ராஜு ஜெயமோகன்
Posted in Uncategorized சினிமா

பிக்பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளர் யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளர் யார் தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனின் வெற்றியாளர் யார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளர் யார் தெரியுமா?
ராஜு ஜெயமோகன்


தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது இறுதி நாட்களை நெருங்கியுள்ளது. இதன் வெற்றியாளர் அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்ததுள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்ற

ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்புடன் பேசப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் களம் இறங்கி பெரிய ரசிகர்களை கவர்ந்த ராஜு, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். இவர் அந்த வீட்டின் டப் காம்பட்டீட்டராக இருந்து வந்தார். இந்த சீசனில் வெற்றி

பெற்றது ராஜு என்று கூறப்படுகிறது. தொகுப்பாளராக பணியாற்றி பெரிய ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா 2வது இடத்தை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

3வது இடத்தை பாவனியும், 4வது இடத்தை அமீரும், 5வது இடத்தை நிரூப் பிடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Posted in Uncategorized

    பிரிட்டனில் கொரானாவுக்கு 287 பேர் பலி

    பிரிட்டனில் கொரானாவுக்கு 287 பேர் பலி

    பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் 287 பேர்

    பலியாகியுள்ளனர்
    மேலும் 81 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

    இதே போல அமெரிக்காவில் 886 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 404 ஆயிரம் பேர் பாதிக்க

    பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

      தற்கொலை குண்டு தாக்குதல்
      Posted in Uncategorized

      அமைச்சர் மீது தற்கொலை குண்டு தாக்குதல்

      அமைச்சர் மீது தற்கொலை குண்டு தாக்குதல்

      சோமாலிய அரச பேச்சாளர் இல்லம் அருகில் ,அவரை இலக்கு வைத்து நடத்த பட்ட தற்கொலை

      குண்டு தாக்குதலில் சிக்கி அவர் பலத்த காயமடைந்துள்ளார்

      தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

      இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை

        வெடித்த குண்டு
        Posted in Uncategorized

        வெடித்த குண்டு பலர் மரணம்

        வெடித்த குண்டு பலர் மரணம்

        ஆப்கானிஸ்தான் காபூல் பகுதியில் வெடித்து சிதறிய கூண்டில் இருவர் பலியாகியுள்ளனர் ,மேலும்

        மூன்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

        தலிபான்கள் ஆட்சியில் தொடராக அதன் தலைநகரில் குண்டுகள் வெடித்து வருகின்றமை

        அவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

          செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
          Posted in Uncategorized

          யாழில் வயிற்றிற்குள் துணியை வைத்து தைத்ததால் பெண் ஒருவர் பலி

          யாழில் வயிற்றிற்குள் துணியை வைத்து தைத்ததால் பெண் ஒருவர் பலி

          நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் தனியார் மருத்துவமனையில் சத்திர சிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சத்திர சிகிச்சை

          மேற்கொண்ட மருத்துவ குழு உள்ளிட்ட விவரம் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

          பருத்தித்துறை யாக்கருவைச் சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (வயது-60) என்ற பெண்ணே உயிரிழந்தார்.

          பெண்ணுக்கு கற்பப்பையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக அதனை அகற்றுவதற்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

          அதனால் நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் தனியார் மருத்துவமனையில் கடந்த டிசெம்பர் 10 ஆம் திகதி பெண்நோயியல் சத்திரசிகிச்சை வல்லுநர் ஒருவரினால் பெண்ணின் கற்பப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சை இடம்பெற்றது.

          இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் உயிரிழந்தார்.

          மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் பெண்ணின் சடலம் நேற்று உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

          சத்திரசிகிச்சையின் போது பெண்ணின் உடலுக்குள் 50 சென்ரிமீற்றர் நீளம் 10 சென்ரிமீற்றர் அகலமுள்ள துணி ஒன்று வைத்து தையலிடப்பட்டமை கண்டறியப்பட்டது.

          அவரது உயிரிழப்புக்கு அந்த துணியினால் ஏற்பட்ட கிருமித்தொற்றே காரணம் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் வழங்கப்பட்டது.

          சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன், தனியார் மருத்துவமனை பணிப்பாளர், மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் உள்ளிட்டோரை இன்று மன்றில் முன்னிலையாக உத்தரவிட்டார்.

          பெண்ணின் உடலை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்திய மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவாவிடம் இன்று முற்பகல் வாக்குமூலம் பெறப்பட்டது.

          தொடர்ந்து இன்று பிற்பகல் ஒரு மணியளவில் தனியார் மருத்துவமனை சத்திரசிகிச்சை கூடத்துக்குச் சென்ற நீதிவான் விசாரணைகளை முன்னெடுத்தார்.

          உயிரிழந்த பெண்ணுக்கு சத்திரசிகிச்சை முன்னெடுத்த மருத்துவ குழுவினரின் விவரம் உள்ளிட்டவை வரும் ஜனவரி 18 செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை நீதிவான் மன்றில் முன்வைக்கவேண்டும். அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு விசாரணை முன்னெடுக்கப்படும் என்று நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டார்.

            ஏவுகணை சோதனை
            Posted in Uncategorized

            வடகொரியா 3 ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

            வடகொரியா 3 ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

            வடகொரியா கடந்த இரு வாரத்தில் கடந்த தினத்துடன் மூன்று hypersonic ஏவுகணைகளை சோதனை புரிந்துள்ளது

            இந்த ஏவுகணைகள் தமது இலக்கை சென்று தாக்கியுள்ளது எனவும் இவற்றால் மிக பெரும்

            அழிவுகள் ஏற்படுத்தும் திறன் கொண்டவை என தென் கொரியா இராணுவம் அறிவித்துள்ளது

            இந்த ஏவுகணை சோதனையை அமெரிக்காவும் உறுதி படுத்தியுள்ளது ,அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு


            உள்ளாகியுள்ள நிலையில் ,தமது தேசிய பாதுகாப்புக்கு என வடகொரியா அணுகுண்டுகளை காவி

            சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை தொடராக சோதனை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

              நில நடுக்கம்
              Posted in Uncategorized

              இந்தோனேசியாவில், சுனாமி எச்சரிக்கை நில நடுக்கம்

              இந்தோனேசியாவில், சுனாமி எச்சரிக்கை நில நடுக்கம்

              இந்தோனேசியாவில் கடந்த தினம் 6.7-அளவில் நிலநடுக்கம் ஏற் பட்டுள்ளது
              இது சுனாமி எச்சரிக்கையாக இருந்துள்ளது

              எனினும் இங்கு சுனாமி ஏற்படவில்லை

              இந்த சம்பவத்தின் பின்னர் அந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உறைந்துள்ளனர்

              யகட்டாவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                அமெரிக்காவில் துரத்தும் கொரனோ -2,129 பேர் ஒரே நாளில் மரணம்

                அமெரிக்காவில் துரத்தும் கொரனோ -2,129 பேர் ஒரே நாளில் மரணம்

                அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
                கடந்த தினம் மட்டும் 2,129 பேர் பலியாகியுள்ளனர்


                மேலும் எட்டு லட்சத்திற்கு அதிகமானவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

                இதே போல பிரிட்டனில் 270 பேர் பலியாகியும் 99,652 பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                  கைது
                  Posted in Uncategorized உலக செய்திகள்

                  லண்டன் Chatham. பகுதியில் ஆயுதங்களுடன் 5 பேர் கைது

                  லண்டன் Chatham. பகுதியில் ஆயுதங்களுடன் 5 பேர் கைது

                  லண்டன் Chatham. பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் முற்றுகையின் பொழுது ஐந்து பேர் கைது செய்ய பட்டனர்


                  கைதானவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதைவஸ்து என்பன மீட்க பட்டுள்ளது

                  கைதானவர்க்ளிடம் உரிய முறையில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                  ,பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது

                    குண்டு வெடிப்பு
                    Posted in Uncategorized

                    லெபனானில் மூன்று பெரும் குண்டு வெடிப்பு -இஸ்ரேல் நாசகார வேலை

                    லெபனானில் மூன்று பெரும் குண்டு வெடிப்பு -இஸ்ரேல் நாசகார வேலை

                    லெபனான் நாட்டுக்குள் மீளவும் இன்று மூன்று பாரிய குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது ,இந்த

                    குண்டு தாக்குதல் பெரும் சத்தத்துடன் அதிர்ந்த வண்ணம் இருந்தது

                    இஸ்ரேல் உளவுத்துறையால நன்கு திட்டமிடப்பட்டு நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                    இதனால ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

                      ரஷியா இராணுவம்
                      Posted in Uncategorized

                      உக்கிரேன் எல்லையில் 10,000 ரஷியா இராணுவம் – போர் பதட்டம் அதிகரிப்பு

                      உக்கிரேன் எல்லையில் 10,000 ரஷியா இராணுவம் – போர் பதட்டம் அதிகரிப்பு

                      உக்கிரேன் எல்லையி, பத்து ஆயிரம் ரஷியா இராணுவத்தினர் அதி நவீன ஆயுதங்களுடன் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர்

                      மேற்படி இராணுவ ஒத்திகை பெரும் போர் பதற்றத்தை இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தியுள்ளது

                      நேட்டோ படையில் உக்கிரேன் இணையவுள்ளதாக அறிவிக்க பட்டு வரும் வேளையில் ரஷியா

                      இந்த திடீர் இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதுடன் ,ஆயிர கணக்கில் துருப்புக்களை குவித்துள்ளது


                      பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

                        சீனா
                        Posted in Uncategorized

                        பூட்டான் எல்லையில் சீனாவின் கிராமங்கள் – வெடித்தது போர்

                        பூட்டான் எல்லையில் சீனாவின் கிராமங்கள் – வெடித்தது போர்

                        டோக்லோம் பள்ளத்தாக்கில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் சாலை கட்டுமானப் பணிகளை சீனா மேற்கொண்டு வருவது குறித்த செயற்கைக்கோள் படங்கள், புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

                        பூட்டான் எல்லைக்குள் சட்டவிரோதமாக கிராமங்களை உருவாக்கும் சீனா
                        பூட்டான் எல்லையில் கிராமங்களை உருவாக்கும் சீனா

                        இந்தியாவில் கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு இந்தியாவும், சீனாவும்

                        ஆயிரக்கணக்கில் படைகளை குவித்து கண்காணிப்பு பணிகளை பலப்படுத்தின. இதனால் எல்லையில் கடுமையான பதற்றம் தொடர்ந்து வருகிறது.

                        இதை தணிக்கும் நடவடிக்கையாக சீனப்பகுதியில் உள்ள சுசுல்-மோல்டோ எல்லையில் இந்தியா சீனா ராணுவ அதிகாரிகள் தரப்பில் 14-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.

                        இந்நிலையில், பூட்டானுக்குள் சட்டவிரோதமாக இரண்டு கிராமங்களை சீனா கட்டமைத்து வருவது குறித்து செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. டோக்லாம் பள்ளித்தாக்கு

                        பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சாலை கட்டுமான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் ஒரு முழு அளவிலான கிராமத்தை அது உருவாக்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

                        கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவின் இந்த அத்துமீறல் கட்டுமான பணிகளை


                        கண்டறிந்ததாக இன்டல் ஆய்வகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர் டேமியன் சைமன் தெரிவித்துள்ளார்.

                        சீனாவுக்கும் பூட்டானுக்கும் இடையே உள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் நடந்து வரும் இந்த

                        கட்டுமானப்பணிகள் மேம்பாட்டு நடவடிக்கைகள் மறுக்க முடியாத சான்றாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                          Posted in Uncategorized

                          பிரிட்டனில் கோரானோவுக்கு 398 பேர் மரணம்

                          பிரிட்டனில் கோரானோவுக்கு 398 பேர் மரணம்

                          பிரிட்டனில் என்றும் இல்லாதவாறு கொரனோ நோயானது வேகமாக பரவி வருகிறது


                          இதன் தொற்றில் சிக்கி கடந்த தினம் மட்டும் 398 பேர் பலியாகியுள்ளனர்

                          மேலும் 129,587 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                          அமெரிக்கா
                          அமெரிக்காவில் 2,283 பேர் பலியாகியும் 829,209 பேர் பாதிக்க பட்டுள்ளனர்


                          உலகில் அதிக மரணங்கள் இடம்பெற்ற நாடக அமெரிக்கா இடம் பிடித்துள்ளது

                            தீயில் எரிந்து
                            Posted in Uncategorized

                            தீயில் எரிந்து 16 பேர் பலியான சோகம்

                            தீயில் எரிந்து 16 பேர் பலியான சோகம்

                            தென்னாப்பிரிக்காவில் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் பலியாகி உள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

                            லிம்பொபோ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                            பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய பேருந்து ஒன்று காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

                            விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்து வெடித்துள்ள நிலையில் அதில் பயணித்த 16 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

                              போலீசார் விசாரணை
                              Posted in Uncategorized

                              கடத்தல் குழுவில் பிரமுகர்களின் மனைவிகள்- விசாரிக்க தயங்கிய போலீசார்

                              கடத்தல் குழுவில் பிரமுகர்களின் மனைவிகள்- விசாரிக்க தயங்கிய போலீசார்

                              மனைவி மாற்றும் குழுக்களில் இடம்பெற்ற கோவா மற்றும் தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பற்றிய முக்கிய விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

                              3 ஆண்டுகளாக மனைவி மாற்றும் குழுக்களில் முக்கிய பிரமுகர்களின் மனைவிகள்- விசாரிக்க தயங்கிய போலீசார்
                              போலீசார் விசாரணை


                              கேரளாவில் மனைவி மாற்றும் குழுக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

                              தற்போது இப்பிரச்சினையை வெளியே கொண்டு வந்த பெண், 2 ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி போலீசில் புகார் செய்துள்ளார். அப்போது இந்த பிரச்சினை பற்றி போலீசார் முறையாக விசாரிக்க வில்லை.

                              இதற்கு காரணம் என்ன? என்பது பற்றி இப்போது தகவல் வெளியாகி உள்ளது. அதன்விபரம்:-

                              மனைவி மாற்றும் குழுக்கள் பற்றிய தகவல் கிடைத்ததும் முதலில் இதனை போலீசார் பெரிதாக நினைக்கவில்லை. வேண்டுமென்றே புகார் கூறுவதாக எண்ணினர்.

                              அதன்பின்பு தொடர்ந்து சிலர் இதுபோன்ற புகார்களை கூற போலீசார், இக்குழுக்களின் பின்னணி குறித்து விசாரிக்க தொடங்கினர். அப்போது தான் இக்குழுவில் பல முக்கிய பிரமுகர்களும், அவர்களின் மனைவியரும் உறுப்பினராக இருப்பதை தெரிந்து கொண்டனர்.

                              விசாரணை என்றால் அவர்களையும் அழைக்க வேண்டும் என்று கருதிய போலீசார், அதற்கு தயங்கி புகாரை முடித்து வைப்பதிலேயே ஆர்வம் காட்டி உள்ளனர்.

                              இப்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியதும், அப்போது இந்த புகாரை விசாரித்த அதிகாரிகள் தங்களுக்கு ஏதாவது பாதிப்பு வருமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.

                              தற்போது இந்த வழக்கின் விசாரணையை கேரள உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இந்த குழுக்களில் இடம்பெற்ற கோவா மற்றும் தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பற்றிய முக்கிய விபரங்களை சேகரித்து வருகிறார்கள். அவர்களை பிடித்தால் மனைவி மாற்றும் குழுக்களின் நெட்வொர்க் பற்றிய முழு விபரமும் தெரியவரும் என்று கருதுகிறார்கள்.

                                Posted in Uncategorized

                                காதலியை கற்பழித்த 4 பேர் – யாழில் நடந்த பயங்கரம்

                                காதலியை கற்பழித்த 4 பேர் – யாழில் நடந்த பயங்கரம்

                                தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18

                                வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர்.

                                நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட யுவதி நேற்றைய தினம் (11) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

                                குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

                                தொலைபேசிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்த தவறுதலான தொலைபேசி அழைப்பின் ஊடாக அறிமுகமான இளைஞனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

                                இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காத நிலையில் காதலித்து வந்துள்ளனர்.

                                அந்நிலையில் நேற்றைய தினம் குறித்த இளைஞன், யுவதியை திருமணம் செய்வதற்கு தயாராக

                                இருப்பதாகவும், வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வருமாறும், அதன் போது வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றை எடுத்து வருமாறும் கூறியுள்ளார்.

                                இளைஞனின் ஆசை வார்த்தையை நம்பிய குறித்த யுவதி, தன்னுடைய சங்கிலி உள்ளிட்ட சொற்ப நகைகளையும் , 40 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் எடுத்துக்கொண்டு நேற்று காலை இளைஞன் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.

                                அங்கு நின்றிருந்த குறித்த இளைஞன் அப்பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு , ஐஸ்கிறீம் கடை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.

                                அங்கு இருவரும் சிற்றுண்டி சாப்பிட்டு, ஐஸ் கிறீம் குடித்த பின்னர் காலை 10 மணியளவில் இளைஞன், அந்த யுவதியை தன்னுடைய தாய்க்கு அறிமுகம் செய்து வைப்பதாக, வடமராட்சி திக்கம் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

                                அங்கு ஆள் நடமாற்றம் அற்ற பகுதி ஒன்றுக்கு யுவதியை அழைத்து சென்று ஆசை வார்த்தைகளை கூறி, உறவு கொண்டுள்ளார். பின்னர் தண்ணீர் வாங்கி வருவதாக கூறி அவ்விடத்தில் யுவதியை தனியே விட்டு விட்டு சென்றுள்ளார்.

                                இளைஞன் சென்று சில நிமிடங்களில் மூன்று இளைஞர்கள் அவ்விடத்திற்கு சென்று யுவதியை பலாத்காரமாக வன்புணர்ந்து உள்ளனர்.

                                பின்னர் யுவதியை அழைத்து சென்ற இளைஞனும் அவ்விடத்திற்கு வந்து நான்கு பேருமாக யுவதியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். பின்னர் யுவதியிடம் இருந்த 40

                                ஆயிரம் ரூபாய் பணம், நகைகள், தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்த பின்னர் யுவதியை அழைத்து வந்த இளைஞன் யுவதியை மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று யுவதியின் கிராமத்திற்கு அருகில் வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளார்.

                                சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் யுவதியினால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி

                                என்பதனால் முறைப்பாட்டை நெல்லியடி பொலிஸார் பருத்தித்துறை பொலிஸாரிடம் பாரப்படுத்தியுள்ளனர்.

                                பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

                                அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க முயன்ற போது நான்கு பேரும் நேற்றைய தினத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளமை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

                                அதனால் குறித்த நான்கு இளைஞர்கள் மீதும் பொலிஸாருக்கு வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

                                இதேவேளை , கடந்த வருடம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரை முகநூல் ஊடாக அறிமுகமான இளைஞன் அந்த யுவதியை காதலிப்பதாக கூறி முள்ளி பகுதிக்கு அழைத்து சில

                                இளைஞர்கள் இணைந்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                                  கண்ணீரில் மக்கள்
                                  Posted in Uncategorized

                                  தீயில் எரிந்த 100 வீடுகள் – கண்ணீரில் மக்கள்

                                  தீயில் எரிந்த 100 வீடுகள் – கண்ணீரில் மக்கள்

                                  வடக்கு சில்லி slum பகுதியில் உள்ள கிராமங் புரத்தில் திடீரென தீ பற்றி கொண்டது ,இந்த தீயில் சிக்கி சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்தன

                                  இங்த தீ விபத்தில் சிக்கி வீடுகளை இழந்து 400 மக்கள் அகதிகளாகியுள்ளனர்,


                                  அணைத்து பொருட்களையும் தீயில் பறி கொடுத்து கண்ணீருடன் இவர்கள் உள்ளனர்

                                    இஸ்ரேல் படைகள்
                                    Posted in Uncategorized

                                    லெபனான் எல்லையில் குவிக்க படும் இஸ்ரேல் படைகள்

                                    லெபனான் எல்லையில் குவிக்க படும் இஸ்ரேல் படைகள்

                                    லெபனான் எல்லையில் திடீரென இஸ்ரேல் இராணுவம் குவிக்க படுவதால் நாடுகளுக்கு இடையில்

                                    பதட்டம் நிலவுகிறது

                                    இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல் நடத்த கூடும் என்பதால் இந்த இராணுவ குவிப்பில்

                                    இஸ்ரேல் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                      திமிர் பிடித்த பெண்
                                      Posted in Uncategorized

                                      ஏழை வியாபாரியை வீதியில் அவமதித்த பணக்கார திமிர் பிடித்த பெண்

                                      ஏழை வியாபாரியை வீதியில் அவமதித்த பணக்கார திமிர் பிடித்த பெண்

                                      தனது கார் மீது தள்ளுவண்டி இடித்ததால் ஆவேசம் அடைந்த பெண்மணி அதில் விற்பனைக்கு வைத்திருந்த பழங்களை சாலையில் வீசியது போபாலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

                                      கார் மீது தள்ளுவண்டி இடித்ததால் ஆத்திரம் – பழங்களை சாலையில் வீசிய பெண்மணி
                                      பழங்களை சாலையில் வீசிய பெண்மணி

                                      மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள அயோத்தியா நகரில் தனியார் பல்கலைக்கழக

                                      பேராசிரியை ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பழம் விற்றுக் கொண்டிருந்த தள்ளுவண்டி கார் மீது இடித்ததாகக் கூறப்படுகிறது.

                                      இதனால் ஆத்திரம் அடைந்த அந்தப் பேராசிரியை காரை ஓரமாக நிறுத்தினார். விடுவிடுவென

                                      காரில் இருந்து இறங்கிய அவர் தள்ளுவண்டிக்காரரிடம் வாக்குவாதம் செய்தார். மேலும், வண்டியில் இருந்த பப்பாளி பழங்களை அள்ளி ஆவேசமாக சாலையில் வீசினார்.

                                      பழக்கடை வைத்திருந்தவர் கெஞ்சிக் கேட்டும் அந்தப் பெண்மணி கேட்பதாக இல்லை. சிறிது

                                      நேரம் கழித்து அந்தப் பெண்மணி அங்கிருந்து சென்றுவிட்டார்.

                                      அக்கம்பக்கத்தில் இருந்த அபார்ட்மெண்ட்வாசிகளில் சிலர் இதை வீடியோவாக எடுத்து

                                      வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

                                      பெண்ணை காணவில்லை
                                      Posted in Uncategorized

                                      15 வயது அழகிய பெண்ணை காணவில்லை – தேடும் போலீஸ்

                                      15 வயது அழகிய பெண்ணை காணவில்லை – தேடும் போலீஸ்

                                      இலங்கை மகரகம பகுதியில் கடந்தஏழாம் திகதி முதல் பதின் ஐந்து வயதுடைய அழகிய பெண்

                                      ஒருவர் காணாமல் போயுள்ளார்
                                      இவரை கண்ணுற்றால் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

                                      இவர் கடத்த பட்டாரா அல்லது உறவினர்கள் ,நண்பர்கள் வீடுகளுக்கு சென்றாரா என்பது

                                      தொடர்பில் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது