வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்

வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்

வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் பகுதிகள் ,கடைகள் வீடுகள் நீரில் மூழ்கின .தமிழர் பகுதியில் கடும் பதற்றம்.

வெள்ள பெருக்கு காரணமாக தமிழர் பகுதி கடும் பதற்றத்தில் உறைந்துள்ளது ,வீடுகள் கடைக்குள் நீர் புகுந்துள்ளதினால் ,சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன .

மக்கள் சொல்லென்ன துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்

தாழ்நில பகுதிகள் கடுமையாக பாதிக்க பட்டுள்ளதால் மக்கள் அங்கிருந்து அகதிகளாக நகர்ந்துள்ளனர் .

பாம்புகள் விசா ஜந்துக்கள் நீரோடு வருவதால் ஒருவித பதட்டத்தில் மக்கள் உறைந்துள்ளனர் .

மாங்குள குளம் வான் பாய்வதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்

வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்
வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்
வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்
வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்

வீடியோ

வாழ்நாள் தலைவராக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
Posted in இலங்கை செய்திகள்

வாழ்நாள் தலைவராக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

வாழ்நாள் தலைவராக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாழ்நாள் தலைவராக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டு‌, கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.

அதிலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மஹிந்தவை, வாழ்நாள் தலைவராக தெரிவு செய்வதற்கான பிரேரணையை காமினி லொக்குகே முன்மொழிந்தார்.

அதனை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழிமொழிந்தார்.

video

கீரிமலையில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

கீரிமலையில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு

கீரிமலையில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை, நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் வெள்ளிக்கிழமை (15) அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கீரிமலையில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு

இதனையடுத்து ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள் நில அளவை திணைக்களத்தினரின் வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 29 ஏக்கர் நிலம் அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி

வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி

கிளிநொச்சியில், பெய்த கடும் மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சியில் வியாழக்கிழமை (14) கடும் மழை பெய்தது.

இதனால், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கணை ஆகிய பிரதேசங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி

இதனால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ள்ளாகியுள்ளனரை். பலர் தங்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

அத்தோடு தர்மபுரம் மத்திய கல்லுரி மற்றும் தருமபுரம் இலக்கம் ஒன்று
பாடசாலைக்கு உள்ளும் மழைநீர் உட்புகுந்தமையால் இப் பாடசாலைகளுக்கு இன்று(15) விடுமுறை வழங்கப்பட்டது.

பாதிப்புக்கள் தொடர்ப்பாக கிராம சேவையாளர் பிரதேச செயலகங்கள் விபரங்களை பெற்று வருகின்றனர்.

வீடியோ

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி, இன்றைய (15) மதிய உணவு நேரத்தில் விமான நிலைய வருகை முனையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

       கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட "விமான நிலைய கூட்டு தொழிற்சங்கம்" இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  பதற்றம் 

         இந்தப் போராட்டத்தின் பின்னர் பேசிய விமான நிலைய கூட்டுத் தொழிற்சங்கத்தின் தலைவர்  தம்மிக்க பெர்னாண்டோ, “எங்களின் இந்தப் புதிய தொழிற்சங்கத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டுப் பேணி வருகின்றார். 
எங்கள் சமூகம் எந்த ஒரு தாய் நிறுவனத்திற்கும் சொந்தமானது அல்ல.  

              எங்களுக்கான சம்பள உயர்வை பெற்றுத் தர வேண்டும் என்பதே இன்று இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. விமான நிலைய ஊழியர்களுக்கு 06 வருடங்களாக சம்பள உயர்வு கிடைக்கவில்லை” என்றார். 

            “எனவே, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் சம்பள உயர்வு குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் தொகையை அங்கு குறிப்பிட வேண்டும்.

 இதனை நிறைவேற்றாவிட்டால் 2024 ஜனவரி 03 ஆம் திகதி முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக உள்ளோம்” என்றும் அவர் கூறினார்.

         இன்று குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களையே இந்த போராட்டத்திற்கு அழைத்துள்ளோம் என்றும், விமான நிலையத்தின் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை என்றும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

         அதன் பின்னர், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அஜித் கல்கெட்டியவிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.  
நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 6 மாதங்களில் கடுமையாகும் சட்டம்

இலங்கையில் 6 மாதங்களில் கடுமையாகும் சட்டம்

இலங்கையில் சட்டம் ஒழுங்கை கடுமையாகப் பேணுவதற்கான விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 06 மாதங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

அதற்கு இடையூறு செய்யும் எந்த தரப்பினரிடமும் தானும் பொலிஸாரும் சரணடையப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

வீடியோ

தீப்பிடித்த படகினை தேடும் கடற்படையினர்
Posted in இலங்கை செய்திகள்

காரைநகர் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் கைது

காரைநகர் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் நேற்று(14) மாலை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஆறுபேரை, எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.

தமிழகத்தின் நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீரியல் வளத் திணைக்களத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது, நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வீடியோ

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிப் பிரயோகம் 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் காயம்

துப்பாக்கிப் பிரயோகம் 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் காயம்

றாகமை வல்பொல பிரதேசத்தில் நேற்று (14) இரவு துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயதுடைய சிறுவன் மற்றும் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் றாகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வீடியோ

உலக வங்கி
Posted in இலங்கை செய்திகள்

உலக வங்கியால் இலங்கைக்கு 34 மில்லியன் டொலர் உதவி

உலக வங்கியால் இலங்கைக்கு 34 மில்லியன் டொலர் உதவி

உலக வங்கியால் மேலும் 34 மில்லியன் அமெரிக்கா டொலர் இலங்கைக்கு கடன் உதவியாக வழங்க பட்டுள்ளது .

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மத்தியில் அதன் பொருளாதரத்தை உயர்த்தும் முகமாக இவ்விதமான உதவிகளை வழங்கி வருகிறது .

பெற்ற கடனை திருப்பி வழங்க வேண்டும் என்கின்ற நிலை உள்ளது ,அதனால் கவனத்தில் அதனை இலங்கை செயல்படுகிறதா என்பதே கேள்வியாக உள்ளது .

வீடியோ

யாழில் பரவும் டெங்கு பலர் பலி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பரவும் டெங்கு பலர் பலி

யாழில் பரவும் டெங்கு பலர் பலி

யாழில் பரவி வரும் டெங்கு நோயினால்
இந்த ஆண்டில் 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் மூன்று பேர் பலியாகியுள்ளனர் .

சுற்று புரங்கள் அசுத்தமாகி டெங்கு நோயானது உருவகி வருவதாக தெரிவிக்கிறது .


குப்பைகள் ,நீர் நிலைகள் காணப்படுவதால் இந்த நோயின் தாக்குதல் அதிகரித்து செல்கிறது .

மக்களுக்கு பல விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் ,நோயின் பிடியில் இருந்து மக்கள் தப்பித்து கொள்ள முடியாது திணறி வருவதாக தெரிவிக்க படுகிறது .

குளத்தில் மூழ்கி இருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் மாயம்

நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் மாயம்

13 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (14) பிற்பகல் மோதரவத்தை வாவியில் நீராடச் சென்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இரண்டு இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடப் போவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு இந்த சிறுவன் நீராடச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காணாமல் போன சிறுவனை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் கடற்படையின் சூழியோடிகளும் ஈடுபட்டுள்ளனர்

வீடியோ

வைத்தியசாலை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ
Posted in இலங்கை செய்திகள்

தீ விபத்தால் கருகிய கடை

தீ விபத்தால் கருகிய கடை

மீசாலை – இராமவில் பகுதியில் உள்ள கடை கட்டடத்தில் புதன்கிழமை (13) இரவு ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக கடை எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவத்தை கேள்வியுற்று ஸ்தலத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

கடையில் இருந்த பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன், அப்பகுதிக்கான மின் விநியோகமும் சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டு இருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குருநாகல் முன்னாள் நகர முதல்வகுருநாகல் 03 வருட கடூழிய சிறை
Posted in இலங்கை செய்திகள்

குருநாகல் முன்னாள் நகர முதல்வகுருநாகல் 03 வருட கடூழிய சிறை

குருநாகல் முன்னாள் நகர முதல்வகுருநாகல் 03 வருட கடூழிய சிறை

குருநாகல் முன்னாள் நகர முதல்வகுருநாகல் முன்னாள் நகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் நகரில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னர் காலத்து ராஜசபை கட்டடத்தை இடித்ததாக குறித்த சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதன்போது முன்னாள் நகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 03 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதித்து குருநாகல் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புவனேகபாகு மன்னர் காலத்து ராஜசபை கட்டடத்தை இடித்தமைக்காக குருநாகல் மாவட்டத்தின் முன்னாள் நகர முதல்வர் துஷார சஞ்சீவ விதாரண

உள்ளிட்ட சிலருக்கு எதிராக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.ருக்கு கடூழிய சிறைத்தண்டனை

வீடியோ

தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உத்தரவு

தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உத்தரவு

நபரொருவரை கைது செய்து அவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டு தொடர்பில், பதில் பொலிஸ்மா அதிபரான தேசபந்து தென்னகோன், அந்நபரின் அடிப்படை உரிமையை மீறியுள்ளார் என தீர்மானித்த உய​

ர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடாக வழங்குமாறு, பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட மூவருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக அவர்களின் தனிப்பட்ட நிதியில் இருந்து நஷ்டஈட்டை வழங்குமாறு, உயர்நீதிமன்றம், வியாழக்கிழமை (14) உத்தரவிட்டுள்ளது.

நீதியரசர்களான குமுதினி விக்கிரமசிங்க, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் நீதியரசர் எஸ்.துரைராஜா இந்த தீர்ப்பை வழங்கினார்.

கைது செய்யப்பட்ட சந்தேநபர், மிரிஹான பொலிஸ் நிலையத்தில் 2010 ஆம் ஆண்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது. அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உத்தரவு

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள், சட்டவிரோதமாக கைதுசெய்து, தடுத்துவைத்து,

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம், தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக, மனுதாரரான டபிள்யூ.ரஞ்சித் சுமங்கல தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையின் கீழ் இருந்த மிரிஹான பொலிஸ் நிலையத்தில் வைத்தே மனுதாரரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேசபந்து தென்னகோன் உட்பட, சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி சரிதா டி பொன்சேகா மற்றும் திலினி விதானகமகே ஆகியோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரியாவும்

பதில் பொலிஸ்மா அதிபர் தென்னகோன் மற்றும் சட்டமா அதிபர் சார்பில் அரச சிரேஷ்ட சட்டத்தரணி இந்துனி புஞ்சிஹேவாவும் ஆஜராகியிருந்தனர்.

வீடியோ

வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்
Posted in இலங்கை செய்திகள்

வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்

வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்

மஹியங்கனை – தெஹியத்தகண்டிய பிரதான வீதியின் கிராந்துருகோட்டை பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவ்வழியாக சென்ற ஒருவர் சடலத்தை பார்த்து பொலிசாருக்கு தகவல் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கிரந்துருகோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்

சடலம் மீட்கப்பட்ட போது அழுகிய நிலையில் இருந்ததால், சடலத்தை யாராவது அவ்விடத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் ஒரு பாடசாலை மற்றும் பேருந்து நிறுத்தமும் உள்ளதுடன் கருப்பு நிற பயணப்பையொன்றும் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதுடன், கிராந்துருகோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

பாம்புடன் பாடசாலை வந்த மாணவி
Posted in இலங்கை செய்திகள்

பாம்புடன் பாடசாலை வந்த மாணவி

பாம்புடன் பாடசாலை வந்த மாணவி

தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவியொருவரின் புத்தகப் பைக்குள் விஷப்பாம்பொன்று இருந்ததில் வகுப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்ததை ஏற்படுத்தியுள்ளது.

ஹிங்குராக்கொட கல்வி வலயத்திற்குட்பட்ட நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் புதன்கிழமை (13) காலை பாடசாலைக்கு வருகை

தந்திருந்த மாணவி புத்தகத்தை எடுப்பதற்காக புத்தகப் பைக்குள் கையை விட்ட வேளை ஏதோவொன்று அசைவதாக உணர்ந்த மாணவி சத்தமிட்டவாறு வகுப்பறையை விட்டு வெளியேறியுள்ளார்.

பாம்புடன் பாடசாலை வந்த மாணவி

விடயமறிந்த பாடசாலை அதிபரும்,ஆசிரியர்களும் அந்த மாணவியின் புத்தகப் பையை வகுப்பறையை விட்டு வெளியே எடுத்து பார்க்கையில் அதனுள்ளே கறுப்பு நிற விஷப்பாம்பொன்று இருப்பது தெரிய வந்தது.

மேலும் பாடசாலையில் பணிப்புரிவோரின் உதவியுடன் பாம்பை விரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

குழந்தை படத்தைக் காட்டி மோசடி செய்த இருவர் கைது

குழந்தை படத்தைக் காட்டி மோசடி செய்த இருவர் கைது

நுவரெலியாவில் சிறு குழந்தையொன்றின் படங்களையும் மருத்துவ அறிக்கையையும் காட்டி பொதுமக்களிடம் பணமோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தையின் தந்தையால் தம்பனை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் குழந்தையின் படங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையை சட்டவிரோதமாக பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குழந்தை படத்தைக் காட்டி மோசடி செய்த இருவர் கைது

பண நன்கொடைக்கான தொடர்புத் தகவலாக அவர்கள் தங்கள் கையடக்கத் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தியதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.

நுவரெலியா பஸ் நிலையத்திற்கு அருகில் சந்தேகநபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 25 மற்றும் 34 வயதுடைய இவர்கள் மிதிகம மற்றும் அஹங்கம பிரதேசங்களில் வசிப்பவர்கள்.

மேலும் நன்கொடையாக சேகரிக்கப்பட்ட ரூ. 10,900 பணத்தையும் பொலிஸார் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றினர்.

வீடியோ

கிளிநொச்சியில் வெள்ளம் மக்கள் வெள்ளத்தில் அவதி
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை

வெள்ளத்தில் மிதக்கும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை

தற்போது பெய்து வரும் கடும் மழையுடன் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொக்மாதுவ இடமாறலில் வெளியேறி கனங்கே திசை நோக்கி செல்ல முடியாத

அளவுக்கு வெள்ள நிலைமை இன்னும் காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து பயணிக்கும் வாகனங்கள் பாலட்டுவ இடமாறலிலும், மத்தள பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் கொடகம இடமாறலிலும் வெளியேறுமாறு அனைத்து சாரதிகளிடம் கோரப்பட்டுள்ளது

பட்ஜெட்டை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்
Posted in இலங்கை செய்திகள்

பட்ஜெட்டை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

பட்ஜெட்டை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

நேற்று நிறைவேற்றப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

அத்துடன் கடந்த 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் என்பவற்றையும் சபாநாயகர் நேற்று சான்றுரைப்படுத்தினார்.

பட்ஜெட்டை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

இதற்கமைய, இந்தச் சட்டமூலங்கள் 2023 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்த) சட்டமாகவும், 2023ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிதிச் சட்டமூலமாகவும், 2023ஆம் ஆண்டின் ஆம் 34 இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாகவும் நேற்று முதல் அமுலுக்கு வருகின்றன.

இலங்கையில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு சந்தித்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன .

வரி அறவீடு மாறுதல் மூலமே நாட்டை கட்டி எழுப்ப முடியும் என ஆனாலும் அரசு கருதுகிறது .

அதனால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அரசு முயற்சித்து வருகிறது .

வரும் காலங்களில் பாரிய மாற்றத்தை இலங்கை சந்திக்கும் என எதிர் பார்க்க படுவதால் ,இந்த மாறுதல் அவசர அவசரமாக மேற்கொள்ள படுகிறது .

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

அரசாங்க வேலைத்திட்டமே ஒரே வழி

அரசாங்க வேலைத்திட்டமே ஒரே வழி

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பை இல்லாதொழித்தால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் என பாராளுமன்றில் இன்று கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அரசாங்க வேலைத்திட்டமே ஒரே வழி

அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் உருவாக்கும் கற்பனைக் கதைகள் தொடர்பில் நாட்டு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

இவ்வாறான கற்பனைக் கதைகளில் சொல்லப்படும் விடயங்களை நிறைவேற்ற முயற்சிப்பதன் மூலம் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்