Category: வன்னி மைந்தன் கவிதைகள்
வன்னி மைந்தன் கவிதைகள் , காதல் கவிதைகள் வன்னி மைந்தன் ,மனித உணர்வின் பிரதியாக நடைமுறை வாழ்வியலில் ஒன்றாக கலந்துள்ளது .
ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம்
ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம்
ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம் ,
சிக்கலில் ஆளும் அரசு
குஞ்சப்பு பேச்சில
குலுங்கி சிரிக்கிற
மக்கள் கருத்தில
மனம் குளிருது
இறுதிவரை இவனே துணை
இறுதிவரை இவனே துணை
கருணை கொள்வான் கடவுளை நம்பு
காலை மாலை அவனை வணங்கு
நெஞ்சின் நெருடல் வருடி எறிவான்
நேசம் ஊட்டி மகிழ்வை தருவான்
சொல்லும் செயலும் அவனே தருவான்
சொன்னதை செய்யும் அருளும் புரிவான்
தனிமை விலக்கி தாயாய் மலர்வான்
தகமை அளித்து உலகை தருவான்
கண்ணின் ஒளியாய் அவனே இருப்பான்
கடினம் இலகு இரண்டும் தருவான்
தெளிந்து நிமிர தெளிதல் புரிவான்
தெவிட்டா திருக்க தேடுதல் அளிப்பான்
மலர்ந்த அகமது மன்றில் தருவான்
மலரும் சேவை முதலே இடுவான்
மடியும் வரையில் இவனை நினைப்பாய்
மனதில் நின்மதி பெற்று வாழ்வாய் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 17-12-2023
எதிரி நீ புரிந்து விடு
எதிரி நீ புரிந்து விடு
விதி வந்து விளையாடும் போதினில
விதிகள் அவ்வேளை தெரிவதில்லை
சதி வந்து ஒன்றாக கூடையில
சகதி அவ்வேளை புரிவதில்லை
வலி வாங்கி வாழ்வு கசக்கையில
வழி சொன்னார் வாய்கள் சிரிப்பதில்லை
நம்பிட மறுக்கும் சிந்தையால
நாம் சொல்லும் பேறு புரிவதில்லை
செய்யும் முன் ஒன்றை தெரிந்து கொண்டால்
செய் வினை கூட பலிப்பதில்லை
திட்டங்கள் போட்டு நடப்பவரை
திருந்திடின் ஏற்பின் குற்றம் என்பேன்
எப்படி குழிகள் வெட்டினாலும்
எகிறி பாயும் சிந்தை கொண்டால்
வெட்டிய குழியில் அவரை தள்ளு
வெற்றியின் நாயகன் நீயே என்பேன்
எழும் போது பல இடர்கள் வரும்
எதிரிகள் படை சூழ்ந்து வரும்
நகர்வை அறிந்து நகர்ந்து விட்டால்
நாடக மேடை உடைந்து விழும் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 15-12-2023
என் தோழிக்கு இன்று பிறந்த நாள்
என் தோழிக்கு இன்று பிறந்த நாள்
அன்புக்கும் பண்புக்கும் முதலானவள்
அற நெறி போதனை தாயானவள்
வில்லுக்கும் அம்புக்கும் இலக்கானவள்
விடுதலை வேட்கையின் கூரானவள்
சொல்லுக்கும் மொழிக்கும் உயிரானவள்
சொன்னதை செய்கின்ற பொருளானவள்
கல்விக்கு ஆசானாய் மலர்கின்றவள்
கார்த்திகை தீபமாய் எரிகின்றவள்
நெஞ்சுக்கு நெருக்கமாய் நிற்கின்றவள்
நேயத்தை பாடி நடக்கின்றவள்
அன்றெங்கள் பள்ளியில் கற்றவள்
ஆருயிர் தோழியானவள்
இடரா இன்றும் தொடர்பவள்
இதயம் மகிழ மொழிபவள்
அகவை உந்தன் நாளிலே
ஆர தொழுது வாழ்த்துகிறேன் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 10-12-2023
என்னோடு கல்வி கற்று ஆசிரியராக பணிபுரியும் தோழி சத்திய கலா அகவை நாளில் அவரை எண்ணி வடித்த வாழ்த்து பா ..!
என்னை கூட்டி போ
என்னை கூட்டி போ
சின்ன சின்ன ஆசை வந்து
சீக்கிரம் நெஞ்சில் முட்டுறதே
கொஞ்சி பேச நினைக்கையிலே
கோபம் கொண்டு துரத்துறியே
வஞ்சி உந்தன் பேரழகை
வழியில் நிண்டு தரிசிக்கிறேன்
கொஞ்சம் இரக்கம் காட்டாயா
கொள்கை கொஞ்சம் மாற்றாயா
அழைத்தால் பேச மறுக்கிறாய்
அருகில் வந்தால் முறைக்கிறாய்
என்ன செய்தால் இரங்கிடுவாய்
எடுத்து கொஞ்சம் சொல்லாயா
ஆண்டு ஒன்று கழிகையில
அகவை ஒன்று கழிகிறதே
பொல்லு ஊன்றும் காலமதில்
பொக்கை வாயு வேண்டாமே
வீடு வந்த வேளையில
விழியால் பேசி நின்றவளே
அழைத்து போக மாட்டாயா
ஆகமத்தை முடிக்காயா ..?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 09-12-2023
வா
வா ….
முடியும் என்று சொல்ல வா
முடியாது என்று சொல்ல வா
முடியும் என்றே வெல்ல வா
முன்னேற துணிந்து வா
நடக்கும் போது வலிக்கும் வா
நாடே அழைக்குது எழுந்து வா
வீரம் உன்னில் இருக்கு வா
விடுதலை காண ஓடி வா
சாக துணிந்த கூட்டம்
சாதனை படைக்கிற கூட்டம்
வேரை அறுத்து முடங்கு மா
வேங்கை ஓட தயங்கு மா
என்னை படித்து கிழிக்கிற
என்ன எழுதி கிழிக்கிற
உன்னை நம்பி எழுந்து வா
உள்ளம் தூய்மை கொண்டு வா
கொடி கட்டு பறக்கலாம்
கோட்டை வா பிடிக்கலாம்
நடை கட்டு வெல்லலாம்
நாடே நீ ஆழலாம்
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 07-12-2023
கலங்காதே மனமே
கலங்காதே மனமே
ஊரு விட்டு ஊரு வந்தா
உன்னை மறப்பேனா
உள்ளமதில் நின்றாய்
உன்னை எறிவேனா
கண்ணுக்குள்ள நீ இருந்து
காட்சிகளை தினம் கொட்ட
கண்ணு மறந்து தூங்குமா
காதலது தாங்குமா
விண்ணும் மண்ணும் உள்ளவரை
விடயங்களை மறப்பேனா
விரதமதை முடித்து வைத்த
விருந்தோம்பல் மறப்பேனா
எந்தனது நெஞ்சுக்குள்ள
என்றும் நீ ஆலயமே
என்றும் உன்னை மறவேனே
ஏன் மனமே கலங்காதே
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-11-2023
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

இதயம் உன்னை தேடுதே
இதயம் உன்னை தேடுதே
உன்னை எண்ணி பார்க்கையில
உள்ளம் கலங்குமடி
ஊரின் வாசம் தேடையில
உன் நினைவு துரத்துமடி
சின்ன வயதில் நீ இருந்து
சீண்டிய நினைவு பொழியுமடி
அச்சம் இல்லா நீ பொழிந்த
அன்பை தேடுமடி
எதையும் அறியா எனை ஏற்ற
எண்ணம் பிடிக்குதடி – அதை
எண்ணி எண்ணி பார்க்கையில
என் மனம் வியக்குதடி
கள்ளம் இல்லா பேச்சழகும்
கனிந்த மொழி பண்பழகும்
இன்றும் நினைவில் இனிக்குதடி
இதயம் உன்னை தேடுதடி
தரிசா தரை கிடந்தாலும்
தாமரை குளம் போதுமடி
வருடம் பல ஆனாலும்
வளமாய் வயல் செழிக்குமடி
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-11-2023
எமது வைபர் குழுவில் VIDEO காட்சிகள் பார்க்க விரும்புவார்கள் இணைக
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை
- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி
- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு
- யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப்
- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு
பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கொள்கை நாட்டி நடந்தவன்
கொடி நாட்டி தேசம் ஆண்டவன்
வல்வை ஊரில் பிறந்தவன்
வையம் வியந்திட வைத்தவன்
பெரும் சமராடி வென்றவன்
பெரும் தலைவனாகி நின்றவன்
நஞ்சு உடல் தரித்தவன்
நய வஞ்சகத்தால் வீழ்ந்தவன்
ஈழம் கனவய் கொண்டவன்
ஈகம் தந்தே உயர்ந்தவன்
போரில் வெல்ல பயந்தவன்
பொறுக்கி ஒன்றால் வீழ்ந்தவன்
ஆளும் காலம் இல்லை தான்
ஆறா வலிகள் நெஞ்சில் தான்
அகவை உந்தன் நாளிலே
அண்ணா உன்னை வாழ்த்துகிறோம் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-11-2023
வந்து விடு
வந்து விடு
நித்தம் உனக்கு முத்தமிட்டு
நீண்டுறங்க ஆசை
நீ எனக்கு உரித்தானால்
நித்தமிட ஆசை
பத்து திங்கள் ஆக்கி வைத்து
பார்த்துவிட ஆசை
பார் காணும் இரவெல்லாம்
பகலாக்க ஆசை
நெஞ்சுக்குள்ள நீ துடிக்க
நித்தம் என்ன செய்வேன்
காத்திருப்பு போது மடி
கண் மணியே வாடி
போர்வைக்குள்ள நீ இருந்தா – உலக
போரெல்லாம் தோற்குமடி
வேர்வைக்குள்ள நீ குளிக்க
வேண்டுதலும் தீருமடி ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 12-11-2023
இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்
இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்
கத்தி வாய் அழுதாலும்
கை கட்டி நின்றாலும்
பொத்தி வாய் இருந்தாலும்
பொறுக்கலையே பொறுக்கலையே
சத்தி வாய் வயிறோடும்
சாகாத வாயதோடும்
நீள துயர் தோய்ந்து
நீளம் எது போவதுவோ
துடிக்காத இதயமும்
துயர் அறியா பேனையும்
இருந்தென்ன வாழ்ந்தென்ன
இருந்தென்ன வாழ்ந்தென்ன
உலக சட்டத்தின்
உவமானம் இதுவென்றால்
தமிழனுக்கு அவமானம்
தலை குனிகிறேன்
நிறையாத வயிறோடு
நீளம் நடக்கின்ற
கண்ணீர் துளிகளின்
கால் தடம் பாராய்
சொந்த நிலம் பறித்து
சோகத்தை நீயளிக்க
வெந்து நான் பார்க்கவோ
வேதனை சேர்க்கவோ
என் துயரை நீ பார்த்து
ஏளனமாய் சிரி
உன் துயரை நான் பார்த்து
உனக்காய் அழுவேன்
அடங்காத குணத்தோடு
அகிலத்தை ஆள்கின்ற
விளங்காத வாய்களின்
விலாசம் இதுவோ ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 7-11-2023
பலஸ்தீன யுத்தம் அல் அசாத் புயல்; நடவடிக்கையின் பின்னர் அழிக்கப்டும் மக்கள் கண்டு
இன்றைய பாலஸ்தீனம்
இன்றைய பாலஸ்தீனம் ..
மூச்சு விட முடியாது
முண்டியடிக்கும் கூட்டம்
காற்று வரும் திசையறிந்து
கை காட்டி நிற்கிறது
வீச்சு வலை வீசி இஸ்ரேல்
விதமாய் உயிர் குடிக்கிறது
காத்துவிட மாட்டாயா
கரங்கள் தொழுகிறது
பேச்சு இழந்து போக வா
பெரும் கூட்டம் திரள்கிறது
பேர் பெற்ற வல்லரசின்
பெருமை நன்றே தெரிகிறது
வாலாட்டி திரிவதுவோ
வாழ்க்கை சிரிக்கிறது
கோலேற்றி வாழ்ந்து விட
கொள்கை துடிக்கிறது
நாள் ஒன்று கழிகையிலே
நாடி சோர்கிறது
நான் இறந்து போவேனோ
நம்பிக்கை இழக்கிறது
இப்படித்தான் ஊர்கிறது
இன்றைய பாலஸ்தீனம்
இறந்தாலும் அழுது விட
இங்கு இன்னும் தடை தான் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-11-2023
பலஸ்தீன யுத்தம் அல் அசாத் புயல்; நடவடிக்கையின் பின்னர் அழிக்கப்டும் மக்கள் கண்டு
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
நெஞ்சுக்குள் நிற்கின்ற பேரொளி – இவன்
நேயத்தில் வீசிடும் கதிரொளி
அன்பிலே கலங்கிடும் கண்விழி
அஞ்சா பேசிடும் தமிழ் மொழி
கொடை கொட்டியே பொழிந்திடும் பெருமழை
கொடி நாட்டியே எழுந்திட்ட பெருமலை
தடை தாண்டியே ஓடிய பெரும் அலை
தானத்தில் இவனே பெரும் தலை
வானத்தில் ஓடிய பெரும் முகில்
வாடியே வீழ்ந்தான் ஏன் துயில்
ஆழ் மனம் மறக்க மறுக்கிறதே – உன்
அன்பில் நொடிகளும் துடிக்கிறதே
இத்தனை வேகத்தில் ஏன் மறைந்தாய்
இந்த விழிகளில் நீர் ஏன் வைத்தாய்
உச்சத்தில் ஆடிய பெரும் முகில் – இன்று
உருகுதே பார் ஐயா உடல் தீயில்
கத்தியே அழுகிறோம் கண் திறவாய்
கண்ணீரை வந்து நீ துடைப்பாய்
என்றுன்னை இனி நாம் காண்போம்
ஏனோ இறைவா நீ பறித்தாய் ..
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-10-2023
காந்தி மாமா பிரிவின் துயரில் கண்ணீர் சமர்ப்பணம்
( திருவையாறு இரத்தினபுரம்)
உன் நிலை என்ன
உன் நிலை என்ன
சொந்த நிலம் பறிபோக
செந்தமிழன் விலை போக
வெந்து இங்கு வாழ்க
வேதனையில் நோக
மூத்த குடி நாங்கள் என்று
முன்னே பலர் சொன்னார் -அட
மூத்திரம் பெய்துவிட
முன்னே படை காவலா
கோத்திரத்தில் இங்கு உந்தன்
கொள்கை என்னவோ
கொடும் பகைவன் செயல் இழக்கும்
நிலை என்னவோ
மாற்று பகை நகர்வில் உன்
மடை என்னவோ
மறு மலர்ச்சி காண
உன் நிலை என்னவோ ..?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-09-2023
- மீள வருவாயாby நிருபர் காவலன்
- ஒரு நாள் வெல்வேன்by நிருபர் காவலன்
- எப்படி நான் பேசிடுவேன்by நிருபர் காவலன்
