Posted in Uncategorized உலக செய்திகள்

ரயில் நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் -சிதறிய 50 உடல்கள்

ரயில் நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் -சிதறிய 50 உடல்கள்

கிழக்கு உக்கிரேன் Kramatorsk பகுதி ரயில்வே நிலையம் மீது ரசிய இராணுவம்

நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி ஐம்பது மக்கள் பலியாகினர்

மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இருந்து ரசியா நீக்க பட்ட 24

மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    புலிகளுக்கு ஏவுகணைகள் விற்ற நபர்கள் அமெரிக்காவில் கைது

    புலிகளுக்கு ஏவுகணைகள் விற்ற நபர்கள் அமெரிக்காவில் கைது

    இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு

    ஏவுகணைகள்,ரொக்கட்,இயந்திர துப்பாக்கி , automatic weapons, rockets, machine guns and surface-to-air missiles ஆயுதங்கள் என்பனவற்றை

    விற்பனை புரிந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஆயுத முகவர் ஒருவர் உள்ளிட்ட

    மூவரை அமெரிக்கா உளவுத்துறையினர் கைது செய்துள்ளனர்

    இவர்கள் மியன்மாரில் உள்ள கிளர்ச்சி படைகளிற்கும் ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

    அமெரிக்கா குடியுரிமை பெற்ற இவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்க பட்டு

    விசாரணைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

    Posted in Uncategorized

    கள்ளருடன் சேர நான் தயாரில்லை – சஜித் பிரேமதாச

    கள்ளருடன் சேர நான் தயாரில்லை – சஜித் பிரேமதாச

    இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்கள் தீர்வு காண முடியவில்லை எனின்

    எம்மிடம் பொறுப்பை தாருங்கள் இல்லா விடின் வீட்டுக்கு செல்லுங்கள்

    கள்வர்களுடன் இணைந்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தாம் தயார் இல்லை என சஜித் தெரிவித்துள்ளார் ,


    பாராளுமன்றில் இது தொடர்பாக காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன

      Posted in Uncategorized

      பசில் நிதி அமைச்சராகி 3 மாதத்தில் மத்திய வங்கி சூறை -கயானா காலி

      பசில் நிதி அமைச்சராகி 3 மாதத்தில் மத்திய வங்கி சூறை -கயானா காலி

      இலங்கை மத்திய வங்கி தனது கையிருப்பு சேமிப்பதில் 70 வீதத்தை இழந்து தவிக்கிறது


      இதனால் இலங்கையில் உள்ள ஏனைய வங்கிகளை கட்டு படுத்தும் அல்லது மைய

      படுத்தும் இந்த வங்கியின் வீழ்ச்சி அங்கு பணம் வைப்பில் செய்தவர்கள் பணம் மீள்

      செலுத்த முடியா நிலைக்கு வங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

      இந்த வங்கியில் இருந்து மக்கள் தமது பணத்தை மீள பெற்றால் அல்லது பெறமுடியா சூழல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது

      இந்த வங்கியில் இருந்த தங்கத்தின் சேமிப்பு, 98 மில்லியன் டொலராக இருந்த தங்கம்

      கையிருப்பு 28 மில்லியன் டொலராக குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

      இதனால் இந்த பேரிழப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது

      பசில் நிதி அமைச்சராகி மூன்று மாதத்தில் இந்த கயானா காலியாகி உள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      யாழில் வட்டிக்கு பணம் கொடுத்த பெண்ணை அடித்து புதைத்த கடன் காரர்கள்

      யாழில் வட்டிக்கு பணம் கொடுத்த பெண்ணை அடித்து புதைத்த கடன் காரர்கள்

      யாழ்ப்பாணம் மணியன்தோட்டம் 11ஆம் குறுக்கு தெருவில் பெண் ஒருவரிடம்

      கடனை பெற்றுக்கொண்ட நபர்கள்


      அதனை மீள செலுத்திட குறித்த பெண்ணின் வீட்டுக்குசென்றுள்ளனர்

      ,அப்போது அங்கு எழுந்த வாய் தகராறை அடுத்து குறித்த பெண் அடித்து

      கொலை செய்ய பட்டு அவரது வீட்டின் பின்புறத்த்தில் புதைக்க பட்டுளளார்

      குறித்த பெண்ணை காணவில்லை என போலீசாரிடம் மேற்கொள்ள பட்ட

      முறைப்பாட்டை அடுத்து , இந்த கொலை குற்றத்தில் தொடர்புடைய கணவன் ,மனைவி உட்பட மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

      விசரணையின் முடிவில் மேலதிக விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது

        Posted in Uncategorized

        நாட்டை விட்டு மகிந்த சகோதரி நிருபமா தப்பி ஓட்டம்

        நாட்டை விட்டு மகிந்த சகோதரி நிருபமா தப்பி ஓட்டம்

        இலங்கை ஆளும் சகோதர்கள், சகோதரியான நிருபமா கடந்த இரவு பத்து

        முப்பது மணியளவில் இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளார்,இவர் டுபாய்

        நாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது


        இது போலவே நாமல் மனைவி ,மற்றும் அவர் குடும்பமும் தப்பித்து சென்றது

        இவர் ஊழல் சர்ச்சையில் சிக்கியவர் என்பது இங்கே குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          அமெரிக்காவில் இலங்கை தூதரகம் வாங்கிய சிங்களவருக்கு 20 வருடம் சிறை

          அமெரிக்காவில் இலங்கை தூதரகம் வாங்கிய சிங்களவருக்கு 20 வருடம் சிறை

          மகிந்த ஆட்சியில் அமெரிக்காவின் தூதுவராக செயல் பட்ட Jaliya Wickramasuriya

          அவர் தம் பதவி வகித்த இலங்கை தூதரகத்தை விலைக்கு வாங்கியுள்ளார்

          இதற்கு இவர் தனது கணக்கில் இருந்து நேரடியாக US$ 332,027 பணத்தை

          செலுத்தியுள்ளார் ,இது தொடர்பாக இடம் பெற்று வந்த வழக்கு விசாரணையில்

          இவர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட நிலையில்
          இவருக்கு இருபது வருடம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

          அறுபத்தி ஒரு வயதான இவருக்கு இந்த சிறை தண்டனை வழங்க

          பட்டுள்ளதுடன், மேலும் புரிந்த குற்றத்திற்கு தண்டமும் அறவிட பட்டுள்ளது

          பணமோசடி குற்றச்சாட்டின்கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பு வழங்க பட்டுள்ளது

          இவரால் கொள்வனவு செய்ய பட்ட இந்த தூதரகத்திற்கு மகிந்தாவின் பணத்தில்

          இருந்துவாங்க பட்டதான தகவல்கள் காசிக்கின்றமை குறிப்பிட தக்கது

          25 இலங்கை செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

            Posted in Uncategorized

            இராணுவ பாதுகாப்புடன் லொறியில் கடத்த பட்ட பொருள் என்ன ..?

            இராணுவ பாதுகாப்புடன் லொறியில் கடத்த பட்ட பொருள் என்ன ..?

            இலங்கையில் ஆளும் அரசுக்கு பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்


            லொறி ஒன்றில் ஏற்ற பட்ட நிலையில் கொள்கலன் ஒன்று எடுத்து செல்ல பட்டுள்ளது

            இருபுறமும் மோட்டார் சைக்கிள் அணியினர் பாதுகாப்பு வழங்க முன்னும்

            பின்னுமாக இராணுவ வண்டிகள் செல்ல எடுத்து செல்ல பட்டுள்ளது

            அப்படி என்ன இந்த கொள்கலனுக்குள் உள்ளது என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

            குறித்த காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

            இலங்கை செய்திகள் 25 படிக்க இதில் அழுத்துங்கள்

            Posted in Uncategorized

            போர் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக ! சிங்கள மக்களிடத்தில் எழுந்துள்ள கோரிக்கை

            போர் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக ! சிங்கள மக்களிடத்தில் எழுந்துள்ள கோரிக்கை

            சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான தென்னிலங்கை

            மக்களின் போராட்டங்களில் ‘போர்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக’ என்ற முழக்கம் பலரது கவனத்தினை பெற்றுள்ளது.

            தமிழினஅழிப்புக்கு பொறுப்புக்கூற சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

            வலுவாக கூறிவருவதோடு, 2015ம் ஆண்டு 1.8 மில்லியனுக்கு மேற்பட்ட பொதுமக்கள் இதற்கான கோரிக்கையில் ஒப்பமிட்டிருந்தனர். ஐ.நா மனித

            உரிமைச்சபை ஆணையாளர் உட்பட பல சர்வதேச வளஅறிஞர்களும் இந்நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

            இந்நிலையில், ‘ராஜபக்ச குடும்பத்தினை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக’ என்பதோடு ‘போர்குற்றவாளிகள்’ என சிறிலங்காவின் தற்போதைய

            ஆட்சியாளர்களுக்கு எதிரான தென்னிலங்கை மக்கள் போராட்ட முழக்கமொன்று பலரது கவனத்தினை பெற்றுள்ளது.

            ‘தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரச கட்டமைப்பு நிகழ்த்திய இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலும், அதற்கான பரிகாரநீதியிலான

            அரசியல் தீர்வுமே இலங்கைத்தீவுக்கான முழுமையான நிலையான அமைதியினை தரும்’ என இவ்விடயம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்

            அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு கருத்து வெளியிட்டுள்ளது.

            சிறிலங்காவின் தற்போதைய அதிபராக இருக்கின்ற கோத்தபாய இராஜபக்ச, பிரதமர் மகிதந்த ராஜபக்ச உட்பட 12 அரசியல், இராணுவ தலைவர்களை

            ‘இனப்படுகொலையாளிகளாக’ (DIRTY DOZEN – Genocidaires and War Criminals on

            Tamils in Sri Lanka) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னராக பட்டியலிட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

              Posted in Uncategorized

              கோட்டா ஆயுத விற்பனை தலைவர் நாட்டை விட்டு மலேசியாவுக்கு குடும்பத்துடன் தப்பி ஓட்டம்

              கோட்டா ஆயுத விற்பனை தலைவர் நாட்டை விட்டு மலேசியாவுக்கு குடும்பத்துடன் தப்பி ஓட்டம்,

              இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோத்தபாய கடல்சார் பாதுகாப்பு என கூறிய

              படி அவன்கார்ட் ஆயுத வியாபார சர்வதே அளவில் நடத்தி வந்தார்

              இவர் சோமாலியா ,கென்யா போன்ற நாடுகளில் போராடும் ஆயுத

              குழுக்களுக்கு கப்பல் கப்பலாக ஆயுதங்களை விற்று பல மில்லியன் டொலர்களை நாள் தோறும் சம்பாதித்து வந்தார்

              அடுத்து சீனி வியாபாரம் செய்து வந்தார் ,தற்போது ஆட்சி கவிழ்க்க பட்டு சிறை பிடிக்க படலாம் என்ற நிலையில்


              இவரது வர்த்தகர் மூவர் ,மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையை விட்டு நாள் தோறும் ஓடிய வண்ணம் உள்ளனர்

              இவ்விதம் அவன்கார்டு ஆயுத கப்பல் விபாரத்தை நடத்தி வந்த கோட்டாவின்

              நேரடி வியாபாரங்களை கவனித்து வந்த முக்கியஸ்த்ர SriLankan Airlines flight UL-102 என விமானத்தில் மலேசியாவுக்கு தப்பி சென்றுள்ளார்

              உக்கிரம் பெறும் மக்கள் போராட்டத்தை அடுத்து இவர்களும் நடத்தி விட்டு

              தப்பி ஓடும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                Posted in Uncategorized

                புலி தளபதிகள் வீழ்ந்த நாளில் தள்ளாடும் கோட்டா அரசு

                புலி தளபதிகள் வீழ்ந்த நாளில் தள்ளாடும் கோட்டா அரசு

                கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன். இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி

                தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு

                இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.

                தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது. தீபனை இயக்கத்தில் சேர்த்த

                மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய

                காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.

                1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் “தாங்கோ பாப்பா” ஆகும். இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார். 1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

                அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.

                1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள். இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.

                பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை. 1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.

                தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச் சமருக்குத்தலைமை தாங்கினார்.

                தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக் கொடுத்தது. இந்த‌ இரண்டு ரி 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.

                1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.

                1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.

                1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.

                சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.

                யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல் மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது

                முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.

                தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள்

                கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.

                ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும்

                நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.

                இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண்

                அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

                இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக

                நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு

                வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத் தவறிவிட்டார்.

                1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத

                அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.

                1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.

                ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத்

                தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம். இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம்

                பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.

                குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம்

                கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன். 2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம்

                படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.

                அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான ‘L’ வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள் (2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன். கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம்

                திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக

                திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக்குண்டுத்தாக்குதலில் வீரகாவியமானார்.

                25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது. சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை

                நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே

                வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.” தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது

                எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பது .

                  Posted in Uncategorized

                  எம்பி வீட்டை சுற்றிவளைத்த மக்கள் – உலங்குவானூர்தியில் தப்பி ஓட்டம்

                  எம்பி வீட்டை சுற்றிவளைத்த மக்கள் – உலங்குவானூர்தியில் தப்பி ஓட்டம்

                  ஆளும் கோத்தபாயவின் ஆட்சிக்கு எதிராக நாடெங்கும் மக்கள் போராட்டம்

                  நடத்தி வருகின்றனர்

                  இவ்வாறான கால பகுதியில் கேகாலை மாவட்டத்தில் உள்ள கனக கேரத்தின்

                  வீடு முற்றுகைக்கு உள்ளாக்க பட்டது

                  மக்கள் சுற்றிவளைத்த நிலையில் வீட்டில் தங்கி இருக்க முடியாத நிலையில்

                  அவர் அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் கண்டிக்கு தப்பி ஓடியுள்ளார்

                  தொடர்ந்து பல எம்பிக்கள் வீடு முற்றுகைக்கு உள்ளாகி பட்டு வருகினறமை குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    உக்கிரேன் தலைநகரில் ரஷியா இராணுவத்தின் 50 டாங்கிகள் அழிப்பு

                    உக்கிரேன் தலைநகர் அருகில் ரஷியா இராணுவத்திற்கு பாரிய இழப்பு

                    உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை கைப்பேற்றும் நோக்குடன் முன்னேறிய ரசிய

                    இராணுவத்தினரை குறிவைத்து உக்கிரேன் இராணுவம் நடத்திய தாக்குதலில்

                    ரசிய இராணுவத்தின் விசேட தாங்கி பிரிவு முற்றாக அழிக்க
                    பட்டுள்ளது

                    இதில் ஐம்பதுக்கு மேற்பட்ட யுத்த டாங்கிகள் மற்றும் ஏவுகணை செலுத்திகள்

                    என்பன நீர்மூலமாக்க பட்டுள்ளன


                    தற்போது அந்த பகுதியை மீள தாம் மீட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம்

                    அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      அமெரிக்காவில் 15 பேர் சுட்டு கொலை – அச்சத்தில் மக்கள்

                      அமெரிக்காவில் 15 பேர் சுட்டு கொலை – அச்சத்தில் மக்கள்

                      அமெரிக்கா Sacramento பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பதின்

                      ஐந்து பேர் சுட்டு படுகொலை
                      செய்ய பட்டுள்ளனர்

                      போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மர்ம ஆயுத தாரியும் சுட்டு படுகொலை

                      செய்ய பட்டுள்ளார்

                      இந்த கொலைக்கான கரணம் தெரியவரவில்லை

                        Posted in Uncategorized

                        நான்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை

                        நான்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை

                        இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக


                        நாடளாவிய ரீதியில் உள்ள நான்கு வடக்கு,தெற்கு ,வடமேல்,கிழக்கு

                        ,மாகாணங்களின் பாடசாலைகள் மறு அறிவிதல் வரை விடுமுறை விடுவிக்க பட்டுள்ளது

                        ஆசிரியர்கள்,மாணவர்கள் போக்குவரத்து நிலையை கருத்தில் கொண்டு இந்த

                        உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

                          Posted in Uncategorized

                          வேற்று கிரகவாசி சடலம் மீட்பு – வைரலாகும் புகைப்படம்

                          வேற்று கிரகவாசி சடலம் மீட்பு – வைரலாகும் புகைப்படம்

                          அவுஸ்ரேலியா குயின்லாந்து கடற்கரை பகுதியில் மர்ம உயிரினம் ஒன்று

                          இறந்த நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது


                          அந்தக் கடல்கரை வழியாக பயணித்த ஒருவரது கமராவில் மேற்படி உயிரினம்

                          சிக்கியது
                          அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது

                          இந்த உயிரினம் வேற்று கிரகவாசியாக இருக்கலாம் என்பது நெட்டிசன்கள்

                          கருத்தாக பதிய பெற்று வருகிறது

                            Posted in Uncategorized

                            மின்சாரம் இல்லாது இணையம்,கைபேசிகள் செயல் இழப்பு

                            மின்சாரம் இல்லாது இணையம்,கைபேசிகள் செயல் இழப்பு

                            இலங்கையில் மின்சாரம் ,டீசல்,பெட்ரோல் இல்லாத நிலையில் இணைய

                            சேவைகள் மற்றும் கைபேசிகள் ,கணனிகள் இயக்க முடியாத நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர்

                            இதனால் தொடர்பாடல் துண்டிக்க பட்டு மக்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர்

                            இவை திட்டமிட்டு நடத்த படும் அரசின் செயல்பாடுகளில் ஒன்றாக உள்ளது

                            என கோரி மக்கள் கொதித்து வருகின்றனர்

                            அணைத்து விதத்திலும் மக்கள் அடக்கி ஒடுக்க படும் நிகழ் கால நிகழ்வுகளாக மாற்றம் பெற்றுள்ளது


                            இவ்வாறான செயல்பாடுகள் மக்களை மேலும் கொதிப்பில் உறைய

                            வைத்துள்ளதுடன் அரசுக்கு எதிராக மக்கள்


                            எழுச்சி கொள்ளும் நிலையை மேலும் உருவாக்காகி வைத்துள்ளது

                              Posted in Uncategorized

                              அடக்குமுறை அரசு அடாவடி 660 பேர் காவல்துறையால் கைது

                              அடக்குமுறை அரசு அடாவடி 660 பேர் காவல்துறையால் கைது

                              ஊரடங்கு வேளையில் மேல்மாகாணத்தில் உலவிய 660 மக்களை தாம் கைது செய்துள்ளதாக


                              காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                              மேலும் ஆட்சியாளர்களுக்கும் ,அவர்தம் அமைச்சர்களுக்கும் எதிராக மக்கள்

                              போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்

                              இதனை தடுக்க விதிக்க பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறி மக்கள் உலவியதால்

                              இந்த கைது வேட்டையை நடத்தி மக்களை அரசு அச்சுறுத்தி வருகிறது

                              இந்த செயல் பாடு மேலும் மக்களை கொந்தளிப்பில் உறைய வைத்துள்ளது

                                Posted in Uncategorized

                                இலங்கையில் Twitter, FB and YouTube பாவிக்க தடை -கொதிப்பில் மக்கள்

                                இலங்கையில் Twitter, FB and YouTube பாவிக்க தடை -கொதிப்பில் மக்கள்

                                இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து

                                போராட்டத்தில்


                                குதித்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களான Twitter, FB and YouTube

                                பாவனைக்கு தடை விதிக்க பட்டுள்ளது

                                இவற்றுக்கு தடை விதிக்க கூடும் என எதிர் பார்க்க பட நிலையில் மேற்படி

                                தடையினை ஆளும் அரசு விதித்துள்ளது குறிப்பிட தக்கது

                                  Posted in Uncategorized

                                  சூடானில் இனமோதல் – 45 பேர் படுகொலை

                                  சூடானில் இனமோதல் – 45 பேர் படுகொலை

                                  சூடான் Nyala பகுதியி இரு இனங்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளனர்


                                  மேலும் பல டசின் பேர் படு காய மடைந்துள்ளனர்

                                  பல்லாண்டுகளாக இரு குழுக்களுக்கு இடையில் இடம் பெற்று வரும் இனவாத

                                  மோதல்களில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது