பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடித்துக் கொலை

Spread the love

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடித்துக் கொலை

தங்காலை பகுதியில் குழு ஒன்று நடத்திய தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தங்காலை விதாரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸ் அதிகாரியின் சகோதரரும் தாக்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    Leave a Reply