Category: வன்னி மைந்தன் கவிதைகள்
வன்னி மைந்தன் கவிதைகள் , காதல் கவிதைகள் வன்னி மைந்தன் ,மனித உணர்வின் பிரதியாக நடைமுறை வாழ்வியலில் ஒன்றாக கலந்துள்ளது .
கண்ணீர் துடை வெல்வாய் |சோக கவிதைகள் | காதல் சோக கவிதை
கண்ணீர் துடை வெல்வாய் |சோக கவிதைகள் | காதல் சோக கவிதை
காதல் நீயே புனிதம்|காதல் கவிதை|வன்னி மைந்தன் கவிதை |tamil kavithai|tamil kavithaikal
காதல் நீயே புனிதம்|காதல் கவிதை|வன்னி மைந்தன் கவிதை |tamil kavithai|tamil kavithaikal
வாழ்வோம் வா
வாழ்வோம் வா .
நாளும் உன்னை தேடி
நானும் நடக்கிறேன்
நயாகரா அருவியாக
நாளும் துடிக்கிறேன் .
வாழ்வோம் வா click here full video
என்னோடு வா
என்னோடு வா
மீசை வைத்த ஆணழகா
மின்னுகிறாய் நாயகனா
கன்ன குழி சிரிக்குதே
காதல் மழை பொழியுதே
வீசும் காற்றாய் ஆட வா
வீணே வந்து மோத வா
சந்தம் பாடும் வீணையாய்
சாதனை பாடி போக வா
நினை வெல்லாம் நீயாகி
நீள்கிறாய் கொடியாகி
முளை விடும் பயிராகி
முன்னே வாராய் உயிராகி
தெருவோர மின் விளக்காய்
தினம் ஏனோ நனைகிறாய்
குடை பிடிக்க நான் வர வா
கூடியே வாழ்வோமா
நடை போடும் கால் இரண்டு
நமக்கு துணையல்லவா
நம் ஆசை தீர
நாம் இருவர் இணைவோமா ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 07-05-2023
யாரிடமும் சொல்லிடாதே
யாரிடமும் சொல்லிடாதே
உழுது புரட்டி வயலில
உழவடிக்க வர வா
உரமிட்டு பயிர் எழவே
உயிர் கொடுத்து விட வா
கால நேரம் நீரிறைத்து
கவனித்து விட வா
களை பிடுங்கி கதிர் எழவே
கனியாக்கி தர வா
மண்டையில மிதி மிதித்து
மணி பிடுங்கி தர வா
மாளிகையில் வாய் சுவைக்க
மணி அரசி தர வா
உயிர் பிடிக்க நான் உழுது
உரம் இட்டேன் பாராய்
உயிர் உள்ளவரை நீயிந்த
உண்மை என்றும் மறவாய் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-05-2023
உன்னால் துடிக்கும் இதயம்
உன்னால் துடிக்கும் இதயம்
எழுதாத காகிதத்தில்
எழுதி வைத்த நினைவுகளை
எடுத்து படிக்கையில
ஏங்கி மனம் துடிக்குதே
புதைத்து வைத்த ஆசைகளை
புரட்டி எடுத்து பார்க்கையில
கண்ணீர் மட்டும் பரிசாச்சே
கல்லாகி மனம் போச்சே
தோகை மயில் ஆடையில-உன்
தொங்கும் கூந்தல் தெரியுமடி
பாடி குயில் போகையில – உன்
பாட்டு ஒலிக்குமடி
எனெக்கெனவே நீ ஆக்கி
எடுத்து வந்த உணவுகளோ
இன்று நினைத்தாலும் ருசிக்குதடி
இன்றும் மனம் தேடுதடி
கை பேசி இல்லா காலத்தில – உன்
கை வரைந்த கடிதங்களை
தூசி தட்டி படித்தே
தூரிகையால் வரைகிறேன்
தொலையாமல் நெஞ்சுக்குள்
தொல்லை தருகிறாய்
தொடர்பு இன்றி பிரிந்தாலும் – தினமுனை
தொட்டு தொட்டே பேசுகிறேன் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-04-2023
என் ஆசை நிறைவேறுமா ….?
என் ஆசை நிறைவேறுமா ….?
ஈழ மண்ணில் கால் பதிக்க
இதயம் துடிக்கிறதே
இயலா நிலையால் இன்று
இதயம் கொதிக்கிறதே
நான் வாழ்ந்த வீட்டினில
நாலு நொடி உறங்கேனோ
நான் வளர்ந்த அயலுடனே
நாலு மொழி பேசேனோ
கனவுகளை நெஞ்சடக்கி
கண்ணீரில் துடிக்கிறேன்
கால் பதிக்கும் நாள் வருமா
கடவுளிடம் கேட்கிறேன்
கொள்ளை தரும் அழகுடனும்
கொஞ்சி விளையாடும் காற்றுடனும்
கொஞ்ச நேரம் விளையாட
கொஞ்சும் காலம் வருமா
நெஞ்சுக்குள் உள்ளாருடன்
நெருங்கி உறவாட
நினைவுகளை தரை இறக்கி
நிமிர்ந்து உரையாட
காலம் ஒன்று வருமா
கண்ணீர் துயர் தீருமா
கல்லறை உறங்கு முன்னே – அக்
காலம் மிளிருமா …?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 29-04-2023
வெங்காயம்
வெங்காயம்
சந்தைக்கு செல்லும் வெங்காயமா – நீ
சமையல் கட்டின் அலங்காரமா
இன்றைக்கும் நாளைக்கும் நீ விருந்தா
இளம் சூடடில் வெதுங்கும் கேவலமா
உன்னை தொட்டால் அழுகை வரும்
உரிக்க உரிக்க போர்வை வரும்
பக்கம் வர மேனி நடுங்கும்
படையலிலே நீ முதல் வலம்
நீ இல்லா சமையல் ஏதுண்டோ
நீர் வடியா கண்கள் ஏதுண்டோ
வாய் சுவைக்கு முதல் நீ ரகமே
வாழ்வோடு இணைந்த முதல் மணமே
கொண்டை வைத்து நீ சிரிச்சா
கோடிகள் கோடிதேடி வரும்
உரி ஏற்றி உனை வைத்தால்
உலகோடி தேடி வரும்
பண்பாக உன்னை வளர்த்தால்
பாசத்தை என்றும் தருவாய்
தெம்பாக உறவு ஒங்க
தெவிட்டா பலம் இடுவாய் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 28-04-2023
உன்னால் அழுகிறேன்
உன்னால் அழுகிறேன் ..
உன்னை பாட தான்
உயிராய் நினைக்கிறேன்
உள்ளம் அழுவதால்
உயிரோடே வாடுகிறேன்
நினைவுகளை தந்து விட்டு
நீ எங்கே போனாய்
நான் மட்டும் அழுவதற்காய்
நாட்களை ஏன் படைத்தாய்
ஒன்றான நாட்களில்
ஒருமையான காலங்கள்
இன்று நினைத்தாலும்
இதயம் கனக்கிறதே
ஏன் நினைத்தேன் நான் அன்று
எனை பிரிவாய் நீ என்று
ஏன் எனை எறிந்தாய்
எதற்காய் என்னை தண்டித்தாய்
கடந்த நாள் ஒன்றில் – உன்
கடப்பை கடக்கையில
தேம்பி தேம்பி அழுதேனே
தெருவெல்லாம் நனைத்தேனே …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-04-2023
இசைக்கு இன்று பிறந்த நாள்
இசைக்கு இன்று பிறந்த நாள்
ஈழம் வாழ எங்களுக்கு
இசை பாடினான்
இறுதி வரை எங்களுக்காய்
உயிர் ஆகினான்
மூச்சடங்கும் வரை எமக்காய்
முன் நிற்பவன்
முன்னே பல தடை வந்தும்
முயல் போல பாய்பவன்
ஆழம் மரமாகி எமக்கு
நிழல் தந்தவன்
அண்ணனவன் அருகிருந்து
ஆசி பெற்றவன்
ஈழம் ஆளும் பொழுது
என்னை ஏற்றவன்
இசை பாடி எனக்கு
உயிர் கொடுத்தவன்
மாலை போட்டு என்னை
மனம் தரித்தவன் -செல்லப்பா
அறம் பலகூறி என்னை
ஆளாக்கி வைத்தவன்
இன்று உந்தன் நாளிலே
இதயமதால் பாடுகிறேன்
இன்று போல என்றும் வாழ
இறைவனிடம் வேண்டுகிறேன் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-04-2023
தமிழீழ தேசிய பாடகர் மாமனிதர் தேனிசை செல்லப்பா ஐயா பிறந்த நாள் வாழ்த்து பா
ஏன் அழுகிறாய்
ஏன் அழுகிறாய்
துணிவு கொண்ட மனிதா – நீ
துளி துளியாய் அழுவதா
