பலியாகினர்
மேலும் சிலர் காயமடைந்துள்ளனர் ,தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து செல்வதால்
இராணுவத்தினர் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்
மாணவர்களை கடத்திய இராணுவ தளபதி – வருகிறது விசாரணை
மாணவர்களை கடத்திய இராணுவ தளபதி – வருகிறது விசாரணை
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை
காணாமலாக்கிய சம்பவத்தில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14
கடற்படையினருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்தது.
இந்த வழக்கு நேற்று சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ரில் விசாரணைக்கு வந்த போது, முன்னாள்
கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பில் விடயங்கள் முன் வைக்கப்பட்டன.
இவ்வழக்கில் வசந்த கரண்ணாகொட பிரதிவாதியாக பெயரிடப்பட்டமைக்கு எதிராக அவர்
தாக்கல் செய்துள்ள ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. அம்மனு எதிர்வரும் 8 ஆம் திகதி ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
அந்த ரிட் மனுவின் தீர்பு வரும் வரை, இந்த விவகாரத்தில் கரன்னாகொடவுக்கு எதிரான
விசாரணைகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்பதால் வழக்கானது ஜனவரி 7ஆம் திகதிவரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது







