Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
இரு குழுக்கள் மோதல் – நால்வர் காயம் – வாகனங்கள் அடித்து நொறுக்கு
இரு குழுக்கள் மோதல் – நால்வர் காயம் – வாகனங்கள் அடித்து நொறுக்கு
இலங்கை அனுராதபுரம் -ஹொரவ்பொத்தானை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில்இடம் பெற்ற மோதல் சம்பவத்தில் நான்கு
பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
மேலு இவர்கள் பயணித்த வாகனங்களும் அடித்து நொறுக்க
பட்டுள்ளன ,மேற்படி சம்பவ தொடர்பில் போலீசார் விசாரித்து வருகின்றனர்
வவுனியாவில் வீடு புகுந்து – வைத்திய தம்பதிகள் மீது தாக்குதல்
வவுனியாவில் வீடு புகுந்து – வைத்திய தம்பதிகள் மீது தாக்குதல்
வவுனியா வைர புளியங்குளம் பகுதியில் உள்ள வைத்திய தம்பதிகள் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த
இருவரையும் கம்பியால் தாக்கி விட்டு அவர்களது மோட்டசைக்கிள்,மற்றும் கடிகாரம்,பணம்,என்பனவற்றை திருடி
சென்றதுடன் ,அவர்கள் தொலைக்காட்சிகள் ,கணனிகள் என்பனவற்றையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்
இந்த தாக்குதல் சம்பவம் அப் பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
காவல்துறை சட்டையில் கமரா பொருத்த வேண்டுதல் – வெளிநாடாகும் இலங்கை
காவல்துறை சட்டையில் கமரா பொருத்த வேண்டுதல் – வெளிநாடாகும் இலங்கை
சட்டக்கல்லூரி மாணவன், பேலியகொட பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட சம்பவத்துடன், பொலிஸ் வன்முறைகள் தொடர்பாக அனைவரினதும் கவனம் திரும்பியுள்ளதாகத்
தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்.பி. பெரேரா, தவறு நடந்தால் குற்றம் சுமத்துவதோ, தவறிழைத்தவர்களைத்
தண்டிப்பதையோ விடுத்து, இவ்வாறான பொலிஸ் வன்முறைகள் இனியும் ஏற்படாதிருப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பது அவசியம் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், இந்தப் பொலிஸ் வன்முறைகளைத் தடுப்பதற்கான இரண்டு முறைமைகளைப் பின்பற்றலாமெனத் தெரிவித்த அவர், சகல பொலிஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு
கமெரா பொருத்தினால், பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தரும் பிரஜைகளுக்கோ, பிரதிவாதியின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கோ பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
அத்துடன், பொலிஸாரும் பொறுப்புடன் செயற்படுவர். எவர் மீதும் முன்வைக்கப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் தடுக்கப்படும் என்றார்.
கடமைகளில் ஈடுபடும் பொலிஸாரின் ஆடைகளில், சிறிய கெமராவைப் (பொடிகேம்) பொருத்துவதன் மூலமும் வன்முறைகளைத் தடுக்கலாம் என்பது இரண்டாவது முறையாகும்.
இது புதிய விடயமல்ல எனத் தெரிவித்த அவர், தமது நாட்டிலுள்ள சகல பிரஜைகளினதும், பொலிஸாரினதும் உரிமைகளைப்
பாதுகாப்பதற்காக அக்கறையுடன் செயற்படும் அனைத்து அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.
எனவேஇ உடனடியாக நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு கமெராவைப் பொருத்த வேண்டும் என்பதுடன், படிப்படியாக இரண்டாவது நடவடிக்கையை
முன்னெடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும். இதற்காகப் பாரியளவில் செலவு செய்ய வேண்டியதில்லை எனத் தெரிவித்த
அவர், இதன் மூலம் சட்டம், நீதியின் பக்கம் கிடைக்கும் பிரதிபலன் மிக முக்கியமென்றார்.
மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு – 18 பேர் மரணம்
மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு – 18 பேர் மரணம்
மியன்மாரில் நிலவி வரும் இராணுவ ஆட்சியில் ,குறித்த இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் ,
இதன் பொழுது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிக்கி பதினெட்டு பேர் பலியாகியுள்ளனர்
மியன்மாரில் இராணுவத்தினர் உடனடியாக பதவிவிலகி ஜனநாயக ஆட்சியை நிலை
நிறுத்த வேண்டும் என கோரி வந்த நிலையில் மேற்படி வன்முறைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா – தப்பிய தலைநகர்
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா – தப்பிய தலைநகர்
சிரியாவின் தலைநகர் டமக்காஸ் பகுதியை நோக்கி இஸ்ரேல் இராணுவத்தினர் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர் ,
எனினும் அவர்களின் ஏவுகணைகளை தமது இலக்கினை எட்ட முன்னர் தாம் சுட்டு வீழ்த்தியதாக சிரியா வான் காப்பு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்
அமெரிக்கா இராணுவத்தினர் ஈரானின் ஆதரவு படைகள் நிலைகள் மீது அகோர வான்வழி தாக்குதலை நடத்தியதன் பின்னர், இஸ்ரேல்
இராணுவத்தினர் இந்த ஏவுகணை தகத்தலை நடத்தியுள்ளமை குறிப்பிட தக்கது
பாட்டியை குத்தி கொன்ற – 14 வயது சிறுமி
பாட்டியை குத்தி கொன்ற – 14 வயது சிறுமி
அமெரிக்காவில் அறுபத்தி ஐந்து வயதுடைய பாட்டியம்மாவை
பதின் நான்கு வயதுடைய சிறுமி கத்தியால் கோரமாக குத்தி கொன்றுள்ள பெரும் துயர் இடம் பெற்றுள்ளது
இந்த படுகொலையை புரிந்த சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்
,இவர் மன நலம் பாதிக்க பட்ட நிலையில் காணப் பட்டதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் உயிரிழப்பு
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் உயிரிழப்பு
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைரசால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
அங்கு 5 லட்சத்து 55 ஆயிரம் பேரை இந்த வைரஸ் தாக்கியுள்ளதோடு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களையும்
பறித்துள்ளது. வைரஸ் பரவும் அதே வேகத்தில் அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் 2 தடுப்பூசிகள் சுவிட்சர்லாந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சுவிஸ்மெடிக்’ என்று
அழைக்கப்படும் அந்த நாட்டின் மருத்துவ கண்காணிப்பு குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தடுப்பூசி போட்டுக்கொண்ட 364 பேருக்கு பாதகமான எதிர்வினைகள் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இவர்களில் கடுமையான பக்க விளைவுகளை எதிர் கொண்ட 16 பேர் மாறுபட்ட இடைவெளியில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சராசரி வயது 86.
தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி நோய்த்தொற்றுகள் இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களால் மரணம்
ஏற்பட்டதாக தெரிகிறது. அதேசமயம் தடுப்பூசி தான் மரணத்துக்கு காரணம் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறுமியை பலியெடுத்த மந்திரவாதி – பீதியில் கிராம மக்கள்
சிறுமியை பலியெடுத்த மந்திரவாதி – பீதியில் கிராம மக்கள்
கண்டுபொட பகுதியில், மாந்திரிக சிகிச்சை அளிப்பதாகக் கூறி தாக்கப்பட்ட 9 வயது சிறுமியொருவர், உயிரிந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் உடலில், அமானுஸ்ய ஆவியின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும் அதனால் அதை வெளியேற்றுவதற்கு,
பூஜைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி, அப்பகுதியில் மாந்திரிகம் செய்துவரும் பெண்ணொருவர், சிறுமியை பூசைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சிறுமிக்கு ஒருவகை எண்ணை பூசி, தோஷம் நீக்குவதாக தெரிவித்து, தடி ஒன்றால் அவரை மாந்திரிக சிகிச்சை அளிப்பதாக கூறிய இந்தப் பெண் தாக்கியுள்ளார். இதனால்
பாதிக்கப்பட்ட சிறுமி, மயக்கமடைந்தமையால், அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக உறவினர்களினால் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஆனாலும் சிறுமி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பியகம வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மாந்திரிகம் செய்துவரும் குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பில் போர் விமானங்கள் திடீர் முற்றுகை
கொழும்பில் போர் விமானங்கள் திடீர் முற்றுகை
இலங்கை தலைநகர் கொழும்பு வான்பரப்பில் திடீரென மிகையொலி கிபீர் விமானங்கள் வட்டமடித்துள்ளன
இந்த திடீர் பறத்தல் ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது ,இது மக்களுக்கு
பெரும் பீதியை ஏற்படுத்திய ஒன்றாக உள்ளதாக அதனை
கண்ணுற்ற கொழும்பு வாசிகள் முக நூலில் பதிவுகளை இட்டு வருகின்றன
ஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்-இலங்கை தமிழ் பெண் புகார்
ஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்-இலங்கை தமிழ் பெண் புகார்
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு
கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம்
பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண் புகார் அளித்துள்ளார்.
