ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம்


ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம்

ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம் ,
சிக்கலில் ஆளும் அரசு

குஞ்சப்பு பேச்சில
குலுங்கி சிரிக்கிற
மக்கள் கருத்தில
மனம் குளிருது

வீடியோ

இறுதிவரை இவனே துணை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இறுதிவரை இவனே துணை

இறுதிவரை இவனே துணை

கருணை கொள்வான் கடவுளை நம்பு
காலை மாலை அவனை வணங்கு
நெஞ்சின் நெருடல் வருடி எறிவான்
நேசம் ஊட்டி மகிழ்வை தருவான்

சொல்லும் செயலும் அவனே தருவான்
சொன்னதை செய்யும் அருளும் புரிவான்
தனிமை விலக்கி தாயாய் மலர்வான்
தகமை அளித்து உலகை தருவான்

கண்ணின் ஒளியாய் அவனே இருப்பான்
கடினம் இலகு இரண்டும் தருவான்
தெளிந்து நிமிர தெளிதல் புரிவான்
தெவிட்டா திருக்க தேடுதல் அளிப்பான்

மலர்ந்த அகமது மன்றில் தருவான்
மலரும் சேவை முதலே இடுவான்
மடியும் வரையில் இவனை நினைப்பாய்
மனதில் நின்மதி பெற்று வாழ்வாய் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 17-12-2023

எதிரி நீ புரிந்து விடு
Posted in எதிரி நியூஸ் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எதிரி நீ புரிந்து விடு

எதிரி நீ புரிந்து விடு

விதி வந்து விளையாடும் போதினில
விதிகள் அவ்வேளை தெரிவதில்லை
சதி வந்து ஒன்றாக கூடையில
சகதி அவ்வேளை புரிவதில்லை

வலி வாங்கி வாழ்வு கசக்கையில
வழி சொன்னார் வாய்கள் சிரிப்பதில்லை
நம்பிட மறுக்கும் சிந்தையால
நாம் சொல்லும் பேறு புரிவதில்லை

செய்யும் முன் ஒன்றை தெரிந்து கொண்டால்
செய் வினை கூட பலிப்பதில்லை
திட்டங்கள் போட்டு நடப்பவரை
திருந்திடின் ஏற்பின் குற்றம் என்பேன்

எப்படி குழிகள் வெட்டினாலும்
எகிறி பாயும் சிந்தை கொண்டால்
வெட்டிய குழியில் அவரை தள்ளு
வெற்றியின் நாயகன் நீயே என்பேன்

எழும் போது பல இடர்கள் வரும்
எதிரிகள் படை சூழ்ந்து வரும்
நகர்வை அறிந்து நகர்ந்து விட்டால்
நாடக மேடை உடைந்து விழும் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 15-12-2023

என் தோழிக்கு இன்று பிறந்த நாள்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என் தோழிக்கு இன்று பிறந்த நாள்

என் தோழிக்கு இன்று பிறந்த நாள்

அன்புக்கும் பண்புக்கும் முதலானவள்
அற நெறி போதனை தாயானவள்
வில்லுக்கும் அம்புக்கும் இலக்கானவள்
விடுதலை வேட்கையின் கூரானவள்

சொல்லுக்கும் மொழிக்கும் உயிரானவள்
சொன்னதை செய்கின்ற பொருளானவள்
கல்விக்கு ஆசானாய் மலர்கின்றவள்
கார்த்திகை தீபமாய் எரிகின்றவள்

நெஞ்சுக்கு நெருக்கமாய் நிற்கின்றவள்
நேயத்தை பாடி நடக்கின்றவள்
அன்றெங்கள் பள்ளியில் கற்றவள்
ஆருயிர் தோழியானவள்

இடரா இன்றும் தொடர்பவள்
இதயம் மகிழ மொழிபவள்
அகவை உந்தன் நாளிலே
ஆர தொழுது வாழ்த்துகிறேன் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 10-12-2023

என்னோடு கல்வி கற்று ஆசிரியராக பணிபுரியும் தோழி சத்திய கலா அகவை நாளில் அவரை எண்ணி வடித்த வாழ்த்து பா ..!

என்னை கூட்டி போ
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை கூட்டி போ

என்னை கூட்டி போ

சின்ன சின்ன ஆசை வந்து
சீக்கிரம் நெஞ்சில் முட்டுறதே
கொஞ்சி பேச நினைக்கையிலே
கோபம் கொண்டு துரத்துறியே

வஞ்சி உந்தன் பேரழகை
வழியில் நிண்டு தரிசிக்கிறேன்
கொஞ்சம் இரக்கம் காட்டாயா
கொள்கை கொஞ்சம் மாற்றாயா

அழைத்தால் பேச மறுக்கிறாய்
அருகில் வந்தால் முறைக்கிறாய்
என்ன செய்தால் இரங்கிடுவாய்
எடுத்து கொஞ்சம் சொல்லாயா

ஆண்டு ஒன்று கழிகையில
அகவை ஒன்று கழிகிறதே
பொல்லு ஊன்றும் காலமதில்
பொக்கை வாயு வேண்டாமே

வீடு வந்த வேளையில
விழியால் பேசி நின்றவளே
அழைத்து போக மாட்டாயா
ஆகமத்தை முடிக்காயா ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 09-12-2023

வீடியோ

வா
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

வா

வா ….

முடியும் என்று சொல்ல வா
முடியாது என்று சொல்ல வா
முடியும் என்றே வெல்ல வா
முன்னேற துணிந்து வா

நடக்கும் போது வலிக்கும் வா
நாடே அழைக்குது எழுந்து வா
வீரம் உன்னில் இருக்கு வா
விடுதலை காண ஓடி வா

சாக துணிந்த கூட்டம்
சாதனை படைக்கிற கூட்டம்
வேரை அறுத்து முடங்கு மா
வேங்கை ஓட தயங்கு மா

என்னை படித்து கிழிக்கிற
என்ன எழுதி கிழிக்கிற
உன்னை நம்பி எழுந்து வா
உள்ளம் தூய்மை கொண்டு வா

கொடி கட்டு பறக்கலாம்
கோட்டை வா பிடிக்கலாம்
நடை கட்டு வெல்லலாம்
நாடே நீ ஆழலாம்

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 07-12-2023

கலங்காதே மனமே
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கலங்காதே மனமே

கலங்காதே மனமே

ஊரு விட்டு ஊரு வந்தா
உன்னை மறப்பேனா
உள்ளமதில் நின்றாய்
உன்னை எறிவேனா

கண்ணுக்குள்ள நீ இருந்து
காட்சிகளை தினம் கொட்ட
கண்ணு மறந்து தூங்குமா
காதலது தாங்குமா

விண்ணும் மண்ணும் உள்ளவரை
விடயங்களை மறப்பேனா
விரதமதை முடித்து வைத்த
விருந்தோம்பல் மறப்பேனா

எந்தனது நெஞ்சுக்குள்ள
என்றும் நீ ஆலயமே
என்றும் உன்னை மறவேனே
ஏன் மனமே கலங்காதே

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-11-2023

இதயம் உன்னை தேடுதே
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இதயம் உன்னை தேடுதே

இதயம் உன்னை தேடுதே

உன்னை எண்ணி பார்க்கையில
உள்ளம் கலங்குமடி
ஊரின் வாசம் தேடையில
உன் நினைவு துரத்துமடி

சின்ன வயதில் நீ இருந்து
சீண்டிய நினைவு பொழியுமடி
அச்சம் இல்லா நீ பொழிந்த
அன்பை தேடுமடி

எதையும் அறியா எனை ஏற்ற
எண்ணம் பிடிக்குதடி – அதை
எண்ணி எண்ணி பார்க்கையில
என் மனம் வியக்குதடி

கள்ளம் இல்லா பேச்சழகும்
கனிந்த மொழி பண்பழகும்
இன்றும் நினைவில் இனிக்குதடி
இதயம் உன்னை தேடுதடி

தரிசா தரை கிடந்தாலும்
தாமரை குளம் போதுமடி
வருடம் பல ஆனாலும்
வளமாய் வயல் செழிக்குமடி

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-11-2023

எமது வைபர் குழுவில் VIDEO காட்சிகள் பார்க்க விரும்புவார்கள் இணைக

பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கொள்கை நாட்டி நடந்தவன்
கொடி நாட்டி தேசம் ஆண்டவன்
வல்வை ஊரில் பிறந்தவன்
வையம் வியந்திட வைத்தவன்

பெரும் சமராடி வென்றவன்
பெரும் தலைவனாகி நின்றவன்
நஞ்சு உடல் தரித்தவன்
நய வஞ்சகத்தால் வீழ்ந்தவன்

ஈழம் கனவய் கொண்டவன்
ஈகம் தந்தே உயர்ந்தவன்
போரில் வெல்ல பயந்தவன்
பொறுக்கி ஒன்றால் வீழ்ந்தவன்

ஆளும் காலம் இல்லை தான்
ஆறா வலிகள் நெஞ்சில் தான்
அகவை உந்தன் நாளிலே
அண்ணா உன்னை வாழ்த்துகிறோம் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-11-2023

வந்து விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வந்து விடு

வந்து விடு

நித்தம் உனக்கு முத்தமிட்டு
நீண்டுறங்க ஆசை
நீ எனக்கு உரித்தானால்
நித்தமிட ஆசை

பத்து திங்கள் ஆக்கி வைத்து
பார்த்துவிட ஆசை
பார் காணும் இரவெல்லாம்
பகலாக்க ஆசை

நெஞ்சுக்குள்ள நீ துடிக்க
நித்தம் என்ன செய்வேன்
காத்திருப்பு போது மடி
கண் மணியே வாடி

போர்வைக்குள்ள நீ இருந்தா – உலக
போரெல்லாம் தோற்குமடி
வேர்வைக்குள்ள நீ குளிக்க
வேண்டுதலும் தீருமடி ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 12-11-2023

இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்

இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்

கத்தி வாய் அழுதாலும்
கை கட்டி நின்றாலும்
பொத்தி வாய் இருந்தாலும்
பொறுக்கலையே பொறுக்கலையே

சத்தி வாய் வயிறோடும்
சாகாத வாயதோடும்
நீள துயர் தோய்ந்து
நீளம் எது போவதுவோ

துடிக்காத இதயமும்
துயர் அறியா பேனையும்
இருந்தென்ன வாழ்ந்தென்ன
இருந்தென்ன வாழ்ந்தென்ன

உலக சட்டத்தின்
உவமானம் இதுவென்றால்
தமிழனுக்கு அவமானம்
தலை குனிகிறேன்

நிறையாத வயிறோடு
நீளம் நடக்கின்ற
கண்ணீர் துளிகளின்
கால் தடம் பாராய்

சொந்த நிலம் பறித்து
சோகத்தை நீயளிக்க
வெந்து நான் பார்க்கவோ
வேதனை சேர்க்கவோ

என் துயரை நீ பார்த்து
ஏளனமாய் சிரி
உன் துயரை நான் பார்த்து
உனக்காய் அழுவேன்

அடங்காத குணத்தோடு
அகிலத்தை ஆள்கின்ற
விளங்காத வாய்களின்
விலாசம் இதுவோ ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 7-11-2023

பலஸ்தீன யுத்தம் அல் அசாத் புயல்; நடவடிக்கையின் பின்னர் அழிக்கப்டும் மக்கள் கண்டு

இன்றைய பாலஸ்தீனம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இன்றைய பாலஸ்தீனம்

இன்றைய பாலஸ்தீனம் ..

மூச்சு விட முடியாது
முண்டியடிக்கும் கூட்டம்
காற்று வரும் திசையறிந்து
கை காட்டி நிற்கிறது

வீச்சு வலை வீசி இஸ்ரேல்
விதமாய் உயிர் குடிக்கிறது
காத்துவிட மாட்டாயா
கரங்கள் தொழுகிறது

பேச்சு இழந்து போக வா
பெரும் கூட்டம் திரள்கிறது
பேர் பெற்ற வல்லரசின்
பெருமை நன்றே தெரிகிறது

வாலாட்டி திரிவதுவோ
வாழ்க்கை சிரிக்கிறது
கோலேற்றி வாழ்ந்து விட
கொள்கை துடிக்கிறது

நாள் ஒன்று கழிகையிலே
நாடி சோர்கிறது
நான் இறந்து போவேனோ
நம்பிக்கை இழக்கிறது

இப்படித்தான் ஊர்கிறது
இன்றைய பாலஸ்தீனம்
இறந்தாலும் அழுது விட
இங்கு இன்னும் தடை தான் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-11-2023

பலஸ்தீன யுத்தம் அல் அசாத் புயல்; நடவடிக்கையின் பின்னர் அழிக்கப்டும் மக்கள் கண்டு

வீடியோ

கண்ணீர் அஞ்சலி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

நெஞ்சுக்குள் நிற்கின்ற பேரொளி – இவன்
நேயத்தில் வீசிடும் கதிரொளி
அன்பிலே கலங்கிடும் கண்விழி
அஞ்சா பேசிடும் தமிழ் மொழி

கொடை கொட்டியே பொழிந்திடும் பெருமழை
கொடி நாட்டியே எழுந்திட்ட பெருமலை
தடை தாண்டியே ஓடிய பெரும் அலை
தானத்தில் இவனே பெரும் தலை

வானத்தில் ஓடிய பெரும் முகில்
வாடியே வீழ்ந்தான் ஏன் துயில்
ஆழ் மனம் மறக்க மறுக்கிறதே – உன்
அன்பில் நொடிகளும் துடிக்கிறதே

இத்தனை வேகத்தில் ஏன் மறைந்தாய்
இந்த விழிகளில் நீர் ஏன் வைத்தாய்
உச்சத்தில் ஆடிய பெரும் முகில் – இன்று
உருகுதே பார் ஐயா உடல் தீயில்

கத்தியே அழுகிறோம் கண் திறவாய்
கண்ணீரை வந்து நீ துடைப்பாய்
என்றுன்னை இனி நாம் காண்போம்
ஏனோ இறைவா நீ பறித்தாய் ..