- என்னை விடுby நிருபர் காவலன்
- நேரில் வந்து விடுby நிருபர் காவலன்
இன்று போல் என்றும் வாழ்ந்திடு
இன்று போல் என்றும் வாழ்ந்திடு
ஆசானாய் எனக்குள்ளே உறைந்தவன்
ஆழ நெஞ்சுக்குள் குடி கொண்டவன்
தொண்டுக்கு முதலாகி நிற்பவன்
தொழும் படி பணிகளை செய்பவன்
வெற்றிக்கு துணையாகி நின்றவன்
வேங்கைக்கு வேராகி முளைத்தவன்
அன்பிலே குறையாது நடப்பவன்
அன்றாடம் தொடர்பிலே இருப்பவன்
வர்க்கத்தை தெரிந்தே வகுப்பவன்
வழிமாறா பணிகளை சுமப்பவன்
சொர்க்கத்தில் இருப்பதாய் நினைக்கிறன் – இவன்
சொந்தத்தில் ஒருவனாய் இருப்பவன்
ஈழத்தின் பெயர் சூடி நடப்பவன்
ஈகத்தின் தன்மானம் கொண்டவன்
இன்று போல் என்றும் வாழ்ந்திடு
இவ்வையாம் ஆண்டே வென்றிடு ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-08-2023
- மீள வருவாயாby நிருபர் காவலன்
- ஒரு நாள் வெல்வேன்by நிருபர் காவலன்
- எப்படி நான் பேசிடுவேன்by நிருபர் காவலன்
- என்னை விடுby நிருபர் காவலன்
- நேரில் வந்து விடுby நிருபர் காவலன்
- என் உயிரே நான் வெல்வேன்by நிருபர் காவலன்
- என்னை ஏற்று விடுby நிருபர் காவலன்
- என்னை அழைப்பாயாby நிருபர் காவலன்
- அடைத்து வைக்க வாவேண்டிby நிருபர் காவலன்
- கவலைப் படுகிறேன்by நிருபர் காவலன்
உன்னால் துடிக்கிறோம்
உன்னால் துடிக்கிறோம்

உன்னால் துடிக்கிறோம்
துயர் தந்து விழி மூடி எங்கோடினாய் – விழி
துளியாலே நனைந்திட ஏன் வாடினாய்
அன்புக்கும் பண்புக்கும் முதலாகினாய்
அறத்திலே நீயோர் தாயாகினாய்
அன்பிலே நனைகின்ற சேயாகினாய்
அறத்திலே விளைகின்ற பயிராகினாய்
போதனை பொழிகின்ற அருவியானாய்
பொறுமைக்குள் உறைகின்ற பெருமையனாய்
கண்ணுக்குள் ஒளிர்கின்ற ஒளியுமானாய்
கருணையில் நீயோர் தெய்வமானாய்
பெருமைக்கும் உரிமைக்கும் நீயே ஆனாய்
பேறுகள் பேசும் நூலே ஆனாய்
உனக்குள்ளே எத்தனை ஆற்றல் கண்டேன்
உன் சுயசரிதை நூலால் நானே மிரண்டேன்
வழிகளை சொல்கின்ற துணிவு கொண்டாய் -எவர்க்கும்
வளையாத எழுதிடும் பெருமை கொண்டாய்
உன்னை தினம் நான் படிக்கையிலே
உள்ளத்தில் உயர்வான ஆற்றல் கொண்டேன்
உன் உடல் நான் வந்து பார்க்கையிலே
உதடு சிரித்து எனை அழைத்தாய்
சிந்தை இழந்தேன் சில நிமிடம் – நீ
சிகரமே உணர்ந்தேன் அவ் நிமிடம்
உனக்கும் எனக்குள்ள உறவாடல் -இந்த
உலகத்தில் எழுதாத புது பாடல்
உன்னாலே துயராகி வாடுகிறோம்
ஊன் உருகி நித்தம் தேய்கிறோம்
என்றுன்னை இனி நாம் காண்போம்
ஏங்கியே ஏங்கியே தவிக்கிறோம் ..!
சண்முக பெரியப்பா துயர் பிரிவில் ,
அவர்க்கு என் கண்ணீர் சமர்ப்பணம் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-07-2023
- மீள வருவாயா
by நிருபர் காவலன் - ஒரு நாள் வெல்வேன்
by நிருபர் காவலன் - எப்படி நான் பேசிடுவேன்
by நிருபர் காவலன் - என்னை விடு
by நிருபர் காவலன் - நேரில் வந்து விடு
by நிருபர் காவலன் - என் உயிரே நான் வெல்வேன்
by நிருபர் காவலன் - என்னை ஏற்று விடு
by நிருபர் காவலன் - என்னை அழைப்பாயா
by நிருபர் காவலன் - அடைத்து வைக்க வாவேண்டி
by நிருபர் காவலன் - கவலைப் படுகிறேன்
by நிருபர் காவலன் - யார் மேல் குற்றம்
by நிருபர் காவலன் - காதலே சோகமா
by நிருபர் காவலன் - கண்டதெல்லாம் கனவு
by நிருபர் காவலன் - ஏமார்ந்த காதல்
by நிருபர் காவலன் - அர்ச்சுனா ஆவி பேசிறது
by நிருபர் காவலன்
மகிழ்வாய் இருக்க விழித்து கொள்
மகிழ்வாய் இருக்க விழித்து கொள்
நீளும் இந்த இரவுக்குள்ளே
நினைவுகளை பகிர்வோமா
நீண்ட நாள் ஆசைகளை
நின்று கொஞ்சம் ருசிப்போமா
நாம் கண்ட கனவுகளை
நலமுடனே காண்போமா
நாள் எல்லாம் மகிழ்ந்திடவே
நலமோடு வாழ்வோமா
அசிங்கத்தில் பிறந்தோமே
அதை இன்று மறந்தோமே
ஆனாலும் நல்லவராய்
அகிலத்தில் உரைத்தோமே
சிந்தனையை சிறைவைத்து
சிகரத்தில் இருந்தோமே
சிறை உடைத்து பறந்திடவே
சிறகு இரண்டு தரிப்போமே
படைத்தவனோ வாழ்வினில
பாதி வாழ்வை சிறை வைத்தான்
பட்டு துயர் கழியு முன்னே
பாவி நாம் மூப்பானோம்
எது வரைக்கும் இத் துயரை
ஏற்று நாம் பயணிப்போம்
இன்றே நாம் விழித்து விட்டால்
இத்துயரில் நாம் எழுவோம் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-05-2023
இறைவனை தேடு
இறைவனை தேடு
ஏழை சொல்லு ஏறாதடா – வலி
எவருக்கும் புரியாதடா
பார்த்து பார்த்து சிரிப்பாங்க
பல் இழித்து நகைப்பாங்க
விட்டு தள்ளடா – காலம்
விரைவில் வெற்றி பகிருமடா
நீயும் நானும் ஒன்னடா
நீர் விழியில் இல்லைடா
மனிதனை புரிஞ்சிக்க
மன்றில் நாடகம் நடக்குதடா
மாளிகையில் வாழும் போது
மனிதர் மட்டும் வையடா
சுய நல உலகத்தில
சூரியனும் உதிக்குதடா
சூடும் குளிரும்
சுழற்சியில் பகிருதடா
கால நிலை தான் வாழ்க்கை
கற்று தெரிந்தால் விடு செருக்கை
நீயும் நானும் மனிதனா
நின்மதி இப்போ இருக்கா
பதில் இல்லா அலைந்தாயே
படைத்தவன் தெளிய வைத்தேனே
இன்று என்ன செய்வாய்
இறைவனை தேடு இறைவனை தேடு .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 19-05-2023
கலங்காதே ஓடு
கலங்காதே ஓடு
ஏது செய்தாய் என்று இல்லை
எதையும் செய்யடா
எழுந்து வர வேண்டும் என்றால்
ஏற்று செய்யடா
போகும் பாதை பள்ளம் தான்
பொறுத்து கொள்ளடா
பொற்காலம் அமைக்க
போராடு சோராதடா
இழிந்தவர் இழியட்டும்
இன்றே விட்டு தள்ளடா
இன்றே உன்னை நம்பு
இறைவன் தருவான் தென்பு
சிந்தை கொஞ்சம் செதுக்கி
சிகரம் ஏறடா
அறியா விடயங்களை
அறிந்து கொள்ள முனையடா
பாதை வரும் தன்னால
பகை ஓடும் முன்னால
சோராத சோராத போராடு
சோற்றுக்காய் இப்போ ஓடு
நாளை உன்னை பாரும் வணங்கும்
நகலடித்து உனை பாடும்
இது தாண்டா வளர்ச்சி – பாரு
இன்று பெற்றாய் புகழ்ச்சி .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-05-2023
காதல் செய்வோம் வா|காதல் கவிதைகள் |காதல் சோக கவிதை
காதல் செய்வோம் வா|காதல் கவிதைகள் |காதல் சோக கவிதை






































