ஆர்யா
அந்த பெண் தற்போது ஜெர்மன் நாட்டில் குடியுரிமை வாங்கி வாழ்ந்து வருகிறார்.
இப்போது அவர் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், பணத்துக்கு கஷ்டப்படுவதாக ஆர்யா தன்னிடத்தில் கூறினார் என்றும் தன்னை விரும்புகிறேன் என்றும் திருமணம்
செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்.
பாடசாலைக்குள் புகுந்து 317 மாணவிகள் கடத்தல் – தீவிரவாதிகள் அட்டூழியம்
பாடசாலைக்குள் புகுந்து 317 மாணவிகள் கடத்தல் – தீவிரவாதிகள் அட்டூழியம்
மாணவிகள் கடத்தல்
நையீரியா நாட்டில் நேற்று பாடசாலை ஒன்றுக்குள் புகுந்த ஆயுதம்
தாங்கிய தீவிரவாதிகள் அங்கு கலவி பயின்று வந்த சுமார் 317 மாணவிகளை காடத்தி சென்றுள்ளனர்
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்பிள்ளைகள் இந்த கடத்தல் காரர்களினால் கடத்தி செல்ல பட்டுள்ளனர் ,கடத்த பட்டவர்களில்
பத்து ,மாற்றும் பதின்மூன்று வயதுடைய சிறுமிகள் பலடசின் பேர் உள்ளனர்
இராணுவ நடவடிக்கை
மேற்படி மாணவிகளை மீட்கும் பணியில் இராணுவத்தினர் மிக பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை மேகொண்டுள்ளனர்
கற்பழிப்பு
,பொக்கோ காராம் அமைப்பு இவ்வாறு இருநூறு பெண்களை கடத்தி சென்று அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர்
விடுவிக்க பட்ட செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
வீழ்ந்து சிதறிய விமானம் – மூவர் மரணம்
வீழ்ந்து சிதறிய விமானம் – மூவர் மரணம்
அமெரிக்கா யோர்ஜியா பகுதியில் இலகுரக பயணிகள் விமானம்
ஒன்று வீழ்ந்து சிதறியது ,இதன் பொழுது அதில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர்
இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து
இடம்பெற்றுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிவிக்க படுகிறது
தொடர்நது தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
,சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளன
ஓடும் பேரூந்தில் இருந்து வாலிபர் தள்ளி படுகொலை
ஓடும் பேரூந்தில் இருந்து வாலிபர் தள்ளி படுகொலை
கடந்த தினம் இலங்கை கண்டி Udawela பகுதியில் பயணிகள் பேரூந்தில்
பயணித்து கொண்டிருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு கொலையில் முடிவடைந்துள்ளது
ஓடிக் கொண்டிருந்த பேரூந்தில் இருவருக்கும் வாய்த்தகராறு
ஏற்பட்டுள்ளது ,அதில் சீற்றம் உற்ற மறு நபர் குறித்த நபரை அதில் இருந்து தள்ளி வீழ்த்தியுள்ளார் .
இதன்பொழுது பேரூந்தில் இருந்து வீழ்ந்த நபர் அவ்விடத்திலே மரணித்துள்ளளார் ,
மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு – 3,871 பேர் கைது
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு – 3,871 பேர் கைது
இலங்கை காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு சோதனையின்
பொழுது 3,871 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
போதை பொருள் ,திருட்டு,மற்றும் நீதிமன்றத்தினால் தேட பட்டு வந்தவர்கள் கைதில் உள்ளடக்கம் என தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கையில் அதிகரித்து செல்லும் போதைவஸ்து காரணமாக அங்கு குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
ஐயா தா.பாண்டியன் மரணம் video
ஐயா தா.பாண்டியன் மரணம் video
இந்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் அவர்கள் மரணம் அடைந்துள்ளார் ,
சிறுநீரக தொற்று நோயினால் ரஜீவகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்த அவர் ,சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்
பல்வேறு பட்ட அதி சிறப்பு மிகு வரலாற்றுக்கு நூல்களை தமிழாக்கம் செய்து படைத்தவர் மட்டுமல்லா பல சொந்த நூல்களையும் எழுதி வெளியிட்டவர்
இவர் எழுதிய முக்கிய குறிப்பு வரலாற்று நூல் என்னை மிகவும் கவர்ந்தது ,அவ்வாறான ஒருவர் இன்று மரணம் எய்தியது மனதிற்கு வேதனையாக
உள்ளது ,அன்னார் சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்
கப்பலை கடத்திய வடகொரியா -$2.3 பில்லியன் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
கப்பலை கடத்திய வடகொரியா -$2.3 பில்லியன் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
வடகொரியா இராணுவத்தால் 1968 ஆம் ஆண்டு சிறை பிடிக்க பட்டஅமெரிக்காவின் USS Pueblo என்ற கப்பலில் பணியாற்றிய 83
மாலுமிகளில் ஒருவர் பாலியானார் ,மேலும் அந்த கப்பல் சேதமடைந்தது
மேலும் இதில் பணிபுரிந்த மாலுமிகள் மனநிலை பாதிக்கும் படியாக வடகொரியா இராணுவம் நடந்து கொண்டது என கூறி ,மேற்படி
கப்பல் சிறைபிடிப்புக்கு எதிராக வழங்க பட்ட நீதிமன்ற தீர்ப்பில் அவர் தம் குடும்பம் ,மற்றும் கப்பல் சேதம் என்பனவற்றுக்கு
வடகொரியா சுமார் $2.3 பில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது
இந்த தீர்ப்பினை அடுத்து குறித்த பெரும் தொகை பணத்தை
வடகொரியா வழங்குமா என்பதே இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும்
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைதி – இராணுவம் சமரசம்
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைதி – இராணுவம் சமரசம்
இந்தியா பாகிஸ்தான் நாடுகளில் எல்லையாக விளங்கும் காஸ்மீரில் தொடர்ந்து போர் இடம்பெறு வந்ததது ,
இதனை அடுத்து இருநாட்டு இராணுவம் ஆழ ஊடுருவி தாக்குதல்களை நடத்திய வண்ணம் இருந்தன ,
இவ்வாறான நிலையில் தற்பொழுது இரு நாடுகளுக்கு இடையில்
இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்து தற்போது குறித்த சர்ச்சைக்குரிய பகுதியில் சமரசம் நிலவுகிறது
இராணுவம் வெறியாட்டம் – நூற்றுக்கு மேலானவர்கள் படுகொலை
இராணுவம் வெறியாட்டம் – நூற்றுக்கு மேலானவர்கள் படுகொலை
எதிரிதிரியாவில் இடம்பெற்று வரும் உள் நாட்டு போரில் அரச இராணுவம்
தனது எதிரி மக்கள் எனப்படுபவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களை ஒரே நாளில் படுகொலை செய்துள்ளது
மேற்படி பாடுகொலைக்கு எதிராக மனித உரிமை ஆணையம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது
,பயங்கரவாதிகள் என்ற போர்வையில் அவர் தம் மொழி பேசும்
மக்களை இவ்வாறு ஈவிரக்கமின்றி இராணுவத்தினர் கொன்று வருகின்றமை குறிப்பிட தக்கது
ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா இராணுவம் அகோர தாக்குதல்
ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா இராணுவம் அகோர தாக்குதல்
சிரியாவில் நிலைகொண்டு ஈரானுக்கு ஆதரவாக இயங்கி வரும் கிளர்ச்சி படைகள்
நிலைகள் மீது அமெரிக்கா இராணுவத்தினர் வான்வழியாக அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி விடுத்த தாக்குதல் உத்தரவை அடுத்து
மேற்படி தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன
ஈரானுடன்
நல்லுறவு மேம்படும் நோக்குடன் ஒருபுறம் ஈடுபட்டு கொண்டவாறே மறுபுறம் ஈரானின்
வலது கையாக விளங்கும் போராளிகள் மீது தீவிர தாக்குதலை விரிவ படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது
கொழும்பில் 10 தாவது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
கொழும்பில் 10 தாவது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
இலங்கை கொழும்பு Durdans மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வந்த
வியாபாரி ஒருவரது மகன் ,அந்த மருத்துவ மனையில் இருந்து
தப்பித்து ஓடினார் ,அதன் பின்னர் பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்
மனநிலை பாதிக்க பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் இவ்விதம் தற்கொலை புரிந்துள்ளமை குறிப்பிட தக்கது






