Posted in Uncategorized

மயங்கி விழுந்த சீமான் – அதிர்ச்சியில் மக்கள் video

மயங்கி விழுந்த சீமான் – அதிர்ச்சியில் மக்கள்

திருவொற்றியூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக அப்பகுதியில் உள்ள 117 வீடுகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வீடுகளை இடிக்க கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று காலையிலும் அப்பகுதி மக்கள் திரண்டு

போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி அ.தி.மு.க. கவுன்சிலரான கார்த்திக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருவொற்றியூருக்கு இன்று நேரில் சென்றார்.

அண்ணாமலை நகர் பகுதிக்கு சென்ற அவர், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது சீமான் திடீரென

மயங்கி கீழே சாய்ந்தார். கட்சியினர், பொதுமக்கள் மத்தியில் அவர் மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சீமானை சுற்றி நின்று கொண்டிருந்த நாம் தமிழர்

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், சீமான் மயங்கியதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் சீமான். அங்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் இயல்பு நிலைக்கு

திரும்பினார். முழு உடல் பரிசோதனைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.

சீமான் தற்போது நலமாக உள்ளதாக நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது. வெயிலில் நின்றுகொண்டே

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தமையாலும், தொடர்
அலைச்சல், ஓய்வின்மையாலும் சீமான் சோர்வுற்றார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதில் அழுத்தி பார்க்க

Posted in Uncategorized

உக்கிரேனுக்கு 300 மில்லியன் டொலருக்கு ஆயுதங்கள் விற்கும் அமெரிக்கா

உக்கிரேனுக்கு 300 மில்லியன் டொலருக்கு ஆயுதங்கள் விற்கும் அமெரிக்கா

உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் கடும் போர் இடம்பெற்று வரும் நிலையில்


அமெரிக்கா விமான எதிர்ப்பு மற்றும் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட அதி நவீன ஆயுதங்கள் 300
மில்லியனுக்கு விற்பனை புரிந்துள்ளது

இந்த ஆயுதங்கள் விமனம மூலம் எடுத்துவர பட்டு போலந்தில் தரை இறக்க

பட்டு அங்கிருந்து தரைவழியாக உக்கிரேனுக்குள் எடுத்து செல்ல படுகிறது

ராசியா இராணுவத்தை நிலை குலையை வைக்கும் நகர்வில்

.அமெரிக்கா,பிரிட்டன்,கனடா உள்ளிட்ட நேட்டோ நாடுகளும் இணைந்து ஆயுதங்களை வழங்கி வருகின்றனர்

எனினும் இழப்புக்கள் மத்தியிலும் ரஷியா படைகள் தொடர்ந்து முன்னேறிய வண்ணம் உள்ளன


இந்த போர்க்களத்தை பயனப்டுத்தி குறித்த நாடுகள் தமது ஆயுத வியாபாரத்தை திறம்பட நடத்தி வருகின்றனர்

உதவி என்ற போர்வையில் தமது ஆயுதங்களை விற்று ஏப்பம் இடுகின்றன இந்த வல்லரசுகள்

    Posted in Uncategorized

    17,700 ரசிய இராணுவம் பலி – தொடரும் உக்கிர மோதல்

    17,700 ரசிய இராணுவம் பலி – தொடரும் உக்கிர மோதல்

    உக்கிரன் நாட்டை ஆக்கிரமிக்க ரசியா படைகள் பல்முனை தாக்குதல்களை தொடுத்தனர்


    இந்த தாக்குதலின் போது இதுவரை 17,700 ரசிய இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக உக்கிரேன் மற்றும் அதன் நேச நாட்டு உளவு துறையினர் தெரிவித்து வருகின்றனர்

    ஆனால் ரசியாவோ தனது இலக்கு நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருகிறது ,உக்கிரேன்

