Posted in Uncategorized

வானில் பழுதான மக்ஸ் இயந்திரம் – அவசர தரையிறக்கம்

வானில் பழுதான மக்ஸ் இயந்திரம் – அவசர தரையிறக்கம்

American Airlines flight 718, the first US Boeing 737 MAX c ரக விமானம் ஒன்று நடுவானில் ஒரு பக்க இயந்திரம் செயல்பட மறுத்த நிலையில் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்க பட்டது ,போயிங்

விமானங்கள் திடீர் திடீரென இவ்வாறு பழுதடைந்து வருவதால் இதனை

அதிக பாவனையில் உள்ள விமான நிறுவனங்கள் ஊடக பயணிக்க மக்கள் பெரிதும் அச்சமடைந்த வருகின்றனர்

ஆனால் விமான நிறுவனங்கள் பூசி ,மெழுகும் கதையினை கட்டவிழ்த்து விட்டு வருகினறமை குறிப்பிட தக்கது

Home » Uncategorized » Page 122
Posted in Uncategorized

வவவுனியாவில் வயலுக்குள்சிறுவன் சடலம் – கண்ணீரில் உறவுகள்

வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமடுவ பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவனின் சடலத்தினை பொலிஸார் நேற்று (4) மீட்டுள்ளனர்.

குறித்த சிறுவன் நேற்றையதினம் மாலை தனது உறவுக்கார பெண் ஒருவருடன் வயல்பகுதிக்கு சென்றுள்ளான். நீண்ட நேரத்தின் பின்னர் சிறுவன் வீடு சென்றிருப்பார் என்ற எண்ணத்தில்

குறித்தஉபெண் வீட்டிற்கு சென்றுள்ளார்.உஎனினும் சிறுவன் வீட்டிற்கு வரவில்லை. பின்னர் பெற்றோர்கள் உறவினர்களால் தேடுதல் நடாத்தப்பட்டது.

இதன்போது குறித்த சிறுவன் வயல்பகுதியில் விழுந்து கிடப்பதை அவதானித்த பெற்றோர்கள் அவனை உடனடியாக மீட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் குறித்த சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்னமே மரணமடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மருதமடுவ பகுதியை சேர்ந்த வீரசிறி தேனுகருக்சான் என்ற 7 வயது சிறுவனே மரணமடைந்துள்ளான். பாம்பு தீண்டி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Home » Uncategorized » Page 122
Posted in Uncategorized

17 மோட்டர் சைக்கிளுடன் திருடன் சிக்கினான்

பல்வேறு பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 78

வயதுடைய நபரொருவர் அரலகங்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவரிடம் இருந்து 17 மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய மேலும் பல மோட்டார்

சைக்கிள்களை சந்தேகநபர் திருடி பல்வேறு பிரதேச நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Home » Uncategorized » Page 122
Posted in Uncategorized

இரண்டு இயந்திர துப்பாக்கிகளுடன் வாலிபர் கைது – பாதுகாப்பு தீவிரம்

இரண்டு இயந்திர துப்பாக்கிகளுடன் வாலிபர் கைது – பாதுகாப்பு தீவிரம்

பிரிட்டன் மேற்கு லண்டன் பகுதியில் உள்ள Chiswick Park tube station. அருகில் பத்தொன்பது வயதுடைய வாலிப ஒருவர் ,

இரண்டு மெசின் கண் துப்பாக்கிகள் ,மற்றும் நாற்பது ரவைகளுடன் கைது செய்ய பட்டுள்ளார் ,

கைதானவர் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

இவர்கள் ரவுடி குழுக்களை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

Home » Uncategorized » Page 122
Posted in Uncategorized

சவூதியில் எரியும் எண்ணெய் வயல்கள் – ஈரான் ஏவுகணை தாக்குத்தல்

சவூதியில் எரியும் எண்ணெய் வயல்கள் – ஈரான் ஏவுகணை தாக்குத்தல்

சவூதி நாட்டின் மிக முக்கிய எண்ணெய் கூதம் ஒன்றின் மீதுஏமன் நாட்டில் இருந்து இயங்கும் கவுதி படைகள் திடீர் ஏவுகணை

