அவசர எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

அவசர எச்சரிக்கை

அவசர எச்சரிக்கை

 அவசர எச்சரிக்கை ,மக்களுக்கு அவசர எச்சரிக்கை மாநிலம் அறிவித்திருக்கின்றது அதன்படி களுகங்கையின் கிளை கங்கையான குடாகங்கையின் மேற்பகுதியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக அதிக மழைநீர் தேங்கியுள்ளதால் வல்ல அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 அதன் அடிப்படையில் புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கும்படியும் அவ்வளையும் இங்கு இந்த குளம் உடைக்கப்பட்டு நீர் வெளியேறலாம் என்பதால் மக்களை 48 மணி எச்சரிக்கை இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதன் பொழுது மக்கள் எவ்வாறு தப்பிப்பது என்பது ஒரு பக்கமும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 அதிக அளவு மழை நீர் வீழ்ச்சி இடம் பெற்று வருவதால் அதிக வருட பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதாலேயே மக்களுக்கு இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என அஞ்சுகின்ற மக்கள் உடனடியாக அந்த பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அங்கு இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Posted in இலங்கை செய்திகள்

கடல்வாழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

கடல்வாழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலைமற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2022 ஜனவரி28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

மழை நிலைமை:

பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை

காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும்

காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது

மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான

கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போதுகொந்தளிப்பாகக் காணப்படும்

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்..