Posted in Uncategorized

லண்டனுக்குள் கடல் வழியாக 100 அகதிகள் நுழைவு

லண்டனுக்குள் கடல் வழியாக 100 அகதிகள் நுழைவு

லண்டனுக்குள் பிரான்சில் இருந்து கடல்வழியாக தொடர்ந்து அகதிகள் நுழைந்த வண்ணம்

உள்ளனர் ,இவ்விதம் நூறு அகதிகள் கடந்த தினம் வந்தடைந்துள்ளார்

தொடர் அகதிகள் நுழைவால் பிரிட்டன் பெரும், நெருக்கடியில் சிக்கியுள்ளது ,இந்தஅகதிகளை


பராமரிக்க குடிவரவு குடியகல்வு அமைச்சு பல லட்சணங்களை செலவு செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    ஏழு இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

    ஏழு இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

    நையீரியாவில் இராணுவத்தினரை இலக்கு வைத்து தீவிரவாதிகள் நடத்திய


    தாக்குதலில் ஏழு பேர் பலியாகினர்

    மேலும் சிலர் காயமடைந்துள்ளனர் ,தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து செல்வதால்

    இராணுவத்தினர் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்

      Posted in Uncategorized

      மாணவர்களை கடத்திய இராணுவ தளபதி – வருகிறது விசாரணை

      மாணவர்களை கடத்திய இராணுவ தளபதி – வருகிறது விசாரணை

      கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை 

      காணாமலாக்கிய  சம்பவத்தில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14

      கடற்படையினருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க  சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் குழாம்  தீர்மானித்தது. 

      இந்த வழக்கு நேற்று சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ரில் விசாரணைக்கு வந்த போது,  முன்னாள்

      கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பில் விடயங்கள் முன் வைக்கப்பட்டன. 

      இவ்வழக்கில் வசந்த கரண்ணாகொட பிரதிவாதியாக பெயரிடப்பட்டமைக்கு எதிராக அவர்

      தாக்கல் செய்துள்ள ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. அம்மனு எதிர்வரும் 8 ஆம் திகதி  ஆம் திகதி  விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.  

      அந்த ரிட் மனுவின் தீர்பு வரும் வரை, இந்த விவகாரத்தில் கரன்னாகொடவுக்கு எதிரான

      விசாரணைகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்பதால் வழக்கானது  ஜனவரி 7ஆம் திகதிவரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது

        Posted in Uncategorized

        35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முதியவர்

        35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முதியவர்

        இளம் வயதில் காதலித்தவர்கள், முதிய வயதில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து

        வைத்துள்ளனர். சிக்கண்ணா 35 ஆண்டுகள் காத்திருந்து தனது காதலி ஜெயம்மாவை கரம் பிடித்துள்ளார்.

        35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முதியவர்
        புதுமண தம்பதியை படத்தில் காணலாம்.

        ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவை சேர்ந்தவர் சிக்கண்ணா (வயது 65). இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவுக்கு வந்து கூலி வேலை பார்த்தார். அப்போது இவருக்கும்

        மைசூருவை சேர்ந்த அவரது அத்தை மகளான ஜெயம்மா (60) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர்.

        இவர்களின் காதலுக்கு ஜெயம்மாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவரது பெற்றோர் ஜெயம்மாவுக்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைத்தனர். சிக்கண்ணாவை

        மனதில் நினைத்து கொண்டு கல்நெஞ்சுடன் வேறு வழியின்றி வேறொருவருக்கு ஜெயம்மா கழுத்தை நீட்டினார்.

        ஆனால் காதலன் சிக்கண்ணா நினைவிலேயே இருந்ததால் ஜெயம்மாவால் கணவருடன் சரியாக குடும்பம் நடத்த முடியவில்லை. சில ஆண்டுகள் கணவருடன் குடும்பம் நடத்திய ஜெயம்மா, 4 ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார்.

        புதுமண தம்பதியை படத்தில் காணலாம்.