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-10-2023
காந்தி மாமா பிரிவின் துயரில் கண்ணீர் சமர்ப்பணம்
( திருவையாறு இரத்தினபுரம்)

உன் நிலை என்ன
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன் நிலை என்ன

உன் நிலை என்ன

சொந்த நிலம் பறிபோக
செந்தமிழன் விலை போக
வெந்து இங்கு வாழ்க
வேதனையில் நோக

மூத்த குடி நாங்கள் என்று
முன்னே பலர் சொன்னார் -அட
மூத்திரம் பெய்துவிட
முன்னே படை காவலா

கோத்திரத்தில் இங்கு உந்தன்
கொள்கை என்னவோ
கொடும் பகைவன் செயல் இழக்கும்
நிலை என்னவோ

மாற்று பகை நகர்வில் உன்
மடை என்னவோ
மறு மலர்ச்சி காண
உன் நிலை என்னவோ ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-09-2023

இன்று போல் என்றும் வாழ்ந்திடு
Posted in பிறந்த நாள் வாழ்த்துக்கள் வன்னி மைந்தன் கவிதைகள்

இன்று போல் என்றும் வாழ்ந்திடு

இன்று போல் என்றும் வாழ்ந்திடு

ஆசானாய் எனக்குள்ளே உறைந்தவன்
ஆழ நெஞ்சுக்குள் குடி கொண்டவன்
தொண்டுக்கு முதலாகி நிற்பவன்
தொழும் படி பணிகளை செய்பவன்

வெற்றிக்கு துணையாகி நின்றவன்
வேங்கைக்கு வேராகி முளைத்தவன்
அன்பிலே குறையாது நடப்பவன்
அன்றாடம் தொடர்பிலே இருப்பவன்

வர்க்கத்தை தெரிந்தே வகுப்பவன்
வழிமாறா பணிகளை சுமப்பவன்
சொர்க்கத்தில் இருப்பதாய் நினைக்கிறன் – இவன்
சொந்தத்தில் ஒருவனாய் இருப்பவன்

ஈழத்தின் பெயர் சூடி நடப்பவன்
ஈகத்தின் தன்மானம் கொண்டவன்
இன்று போல் என்றும் வாழ்ந்திடு
இவ்வையாம் ஆண்டே வென்றிடு ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-08-2023

உன்னால் துடிக்கிறோம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் துடிக்கிறோம்

உன்னால் துடிக்கிறோம்

உன்னால் துடிக்கிறோம்

உன்னால் துடிக்கிறோம்

துயர் தந்து விழி மூடி எங்கோடினாய் – விழி
துளியாலே நனைந்திட ஏன் வாடினாய்
அன்புக்கும் பண்புக்கும் முதலாகினாய்
அறத்திலே நீயோர் தாயாகினாய்

அன்பிலே நனைகின்ற சேயாகினாய்
அறத்திலே விளைகின்ற பயிராகினாய்
போதனை பொழிகின்ற அருவியானாய்
பொறுமைக்குள் உறைகின்ற பெருமையனாய்

கண்ணுக்குள் ஒளிர்கின்ற ஒளியுமானாய்
கருணையில் நீயோர் தெய்வமானாய்
பெருமைக்கும் உரிமைக்கும் நீயே ஆனாய்
பேறுகள் பேசும் நூலே ஆனாய்

உனக்குள்ளே எத்தனை ஆற்றல் கண்டேன்
உன் சுயசரிதை நூலால் நானே மிரண்டேன்
வழிகளை சொல்கின்ற துணிவு கொண்டாய் -எவர்க்கும்
வளையாத எழுதிடும் பெருமை கொண்டாய்

உன்னை தினம் நான் படிக்கையிலே
உள்ளத்தில் உயர்வான ஆற்றல் கொண்டேன்
உன் உடல் நான் வந்து பார்க்கையிலே
உதடு சிரித்து எனை அழைத்தாய்

சிந்தை இழந்தேன் சில நிமிடம் – நீ
சிகரமே உணர்ந்தேன் அவ் நிமிடம்
உனக்கும் எனக்குள்ள உறவாடல் -இந்த
உலகத்தில் எழுதாத புது பாடல்

உன்னாலே துயராகி வாடுகிறோம்
ஊன் உருகி நித்தம் தேய்கிறோம்
என்றுன்னை இனி நாம் காண்போம்
ஏங்கியே ஏங்கியே தவிக்கிறோம் ..!

சண்முக பெரியப்பா துயர் பிரிவில் ,
அவர்க்கு என் கண்ணீர் சமர்ப்பணம் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-07-2023

மகிழ்வாய் இருக்க விழித்து கொள்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

மகிழ்வாய் இருக்க விழித்து கொள்

மகிழ்வாய் இருக்க விழித்து கொள்

நீளும் இந்த இரவுக்குள்ளே
நினைவுகளை பகிர்வோமா
நீண்ட நாள் ஆசைகளை
நின்று கொஞ்சம் ருசிப்போமா

நாம் கண்ட கனவுகளை
நலமுடனே காண்போமா
நாள் எல்லாம் மகிழ்ந்திடவே
நலமோடு வாழ்வோமா

அசிங்கத்தில் பிறந்தோமே
அதை இன்று மறந்தோமே
ஆனாலும் நல்லவராய்
அகிலத்தில் உரைத்தோமே

சிந்தனையை சிறைவைத்து
சிகரத்தில் இருந்தோமே
சிறை உடைத்து பறந்திடவே
சிறகு இரண்டு தரிப்போமே

படைத்தவனோ வாழ்வினில
பாதி வாழ்வை சிறை வைத்தான்
பட்டு துயர் கழியு முன்னே
பாவி நாம் மூப்பானோம்

எது வரைக்கும் இத் துயரை
ஏற்று நாம் பயணிப்போம்
இன்றே நாம் விழித்து விட்டால்
இத்துயரில் நாம் எழுவோம் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-05-2023

இறைவனை தேடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இறைவனை தேடு

இறைவனை தேடு

ஏழை சொல்லு ஏறாதடா – வலி
எவருக்கும் புரியாதடா
பார்த்து பார்த்து சிரிப்பாங்க
பல் இழித்து நகைப்பாங்க

விட்டு தள்ளடா – காலம்
விரைவில் வெற்றி பகிருமடா
நீயும் நானும் ஒன்னடா
நீர் விழியில் இல்லைடா

மனிதனை புரிஞ்சிக்க
மன்றில் நாடகம் நடக்குதடா
மாளிகையில் வாழும் போது
மனிதர் மட்டும் வையடா

சுய நல உலகத்தில
சூரியனும் உதிக்குதடா
சூடும் குளிரும்
சுழற்சியில் பகிருதடா

கால நிலை தான் வாழ்க்கை
கற்று தெரிந்தால் விடு செருக்கை
நீயும் நானும் மனிதனா
நின்மதி இப்போ இருக்கா

பதில் இல்லா அலைந்தாயே
படைத்தவன் தெளிய வைத்தேனே
இன்று என்ன செய்வாய்
இறைவனை தேடு இறைவனை தேடு .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 19-05-2023

கலங்காதே ஓடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கலங்காதே ஓடு

கலங்காதே ஓடு

ஏது செய்தாய் என்று இல்லை
எதையும் செய்யடா
எழுந்து வர வேண்டும் என்றால்
ஏற்று செய்யடா

போகும் பாதை பள்ளம் தான்
பொறுத்து கொள்ளடா
பொற்காலம் அமைக்க
போராடு சோராதடா

இழிந்தவர் இழியட்டும்
இன்றே விட்டு தள்ளடா
இன்றே உன்னை நம்பு
இறைவன் தருவான் தென்பு

சிந்தை கொஞ்சம் செதுக்கி
சிகரம் ஏறடா
அறியா விடயங்களை
அறிந்து கொள்ள முனையடா

பாதை வரும் தன்னால
பகை ஓடும் முன்னால
சோராத சோராத போராடு
சோற்றுக்காய் இப்போ ஓடு

நாளை உன்னை பாரும் வணங்கும்
நகலடித்து உனை பாடும்
இது தாண்டா வளர்ச்சி – பாரு
இன்று பெற்றாய் புகழ்ச்சி .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-05-2023

காதல் செய்வோம் வா|காதல் கவிதைகள் |காதல் சோக கவிதை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

காதல் செய்வோம் வா|காதல் கவிதைகள் |காதல் சோக கவிதை

காதல் செய்வோம் வா|காதல் கவிதைகள் |காதல் சோக கவிதை

https://www.youtube.com/watch?v=I-zyD3gKCs4