Tag: தாயை
தாயை கோபத்தில் வெட்டிய மகன்
தாயை கோபத்தில் வெட்டிய மகன்
தாயை கோபத்தில் வெட்டிய மகன் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,பெற்ற அம்மாவை ,சகோதரனை கோடரியால் வெட்டிய சம்பவம் இலங்கையை உலுப்பியுள்ளது .
பெற்ற தாயுக்கும் மகன்களுக்கும் இடையில் சொத்து தகராறு ஏற்பட்ட தாகவும் ,சகோதரன் மற்றும் தாயின் மீது கோடாரி வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
எழுபத்தி இரண்டு வயது உடைய தாய் ,44 வயது சகோதரன் ஆகியோரே கோடாரி வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகினர் .
மருத்துவமனையில் சிகிச்சை
மகனின் கோடாலி வெட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த ,தாய் மகன் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
தாயார் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .மகன் தேறியுள்ளார் எனப்படுகிறது .
தாயை கோடாலியால் வெட்டிய மகன்
தாயை கோடாலியால் வெட்டிய மகன் காவல்துறையினரால், கைது செய்ய பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
கொலை குற்ற சாட்டின் அடைப்படையில் மகனுக்கு நீண்ட சிறை தண்டனை வழங்கப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
பட்டினி கிடந்தது ,பல இன்னல்கள் மத்தியில் வளர்த்து ஆளாக்கி வைத்த பெற்றவர்களை ,இவ்வாறு நன்றி கெட்ட நிலையில் கோடாலி தாக்குதல் நடத்தி ,கொலை வெறியாட்டம் ஆடிய மகனை ஊர் மக்கள் திட்டி வருகின்றனர் .
வன்மத்தின் ஊடக , வன்முறை ஊடாக சாதித்து விடலாம் என எண்ணுபவர்களுக்கு ,இந்த நீண்ட சிறை தண்டனை பல படங்களை கற்று கொடுக்கும் என நம்பலாம் .
Featured
தாயை கொலை செய்த மகன் தலை மறைவு
தாயை கொலை செய்த மகன் தலை மறைவு
அலவ்வ, மாபோபிட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவர் அவரது மகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாபோபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாயை கொலை செய்த மகன் தலை மறைவு
கொலையை செய்த சந்தேக நபர் உயிரிழந்தவரின் இளைய மகன் என்பதும், அவர் குடித்துவிட்டு வந்து தனது தாயுடன் தகராறு செய்த நிலையில் கொலையை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்
- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு
- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன
- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன
- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து அவசரகாலக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்
- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்
- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு
- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்
- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்
தாயை நெத்தியில் சுட்டு கொன்ற 14 வயது மகன்
தாயை நெத்தியில் சுட்டு கொன்ற 14 வயது மகன்
அமெரிக்காவில் 14 வயது மகன் தன்னை பெற்ற தயை நெத்தியில் பலதடவை சுட்டு கொன்றுள்ள அதிர்ச்சி சமபவம் இடம்பெற்றுள்ளது
மேற்படி கொலையினை புரிந்த சிறுவன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இவர் பயன் படுத்திய
துப்பாக்கி ,மற்றும் தோட்ட என்பன எவ்வாறு இவருக்கு கிடைத்தது என்பது தொடர்ப்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
,தயாரின் துப்பாக்கியை இவர் பயன் படுத்தி இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது




























