Posted in Uncategorized

பிரிட்டனில் அதிக புயல் -Dartford பாலம் அடித்து பூட்டு

பிரிட்டனில் அதிக புயல் -Dartford பாலம் அடித்து பூட்டு

பிரிட்டனில் கடந்த மூன்று திணைகளாகி அதிக புயல் வீசிய வண்னம் உள்ளது ,இதனால் வரலாறு காணாத பேரழிவை பிரிட்டன் சந்தித்துள்ளது

தற்போது அதிவேக நெடுஞ்சாலையும் முக்கிய நுழைவாயிலாக அமைய பெறும் Dartford Bridge தற்போது அடித்து பூட்ட பட்டுள்ளது

கால நிலை மீள் நிலைக்கு திரும்பியதும் இதன் ஊடான போக்குவரத்துக்கு அனுமதிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது

பிரிட்டனில் இந்த புயல் லொறிகளை கூட கவிழ்த்தமை குறிப்பிட தக்கது

    தீ குளித்த
    Posted in Uncategorized

    மனைவி அவர் கள்ள காதலனை தீ வைத்து எரித்த கணவன்

    மனைவி அவர் கள்ள காதலனை தீ வைத்து எரித்த கணவன்

    கள்ள கணவருடன் மனைவி உறங்கிக் கொண்டிருந்த போது நபர் ஒருவர் பெற்றோல் ஊற்றிய தீ வைத்த சம்பவம் ஒன்று பாணமுரே பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

    சம்பவத்தில் படுகாயமடைந்த கள்ள கணவர் என கூறப்படும் நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    அவரது மனைவி தீக்காயங்களுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    எம்பிலிப்பிட்டிய, பாணமுரே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    38 வயதான நான்கு பிள்ளைகளின் தாயாரான இவர், பின்னவல பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

    நேற்று (19) காலை வீட்டுக்கு வந்த கணவரே இவ்வாறு தூ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

      Posted in Uncategorized

      உணவகத்தில் வெடித்து சிதறிய குண்டு 10 பேர் மரணம் – 15 பேர் காயம்

      உணவகத்தில் வெடித்து சிதறிய குண்டு 10 பேர் மரணம் – 15 பேர் காயம்

      மத்திய சோமாலி Beledweyne பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குண்டு ஒன்று

      வெடித்து சிதறியதில் சம்பவ இடத்தில பத்து பேர் பலியாகியுள்ளனர்

      மேலும் பதின் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்

      தொடர்ந்து இவ்விதமான வன்முறை தகத்தல்கள் அதிகரித்து வருவதால் ஆளும் அரசு திணறி வருகிறது

        Posted in Uncategorized

        உக்கிரேன் பகுதியில் வீழ்ந்து வெடித்த ரசியா ஏவுகணைகள்

        உக்கிரேன் பகுதியில் வீழ்ந்து வெடித்த ரசியா ஏவுகணைகள்

        உக்கிரேன் Luhansk, பகுதியைக் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,இதனால் ஏற்பட்ட

        சேத விபரங்கள் பலமாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது

        தொடர்ந்து ரசியா திடீர் முற்றுகை தாக்குதலை நடத்தி உகிரேனை தனது காட்டு

        பாட்டுக்குள் கொண்டு வரலாம் அல்லது தனது பொம்மை ஆட்சி ஒன்றை அங்கு நிறுவலாம் என எதிர் பார்க்க படுகிறது

        ஆட்சி கவிழ்ப்பு அல்லது நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்ற

        நடவடிக்கையில் ரசியா ஈடு படும் என்றே எதிர் பார்க்க படுகிறது

          Posted in Uncategorized

          ஏவுகணைகளை ஏவி பதற்றத்தை அதிகரித்த ரஷியா

          .ஏவுகணைகளை ஏவி பதற்றத்தை அதிகரித்த ரஷியா

          தங்களின் திட்டமிடப்பட்ட பயிற்சியின் ஒரு அங்கமாக ஏவுகணைகளை சோதனை செய்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.

          பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி பதற்றத்தை அதிகரித்த ரஷியா
          ஏவுகணை சோதனை

          ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லையில் ரஷ்யா சுமார் 1.5 லட்சம் வீரர்களை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனும் எல்லையில் போர் பயிற்சி செய்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆதரவாக உள்ளன. உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதனை ரஷியா மறுத்துள்ளது.

          எனினும், உக்ரைன் மீது படையெடுக்க ரஷியா வேண்டும் என்றே சில சம்பவங்களை தூண்டி விடலாம் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

          போர் பயிற்சி

          இந்த பதற்றத்துக்கு மத்தியில் ரஷியா இன்று நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்து அதிரவைத்துள்ளது. ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை செலுத்தியது. தங்களின் திட்டமிடப்பட்ட பயிற்சியின் ஒரு அங்கமாக ஏவுகணைகளை சோதனை செய்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.

          அனைத்து ஏவுகணைகளும் அவற்றின் இலக்குகளைத் தாக்கி, அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட செயல்திறனை உறுதிப்படுத்தியதாக ரஷியா கூறி உள்ளது.

          எதிரிக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் படைகளின் செயல்திறனை முழுமையாக வெளிப்படுத்துவதே இந்த பயிற்சிகளின் முக்கிய நோக்கம் என ராணுவ தளபதி வாலரி தொலைக்காட்சி வாயிலாக அதிபர் புதினிடம் தெரிவித்தார். ரஷிய அதிபர் மாளிகையில் இருந்து அதிபர் புதின், இந்த பயிற்சிகளை பார்வையிட்டார். இந்த ஏவுகணை சோதனையால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

          இதையும் படியுங்கள்… இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்

            Posted in Uncategorized உலக செய்திகள்

            டிக்டோக்கில் வைரலாகும் ரஷியா இராணுவ வண்டிகள் – வீடியோ

            டிக்டோக்கில் வைரலாகும் ரஷியா இராணுவ வண்டிகள் – வீடியோ

            உகிரேனை நோக்கி படையெடுக்கும் ரஷியா இராணுவத்தின் இராணுவ வண்டிகள் தொடர்பாக
            தற்போது சமூக வலைத்தளங்களான டிடோக்கில் புதிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது

            பிரதான சாலை ஒன்றின் வழியாக படை எடுக்கும் இந்த வண்டிகள் தொடர்பான காட்சிகளில் ஒன்றே இவையாகும்

              Posted in Uncategorized

              ஐரோப்பாவை புரட்டி போட்ட புயல் ஒன்பது பேர் மரணம்

              ஐரோப்பாவை புரட்டி போட்ட புயல் ஒன்பது பேர் மரணம்

              பிரிட்டனில் புரட்டி போட்ட புயல் காரணமாக ஐரோப்பாவில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்

              மேலும் லண்டனில் உள்ள O2 Arena.பகுதி கூரையை கிழித்தெறிந்துள்ளது


              இந்த புயலினால் லண்டன் உள்ளிட்ட ஐரோப்ப தழுவிய நிலையில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                உக்கிரேன் மீதான இராணுவ நடவடிக்கை தயார் – தாக்க தயராகும் இராணுவம்

                .

                உக்கிரேன் மீதான இராணுவ நடவடிக்கை தயார் – தாக்க தயராகும் இராணுவம்

                உகிரேனை தமது கட்டு பாட்டுக்குள் கொண்டுவரும் வரும் முகமாக ரஷியா பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை நடத்தவுள்ளது

                தற்போது ரஷியா படைகளுக்கும் உக்கிரேன் ஆதரவு கிளர்ச்சி படைகளுக்கும் இடையில் சிறிய மோதல் சம்பவங்கள் இடம்பெறுவதான செய்திகள் வெளியாகியுள்ளன

                எதிர் வரும் வாரம் ரசியா உக்கிரேன் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும்

                என அமெரிக்கா தெரிவித்துள்ளதால் மேலும் நாடுகளுக்கு இடையி பதட்டம் அதிகரிக்கிறது

                  Posted in Uncategorized

                  போதையில் விபத்து – போலீசாரிடம் ரகளை செய்த நடிகை

                  போதையில் விபத்து – போலீசாரிடம் ரகளை செய்த நடிகை

                  குடிபோதையில் விபத்து ஏற்படுத்தி போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட பிரபல நடிகை காவ்யா தாபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                  குடிபோதையில் விபத்து – போலீசாரிடம் ரகளை செய்த நடிகை கைது
                  காவ்யா தாபர்


                  மும்பையை சேர்ந்த பிரபல நடிகை காவ்யா தாபர். மாடலிங் துறையில் நுழைந்து பின்னர் நடிகையான இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

                  தமிழில் மார்க்கெட் ராஜா என்ற படத்திலும், இந்தியில் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

                  இவர் மும்பை ஜூகுவில் உள்ள நட்சத்திர ஓட்டல் அருகே காரில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அவரது கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த

                  மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

                  காவ்யா தாபர்

                  அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததுடன், அவர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் பெண் போலீசார் ஒருவரின் சீருடையை பிடித்து இழுத்து தாக்கவும்

                  முற்பட்டுள்ளார். இதையடுத்து போலீசார் நடிகை காவ்யா தபாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்

                    செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                    Posted in Uncategorized

                    கடலில் மிதந்த மனித சடலம்

                    கடலில் மிதந்த மனித சடலம்

                    திருகோணமலை – நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன இளைஞர் கடலில் சடலமாக மிதந்த நிலையில் இன்று (17) கரையொதுங்கி உள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                    தலாவ – தம்பகஹவெல, பத்தியமுல்ல பகுதியைச் சேர்ந்த கே.என்.நளின் பிரியன்த (21 வயது) என்பவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிய வருகிறது.

                    கடல் நீரேரிகளில் மிதக்கும் மனித சடலங்கள்

                    தனியார் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் ஊழியர்கள் சிலர் நேற்று (16) நிலாவெளி கடற்கரைக்கு சென்றிருந்த நிலையில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட குறித்த இளைஞர் காணாமல் போயிருந்தார்.

                    கடலில் மிதந்த மனித சடலம்

                    இதனையடுத்து கடற்படையினரும், உப்புவெளி பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் இளைஞர் சடலம் மீட்க முடியாமல் போயுள்ளது.

                    கடலில் மிதந்த பெண்ணின் சடலம் வாலிபன் மாயம்

                    இந்த நிலையிலேயே இளைஞரின் சடலம் இன்றைய தினம் கடலில் மிதந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிய வருகிறது.

                    தொடர்ந்து கடலில் மிதந்த சடலம் மீட்க பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது .

                    பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம்சடலம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                    மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

                      Posted in Uncategorized

                      போலீஸ் அடித்து கொலை – 4 பேர் கைது – 4 பேர் கைது

                      போலீஸ் அடித்து கொலை – 4 பேர் கைது – 4 பேர் கைது

                      தங்காலை − விதாரன்தெனிய பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                      17ஆம் திகதி இரவு விதாரன்தெனிய பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

                      தனிப்பட்ட காரணத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மோதலை அடுத்தே, இந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

                      தெற்கு அதிவேக வீதியில் கடமையாற்றும் 36 வயதான சத்துரங்க டில்ஷான் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

                      சம்பவத்தில் மனைவி மற்றும் மனைவியின் சகோதரன் ஆகியோர் காயமடைந்துள்ளதுடன், மனைவியின் சகோதரன் கவலைக்கிடமான நிலையில்

                      கராபிட்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

                        Posted in Uncategorized

                        பாவாடை தாவணியில் அசத்தும் சினேகா

                        .பாவாடை தாவணியில் அசத்தும் சினேகா

                        தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சினேகாவின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                        பாவாடை தாவணியில் அசத்தும் சினேகா… வைரலாகும் புகைப்படங்கள்
                        சினேகா
                        நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ் பெற்றவர். இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு

                        பிரசன்னாவுடன் நடித்தபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.

                        சினேகா

                        இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பின்னரும் இருவரும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களிலும் நடித்து

                        வருகின்றனர். இந்நிலையில், சினேகாவின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாவாடை தாவணியில் இருக்கும் சினேகாவின்

                        புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இளமையாகவே இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்

                          Posted in Uncategorized

                          பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடித்துக் கொலை

                          பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடித்துக் கொலை

                          தங்காலை பகுதியில் குழு ஒன்று நடத்திய தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                          உயிரிழந்தவர் தங்காலை விதாரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                          தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

                          பொலிஸ் அதிகாரியின் சகோதரரும் தாக்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                          கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                            Posted in Uncategorized

                            இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவணம் – மனோ கணேசன் எம்பி

                            இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவணம் பெப் 21ம் திகதி கொழும்பில் இறுதி வடிவம் பெறுகிறது

                            • தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி

                            தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையின் பேரில், கண்டி சமூக அபிவிருத்தி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி. முத்துலிங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கௌதமன் பாலசந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவண வரைபு, பெப்ரவரி 21ம் திகதி கொழும்பில் கலந்துரையாடப்பட்டு இறுதி வடிவம் பெறும். இந்த கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் மலையக சிந்தனையாளர்கள் கலந்துக்கொள்வார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

                            இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

                            இறுதி வடிவம் பெறுகின்ற இந்த ஆவணம், இலங்கை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட அனைத்து கட்சி தலைவர்கள், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட தமிழக கட்சி தலைவர்கள், பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச நாட்டு அரசுகள், சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சேர்ப்பிக்கப்படும்.

                            அத்துடன் இந்த ஆவணம் தேசியரீதியான கலந்துரையாடல்களுக்காக நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரந்து வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புகளுக்கு வழங்கப்படும். சிவில் சமூக அமைப்புகளுடன் நாம் நடத்த உத்தேசித்துள்ள கலந்துரையாடல்கள், இலங்கை, இந்தியா, பிரிட்டன் மற்றும் சர்வேதச அரசு நிறுவனங்களுடன் நாம் நடத்தும் பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாக அமையும் என நாம் நம்புகிறோம்.

                            புதிய அரசியலமைப்பு வரைபை தாயரித்து வரும் தனது உத்தேசத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பு வரைபு எழுதப்பட்டு வருவதையும் நாமறிவோம். இந்த பின்னணியில் இன்றைய சூழலில் எழுந்துள்ள புதிய நிலைமைகளை கருத்தில் கொண்டு மலையக மக்கள் தொடர்பாக விரிவுபடுத்தப்பட்ட நிலைப்பாட்டு கோரிக்கைகளை நமது நாட்டு அரசுக்கு அறிவித்து, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நாம் உதேசித்துள்ளோம்.

                            அதேவேளையில் இலங்கை அரசுக்கு இந்திய அரசு வழங்கி வரும் உதவிகள் மற்றும் அதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புதிய கருத்து பறிமாற்றங்களையும் நாம் அவதானித்து வருகிறோம். இந்த தொடர்பாடல்கள், பொருளாதார ஒத்துழைப்பு விவகாரங்களுடன் மாத்திரம் மட்டுப்படுவது முறையானதல்ல என நாம் நம்புகின்றோம். 1954 (நேரு-கொத்தாவலை), 1964 (சிறிமா-சாஸ்திரி),1974 (சிறிமா-இந்திரா), ஆகிய ஆண்டுகளில் இலங்கை இந்திய அரசு தலைவர்கள் மத்தியில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களின்படியும், இந்திய பிரதமர்களுக்கும், இலங்கை ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜெயவர்த்தன, ஆர். பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின்படியும், இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள், குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இலங்கை அரசுடன் இந்திய அரசுக்கும் இருக்கின்ற கடப்பாடுகள் நல்லெண்ண அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுவே தமிழ் முற்போக்கு கூட்டணியின் எதிர்பார்ப்பாகும்.

                            இதுபற்றி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பையும் தமிழ் முற்போக்கு கூட்டணி நிறைவேற்றும்.