    தலைநகர் கீவ் நகர் நோக்கி பல்முனை தாக்குதல்கள் தொடுக்க பட்டுள்ளது


    இந்த நகர் வீழ்ச்சி உறும் இறுதி தாக்குதல் இதுவாகும் என கணிக்க பெறுகிறது

    புதிய தந்திரோபாய திட்டங்களுடன் இந்த தாக்குதலை ரசிய இராணுவம் தொடுத்து வருகிறது

    கீவ் நகரம் வீழ்ச்சி உற்றால் உக்கிரேன் அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓடும் நிலை

    ஏற்படும் என எதிர்பார்க்க படுவதுடன் ,அதுவே அண்டைய நாடுகளுக்கும் பெரும்

    அச்சுறுத்தலான ஒன்றாக மாற்றம் பெறும் என எதிர் பார்க்கலாம்.

    உக்கிரேன் வீழ்ச்சியின் பின்னர் ரசியாவின் நிலைபாடு மற்றும் அண்டைய நாடுகள்

    மீதான அதிகாரம் செலுத்துதல் மேலும் ஆழமாகும் என்பதில் மாற்றமில்லை

    • வன்னி மைந்தன் –
      Posted in Uncategorized

      நாடெங்கும் வெடித்த போராட்டத்தினால் அரச உடைமைகள் 100 மில்லியன் சேதமாம்

      நாடெங்கும் வெடித்த போராட்டத்தினால் அரச உடைமைகள் 100 மில்லியன் சேதமாம்

      இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடத்த பட்டு வரும் மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள்
      அரசுக்கும் ,அரசின் உடமைகளுக்கும் எதிராக இடம்பெற்றுள்ளது

      இதனால் இதுவரை வரும் தக்வல்களின் பிரகாரம் நூறு மில்லியன் ரூபா சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளனவாம்

      இதில் கோட்டாவின் வாசல் தளம் அருகில் இடம்பெற்ற தாக்குதலில் மட்டும் நாற்ப்பது மில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        Posted in Uncategorized

        இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்க படும் அபாயம்

        இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்க படும் அபாயம்

        இலங்கையில் பரவி வரும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் சமுக வலைத்தளங்கள்

        ஊடாக ஏற்படுத்த பட்டு வருவதால் இலங்கையில் ,வாட்சாப்,பேஸ்புக்,வைபர் என்பன முடக்கப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

        நாட்டின் சில பகுதிகளில் இவை செயல் முடக்க பட்டுள்ளதாக பாவனையாளர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்

          Posted in Uncategorized

          எம்பி மீது முட்டையடி தாக்குதல் – தப்பிய தலை

          எம்பி மீது முட்டையடி தாக்குதல் – தப்பிய தலை

          ஐக்கிய மக்கள் சக்தி ,அதாவது சஜித் பிரேமதாச அங்கம் வகிக்கும் கட்சியை சேர்ந்த

          எம் சமர சம்பத் திசாநாயக்க சென்ற வாகனம் மீது முட்டையடி தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது

          இந்த தாக்குதல் கோட்டா கட்சிகளை சேர்ந்தவர்கள் மேற் கொண்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது


          சற்றும் எதிர்பாரத ஆளும் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளது , ராஜபக்ஸா அரசாங்கத்தை கதி கலங்க வைத்துள்ளது

            Posted in Uncategorized

            இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த மாமா

            இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த மாமா

            வேலியே பயிரை மேய்ந்த கதையாக இளம்பெண் தாய்மாமனின் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

            தந்தையை இழந்த குழந்தையை தாய்மாமானிடம் வளர்ப்பதற்காக கொடுத்து விட்டு சென்ற போது அவள் வளர்ந்து பெரியவளாகி தாய்மாமனின் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறாள்.