இடை வந்த வறுமையால்
இதயம் உடைந்து மாழ்வதா
கவலை இன்று துரத்து
காலில் வேகம் ஏத்து
தெளிவாய் கொஞ்சம் மிதப்பாய்
தேடும் தமிழ் ஆவாய்
முடியாது என்று அஞ்சாதே
முடியும் உன்னால் மறவாதே
சிந்தை தானே முதல் வளமே
செதுக்கு உனை தினமே
நகைத்தாரும் வியக்க வை – இந்த
நாடே மலைக்க வை
நாள் எல்லாம் உனை தினம்
நாடே புகழ வை
முடியும் உன்னால் முன்னேறு
முடிவு தெரிந்து விண்ணேறு
முன் உரையை நீ கூறு
முடிவுரையை நீ மீறு
அழுவதை நிறுத்தி
அகிலம் புரட்டு
ஆனந்தம் கூடும்
அறிவு தேறும்
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 20-04-2023
சதி செய்த பெரும் துயரம்
சதி செய்த பெரும் துயரம்
கந்தக துகள்கள் காட்சி இன்று
கண்ணீர் தருகிறதே
கதறல் ஓலம் வானை உடைக்க
கண்ணீர் கொதிக்கிறதே
உடைந்து வீழ்ந்த உக்ரைன் எண்ணி
உள்ளம் உருகிறதே
உயர்ந்த ஆட்சி சிகரம் எண்ணி
உதடு உமிழ்கிறதே
ஒன்றாய் வாழ்ந்த கூடுகள் இன்று
ஒற்றர் ஆனதென்ன
ஒருமை கூட பகைமை எகிற
ஒரு நாடு சிதைவதென்ன
எதிரி புரிந்த சதிகள் எண்ணி
ஏன் நீ கொதிக்கலையோ
ஏற்றம் கொண்ட உம்மை அழித்தான்
ஏன் அதை புரியலையோ
உலகை ஆண்ட சோவியத் ரஷ்யா
உடைந்த துயரம் என்ன
உள்ளே நுழைந்து உம்மை உதைத்தான்
உணர மறந்ததென்ன
விதிகள் வைத்து சதிகள் செய்தான்
வினை இன்று புரிகிறதா
வீழ்ந்து உடையும் உக்ரைன் மண்ணில்
விடுதலை முளைத்திடுமோ
அழுது புலம்பும் ஆயிரம் நெஞ்சுக்கு
ஆறுதல் கிடைத்திடுமோ
அகால மரணம் அதனை தடுக்க
அகிலம் ஏது செய்திடுமோ
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 18-04-2023
உன்னை மறவேன்
உன்னை மறவேன்
உன் போல உறவொன்றை
உயிரே நான் காணலையே
உயிரோடு ஒட்டி விட்டாய்
உனை மறக்க முடியலையே
கண்ணுக்குள்ள நீ இருந்து
காட்சிகளை தினம் கொட்ட
விண்ணுக்குள்ள தேடுகிறேன்
வின் மீனை காணலையே
நொந்திருந்த வேளையிலே
நோகாமல் நீ உரைத்தாய்
பந்து போல அடித்தார் முன்
பண்பாய் நீ நடந்தாய்
இன்றுன்னை நினைத்தாலும்
இதயம் நெகிழுதடி
ஈர் விழியில் நீர் வடிய
இதயம் கனக்குதடி
நட்பாக கிடைத்தவளே
நான் உன்னை வணங்குகிறேன்
நான் வாழும் வரை
நாளெல்லாம் நீ மொழி வேண்டுகிறேன்
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 17-04-2023
ஏங்கி சாவீரே
ஏங்கி சாவீரே
எழுத மறந்த கவிதை ஒன்றை
எழுதி வருகிறேன்
எனை எழுத வைத்த எதிரிக்கு
ஏற்று வடிக்கிறேன்
முடக்க நினைத்த உங்கள்
மூளை காண்கிறேன்
முயன்று பார்த்து தோற்று போனீர்
முடிவை காண்கிறேன்
எழுந்து வெடிக்கும் ஏவுகணை
என்றும் அடங்குமோ
ஏறி அடிக்க மறந்து
ஏங்கி சாகுமோ
தலைவன் வழி வந்தவர்கள்
தலைகள் குனியுமோ
தரகு வேலை சகுனிகள்
தலைமை புரியுமோ
எரிமலைக்குள் காலை வைத்தீர்
எழுந்து பார்த்தீரோ – இனி
எரியும் தணல் தலைகளிலே
ஏங்கி சாவீரே ….!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 16-04-2023
தேனிசை செல்லப்பா
தேனிசை செல்லப்பா
காலத்தால் அழியாத காவியன்
கரிகால தேசத்தின் பாடகன்
நெஞ்சுக்குள் நிற்கின்ற முதல்வன்
நேயத்தை வீசும் பண்பன்
தடை நூறு வீழ்ந்தும்
தளராது நின்றவன்
தாயகம் பாடியே
தன் தாகம் தீர்த்தவன்
உனக்கும் எனக்கும் உன்னத உறவு -நீ
உயிருக்கு உயிரானாய் எங்களின் நிலவு
கண்ணீராய் போனதே எங்கள் கனவு
காணாமல் போனதே எங்கள் புலவு
ஆறாமல் துடிக்குதே நெஞ்சம்
ஐயா உந்தன் பாடலே தஞ்சம்
நீ தானே தருகிறாய் வீரம்
நினைக்கிறோம் ஈழம் கொஞ்சம் கொஞ்சம்
நீ வேண்டும் நீ வேண்டும் செல்லப்பா
நிலம் மீளும் நீ பாட வேண்டும்
நான் எழுத நீ பாட வேண்டும் – இழிந்த
நாவும் கொஞ்சம் மாற வேண்டும்
உன் அகவை நூறுக்குள் – ஈழம்
உயிர் பெற வேண்டும்
உயிர் உள்ளவரை
உலக தமிழ் வாழ நீ பாட வேண்டும் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 04-04-2023
இங்கு வந்து தொலைந்து போ
இங்கு வந்து தொலைந்து போ
காலையில கண் விழித்து
கை நடுங்க நீர் பிடித்து
உச்சம் தல அதை ஊற்றி
உடல் கழுவி நான் முடித்து
பல்லாண்டு வாழ்க | kavithaikal /Vanni mainthan kavaithai
பல்லாண்டு வாழ்க | kavithaikal /Vanni mainthan kavaithai
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
உன்னை நீ நம்பு |தன் நம்பிக்கை கவிதை
இனியேனும் மனிதனாய் வாழு
இனியேனும் மனிதனாய் வாழு
பதிவைத்து சதி செய்து
பலி கொண்டாய்
பகிடிகள் செய்தவன்
இழி கொண்டாய்
வெள்ளையன் நீ என்ற
திமிர் கொண்டாய்
வேண்டாதான் தமிழ் என்றே
நீ கொன்றாய்
தூதனாய் ஏன் அன்று
நீ வந்தாய்
துரோகங்கள் செய்தேன்
அவன் கொன்றாய்
இன்றேனோ மீள
நீ வந்தாய்
இன்றெங்கே குழிவெட்ட
நீ போறாய்
நோர்வையின் சொல்கெமே வெளியேறு
நொந்தவர் சொல்கிறார் காணு
இன்றேனும் இழிநிலை தூரு
இனியேனும் மனிதனாய் வாழு ..!
புலி ஒன்று புறப்படுகிறது .
புலி ஒன்று புறப்படுகிறது .
வீர தளபதியை
விண்ணுக்கு தந்தவனே
மண்ணில் நீ இல்லை
மனம் எல்லாம் வேதனை
சொல்லி அழ இங்கு – ஈழம்
சொந்தம் இல்லை
பள்ளி வர உடன்
படையணி இல்லை
தம்பிகளை தந்தவரே
தலைவனுக்காய் நின்றவரே
கொஞ்சம் எனும் கொஞ்சி
கொள்ளி வைக்க இல்லையே
பஞ்சம் தான் நாட்டில்
பரவாயில்லை
பள்ளி கொள்வோம் ஓர் நாள் – உம்
பாடை சுமப்போம் அந்நாள்
தள்ளி வைக்க என்றும் – மான
தமிழர் நெஞ்சம் இல்லை
கொள்ளி வைப்போம் ஓர் நாள் – பகை
கொட்டம் அடங்கும் ஒரு நாள்
கில்மன் அடியில்
கிலி கொண்ட படைகள்
பட்ட பகல் சமரில்
பரந்தன் இழந்த பகைகள்
திமிர் இழந்து ஓடின
தீபன் கண்டு பதறின
வாலாட்டும் நாய்கள்
வாசலில் குலைக்கிறது
ஆனாலும் நெஞ்சில் ஆனந்தம்
அத்தகை வீரம் உனக்கு சொந்தம்
உறங்கு தந்தையை உறங்கு
உறுமி புலி வெடிக்கும்
கண்ணீர் மாலைகளை – உன்
காலடி தூவுகிறோம்
தந்தையை சென்று வா – ஈழ
தேசம் காண மீள வா ..!
பிரிகேடியர் தீபன் – லெப்கேணல் கில்மன் தந்தையும் ,ஸ்ரீதரன் எம்பி மாமாவின் மரண துயரில் அவருக்கு கண்ணீர் காணிக்கை ஆக்குகிறேன்
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-12-2022


























