                            அதேவேளை மலைநாட்டு தோட்ட தொழிலாளர்களை இலங்கை தீவுக்கு அழைத்து வந்து பெருந்தோட்ட பொருளாதாரத்தை கட்டி எழுப்பி, பயன்பெற்றதன் அடிப்படையில் பிரித்தானிய இராணியின் அரசாங்கத்துக்கும், மலையக மக்கள் தொடர்பில் இருக்கின்ற பெரும் கடப்பாட்டையும் எடுத்து கூறி, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தமிழ் முற்போக்கு கூட்டணியின் முடிவு செய்துள்ளது.

                            நாம் முன்வைக்க உள்ள, இந்திய வம்சாவளி மலையக மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் இந்த அரசியல் ஆவணம், மேற்கண்ட அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு நட்புறவு மற்றும் நல்லெண்ண நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக அமையும் என நாம் நம்புகிறோம். இது தொடர்பில் நாடெங்கும் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களினதும், அனைத்து சகோதர மக்களினதும் ஒத்துழைப்புகளையும், ஆதரவையும் நாம் கோருகிறோம்.
                            .

                            Posted in Uncategorized

                            சவுதி உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் – தொடரும் மோதல்

                            சவுதி உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் – தொடரும் மோதல்

                            ஏமான் நாட்டில் உள்ள கவுதிய படைகள் அருகில் பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த

                            சவூதி நாட்டின் இராணுவ உளவு விமானம் ஒன்று வீரர்களினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது

                            தொடர்ந்து சவூதி மற்றும் கவுதிய இராணுவத்தினருக்கு இடையில் பரஸ்பர ஏவுகணை

                            தாக்குதல்கள் உள்ளிட்டவை இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized

                              வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி

                              வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி

                              சிரியா அரச இராணுவத்தின் உலங்கு வானூர்தி வீழ்ந்து நொறுங்கியது

                              ,
                              இதன் பொது அதில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்

                              வானூர்தியில் ஏற்பட்ட தொழில் நுட்பம் காரணமாக அவசரமாக தரை


                              இறக்க பட்ட முற்பட்ட பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்க படுகிறது

                                Posted in Uncategorized

                                சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – எரியும் முகாம்

                                .
                                சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – எரியும் முகாம்

                                இஸ்ரேல் சிரியாவில் உள்ள முக்கிய இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது
                                இந்த தாக்குதலில் அந்த இராணுவ முகாம் பற்றி எரிகிறது ,


                                எனினும் இதுவரை இதன் முழுமையான சேத விபரங்கள் தெரிவிக்க படவில்லை

                                  Posted in Uncategorized

                                  பிரேசிலில் நடந்த சோகம் – 94 பேர் மரணம் -பலரை காணவில்லை

                                  பிரேசிலில் நடந்த சோகம் – 94 பேர் மரணம் -பலரை காணவில்லை

                                  பிரேசில் நாட்டில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்கி 94 பேர் பலியாகியுள்ளனர்

                                  மேலும் பல டசின் பேர் காணாமல் போயுள்ளனர்

                                  இவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

                                    Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                                    பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுக்கு கொரோனா

                                    பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று

                                    இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிரதமர் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

                                    கொரோனா அறிகுறிகளையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்

                                    அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்

                                    Posted in Uncategorized

                                    நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலி

                                    நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலி

                                    பிரேசிலில் பெய்து வரும் பலத்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலியாகியுள்ளனர்.

                                    பிரேசிலில் கனமழை- வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலி
                                    நிலச்சரிவு ஏற்பட்டதை படத்தில் காணலாம்.


                                    பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ரியோ டிஜெனிரோ மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரே நாளில் மிகப்பெரிய மழை கொட்டியதால் ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

                                    இதனால் ஊர்களுக்குள்ள தண்ணீர் புகுந்தது. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் மண்ணில் புதைந்தனர். மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. முதல் கட்ட தகவலில் 54 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

                                    தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணியில் பல உடல்கள் மீட்கப்பட்டன. வெள்ளம்-நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்தது