            வேலியே பயிரை மேய்ந்த கதையாக இந்த சம்பவம் சென்னை ராயபுரத்தில் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

            காசிமேடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை- சாந்தி தம்பதியின் ஒரே மகள். பிறந்த ஒரு வருடத்தில் அண்ணாமலை இறக்கவே குழந்தையை தனது தம்பி தேசப்பனிடம் சாந்தி ஒப்படைத்து விட்டு மறுமணம் செய்து கொள்கிறார்.

            தாய் மாமன் தேசப்பன்- ரேவதி தம்பதிகளுக்கு குழந்தையில்லை. அதனால் பாசத்துடன் குழந்தையை வளர்த்தனர். ஆண்டுகள் பல உருண்டோடின. குழந்தை, சிறுமியாக வளர்ச்சி அடைந்தாள். 9 வயதாகும் போது அவள் தாய் மாமனின் பாலியல் சீண்டலுக்கு ஆளானாள்.

            அன்பு, பாசம் காட்டி வளர்க்க வேண்டிய சிறுமி சித்ரவதைக்கு நேரிட்டாள். அத்தையும் சிறுமியை விடவில்லை. பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து வந்ததால் அவள் வீட்டை விட்டு ஒரு நாள் வெளியேறினாள்.

            அனாதையாக வீதியில் நின்ற சிறுமியை ஒரு பாதுகாப்பு இல்லத்தில் சமூக ஆர்வலர்கள் ஒப்படைத்தனர். அங்கு தங்கி படிப்பை தொடர்ந்தாள். அங்கு அவளுக்கு பாதுகாப்பாக இருந்ததால் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்து வந்தாள்.

            சிறுமி இல்லத்தில் தங்கி இருப்பதை அறிந்து தேசப்பனும் அவரது மனைவியும் வீட்டிற்கு அழைக்க காப்பகத்திற்கு சென்றுள்ளனர். காப்பக நிர்வாகிகளிடம் பாசமழை பொழிந்து மகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகவும் கூறி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

            தாய் மாமன் வீட்டிற்கு வந்த சிறுமி 10-ம் வகுப்பு படிப்பை தொடராமல் போனது மட்டுமின்றி மீண்டும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானார். ஒவ்வொரு நாள் இரவும் தாய்மாமனின் சீண்டல்களால் மனவேதனை அடைந்தாள்.

            ஒரு கட்டத்தில் அவள் மூலம் குழந்தையை பெற்றெடுக்கவும் முடிவு செய்தார் தாய்மாமன். இதற்கு தேசப்பன் மனைவி ரேவதியும் உடந்தையாக இருந்தார். தாய் மாமனின் காம பசிக்கு ஆளான சிறுமி கர்ப்பமும் அடைந்தார். ஆனால் குழந்தை வளர்ச்சி இல்லாத காரணத்தால் கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

            ஒவ்வொரு இரவும் சிறுமிக்கு வேதனையாக கழிந்ததால் மீண்டும் வீட்டை விட்டு ஓடினாள். பெரவள்ளூரில் உள்ள காப்பகத்தில் அவளை சிலர் ஒப்படைத்தனர். தாய் மாமன் – அத்தையின் கொடுமைக்கு பயந்து சென்ற சிறுமி காப்பகம் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினாள்.

            ஆனால் அவளுடைய விதி அங்கும் விளையாடியது. காப்பகத்தில் உள்ள 2 பொறுப்பாளர்கள் அவளை பலாத்காரம் செய்தனர். அவர்களது காம பசிக்கு இறையான சிறுமியின் வாழ்க்கை கூண்டுக்குள் சிக்கிய கிளியாக மாறியது. காப்பக பொறுப்பாளர்களின் பாலியல் தொல்லையால் செம்பியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

            2021-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணைக்காக இளம்பெண் நீதிபதி முன்பு நேற்று முன்தினம் ஆஜரானார். அப்போது அவரின் உடலில் காயம்இருந்ததை பார்த்து நீதிபதி கேட்டுள்ளார். அதன் பிறகு நீதிபதியிடம் நடந்த சம்பவங்களை கண்ணீர் மல்க அவள் கூறியுள்ளார். தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை கூறி கதறி அழுதுள்ளாள்.

            என் வாழ்க்கையை தாய் மாமன் மட்டுமின்றி அவரது நண்பர்களும் சீரழித்து விட்டனர். அவர்கள் என்னுடன் பாலியல் பலாத்காரம் செய்வதை தாய் மாமன் செல்போனில் பதிவு செய்வார். நண்பர்களுடன் என் வாழ்க்கையை சீரழித்து விட்டனர் என்று இளம்பெண் கூறியுள்ளார்.

            இதையடுத்து நீதிபதி காசிமேட்டில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினர். அங்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த மையத்தின் நிர்வாகி லதா, ராயபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அவர் புகாரின் பேரில் போலீசார் நேற்று இரவு முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

            இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமேகலை, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி, ஆகியோர் இளம்பெண்ணின் தாய் சாந்தி மற்றும் அத்தை ரேவதி ஆகியோரை கைது செய்தனர். மேலும் இளம்பெண்ணை சீரழித்த தாய் மாமன் தேசப்பன் மற்றும்
            அவரது நண்பர்கள் உள்பட பலரை தேடி வருகிறார்கள்.

              Posted in Uncategorized

              ரசியாவின் எண்ணெய் கூதம் மீது உக்கிரேன் தாக்குதல்

              ரசியாவின் எண்ணெய் கூதம் மீது உக்கிரேன் தாக்குதல்

              ரசியாவின் உள் புறத்திற்குள் ஊடுருவி உக்கிரேன் உலங்கு வானூர்திகள் தாக்குதல்

              நடத்தியுள்ளன ,இதில் ரசியாவின் எண்ணெய் சேமிப்பு கிடங்கு பற்றி எரிந்த வண்ணம் உள்ளது

              உக்கிரேனின் உள் புகுந்து தாக்குதலுக்கு ரசிய கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

              இந்த தாக்குதல்கள் முன்னெடுக்க படும் அமைதி பேச்சில் தொய்வை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது

                Posted in Uncategorized

                லண்டன் வீதியில் பற்றி எரிந்த ஆடம்பர கார்

                லண்டன் வீதியில் பற்றி எரிந்த ஆடம்பர கார்

                லண்டன் A249 near Stockbury Roundabout பகுதியில் மாலை ஏழு முப்பது மணியளவில்
                ஆடம்பர கார் ஒன்று திடீரென பற்றி எரிந்துள்ளது

                இந்த தீ விபத்துக்குரிய காரணம் தெரியவரவில்லை

                இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                  Posted in Uncategorized

                  தனி பெரும்பான்மை ஆட்சியில் வெல்ல வைத்த மக்கள் கோட்டாவை துரத்தும் போர் வெடித்தது

                  தனி பெரும்பான்மை ஆட்சியில் வெல்ல வைத்த மக்கள் கோட்டாவை துரத்தும் போர் வெடித்தது

                  இலங்கை வரலாற்றில் தனிப்பெரும்பான்மை வாக்குகளுடன் ஆட்சியில் அமர்ந்து வந்த கோட்டா
                  ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்

                  பட்டினை சாவை எதிர்கொள்ள நேரிடும் நிலையை கோட்டா உருவாக்கிய நிலையில்

                  வேறு வழியின்றி ஆட்சி யாளர்களுக்கு எதிராக சுமார் மூன்று வருடத்தில் மக்கள் எதிராக போர் நடத்தி வருகின்றனர்

                  சமூக வலைத்தளங்களில் வைரலான கோட்டா எதிர்ப்பு தற்போது மிக வேகமாக பரவி நாடெங்கும் போர்க்களமாக மாற்றம் பெற்றுள்ளது

                  கோட்டா ,மகிந்த கூட்டாக ஆட்சியை இழந்து வீடு செல்லும் நிலை ஏற்பட போகிறது


                  மக்கள் கோபாத்தை தணிக்க பதவியை இழக்க வேண்டிய நிலைக்கு இவர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

                    காஸ் சிலிண்டர்
                    Posted in Uncategorized

                    காஸ் இல்லாது திண்டாடும் ஐரோப்பா – மக்கள் புரட்சி வெடிக்கலாம் என அச்சம்

                    காஸ் இல்லாது திண்டாடும் ஐரோப்பா – மக்கள் புரட்சி வெடிக்கலாம் என அச்சம்

                    உக்கிரேன்மீது ரசியா போரினை தொடுத்துள்ள நிலையில் அந்த போரானது ஐரோப்பா

                    எங்கும் பரவும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                    இதனால் தற்போது ரசியா தனது எரிவாயு ஏற்றுமதியை தடை செய்துள்ளது ,இதனால்

                    ஐரோப்பா பலமாக பாதிக்க பட்டுள்ளதுடன் அதன் விலை அதிகரித்து செல்கிறது

                    இந்த விலை அதிகரிப்பல் மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில்

                    மக்கள் போராட்டங்கள் வெடித்து ஆட்சி கவிழ்க்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது

                      Posted in Uncategorized

                      இராணுவ பஸ் ,ஜீப் தீ வைத்து எரிப்பு

                      இராணுவ பஸ் ,ஜீப் தீ வைத்து எரிப்பு

                      இலங்கை Mirihana. பகுதியில் இராணுவத்தினரின் பேரூந்து மற்றும் ஜீப் ஒன்று

                      ஆர்ப்பாட்ட காரர்களினால் தீ வைத்து எரியூடடட பட்டுள்ளது ,அரச மாற்றும் , அரச இராணுவ வாகனங்கள் இலக்கு வைத்து எரியூட்ட பட்டு வருகிறது

                      இதனால் நாடு எங்கும் பதட்டத்தில் உள்ளது

                      இராணுவ பஸ் ,ஜீப் தீ வைத்து எரிப்பு
                      இராணுவ பஸ் ,ஜீப் தீ வைத்து எரிப்பு
                        Posted in Uncategorized

                        கோட்டா வீடு முற்றுகை – இராணுவ வாகனம் தீக்கிரை

                        கோட்டா வீடு முற்றுகை – இரன்டுவ வாகனம் தீக்கிரை

                        கோட்டா பாய வசிக்கும் நுகேகொடை – மிரிஹான வீதியில் , ஆயிரகணக்கில் மக்கள் கூடினர் ,இதனால்


                        இராணுவம் பலத்த பாதுகாப்பு போட பட்ட நிலையில் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் இடம்பெற்றது

                        இதில் இராணுவ வாகனம் தீக்கிரையாக்க பட்டது

                        மேலும் கோட்ட பாய வீடுமுற்றுகையான நிலையில் பதட்டம் தொடர்கிறது

                        நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ளது ,நாடு ரணகளமாக மாறியுள்ளது

                          Posted in Uncategorized

                          துருக்கி இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல்

                          துருக்கி இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல்

                          ஈராக் மொசூல் பகுதியில் அமைந்துள்ள துருக்கிய இராணுவத்தின் Turkish Zelikan
                          இராணுவ முகாம் மீது கடுமையான ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                          இதில் அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                          இந்த தாக்குதலை குருதீஸ் போராளிகள் நடத்தி உள்ளதாக தெரிவிக்க படுகிறது

                            Posted in Uncategorized

                            அவுஸ்ரேலியாவில் கடும் வெள்ளம் 17 பேர் மரணம் – மின்சாரம் இன்றி வீடுகள் தவிப்பு

                            அவுஸ்ரேலியாவில் கடும் வெள்ளம் 17 பேர் மரணம் – மின்சாரம் இன்றி வீடுகள் தவிப்பு

                            அவுஸ்ரேலியா New South Wales பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பேருக்கு காரணமாக இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர்

                            மேலும் பல்லாயிரம் மக்கள் மின்சாரம் இன்றி இருளில் சிக்கியுள்ளனர்

                            தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்ற பட்டுளள்னர்

                              Posted in Uncategorized

                              உக்கிரேன் தலை நகரை சுற்றி குவிக்க படும் ரஷியா இராணுவம்

                              உக்கிரேன் தலை நகரை சுற்றி குவிக்க படும் ரஷியா இராணுவம்

                              உக்கிரேன் தலைநகர் கீவ் நகர் அருகில் ரசிய இராணுவத்தினர் குவிக்க பட்டு வருகின்றனர்

                              இந்த இராணுவ குவிப்பு மேலும் பெரும் மோதலை அங்கு தோற்றுவிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது


                              ஒரு மாதம் கழிந்து நடத்த பட்டு வரும் மோதல்களில் இதுவரை நான்கு மில்லியன் உக்கிரேன்
                              மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளமை குறிப்பிட தக்கது

                                Posted in Uncategorized

                                பாக்குநீரிணையை கடந்து சாதனை படைத்த 14 வயது தமிழக சிறுவன்

                                பாக்குநீரிணையை கடந்து சாதனை படைத்த 14 வயது தமிழக சிறுவன்

                                இந்தியா ,இலங்கைக்கு இடையில் உள்ள பாக்கு நீரிணையை தமிழகம் தேனீ

                                மாவட்டத்தை சேர்ந்த சினேகன் என்ற 14 வயது சிறுவன் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார் 19.45 நிமிடங்கள் நீதி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்

                                தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒருநாள் இடைவிடாது இந்த சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார்

                                அதிக சிறு வயது கொண்ட சிறுவனின் இந்த சாதனை சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
                                பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது

                                  Posted in Uncategorized

                                  இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி நால்வர் மரணம்

                                  இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி நால்வர் மரணம்

                                  இலங்கையில் கடந்த தினம் இடம்பெற்ற கொரனோ பாதிப்பில்


                                  சிக்கி நால்வர் பலியாகியுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                                    Posted in Uncategorized

                                    காணாமல் போன டீவி நடிகை – சடலமாக மீட்பு

                                    காணாமல் போன டீவி நடிகை – சடலமாக மீட்பு

                                    அமெரி லோஸ் அஞ்சல் பகுதியில் காணாமல் போன டீவி நடிகையான Lindsey Pearlman சடலமாக மீட்க பட்டுளளார்

                                    43 வயதுடைய இவர் சடலமாக மீட்க பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                    மேற்படி நடிகையின் கொலை தொடர்பில் போலீசார் புலன் விசாரணைகளை நடத்திய வண்ணம் உள்ளனர்
                                    இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

                                      Posted in Uncategorized

                                      இஸ்ரேல் தலைநகரில் ஐவர் சுட்டு கொலை – பதட்டத்தில் நாடு

                                      இஸ்ரேல் தலைநகரில் ஐவர் சுட்டு கொலை – பதட்டத்தில் நாடு

                                      இஸ்ரேல் மத்திய நகர் மீது ஆயுதங்களுடன் நுழைந்த நபர் ஒருவர் திறந்தவெளி சூட்டு தாக்குதலை நடத்தினார்
                                      இதில் ஐவர் பலியாகியும் பலர் காயமடைந்துள்ளனர்

                                      குறித்த ஆயுத தாரி காவல்துறையினரால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
                                      ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது ,

                                      இஸ்ரேல் முசுலீம் நாடுகள் மீது தொடராக வலிந்து தாக்குதலை நடத்தி பல முக்கிய

                                      நபர்களை கொன்று குவித்து வரும் நிலையில் மொஸாட்டுக்கே தண்ணி காட்டி இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                                      மேற்படி சம்பவம் நாட்டு மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது