Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
கொழும்பு வீதிகளில் மூன்று மர்ம மனித உடல்கள் – உடல் பாகங்கள் மாயம்
கொழும்பு வீதிகளில் மூன்று மர்ம மனித உடல்கள் – உடல் பாகங்கள் மாயம்
கொழும்பு மற்றும் வெள்ளவத்தை பீச் பகுதியில் அடையாளம் தெரியாத மூன்று அஆண்களுடைய சடலங்கள் மீட்க பட்டுள்ளன
சமீப காலங்களாக கடல் நீரேரிகளை மையமாக வைத்து மனித உடல்கள் மீட்க பட்டு வருகிறது ,.
இது ஆளும் கோத்தபாயவின் நிழல் டிவிஷன் படைகளினால் கொலை செய்ய பட்டு வீச படும்
மனித உடல்கள் என தகவல்கள் வெளியாகி வருகின்றது
இவ்வாறு கொலை செய்ய பட்டுள்ள மனித உடல்களில் சில மனித பாகங்கள் காணாமல்
போயுள்ளதாக திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது
கறுப்பு பட்டியலில் மக்கள் வங்கியை நீக்கியது சீனா
கறுப்பு பட்டியலில் மக்கள் வங்கியை நீக்கியது சீனா
இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கி, கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின்
பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தின் கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒக்டோபரில், கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக
அலுவலகத்தால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டது.
சீன நிறுவனமொன்று இறக்குமதி செய்யத் தீர்மானித்த சேதன உரத் தொகைக்கு பணம் செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையே இதற்குக் காரணமாகும்.
இந்த நிலையில், அண்மையில் குறித்த நிறுவனத்துக்கு இலங்கை 6.9 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
கடன் தரவில்லை என வங்கிக்கு தீ வைத்த நபர்
கடன் தரவில்லை என வங்கிக்கு தீ வைத்த நபர்
தீ வைத்த நபர் மீது ஐபிசி பிரிவு 436, 477 மற்றும் 435 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடன் தரவில்லை என வங்கிக்கு தீ வைத்த நபர்- கர்நாடகாவில் பரபரப்பு
தீயணைப்பு படையினர் வங்கி தீயை அணைக்கும் காட்சி
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் வசிம் முல்லா. 33 வயதாகும் இவர் ஹெடிகொன்டா கிராமத்தில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் லோன் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இவரது விண்ணப்பத்தை பரிசீலித்த வங்கி மேலாளர் கடன் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம்
அடைந்த வசிம் முல்லா, வங்கி கண்ணாடிகளை உடைத்து வங்கிக்குள் நுழைந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
இதனால் வங்கியில் இருந்த பெரும்பாலான பொருட்கள், பத்திரங்கள் தீக்கிரையாகின.
பொதுமக்கள் வருவதை பார்த்துவிட்டு தப்பி ஓட முயற்சி செய்த முல்லாவை அப்பகுதியினர் பிடித்து, அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் தற்போது முல்லா மீது காகிநல்லி காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 436, 477 மற்றும் 435 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தனது பிறந்த நாளில் மாணவர்களுக்கு உதவி புரிந்த சுவிஸ் தமிழச்சி -படங்கள் உள்ளே
தனது பிறந்த நாளில் மாணவர்களுக்கு உதவி புரிந்த சுவிஸ் தமிழச்சி -படங்கள் உள்ளே
இன்று திருமதி ச நவநீதமணி ஆசிரியை அவர்களால் ,சகானா திருச்செல்வம் (சுவிஸ்) அவர்களின் பிறந்தநாள் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைக்கப்பட்டது,
நாடு கடந்து புலத்தில் வசித்தாலும் தமது தொப்பிள் கொடி உறவுகளை மறவாது இவ்விதம் இவர்களுக்கு உதவி புரிந்தமை நம்மை எல்லாம் நெகிழ வைக்கிறது
இன்று போல் என்றும் நீடூழி வாழ வாழ்துகொறோம் ,மேலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
மேற்படி தகவலை குறித்த கல்விசாலை அதிபர் அவர்கள் தனது முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ,சகானாவுக்கு எதிரி இணையமும் நெஞ்சார வாழ்த்துகிறது .வீழ்க தமிழ்,வளர்க உன் புகழ் ,



குடும்பத்தை கடத்தி 75 லட்சம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு
குடும்பத்தை கடத்தி 75 லட்சம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு
இலங்கை குடா ஓயா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பூசகர் மற்றும் அவரது மனைவி
பிள்ளைகளை வானில் கடத்தி சென்று எழுபத்தி ஐந்து லட்சம் கொள்ளையடித்த நல்லவர் அடங்கிய குழு ஒன்று காவல்துறையின் விசேட வேட்டையில் சிக்கினார்
இந்த கடத்தல் காரர்கள் பயன்படுத்திய வான் உள்ளிட்டவை மீட்க பட்ட நிலையில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
பயங்கர கலவரம்- 164 பேர் பலி- கார்களுக்கு தீ
பயங்கர கலவரம்- 164 பேர் பலி- விமான நிலையமும் மூடப்பட்டது
அல்மாட்டி விமான நிலையமும் மூடப்பட்டது. வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுடுமாறு அந்நாட்டு அதிபர் காசிமா ஜோமார்ட்டோகயோவ் உத்தரவிட்டார்.
கஜகஸ்தானில் பயங்கர கலவரம்- 164 பேர் பலி
போராட்டத்தில் கார்களுக்கு தீ
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் திரவ வடிவிலான வாயு (எல்பிடி) விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து அவர்கள் கடந்த வாரம் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. பொது மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சமாதானப்படுத்த பிரதமர் ஆஸ்கர் மமின் தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்தது. ஆனாலும் பொது மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் கார்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்தன.
அல்மாட்டி விமான நிலையமும் மூடப்பட்டது. வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுடுமாறு அந்நாட்டு அதிபர் காசிமா ஜோமார்ட்டோகயோவ் உத்தரவிட்டார்.
இதனால் பொது மக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது.
வன்முறையை அடக்க பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். வன்முறை சம்பவங்களில் 164 பேர் இறந்தனர். இதில் பாதுகாப்பு படையினரை சேர்ந்த 16 பேர் பலியானார்கள்.
மேலும் போராட்டக்காரர்கள் 2,200 பேரும், பாதுகாப்பு படையினர் 1,300 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தற்போது கஜகஸ்தானில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகவும், போராட்டக்காரர்கள் பிடியில் இருந்து அரசு அலுவலகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பொலிஸாரின் வலையில் சிக்கிய 33 அழகிகள்
பொலிஸாரின் வலையில் சிக்கிய 33 அழகிகள்
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கடவத்தையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்தொன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று (09) அதிகாலை 3.00 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனையின் போது, ஹோட்டலில் 33 பெண்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பெண்கள் அனைவரும் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு கடலில் முதலை – மக்களுக்கு எச்சரிக்கை
கொழும்பு கடலில் முதலை – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை கொழும்பு கடல் பகுதியிகள் முதலைகள் உலவி வருவதால் மீனவர்கள் மற்றும்
மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க ப்ட்டுள்ளது
குறித்த கடல் பகுதியில் மக்கள் குளித்து வருகின்ற நிலையில் இந்த அவசர அறிவிப்பு விடுக்க பட்டுள்ளது
ஈரானில் சுட்டு வீழ்த்த பட்ட உக்கிரேன் விமான பயணிகளுக்கு நஸ்ட் ஈடு
ஈரானில் சுட்டு வீழ்த்த பட்ட உக்கிரேன் விமான பயணிகளுக்கு நஸ்ட் ஈடு
ஈரானில் 2020 ஆண்டு பறந்து கொண்டிருந்த உக்கிரேன் நாட்டு பயணிகள் விமானம் ஒன்று ஈரான்
இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டது ,இதன் பொழுது அதில் பயணித்த சுமார் 176 பயணிகளும்
பலியாகினர் ,அவ்விதம் பலியான அனைத்து மக்களுக்கும் ஈரான் நாஷ்ட ஈடு வழங்க ஆரம்பித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது
இராணுவ தாக்குதலில் 200 மக்கள் படுகொலை – பலர் உயிரோடு எரிப்பு
இராணுவ தாக்குதலில் 200 மக்கள் படுகொலை – பலர் உயிரோடு எரிப்பு
நையீரியாவில் காட்டுப்புற பகுதியில் அமைந்துள்ள கிராம புறங்களை இலக்கு வைத்து அரச
இராணுவம் நடத்திய ஈரூடக தாக்குதலில் சிக்கி இதுவரை 200 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்
தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடுக்க பட்டுள்ளதாகஆளும் அரசு கூறி வருகிற பொழுதும்
அப்பாவி மக்கள் அங்கு பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு அரச இராணுவத்தின் மனித வெறி தாக்குதலை அம்பல படுத்துயுள்ளன
இங்கு பல கிராமங்களில் மக்கள் உயிருடன் எரியுண்டு மரணித்துள்ளதான காட்சிகளும்
வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனில் கொரானாவுக்கு 313 பேர் மரணம்
பிரிட்டனில் கொரானாவுக்கு 313 பேர் மரணம்
பிரிட்டனில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த தினம் மட்டும் 313 பேர் பலியாகியுள்ளனர்
இதே தினத்தில் 146 ஆயிரத்திற்கு ம்மேலானவர்கள் நோயினால் பாதிக்க பட்டுள்ளனர்
அமெரிக்கா
அமெரிக்காவில் ஒரே நாளில் 669 பேர் பலியாகியும் 468 ஆயிரத்திற்கு மேலானவர்கள் பாதிக்க பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
லொறியை துரத்தி சென்ற எம்பி
லொறியை துரத்தி சென்ற எம்பி
இலங்கையில் ஆளும் கோட்டபாய ஆட்சியில் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்து
வ்ருகின்றனர் ,எரிவாயு ,மின்சார வெட்டு ,அத்தியாவசிய பொருட்களை விலை என தொடர்ந்த இன்னல்களை சநதித வண்ணம் உள்ளனர்
இவ்வேளை எம்பி ஒருவர் டயனா கமகே தமது வீட்டில் எரிவாயு தீர்ந்துள்ள நிலையில் எரிவாயு ஏற்றி சென்ற லொறி ஒன்றை துரத்தி சென்றுள்ளார்
அந்த லொறி எரிவாயுவை இறக்கிய நிலையத்தில் வைத்து அதனை கொள்வனவு சையதுசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தடம்புரண்ட ரயில் – பயண சேவைகள் பாதிப்பு
தடம்புரண்ட ரயில் – பயண சேவைகள் பாதிப்பு
பதுளையில் இருந்து கண்டி நோக்கி புறப்பட்ட பயணிகள் தொடரூந்து ஒன்று தடம் புராணத்தில்
அவ்வழி போக்குவரத்து தடை பட்டுள்ளது
மீட்பு பணிகள் தொடர்நது இடம்பெற்ற வண்ணம் உள்ளது
காருக்குள் 10 மனித உடல்கள் – பதறிப்போன போலீஸ்
காருக்குள் 10 மனித உடல்கள் – பதறிப்போன போலீஸ்
மெக்சிகோவில் காரில் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
மெக்சிகோவில் காரில் 10 உடல்கள் கண்டெடுப்பு: 2 பேர் கைது
மெக்சிகோவில் காரில் 10 உடல்கள் கண்டெடுப்பு
காருக்குள் 10 மனித உடல்கள் – பதறிப்போன போலீஸ்
வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் மிகுதியாக உள்ளது. தொழில் போட்டியின் காரணமாக போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள்
இடையே ஏற்படும் மோதல்களில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மெக்சிகோவின் மத்திய பகுதியில் உள்ள ஜகாடெகாஸ் மாகாணத்தில் கவர்னர் அலுவலகத்துக்கு அருகே சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று நின்று
கொண்டிருந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ
இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த அந்த காரை சோதனை செய்தனர்.
அப்போது காருக்குள் 10 பேர் பிணமாக கிடந்தனர். அவர்களின் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தன. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து,
போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் காருக்குள் 10 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இந்த படுகொலையின் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளிரில் உறைந்து 22 பேர் உயிரிழப்பு
குளிரில் உறைந்து 22 பேர் உயிரிழப்பு
முர்ரி பகுதியில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிய சுமார் 23 ஆயிரம் வாகனங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் பனிப்பொழிவில் சிக்கிய வாகனங்கள்… குளிரில் உறைந்து 22 பேர் உயிரிழப்பு பனிப்பொழிவில் சிக்கிய கார்
பாகிஸ்தானின் பிரபல மலை வாசஸ்தலமான முர்ரியில் திங்கட்கிழமை முதல் பனிப்பொழிவு உள்ளது. பனிப்போர்வை போர்த்திய ரம்மியமான அப்பகுதியை பார்வையிட சுற்றுலாப் பயணிகள்
குளிரில் உறைந்து 22 பேர் உயிரிழப்பு
வாகனங்களில் சாரை சாரையாக வந்தவண்ணம் இருந்தனர். செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்தது. சுமார் ஒரு லட்சம்
வாகனங்கள் முர்ரி நோக்கி வரும் பாதைகளில் வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. முன்னும்பின்னும் நகர முடியாத நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
அதேசமயம் நேரம் செல்லச் செல்ல பனிப்பொழிவு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்தது. இதனால் வாகனங்களில் இருந்தவர்கள் குளிரில் நடுங்கினர். ராணுவம் மற்றும் போலீசார் மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே வாகனங்களில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் கடுமையான குளிர் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர். இன்று இரவு நிலவரப்படி 10 குழந்தைகள் உள்பட 22 பேர் இறந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பனிப்பொழிவில் சிக்கிய வாகனங்கள்
சுமார் 23 ஆயிரம் வாகனங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முர்ரியில் இருந்து வெளியே கொண்டு
வரப்பட்டன. இன்னும் சுமார் 1000 வாகனங்கள் சிக்கி உள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
கடும் பனிப்பொழிவால் சுற்றுலாப் பயணிகள் பலர் இறந்ததையடுத்து முர்ரி பகுதியை இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியாக பஞ்சாப் மாகாண அரசு அறிவித்தது. மருத்துவமனைகள்,
காவல் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. முர்ரி நோக்கி வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நாள் தோறும் விபத்தில் 35 பேர் மரணம்
இலங்கையில் நாள் தோறும் விபத்தில் 35 பேர் மரணம்
இலங்கையில் நாள்தோறும் இடம் பெறுகின்ற பல்வேறு பட்ட விபத்துக்களில் சிக்கி முப்பத்தி ஐந்து
பேர் பலியாகிய வண்ணம் உள்ளதுடன் ,35 ஆயிரம் பேர் படுகாயமடைந்து வைத்யசாலைகளில்
அனுமதிக்க பட்டு வருகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேற்படி விடயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் ஒரேநாளில் 2,025 பேர் மரணம்
அமெரிக்காவில் ஒரேநாளில் 2,025 பேர் மரணம்
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ ணொயின் தாக்குதலில் சிக்கி 2,025 பேர் .
பலியாகியுள்ளனர் மேலும்
849,181 பேர் பாதிக்க பட்டுள்ளனர் இதே போல பிரிட்டனில் 229 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 178
ஆயிரத்திற்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்.
உலக நாடுகளில் அதிக மக்கள் மரணங்கள் இடம் பெறும் நாடாக அமெரிக்கா பதிய பெற்றுள்ளது.
வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி – பலர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி – பலர் மரணம்
ரஷியாவில் உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் மூவர் பலியாகியுள்ளனர்
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
தனியாருக்கு சொந்தமான உலங்குவானூர்தியே இவ்விதம் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்க படுகிறது
குறித்த விபத்து தொடரப்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
காரால் இடித்துவிட்டு தப்பி சென்ற சாரதி
காரால் இடித்துவிட்டு தப்பி சென்ற சாரதி
அவுஸ்ரேலியாவில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த நபரை அவ்வழியால பயணித்து கொண்டிருந்த
கார் ஒன்று அந்த நபரை இடித்து கொன்று விட்டு தப்பி சென்றுள்ளது
பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட நபர் சிகிச்சை பலனின்றி பலியானார்
தற்போது தப்பி சென்ற கார் கண்டு பிடிக்க பட்டு சாரதி கைது செய்ய பட்டுள்ளார்
மூன்று பிள்ளககை கொன்று வீசிய தாய்
மூன்று பிள்ளககை கொன்று வீசிய தாய்
பிரிட்டனில் இருபத்தி ஏழு வயதுடைய தாய் ஒருவர் தனது 18 மத சிசு மற்றும் மூன்று சிசுக்களை கொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
போதை வஸ்துக்கு அடிமையான நிலையில் இடம்பெற்ற இந்த படுகொலை தொடர்பான
விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்க பட்டுள்ளது
