        ஆனால் ஜெயம்மாவின் காதலன் சிக்கண்ணவோ, திருமணம் எதுவும் செய்யாமல் ஜெயம்மாவின் நினைவிலேயே வாழ்ந்து வந்தார். இவ்வாறாக 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

        இந்த நிலையில், சமீபத்தில் எதிர்பாராதவிதமாக சிக்கண்ணாவும், ஜெயம்மாவும் சந்தித்து உள்ளனர். அப்போது தான் சிக்கண்ணா திருமணம் செய்யாமல் இருப்பது ஜெயம்மாவுக்கும்,

        ஜெயம்மா கணவரை பிரிந்தது சிக்கண்ணாவுக்கும் தெரியவந்தது. இதனால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டதால் இருவரும் கண்ணீர் சிந்தி பரஸ்பரம் விசாரித்து கொண்டனர்.

        இதையடுத்து கடந்த கால நினைவுகள் பற்றி பகிர்ந்து கொண்ட சிக்கண்ணாவும், ஜெயம்மாவும், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் மண்டியா மாவட்டம்

        மேல்கோட்டைக்கு சென்று நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். அவர்களை நண்பர்கள் வாழ்த்தினர்.

        இளம் வயதில் காதலித்தவர்கள், முதிய வயதில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளனர். சிக்கண்ணா 35 ஆண்டுகள் காத்திருந்து தனது காதலி ஜெயம்மாவை கரம் பிடித்துள்ளார்.

        Posted in Uncategorized

        சிங்கள படைகள் கொடூரமானது – முழங்கிய அரசியல்வாதி

        சிங்கள படைகள் கொடூரமானது – முழங்கிய அரசியல்வாதி

        இலங்கை இராணுவத்தினர் தன்னுடைய நாட்டு மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு கொடூரமானர்கள் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

        முல்லைத்தீவு – ஒதியமலைப் படுகொலையின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று (02) இடம்பெற்றன. அந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

        அதேவேளை, ஒதியமலையில் படுகொலைசெய்யப்பட்ட 32 அப்பாவித் தமிழர்களுடைய ஆத்மாக்களும் சாந்தியடையவேண்டும் எனவும் அவர் பிராத்தித்ததுடன், இப்படியான

        கொடூரங்கள் இனியும் இந்த நாட்டிலே நடக்காமல் தமிழர்களாகிய நாம் நின்மதியாக வாழ வழி ஏற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

        அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

        கடந்த 1984ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 02ஆம் திகதி இந்த ஒதியமலைப் பகுதியிலே இடம்பெற்ற ஒரு கொடூரமான படுகொலைச் சம்பவத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு எமது அஞ்சலிகளை மேற்கொண்டுள்ளோம்.

        இந்த ஒதியமலைப்படுகொலை தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்போது, இராணுவ உடை தரித்த இனந்தெரியாதோர் இந்த கொலைகளைச் செய்த்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

        ஒரு நாட்டிலே தன்னுடைய மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு, கொடூரமான இராணுவம் இருந்ததெனில் அது இலங்கயில்தான் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

        குறிப்பாக கடந்த 1984.12.02அன்று அதிகாலை இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவித் தமிழ் மக்களை வீடுவீடாகச் சென்று, பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துவந்து 27பேரை

        ஈவிரக்கமின்றி படுகொலைசெய்தது மாத்திரமின்றி, மிகுதி ஐந்து பேரை வேறு இடத்திற்கு அழைத்துச்சென்று அவர்களையும் மிக மோசமான முறையில் படுகொலைசெய்துள்ளார்கள்.

        இவ்வாறான மிக மோசமான பல செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது சர்வதேசம் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றது என்பதே எனது கேள்வியாகும்.

        கடந்த காலங்களிலிருந்தே எமது தமிழ் மக்கள்மீது மிகமோசமான கொடுமைகளையும்,

        சித்திரவதைகளையும் இந்த நாட்டுபடையினர் மேற்கொண்டுவருகின்றனர் என்பது இதன் ஊடாக வெளிச்சத்திற்கு வருகின்றது.

        இந்த படுகொலைச்சம்பவத்தைப் போன்று, பல படுகொலைச் சம்பவங்களையும், பல துன்பியலான சம்பவங்களையும் எமது தமிழ் மக்கள் கண்டிருக்கின்றனர்.

        இவ்வாறான துன்பியல் மிக்க சம்பவங்களை முடிவுக்குக்கொண்டுவருமாறுதான்

        எங்களுடையவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றனர். தமிழ் மக்களுக்குரிய தீர்வுகளை வழங்கி, தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிசெய்யுமாறுதான் கேட்கின்றோம்.

        மேலும் இவ்வாறு படுகொலைசெய்யப்பட்ட 32பேருடைய ஆத்மாக்களும் சாந்தியடையவேண்டும்.

        இப்படியான கொடூரங்கள் இனியும் இந்த நாட்டிலே நடக்காமல் தமிழர்களாகிய நாம் நின்மதியாக வாழ வழி ஏற்படவேண்டும்- என்றார்.

          கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
          Posted in Uncategorized

          கற்பழிப்பு ,கொலைகாரனை சுட்டு கொன்ற பொலிஸ் – தப்பிய பெண்

          கற்பழிப்பு ,கொலைகாரனை சுட்டு கொன்ற பொலிஸ் – தப்பிய பெண்

          அமெரிக்காவில் காரில் சிசுவுடன் பயணித்த பெண் ஒருவரை வழிமறித்த கொள்ளையன் அவரது

          காரில் உள்ள பொருட் களை திருட முயன்றதுடன் அந்த பெண்ணை கற்பழிக்க முனைந்துள்ளார்

          இவ்வேளை அலறிய பெண் பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த

          போலீசார் அவனை மடக்கினர் ,ஆயினும் அவன் விடுவதாக இல்லை ,வேறு வழியின்றி துப்பாக்கி


          சூடு நடத்தினர் ,இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் பலியானார் ,சிசுவும் தாயும்

          உயிர் ஆபத்தின்றி தப்பியுள்ளனர்

            Posted in Uncategorized

            ஈரானிடம் சிக்கிய இஸ்ரேலின் ஆயுதங்கள் – தாக்குதல் முறியடிப்பு

            ஈரானிடம் சிக்கிய இஸ்ரேலின் ஆயுதங்கள் – தாக்குதல் முறியடிப்பு

            ஈரானுக்குள் இஸ்ரேல் ஆதரவு குழுக்கள் ஊடக கடத்தி வரப்பட்ட பெருமளவான ஆயுதங்கள்


            சிக்கியது ,ஈரானிய உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து எல்லையோரம் பாதுகாப்பு பல பட்டது ,

            இதனை அடுத்து மேற்படி ஆயுதங்கள் சிக்கின ,இந்த நவீன ரக ஆயுதங்கள் ஊடக துல்லியமான

            தாக்குதலை நடத்திட திட்டமிட்ட பொழுதும் அவை முறியடிக்க பட்டுள்ளதாக ஈரான்

            தெரிவித்துள்ளது ,ஈரானுக்குள் மொசாட் உளவாளிகள் ஊடுருவிய நிலையில் அவர்களில்

            முக்கியமானவர்களை கைது செய்து இருந்தமை குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            இரு சிறுமிகளின் முகத்தில் மிளகாய் கரைத்து ஊற்றிய மாமன்

            இரு சிறுமிகளின் முகத்தில் மிளகாய் கரைத்து ஊற்றிய மாமன்

            இலங்கை மொனராகலை பகுதியில் பாட்டியுடன் வசித்து வந்த 13 மற்றும் 9 வயது சிறுமிகளுக்கு

            அவரது மாமனார் மிளகாயை கரைத்து அந்த சிறுமிகள் முகத்தில் ஊற்றியுள்ளார்

            தந்தை தயை பிரிந்து சென்ற நிலையில் தயார் கொழும்பில் தங்கி இருந்து வேலை பார்த்து

            வருகின்றார் ,அவ் வேளையே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது

            சிறுமிகளை வதைத்தார் என்ற என்ற குற்ற சாட்டில் அவர் கைது செய்ய பட்டுளளார் ,மேற்படி

            சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

            இப்படியும் வக்கிர குணம் படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்

              Posted in Uncategorized

              வீட்டுக்குள் புகுந்த இராணுவ டிராக் – உடைந்த வீடு

              வீட்டுக்குள் புகுந்த இராணுவ டிராக் – உடைந்த வீடு

              பொலன்னறுவை – மெதிரிகிரிய பிரதான வீதியில் ஹிங்குராங்கொட மாரசிங்க தோட்டப் பகுதியில் இராணுவ ட்ரக் வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது.

              விபத்தில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வீதிக்கு அருகில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கும் மற்றும் விற்பனை நிலையம் ஒன்றுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

              இன்று (01) பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், இராணுவ ட்ரக் வண்டியில் இரண்டு இராணுவத்தினர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

              வெலிகந்த புனானி பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்து ஹிங்குராங்கொட இராணுவ முகாமிற்கு சென்றுக் கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

              விபத்தில் காயமடைந்த இராணுவ ட்ரக் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

              இந்த விபத்தில் வீட்டில் இருந்த யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்றும், ட்ரக் மோதியதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                Posted in Uncategorized

                தீயில் எரிந்த அமெரிக்கா இராணுவ கவச வண்டிகள்

                தீயில் எரிந்த அமெரிக்கா இராணுவ கவச வண்டிகள்

                வட கிழக்கு சிரியா பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இரண்டு கவச வண்டிகள் தீ பற்றி எரிந்தன ,

                இவ்வேளை அதில் பயணித்த இராணுவத்தினருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                சமீப காலங்களாக அமெரிக்கா படைகளை இலக்கு வைத்து இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                படகு கவிழ்ந்து 29 பேர் மரணம் – கண்ணீரில் குடும்பம்

                படகு கவிழ்ந்து 29 பேர் மரணம் – கண்ணீரில் குடும்பம்

                நையீரியாவில் படகு கவிழ்ந்து 29 பேர் பலியாகியுள்ளனர் ,அதிக எண்ணிக்கையில் பயணிகளை

                ஏற்றியதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

                காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன ,மீட்க பட்ட பலர்

                தற்போது மருத்துவ மனையில் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

                மேற்படி விபத்து தொடர்பிலான புலன் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                  Posted in Uncategorized

                  தாய்வானை தாக்கி கைப்பற்ற சீனா முனைவு – பதட்டம் அதிகரிப்பு

                  தாய்வானை தாக்கி கைப்பற்ற சீனா முனைவு – பதட்டம் அதிகரிப்பு

                  சீனா தாய்வான் நாடானாது தனது மாநிலங்களில் ஒன்று என தொடராக கூறி வருகிறது ,மேலும்

                  தாய்வான் மீது பெரும் இராணுவ படையெடுப்பு ஒன்றை நடத்தை அதனை ஆக்கிரமிக்கும்

                  நகர்வில் சீன முனைப்புகளை தீவிர படுத்தியுள்ளது

                  எல்லையோரங்களில் அதி நாவீன ஆயுதங்கள் மற்றும் பாரியை படைகளை குவித்துள்ளது


                  எவ்வேளையும் சீனா போர் ஒன்றை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

                  தாய்வானுக்கு ஆதரவாக எல்லையோரங்களில் அமெரிக்கா படைகள் குவிக்க பட்டுள்ளது ,இங்கு

                  போர் மூண்டால் அதுவே உலக யுத்தமாக மாறும் நிலை ஏற்படும் என இராணுவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  இலங்கையில் புதிய சட்டம் – மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்பு

                  இலங்கையில் புதிய சட்டம் – மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்பு

                  இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன , திருமண

                  மன்படங்களில் 200க்கு குறைவானவர்களே அனுமதிக்க படுவார் ,மேலும் உணவகங்களில் உள்ளே

                  100 உள்ளானவர்கள் மட்டும் அமர வேண்டும்

                  தவிர வீடுகளை விட்டு தேவையின்றி வீதிகளில் நடமாட வேண்டாம் என எச்சரிக்கை பட்டுள்ளது

                  ,மீறுவோர் காவல்துறையால் கைது செய்ய படுவார்கள் என தெரிவிக்க படுகிறது
                  மக்களே விழிப்பாக இருங்கள்

                  பரவும் நோயில் இருந்து உங்களை காப்பற்றி கொள்ளுங்கள்

                    Posted in Uncategorized

                    தீயில் எரிந்து சிறுமி மரணம்

                    தீயில் எரிந்து சிறுமி மரணம்

                    இலங்கை வெலிகம பகுதியில் எட்டு வயது சிறுமி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி
                    இறந்துள்ளார்

                    இந்த வீடு தீ பற்றல் விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சம்பவமா என்பது தொடபில் விசாரணைகள்

                    ஆரம்பிக்க பட்டுள்ளன


                    நாடெங்கும் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து இவ்வாறான தீ பரவல் சம்பவங்கள்

                    இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      பேரூந்துக்கு காத்திருந்த 14 வயது வாலிபன் 18 தடவை சுட்டு கொலை

                      பேரூந்துக்கு காத்திருந்த 14 வயது வாலிபன் 18 தடவை சுட்டு கொலை

                      Philadelphia பகுதியில் பேரூந்துக்கு காத்திருந்த 14 வயது வாலிபன் ஒருவர் 18 தடவை சுட்டு படுகொலை செய்ய பட்டுளளார்

                      இவரது இந்த கொலைக்குரிய காரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,

                      சிறுவனின் படுகொலை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது

                        Posted in Uncategorized

                        வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி -பலர் மரணம்

                        இன்று சேர்பியா நாட்டி இராணுவத்தினர் எல்லை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு

                        கொண்டிருந்த பொழுது குறித்த உலங்கு வானூர்தியானது வீழ்ந்து நொறுங்கியுள்ளது

                        இயந்திர கோளாறினால் வீழ்ந்து நொறுங்கியதா அல்லது சுட்டு வீழ்த்த பட்டதா என்பது

                        தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                        மேலும் இந்த விபத்தில் சிக்கி பலர் பலியாகியும் சிலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற

                        வண்ணம் உள்ளனர் என இராணுவம் தெரிவித்துள்ளது

                          Posted in Uncategorized

                          சூட்டு காயங்களுடன் வீட்டுக்குள் இருந்து 4 சடலங்கள் மீட்பு

                          சூட்டு காயங்களுடன் வீட்டுக்குள் இருந்து 4 சடலங்கள் மீட்பு

                          அமெரிக்கா இந்தியனா பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இருந்து நான்கு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன

                          மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இவர்கள் இறந்ததாக தெரிவிக்க படுகிறது ,ஆயுத தாரி

                          தாக்குதல் நடத்திய பொழுது யன்னலை உடைத்து சிலர் குதித்துள்ளனர் என போலீசார் தெரிவிக்கின்றனர்

                          இந்த தாக்குதலுக்குரிய காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                            Posted in Uncategorized

                            வெடித்து சிதறும் காஸ் சிலிண்டர் – மக்களே எச்சரிக்கை

                            வெடித்து சிதறும் காஸ் சிலிண்டர் – மக்களே எச்சரிக்கை

                            இலங்கையில் கடந்த இரு நாட்களில் இருபது காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளன


                            மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                            இந்த சம்பவத்தினால் சில வீடுகள் சேதமாகியுள்ளன , நாள் தோறும் இந்த எரிவாயுவை பயன்

                            படுத்தும் மக்களே மிக எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்ட படுகிறது

                            சிலிண்டரில் எரிவாயு கசிவே இந்த வெடிப்பிற்கு கரணம் என கண்டறிய பட்டுள்ளது

                              Posted in Uncategorized

                              சீனாவின் மலை உச்சியில் ஆபத்தான மரண சாலை

                              சீனாவின் மலை உச்சியில் ஆபத்தான மரண சாலை

                              சீனா உலக நாடுகளில் முக்கிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சாதனை படைத்தது

                              வருகிறது ,அவ்விதம் உயர் மலை ஒன்றை குடைந்து அதன்வழியாக வீதி அமைக்க பட்டுள்ளது

                              ,இந்த வீதி உலகில் மிக ஆபத்தான மரண சாலை என இடம்பிடித்துள்ளது

                              கரணம் தப்பினால் மரணம் என்பது இது தான் பாருங்கள் மிரள வைக்கும் வீதி

                                Posted in Uncategorized

                                வீடுகளை அடித்து நொறுக்கிய புயல் – 4 பேர் மரணம் -19 பேர் காயம்

                                வீடுகளை அடித்து நொறுக்கிய புயல் – 4 பேர் மரணம் -19 பேர் காயம்

                                துருக்கியில் மணிக்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி

                                வீட்டு கூரைகள் அடித்து செல்ல பட்டன ,பயன் தரும் மரங்கள் உள்ளிட்டவை வீழ்ந்து முறிந்துள்ளன

                                இந்த அனர்த்தத்தில் சிக்கி இதுவரை நால்வர் பலியாகியுள்ளனர் ,மேலும் 19 பேர்

                                படுகாயமடைந்துள்ளனர்

                                காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவ மனை வட்டாரங்கள்

                                தெரிவித்துள்ளன