தாக்குதலை நடத்தின ,இதில் அங்கு தரித்து நின்ற ஐந்துக்கு மேற்பட்ட எண்ணெய் டாங்கிகள் எரிந்து அழிந்துள்ளன

பதின் மூன்று கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட மேற்படி

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ,மற்றும் வயல்கள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன

ஈரான்,சவுதிக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களின் உச்சமாக இந்த தாக்குதல் பார்க்க படுகிறது

Home » Uncategorized » Page 122
Posted in Uncategorized

அமெரிக்கா இராணுவதளம் மீது ரொக்கட் தாக்குதல் – இராணுவம் பலி

அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்

ஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள அமெரிக்காவின் Ain al-Asadஇராணுவ தளம்

மற்றும் படைகள் தங்கும் இடம் என்பனவற்றை இலக்கு வைத்து பத்து ரொக்கட் ,ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன ,

இதில் அமெரிக்காவின் முகவர் ஒருவர் உள்ளிட்ட ,மூன்று இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,

இவர் அமெரிக்காவின் உளவாளி என தெரிவிக்க பட்டுள்ளது ,மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

முகாம் பலத்த சேதமடைந்துள்ளது

சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தியது ,

அதற்கு பழிவாங்கும் தாக்குதலாக இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு படைகள் நடாத்தியுள்ளமை குறிப்பிட தக்கது

Home » Uncategorized » Page 122
Posted in Uncategorized

38 மக்களை சுட்டு கொன்ற இராணுவம்

38 மக்களை சுட்டு கொன்ற இராணுவம்

மியன்மாரில் இடம் பெற்று வரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்த்தில் குதித்தனர் .

மேற்படி மக்கள் மீது இராணுவ சர்வாதிகார அடக்குமுறை பயன்படுத்தி தடியடி தாக்குதல் ,மற்றும் துப்பாக்கி தாக்குதல்கள் இடம்பெற்றன

இந்த தாக்குதலில் இதுவரை முப்பத்தி எட்டு மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

தொடர்ந்து முன்னாள் அதிபர் சிறையில் வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Home » Uncategorized » Page 122
Posted in Uncategorized

இலங்கையில் பரவும் புதியவகை நோய்

இலங்கையில் பரவும் புதியவகை நோய்

இலங்கை அனுராதாபுரம் பகுதியில் டைனியா எனப்படும் புதிய வகை நோயானது பரவி வருகிறது ,இது மனிதர்களின் தோலினை

தாக்கிய பின்ன அது உடல் முழுவதும் வேகமாக பரவி மனிதர்களின்

உயிரை கொல்லும் கொடிய ஆபத்தான நோயாக பார்க்க படுகிறது

இது தொடர்பான விழிப்புணர்வு எச்சரிக்கை நிகழ்வுகள் நடத்த பட்டு வருகின்றன

Home » Uncategorized » Page 122
Posted in Uncategorized

வவுனியாவில் பொலிஸார் துப்பாக்கி சூடு – இருவர் காயம்

வவுனியாவில் பொலிஸார் துப்பாக்கி சூடு – இருவர் காயம்

இன்று காலை வவுனியா பகுதியில் காவல்துறையினர்

மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

பிக்கப் ரக வாகனம் ஒன்றில் மரங்களை வெட்டி கடத்தில் சென்ற குழு மீதே இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,

இதில் இருவர் காயமடைந்த நிலையில் அதே பகுதி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

மர கடத்தல் ,மற்றும் மணல் கொள்ளையர்கள் மீது இவ்விதமான

துப்பாக்கி சூட்டு தாக்குதல்களை போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Home » Uncategorized » Page 122
Posted in Uncategorized

குழந்தையை அடித்த தாய்க்கு – 20 வருடம் சிறை – போலீசார் தெரிவிப்பு

குழந்தையை அடித்த தாய்க்கு – 20 வருடம் சிறை – போலீசார் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் எட்டுமாத சிசுவை பிரம்பால் அடித்து கொடுமை படுத்தியமை ,கொலை செய்திட முனைந்தமை

உள்ளிட்ட தண்டனை சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது

மேற்படி சட்ட பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்க பட்டால் குறித்த பெண் இருபது வருடங்கள் சிறையில் வாழ நேரிடும் என

காவல்துறை அதிகாரி தெரிவித்துளளார் ,இதனையே உலக மக்கள் அனைவரும் எதிர் பார்க்கின்றனர் .

யாழ்ப்பாண நீதிமன்றம் இந்த சிறந்த தீர்ப்பை குறித்த பெண்ணுக்கு வழங்கி சமூகத்தில் நிலைபெறும் இவ்வாறான கொடுமையான

சிந்தனை வாதிகளை தடுத்து குற்றங்களை குறைக்குமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Home » Uncategorized » Page 122
கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Posted in Uncategorized

தாயை நெத்தியில் சுட்டு கொன்ற 14 வயது மகன்

தாயை நெத்தியில் சுட்டு கொன்ற 14 வயது மகன்

அமெரிக்காவில் 14 வயது மகன் தன்னை பெற்ற தயை நெத்தியில் பலதடவை சுட்டு கொன்றுள்ள அதிர்ச்சி சமபவம் இடம்பெற்றுள்ளது

மேற்படி கொலையினை புரிந்த சிறுவன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இவர் பயன் படுத்திய

துப்பாக்கி ,மற்றும் தோட்ட என்பன எவ்வாறு இவருக்கு கிடைத்தது என்பது தொடர்ப்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

,தயாரின் துப்பாக்கியை இவர் பயன் படுத்தி இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

Home » Uncategorized » Page 122
Posted in Uncategorized

ஆறு பெண்களை கடத்தி கற்பழித்து – அடித்து கொன்ற மர்ம கொலையாளி சிக்கினார்

ஆறு பெண்களை கடத்தி கற்பழித்து – அடித்து கொன்ற மர்ம கொலையாளி சிக்கினார்

அமெரிக்கா கலிபோனியா பகுதியில் 1977 முதல் 1987 ஆண்டுவரையில கால பகுதியில் அழகிய ஆறு பெண்களை கடத்தி

கற்பழித்து அதன் பின்னர் அடித்து கொன்ற மர்ம கொலையாளி தற்போது சிக்கியுள்ளார்

நீண்டகாலமாக போலீசார் மேற் கொண்டு வந்த மேற்படி கொலை வழக்கில் குறித்த நபர் சிக்கியுள்ளார்


இவ்வாறு பல்வேறு பட்ட கொலை வழக்குகளில் இன்று வரை சிக்காது சிலர் மர்மமாக உலாவி வருகின்றனர்

இவர்களை கைது செய்திட முடியாது காவல்துறையினர் திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

Home » Uncategorized » Page 122
Posted in Uncategorized

வானில் விமானியை கடித்த பூனை – தரை இறக்க பட்ட விமானம்

வானில் விமானியை கடித்த பூனை – தரை இறக்க பட்ட விமானம்

Khartoum bound – Doha, Qatar இருந்து பயணிகளுடன் பறந்து சென்ற Tarco Aviation சொந்தமான விமானத்தின் விமானியின் அறைக்குள்

இரகசியமாக புகுந்த பூனை ஒன்று பிரதான விமானியை கடித்து குதறியுள்ளது

பூனையின் கடி காயத்திற்கு உள்ளான அவரால் குறித்த விமானம் அவசரமாக தரை இறக்க பட்டது

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று

வருகின்றன ,எனினும் விமானம் சேதங்கள் ஏதுமின்றி தரை இறக்க பட்டுள்ள்ளது குறிப்பிட தக்கது

Home » Uncategorized » Page 122
Posted in Uncategorized

குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரைசா

குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரைசா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவரும் தற்போது நடிகையுமான ரைசா வில்சன் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரைசா
ரைசா


தனுஷின் ’வேலையில்லா பட்டதாரி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு

சினிமா வாய்ப்புகள் குவிந்தது. இவர் நடிப்பில் வெளியான ’பியார் பிரேமா காதல்’ படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருவார். தற்போது நீச்சல்குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Home » Uncategorized » Page 122
Posted in Uncategorized

குழந்தையை பிரம்பால் அடித்த தமிழ் பெண் யாழில் கைது -வீடியோ

குழந்தையை பிரம்பால் அடித்த தமிழ் பெண் யாழில் கைது -வீடியோ

யாழ்ப்பாணம் அரியாலை

பகுதியில் இளம் பெண் ஒருவர் பச்சிளம் குழந்தை ஒன்றை சரமாரியாக அடிக்கும் காட்சி

சமூகவலைத்தளத்தில் வெளியான நிலையில் குறித்த பெண் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார்

குறித்த வீட்டில் இருந்த நபர் ஒருவர் அதனை காணொளி பிடித்து

சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

இவளை பிடித்து தூக்கில் தொங்க விட வேண்டும் என நெட்டிசன்கள் கருது எழுதுவருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

இலங்கைக்குள் இந்தியா போர் விமானங்கள் புகுந்தன

இலங்கை விமானப்படையினர் 2021 மார்ச் 2 ஆம் திகதி 70ஆவது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடும் முகமாகவும் இலங்கை விமானப்படையின் ஐந்தாம் இலக்க தாக்குதல் அணி மற்றும் ஆறாம் இலக்க ஹெலிகொப்டர் அணியினருக்கான ஜனாதிபதி

வர்ண விருதுகளை வழங்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை முன்னிட்டு 2021 மார்ச் 03ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரையில் காலிமுகத்திடலில் முதற்தடவையாக

பாரியளவிலான வான் சாகச கண்காட்சி ஒன்றும் அதேபோல வேகமாக பறத்தல் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் கூட்டொருமைப்பாட்டின் சமிக்ஞையாகவும் இராணுவ ரீதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் தோழமையை குறிப்பிடும் முகமாக சரங் (அதிநவீன

இலகுரக ஹெலிகொப்டர்), சூர்ய கிரண் (Hawks), தேஜாஸ் தாக்குதல் விமானம், தேஜாஸ் பயிற்சி மற்றும் டோனியர் சமுத்திர ரோந்து விமானம் ஆகியவற்றுடன் இந்திய விமானப் படையினரும் இந்திய

கடற்படையினரும் இந்த நிகழ்வுகளில் இணைந்து கொள்கின்றனர். இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப் படையினரின் 23 விமானங்கள் இந்த பாரிய நிகழ்வில் பங்கேற்க

உள்ளன.1D6A5709இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இந்திய விமானப்படை மற்றும் கடற்படை விமானங்கள் 2021 பெப்ரவரி 27ஆம் திகதி கொழும்பை வந்தடைந்துள்ளன.

இந்திய விமானப்படையின் சி17 குளோப் மாஸ்டர் மற்றும் சி-130ஜே போக்குவரத்து விமானங்களும் இதற்கு ஆதரவாக வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.1D6A5945

பல வகையிலான தயாரிப்புக்களும் பாரிய எண்ணிக்கையிலான விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டிருப்பது இந்திய மற்றும்

இலங்கை படையினரிடையிலான நட்பு மற்றும் பகிரப்பட்ட இயங்குதிறன் அதேபோல வலுவான பிணைப்புக்களையும் எடுத்தியம்புகின்றது.

இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் சகல இந்திய விமானங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதேநேரம் இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் சுதேச தொழில்நுட்ப வலிமை மற்றும் இந்தியாவின் பாதுகாப்புத்

துறையின் தயாரிப்புகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைகிறது. தேஜாஸ் பயிற்சி விமானம் முதற்தடவையாக இந்த கண்காட்சியில் கலந்து

கொள்வதுடன் இலங்கை விமானப்படையின் விமானிகள் இந்திய விமானிகளுடன் இணைந்து சுதந்திரமான பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக அமைகின்றது. அதே

நேரம் இந்த நிகழ்வுகளின்போது சகல சுகாதார நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்

இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையின் சமுத்திர ரோந்து விமானமான டோனியரில் முதற்தடவையாக அனுபவங்களைப்பெற உள்ளனர். இலங்கை விமானப்படை விமானிகள் மற்றும் இலங்கை கடற்படையினர்

இந்திய விமானிகளுடன் இணைந்து விமானங்களில் பயணிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கை கடற்படை

மற்றும் இலங்கை விமானப்படையினருக்காக அரையாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் டோர்னியர் பயிற்சி நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இது அமைகின்றது.

பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியாவைப் பொறுத்தவரையில் “முதல் முன்னுரிமை” நாடாக இலங்கை அமைகின்றது. 2020 நவம்பர் மாதம் இலங்கையால் நடத்தப்பட்டதும் இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் கலந்துகொண்டதுமான முத்தரப்பு கடல்

பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டிற்காக வருகை தந்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் அவர்களால் இலங்கையின் தலைமைத்துவத்திற்கு பாதுகாப்புதுறை சார்ந்த

விடயங்களில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பானது வலியுறுத்தி கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில்

இந்திய விமானப் படையினரும் இந்திய கடற்படையினர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளமை இரு நாடுகளினதும்

ஆயுதப்படைகள் இடையிலான நட்புறவு, தோழமை மற்றும் வளர்ந்துவரும் ஒத்துழைப்பு ஆகியவற்றினை பிரதிபலிப்பதாகவே அமைகின்றது..

Home » Uncategorized » Page 122
Posted in Uncategorized

பிளாஸ்டிக் ,பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனைக்கு தடை.

எதிர்வரும் ,மார்ச் 31 முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனையை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்திவிட்டு அகற்றப்படுகின்ற பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல், மைக்ரோ இருபதுக்கும் குறைவான பொலித்தீன், பெட் போத்தல் (PET Bojttle) ,செம்போ பக்கெட், காட்டன் பட் மற்றும் காற்று நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் என்பன இதனுள் அடங்கும்.

இந்த பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்கள் அதிகமானவை சூழலுடன் சேர்வதியால் இந்நாட்டில் அதிகமாக சூழல் மாசடைவு ஏற்படுவதுடன், குடிநீர் மற்றும் நீர் மாசடைவதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே இவ்வாறான பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் உற்பத்திகள் சிலவற்றை மார்ச் 31 முதல் இலங்கையில் உற்பத்தி செய்ய மற்றும் விநியோகிக்க தடை செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கு பதிலாக

சூழலுக்கு உகந்த பொருட்களை அறிமுகப்படுத்து தொடர்பாக சுற்றாடல் அமைச்சு பல்வேறு பிரிவினர்களுடன் கலந்துரையாடியுள்ளது.

இதன்படி கடந்த வாரம் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் பல தனியார் வியாபார நிறுவனங்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதில் இலங்கை பல

முதல்தர ஹோட்டல்களில் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பாவனைக்கு பதிலான மாற்று பொருட்கள் பயன்படுத்தப்படுவது

குறித்து வியாபாரிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.மேலும் அவர்கள் பயன்படுத்துகின்ற சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்கள் சிலவற்றை அமைச்சரிட் சமர்ப்பித்தனர்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, மார்ச் 31 ஆம் திகதியிலிருந்து தடை செய்யப்படுகின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுடன்இ இந்த வருட இறுதிக்குள்

மேலும் 350 உற்பத்திப் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்வதற்கு சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றார்.

எனவே முடிந்தவரை சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர வியாபாரிகளிடம் கேட்டுக்கொண்டார்

Home » Uncategorized » Page 122
Posted in Uncategorized

ஐநாவில் வென்று -இராணுவத்தை காப்பாற்றுவோம் -இலங்கை சூளுரை

ஜெனீவா விவகாரத்தை அரசாங்கம் சிறந்த முறையில் கையாண்டு, அதில் வெற்றி கொள்ளுமென நம்பிக்கை தெரிவித்துள்ள கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இராணுவத்தைப்

பாதுகாக்கவேண்டிய தேவையேற்படின், புதிய சட்டங்கள் இயற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

‘அப்பாவித் தமிழ் இளைஞர், யுவதிகளைப் பலவந்தமான முறையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாக்கியவர்கள்

சர்வதேச அரங்கில், மனித உரிமைகள் குறித்து இன்று வாதிடுகிறார்கள்’ என்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரது அறிக்கை, இலங்கையின் சுயாதீனத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்

வகையில் காணப்பட்டது. ஆகையால், அந்த அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது’ என்றார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில், மனித உரிமைகள் மீறல்கள் இடம் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குத் தேவையான

சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை. மாறாக, 2019ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆணையாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார் என்று தெரிவித்த அமைச்சர் ஜி.எல். பீரிஸ்,

அப்பாவித் தமிழ் இளைஞர்களைப் பலவந்தமான முறையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாக்கியவர்கள், இன்று சர்வதேச அரங்கில், மனித உரிமைகள் பேரவை குறித்து

வாதிடுகிறார்கள். இவர்களுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றார்.

’30 வருட கால யுத்தத்தைஇ நிறைவு செய்த இராணுவத்தினர், அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. . இராணுவத்தினரைப் பாதுகாக்க, தற்போதை சட்டம் போதுமானதாக அமையாவிடின், புதிதாகச் சட்டத்தை உருவாக்குவோம்’ என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக இலங்கை 70 வருட காலமாக, இணக்கமாகச் செயற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளை முழுமையாகச் செயற்படுத்தி

உள்ளோம் என்று தெரிவித்த அவர், ஆனால்இ ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர், இலங்கைக்கு எதிராகச் செயற்படுகின்றார் என்றார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு சில விடயங்களை அடிப்படையாகக்

கொண்டு அறிக்கை பெறுமதியற்றது என்று குறிப்பிட முடியாது எனத் தெரிவித்த அவர், அடிப்படைவாதச் செயற்பாடுகள்,

எதிர்காலத்தில் நாட்டில் தோற்றம்பெறாமல் இருப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது என்றார்.

நீண்ட அறிக்கை என்பதால், அந்த அறிக்கையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மிகவும் ஆழமாக ஆராய்ந்து வருகின்றது எனத்

தெரிவித்த அவர், எமது கட்சியின் நிலைப்பாட்டை, அடுத்தவாரம் தெளிவாகப் பகிரங்கப்படுத்துவோம் என்றார்.

ஆழமாக ஆராய்ந்ததன் பின்னரே, அறிக்கை குறித்து அறிவிக்க வேண்டும். ஒருசில பக்கங்களை மாத்திரம் புரட்டிவிட்டு, அதிருப்தி கொள்ள முடியாது; அவ்வாறு செய்வது பொறுப்பான செயலல்ல என்றார்.

‘விசாரணை ஆணைக்குழுவுக்கு, தண்டனை வழங்கும் அதிகாரம் கிடையாது. குண்டுத்தாக்குதல் இடம்பெற்றபோது, பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் ஜனாதிபதி

மைத்திரிபால சிறிசேனவுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கைகளை எடுக்க, சட்டமா அதிபருக்குப் பரிந்துரை

வழங்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்’ என்றார்.

Home » Uncategorized » Page 122
Posted in Uncategorized

10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி – உலக சுகாதார நிறுவனம்

10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி – உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் கொரோனாவுக்கு எதிரான ‘ஆன்டிபாடி’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

அதிக மக்கள் நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில், சில இடங்களில் 50 முதல் 60 சதவீதம்பேருக்கு கொரோனா வந்துள்ளது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகி உள்ளது.

ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கு தடுப்பூசி போடுவதுதான் ஒரே வழி. தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள

தடுப்பூசிகள், கொரோனாவால் ஏற்படும் மரணம், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நிலை ஆகியவற்றில் இருந்து நல்ல பாதுகாப்பை அளிக்கின்றன.

அதே சமயத்தில், அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்பு, லேசான பாதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக தடுப்பூசி உறுதியுடன் செயல்படுவது பற்றி ஆய்வு நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in Uncategorized

தந்தையை அடித்து கொன்ற மகன் – யாழில் நடந்த பயங்கரம்

தந்தையை அடித்து கொன்ற மகன் – யாழில் நடந்த பயங்கரம்

யாழ்ப்பாணத்தில் அறுபத்தி ஐந்து வயதுடைய தந்தையை 33

வயதுடைய மகன் கோரமாக அடித்து கொன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது

நாள் தோறும் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்று வருவதாகவும் ,இன்று அது முற்றி தந்தையை மிக

கோரமாக அடித்து கொன்றுள்ளார்

எனவும் ,தந்தையின் மீது அண்ணன் தாக்குதல் நடத்தும் பொழுது அதனை என்னால் தடுத்து நிறுத்திட முடியவில்லை என சகோதரன் தெரிவித்துளளார்

இந்த கொலை வெறி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

மேற்படி கொலையை புரிந்த மகன் மன நலம் பாதிக்க பட்டவர் என தெரிவிக்க படுகிறது

Home » Uncategorized » Page 122