Category: வன்னி மைந்தன் கவிதைகள்
வன்னி மைந்தன் கவிதைகள் , காதல் கவிதைகள் வன்னி மைந்தன் ,மனித உணர்வின் பிரதியாக நடைமுறை வாழ்வியலில் ஒன்றாக கலந்துள்ளது .
எப்படி வாழ்வில் உயர்வாய்
எப்படி வாழ்வில் உயர்வாய்
மெல்லிய அலைகள் ஓடி விழ- வயலில்
மெலிந்த கடலலை ஆடி எழ
இரட்டை எருதுகள் கால் விழ
இங்கொரு துயர் முளை எழ
உழவு செய்வான் விவசாயி – இந்த
உயர் வதை செய்வான் அவன் பாவி
எருதை வதைத்தால் உயர்ந்திடுமா – உன்
வாழ்வில் ஏற்றம் வந்து பிறந்திடுமா ..?
முக்கி வதங்கி மூச்சடக்கி
முக்கால் வயிறு பசியடக்கி
முன்னே வாயால் நுரை தள்ள
முன்னே தன் பலம் அது தள்ள
அரை ஏக்கர் உளவு
அன்றைய தினம் பிளவு
ஓய்வு என்பது ஒரு மணிதான்
ஓல வாழ்வு அனுதினம் தான்
மதத்தில் சைவம் என்பானே
மாதா மாட்டை மிதிப்பானே
இப்படி வதைகள் இவர் விதைத்தால்
எப்படி வாழ்வில் உயர்வு வரும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 07-10-2021
நீ தமிழனா
நீ தமிழனா
தென் திசை பகைவர் வந்தார் – பெரும்
செந்தமிழ் திசை எங்கும் கொன்றார்
வண்டமிழ் எழுச்சியில் தீங்கார் – கூடி
வழியில் பெரும் சதி செய்தார்
விண்ணிலே ஏறி ஆடி – தமிழ்
வீரம் உலகில் சொன்னார்
வேள்வியை இடையிலே கொய்தார் – இந்த
வேளையில் தமிழர் கொதித்தார்
போரிலே வென்றிட வேண்டும்
பெரும் பலம் ஆளணி என்றார்
வரும் பகை வழியில் எய்தே
வாழ்வோம் நலமுடன் என்றார்
நீ தமிழனா
செய் நெறி வாய்மை கேளார்
செந்தணலாகி கொதித்தார்
வந்தனர் பகைவர் வாயில் – இன்றோ
வாளை சுருட்டி கொண்டார்
எம் தமிழ் வாயே எங்கோ – இன்றே
ஏறி பறையடி அங்கே
வந்தனர் பகைவர் வாயில் -கை
வாழ்த்தியே தொழுதாய் நன்றோ ..?
முன் தினம் வீரம் எங்கே
முரசொலி தமிழ் எங்கே
விண் புகழ் ஏறிய வீரம்
வீரரை கொய்தாய் நன்றோ ..?
எம் தமிழ் மானம் இன்றோ
எமனவன் காலில் நன்றோ
இது தான் தமிழ் நில பண்போ
ஏதடா நீயெல்லாம் தமிழோ ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 06-10-2021
உண்மை சொல்
உண்மை சொல்
மூச்சு முட்ட மூச்சு முட்ட
முன்னே வந்து நிற்கிறாய்
முத்தத்தாலே உன்னை தைக்க
முன்னே ஏனோ ஊந்துறாய் ..?
ஆலயத்தின் சாமிகளாய்
ஆடை இன்றி நிற்பதா ..?
இயற்கை தந்த பேரழகை
இயமனுக்கே விற்பதா ..?
ஆசைகளை தூண்டி விட்டு
அருகில் வந்து இரசிக்கிறாய்
அந்தரத்தில் தவிக்க விட்டு – ஏன்
ஆராத்தி எடுக்கிறாய் ..?
கலைந்து போன கூந்தலில்
கை வைத்து போனது யார்
கட்டி வைத்த பேரழகை
கடத்தி இன்று விற்றது யார் ..?
விற்பனைக்கு சந்தையில
விண்ணிலவை வைத்தது யார் ..?
விவரமாக சொல்லி விடு
விசாரணைக்கு வருகிறேன் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 05-10-2021
இணைந்து வாழ்வோம் இன்றே வா
இணைந்து வாழ்வோம் இன்றே வா
வென்றதாய் உலகில் ஏறியே நன்று
வெடி குண்டாய் முழங்கிறாய்
வென்றே தமிழர் ஆள்வார் நன்று
வெட்கியே தலை குனிவாய்
தீர்வு வழங்கிட தீர்வு இருந்தும்
தீர்த்திட மறுக்கிறாய்
தீயாய் கலவரம் நாட்டில் வெடிக்க
தீயிடை நீ மடிவாய்
ஆண்டைய நாட்டில் அன்றைய வாதி
ஆள்கிறார் இன்று மறவாய்
முன்னைய வாதி தீவிரவாதி
முளைவிட்டான் இன்று பாராய்
வெள்ளையன் கொள்கை அறியா உலகில்
வெறியுடன் அலைகிறாய் -நாளை
வெடிகுண்டு தந்தே உயிர்களை தின்பான்
வெட்கியே தலை குனிவாய்
ஒற்றை ஆட்சியில் மிதக்கிறாய் நன்றோ
ஒருகணம் திரும்பி பாராய்
கடாபி நிலை காலடி சுற்றும்
கதறியே நன்று மடிவாய்
இதுவரை சொன்னேன் இனவெறி என்றால்
இன்றே உயிரை குடிப்பாய்
பூகோள அரசியல் புதிரை அறிந்தால்
புன்னகை வீசி தீர்வு கொடுப்பாய் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 25-09-2021
வன்னி மைந்தன் கவிதைகள்
தமிழர் வாழ இவர்கள் வருவார்களா
தமிழர் வாழ இவர்கள் வருவார்களா
சோழ பரம்பரை ஆண்ட கடலினுள்
வேங்கை படை இல்லையா ?
கரிகாலன் ஆண்ட பூமியில்
காக்கை வன்னியரா
கொல்லி வைத்தவன் குடிமனை புகுந்து
கொள்கை சொல்லிடவோ
அள்ளி வைத்தவர் ஆக்கினை புரிந்தவர்
அரியணை ஆண்டிடவோ
செந்தமிழ் பாடியே ஆடிய புலவர்
செம்மண் மிதிபடவோ
வந்தேறி ஆரியர் வழங்களை சுரண்டி – தமிழ்
வம்சம் அழிப்பதுவோ
கந்தக தீயில் வெந்திட இலங்கா
கலகம் பிறந்திடுமா
கொன்றவன் வாயிலில் கொலைகள் வீழ்ந்திட
கொடும் பகை தகர்ந்திடுமா
வான் படை காவியே வானில் ஏறிய
வரி புலி வந்திடுமா ?
வரும் தளிர் செழித்திட மொழியும் விழித்திட
வாயில் வந்திடுமா ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 24-09-2021
எங்கள் தலைவிதி ….!
எங்கள் தலைவிதி ….!
இளம் காற்று பாடும் ஈழ கரையோரம்
இதயங்கள் நொறுங்கும் சோக துயரம்
எவர் செய்த சதியோ இத்துயர் கோலம்
எங்களின் வாழ்வில் ஏனோ இப் பாரம்
கரும்புகை ஏறி வானை மறைக்கும்
கந்த துகளில் மூச்சு உறையும்
வெடியோசை மண் கிளற வீழ்ந்தே இறந்தோம்
உடன் இருந்தார் விட்டே ஊர் ஏறி கடந்தோம்
வலியில் நெஞ்சு வாடி தவிக்க
வழி தெரியா நின்றோம்
உரிமை போரும் முடிவில் தவிக்க
உதவுவார் இன்றி ஏங்கி தவித்தோம்
தரணியில் நாங்கள் பிறந்தது கேடா
தமிழனாய் இங்கு வாழ்தல் பிழையா
சுதந்திரம் கேட்டோல் சூடு காடா
சுதந்திர தேசமே நீதி இல்லையா
மொத்த தமிழன் அழித்தான் உலகில் நடக்கிறான்
ஒட்டு துணி இல்லா தமிழன் தவிக்கிறான்
இத்துயரில் தினமும் எங்களின் தேசம்
இதயம் இல்லா நடக்கும் உலகம்..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 25-03-2021
http://ethirinews.com/
நான் வாழ உயிர் கொடு
நான் வாழ உயிர் கொடு
இடையாலே எந்தன் இதயத்தை
இடித்தேண்டி போகிறாய்
முலை காட்டி எந்தன் ஆசைக்கு
மூட்டி தீ ஏன் வைக்கிறாய்
கூந்தலில் காய்கின்ற மல்லிகையாய்
கூடியே நானும் உலர்ந்திடவா –?
அத்தனை ஆனந்தம் உனக்கென்றால்
அடியே நானும் காய்ந்திடவா ..?
ஊருக்கு ஊரடங்கு போட்டு வைத்து
உள்ளத்துள் புகுந்து விடு
யாருக்கும் தெரியாமல் நாமினைந்து
யாகம் நடத்திடுவோம் வந்து விடு
கரை தேடும் அலையாக ஓடி வந்து – எந்தன்
காதல் கால்தடம் நனைத்து விடு
பூமழை பொழியும் மார்கழியாய் – உந்தன்
புன்னகை வந்து கொட்டி விடு
கட்டுடைத்து பாயும் வெள்ளம் போல – என்
கன்னத்தில் வந்து முத்தமிடு
நீயிட்ட முத்தத்தை நான் குடித்து – இந்த
நிகழ் காலம் வாழ உயிர் கொடு ..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 20-09-2021
வன்னி மைந்தன் கவிதைகள்
http://ethirinews.com/
ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்
ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்
கற்புக்கு பெண் என்று சொல்லாதே
காசிற்கு விற்கிறார் மறக்காதே
உவமைக்கும் இவரை காட்டாதே -இந்த
ஊத்தையில் கண்ணை வைக்காதே
பேருக்கு ஆனாய் இருக்காதே – இந்த
பேரிடரை பெண்ணுக்கு வழங்காதே
தன் பசி போக்க என் செய்வாள்
தன்னிடம் உள்ளதை விற்கிறாள்
கற்பிற்கு விலை வைக்கும் கறையானே
கண்ணீரை உறிஞ்சும் உதையோனே
வெப்பத்தை தூவி போகாதே – இந்த
வேட்கையில் பெண்ணை நீ கொல்லாதே
பூலன் தேவியாய் ஆக்காதே – இவள்
புலியாகி எழுவாள் மறக்காதே
எதை வந்து சொன்னாலும் ஏற்கேனே
ஏளன பெண்ணை மிதிப்பேனே
சிந்திக்கும் ஆற்றலை இழந்தாளை
சிந்தைக்குள் வைக்க முனையாதே
பானைக்குள் புகுந்த அகப்பைகள்
பாதியில் முறியும் மறவாதே
ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்
தோன்றுதல் பிறந்திட வேண்டும் என்றால்
தோலுக்குள் புகுந்திட வேண்டும்
அணைத்து பால் மலர்ந்திட வேண்டும் என்றால் – இந்த
ஆகமம் நடந்திட வேண்டும்
எதை வந்து சொன்னாலும் எற்கேனே
இந்த இழிசாதி பெண்ணை நம்பேனே
ஆணை கொல்லும் எமன் என்பேன்
ஆக்கினை இந்த பெண் என்பேன்
நூற்றுக்கு 90நூறு இழிவென்பேன்
நுண்ணறிவில்லா மலடென்பென்
ஆண்கள் பெறுமை இழந்துவிடின்
அத்தனை குடும்பமும் இரண்டென்பேன் ..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 19-09-2021
எதற்கடா உனக்கு திருமணம்
எதற்கடா உனக்கு திருமணம்
சீதனத்து கொடுமைகளை
சினத்தோடு உரைக்க வந்தால்
மேதினத்து மேனிகளோ
மோதி இன்றி வீழ்கின்றார்
பானை வயிறு உடல் தாங்கி
பாதி வழி அலைகின்ற
வேலையில்லா வேந்தர்களின்
வேண்டுதல் இதுவாம்
உதடெல்லாம் விஷம் வைத்து
ஊறுகின்ற பாம்பே
முதுகெலும்பு இன்றி
முன்னே கேட்க்கிறான்
உள்ளான் பானையிலே
ஊற்றியே வைக்கிறான்
இல்லாதான் வேண்டியே
இல்லறத்தில் கூடுறான்
உன் இச்சை தீர்ப்பதற்கு
உனக்கு வரி செலுத்தி
நடக்கிற திருமணம்
நாயே எதற்கு …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 12-09-2021
வன்னி மைந்தன் கவிதைகள்
புகுந்த வீட்டில் மணமகள் தொல்லை
புகுந்த வீட்டில் மணமகள் தொல்லை
வேட்டிக்குள் இன்றொரு தாய் கண்டேன் – இந்த
வேளையில் அவருக்கு நன்றி இட்டேன்
போதைக்குள் உறைந்த மனம் கண்டேன் – இந்த
பொதிகையை கண்டே நான் மிளிர்ந்தேன்
பெண் எல்லாம் தாய் என்று யார் சொன்னார் – இந்த
பேய்களின் சிசு கொலை யார் சொன்னார் ..?
முலை கொண்டும் பால் தரா பேயானார் – இந்த
மூளைகள் கொடும் செயல் யார் சொன்னார் ..?
புகுந்த வீட்டில் மணமகள் தொல்லை
வந்தாரை மதியாத கீழானர் – இந்த
வந்தேறி வீட்டில் கோலானார்
தந்தவன் தாலிக்கு மேலானார் -இந்த
தவளைக்கு யார் கால் வைத்தார் ..?
மடியாத சேலைக்கு கண் வைத்தார் – இந்த
மாடத்தை காணா அன்றிருந்தார்
கூவத்தில் வாழ்ந்ததை ஏன் மறந்தார் – இந்த
கூடத்தில் இன்னாரை ஏன் இழிந்தார் ..?
அகவையில் இன்றே சிறிதானார் – இன்றோ
ஆடும் பட்டம் போலானார் – இந்த
கீழிடை சிந்தையில் ஏன் நின்றார் – இந்த
கிழிசலை என்று இவர் எறிவார் …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 07-09-2021
வன்னி மைந்தன் கவிதைகள்
நிலாவே நீயா வீழ்ந்தாய்
நிலாவே நீயா வீழ்ந்தாய்
பன்முகத்து ஆளுமையாய்
பாரெங்கும் ஒலித்தவளே
பா முகத்தின் திரைதழுவி
பல கதை சொன்னவளே
இடுப்பின் கீழ் செயல் இழந்தும்
இடராது நடந்தவளே
போர் குணத்து வெறிபிடித்து
புரட்சி பல செய்தவளே
வீடு வந்த வேளையில
விருந்து வைத்து மகிழ்ந்தவளே
ஆர தழுவியென்னை
அன்புருகி நின்றவளே
உந்தன் பிரிவு இன்று
உள்ளமதை வாட்டுதடி
கண்ணில் நீர் வடிய
கலங்கி மனம் துடிக்குதடி
நிலாவே நீ வீழ்வாய் என்று
நியமா நான் நம்பவில்லை
நம்ப முடியா ஒன்றை
நம்பிட ஏன் வைத்தாய் …?
படைக்க பலதிருக்க – நீ
பார் கடந்து பொனதெங்கே …?
விதைத்த பூங்கொடியே
விசாலமாய் உறங்கு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 06-09-2021
http://ethirinews.com/
லண்டனில் –அறிவிப்பாளர் ,பாவலர் ,பன்முக ஆளுமை,.நிலா அக்காவின் மரண துயர் அறிந்த பொழுது
கண்ணீரில் மனம் …
வன்னி மைந்தன் கவிதைகள்
திருமணம் முடிக்க நான் வாரேன்
திருமணம் முடிக்க நான் வாரேன்
தீச்சுவாலை சமரதுவாய்
தீண்டி என்னை வருபவளே
வழிமறித்து தாக்கிடவே
வழியமைத்து கொடுப்பவளே
ஊந்துகணை தோள் சுமக்க
ஊடறுப்பை நான் தொடுக்க
சமராட அழைப்பவளே
சம்மதமா நான் வென்றிடவே …?
சூரிய கதிர் முற்றுகையாய்
சுற்றி என்னை வலைத்தாயோ ..?
தவளை பாய்ச்சால் நடவடிக்கையில்
தத்தளித்து நின்றாயோ …?
நீரூந்து விசை படகாய்
நீந்தி வலம் வந்தவளே
துறைமுகத்தில் நான் புகுந்து
துணிவுடனே கடத்தி விட்டேன்
பூநகரி தாக்குதலோ
புது வரவை தந்து விட
ஏறி களம் ஆடி நின்றோம்
எரிமலையாய் வெடித்து வந்தோம்
ஆழ பிறந்தவர் நாம் தானே
ஆள்வோமே மீள்வோமே
தலிபான்கள் போல
தலைமையில மிதப்போமே
கொஞ்ச நாள் பொறுத்திருப்பாய்
கொளகை தன்னை வளர்த்திருப்பாய்
நஞ்சை கட்டி களம் திறக்கும்
நாளில் என்னை மணப்பாய் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 02-09-2021
http://ethirinews.com/
வன்னி மைந்தன் கவிதைகள்
எப்படி சொல்வேன்
எப்படி சொல்வேன்
எழுதாத தாள் மேலே – உனை
எழுத வைத்த பேரழகே
தொலையாமல் இருக்குமா – மனம்
தொலைத்து விட்டேன் உன் மேலே
உடையாத பாறையாய்
உச்சி மலை இருந்தென்னை
கன்ன குழி சிரிப்பழகில்
கடைந்து விட்டாய் நீ என்னை
இடை பிடிக்கும் உன் விரலின்
இடையிலே என் விழிகள்
ஊடுருவி பார்க்குதடி
உடல் பரவசம் ஆகுதடி
வேர்க்காத உன் உதட்டில்
வேலை ஒன்று செய்திடவா ..?
சந்தனத்து உடல் அழகை
சாயும் காலம் மென்றிடவா ..?
இல்லாத மார்புக்கு
இடையில் என்ன சாளரமோ ..?
உடையாத பூவுக்குள்
உள்ளே என்ன எந்திரமோ ..?
எப்படி சொல்வேன்
மார்பு தடவும் கூந்தலின்
மல்லிகை வாசத்தை
முகர்ந்து பார்க்க துடிக்கிறதோ
முன்னுள்ள நுரையீரல் …?
வாலிபத்தை நோகடித்து
வாசல் வந்து நின்னவளே
நாள் ஒன்று வீனாகி
நலிந்து போனேன் என்னவளே
இச்சைக்கு வரி வைத்து
இயங்கும் உலகிலே
நீதி கேட்பீரா
நின்று பதில் சொல்வீரா …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 22-08-2021
http://ethirinews.com/
வன்னி மைந்தன் கவிதைகள்
உன்னால் அழுகிறேன்
உன்னால் அழுகிறேன்
விழியின் ஓரமா -உன்
நினைவு துளிகளே
கடந்து போகுமா – அந்த
காதல் நினைவுகள் …?
ஆடும் காற்றிலே
அடி வாங்கும் அலைகளாய்
வாழ்வு நோகுதே – இந்த
வையம் வெறுக்குதே
மீனை போல துள்ள
எனக்கு தெரியவில்லை
புலி போல பாய
உனக்கு புரியவில்லை
இரு வேறா பிரிவதற்கா
இணைந்தோம் அன்று
என் உயிரே என் உயிரே
எனக்கு பதில் சொல் நன்று
விதி போட்ட சாலையிலே
வீழ்ந்தவர்கள் நூறு
இதில் நீயும் நானும்
இந்த நூறில் ஒன்று
அழுவதால் காயம் ஆறுமா
ஆறுதல் சொல்ல இங்கு யாரம்மா
படைத்தவனே பழியை ஏற்பானா
பகலவனே பதில் சொல்வானா …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 17-08-2021
http://ethirinews.com/
வன்னி மைந்தன் கவிதைகள்
உயிரே பதில் சொல்லாயோ
உயிரே பதில் சொல்லாயோ
காட்சிகளாய் என் விழியில்
காலமெல்லாம் வீழ்பவளே – உன்
மூச்சு காற்று பட்டே
முழுதாக செயல் இழந்தேனே
தொடை தொட்டாடும்
தோகை கூந்தலை
வலை போட்டு நான் பிடிக்க
வாசலுக்கு வந்து விடு
செவந்த சட்டையில
செவப்பா நீ இருக்க
உன் உதட்டு பூவிதழை
உரிக்காம விடுவேனா ..?
கரை தேடும் அலைபோல
கண்ணால கதை சொல்ல
கறுத்த வான் மேகம்
கன மழை கொட்டுதடி
வீடு வந்த வெள்ளம் போல
விழி எல்லாம் நீ இருக்க
உன்னை மனம் மறந்திடுமோ
உயிரே பதில் சொல்லாயோ ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 16-08-2021
http://ethirinews.com/
வன்னி மைந்தன் கவிதைகள்
நித்தம் நீயே வா
நித்தம் நீயே வா
முரண்டு பிடிக்கும் உன் உடம்பை
முள்ளு மீசை கொண்டு குற்றவா ..?
என் எச்சி பட்டே உன் உடலை
எந் நாளும் நனைக்கவா ..?
இடையாட்டும் காற்றை பிடித்து
இன்று சிறை வைக்கவா ..?
நனையாமல் நீ செல்ல
நானும் குடை பிடிக்கவா ..?
தலையாட்டும் கூந்தலை
தாங்கமே தந்திட வா
தாலாட்டு நான் பாட
தங்கமே உறங்க வா
முன் பகலை இரவாக்கி
முழு நிலவில் தோய்க்கவா ..?
உன் சாமி நான் ஆனேன்
உயிரே நித்தம் வணங்க வா ….
ஆகாய சூரியனாய்
அன்றாடம் வருபவளே
நித்தம் என் உறக்கத்தை
நீயே கலைக்க வா …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 15-08-2021
http://ethirinews.com/
வன்னி மைந்தன் கவிதைகள்
இப்போ என்ன சொல்வாய்
இப்போ என்ன சொல்வாய்
உன் சிரிப்பை நான் கேட்டால்
உனக்கென்ன கோபமோ ..?
என் சிரிப்பை நான் தந்தால்
ஏன் எடுக்க வெட்கமோ …?
வங்கி என்றால் கடன் கொடு
வட்டி முதல் தந்திடுவேன்
வாங்கியதை தந்து விட்டால்
வழி வெட்டி என்னை விட்டு விடு
முத்தமிடும் மழைத்துளியை
முற்றம் ஏற்க மறுப்பதில்லை
பின்னிரவில் மனிதரெல்லாம்
பிள்ளை பெற்றும் உறைவதில்லை

அந்தி மட்டும் உறங்காவிடின்
அணைத்து பால் கதறுமடி
படைத்தவனை நினைத்து பார்
பகலிரவின் முழுமையடி
முழு நூல்கள் படித்து விட்டால்
முத்தி இன்று பெற்றிடுவாய்
இத் திரையில் நீ இருப்பாய்
இன்றே கடவுளாவாய் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 14-08-2021
http://ethirinews.com/
வன்னி மைந்தன் கவிதைகள்
என்னோடு வா
என்னோடு வா
விட்டுப்போன உறவென்று- உனை
விட்டு விட முடியவில்லை
தொட்டு பார்க்கும் எண்ணத்தால்- உனை
தொலைத்து விட இயலவில்லை
கட்டி வைத்த மாலையாக
காய்கின்ற பேரழகே….
உனை கொய்தவனை கொன்றிடவா..?
உன் உயிரை காத்திடவா?
மண்ணுக்குள் வேரெடுத்து
மழை நீரில் குளியலிட்டு….
விண்ணுலகை பார்த்தவளே
வீழ்ந்ததின்று எப்படியோ?
நிமிடம் ஒன்று சிந்திக்க
நினைவிழந்து போனதினால்
சுனாமி அலைக்குள்ளே
சுயம் வரத்தில் வீழ்ந்தாயோ ..?
அலை கடந்து வீடுடைத்த
ஆழி பேரலையாய்
மீதி வாழ்வுக்குள்
மிதந்து போராயோ …?
ஓயாது பெருக்கெடுக்கும்
ஒப்பாரி கண்ணீரை
தடுத்திடுவேன் வந்து விடு
தங்கமே நம்பி விடு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 13-08-2021
http://ethirinews.com/
வன்னி மைந்தன் கவிதைகள்
உன் பதில் என்ன
உன் பதில் என்ன
புத்தியில நீ இருந்து – உன்
புன் முகத்தை காட்டையில
நெத்தி வேர்வை கலையுதடி – உன்
நேர் விழியால் மங்குதடி
தாகத்தில நீ தவிக்க
தண்ணீர் இனிக்குதடி
தாமரையே செவ்விதழ்
தரை புரண்டு வெடிக்குதடி
தாலிபான் போர் போல
தடை உடைத்து வென்றவேளே
நீ இருக்க என் கவலை
நினைவே ஏறு தோள் மேலே
இறக்கும் முன்னர் எனை வந்து
என் உயிரே பார்த்து விடு
இறக்கும் முன்னர் என் ஏக்கம்
இன்றே தனித்து விடு
உன் பதில் என்ன
உன் மடியை ஒரு நிமிடம்
உறங்க கொஞ்சம் தந்து விடு
உயிர் விட்டு சென்றிடுவேன்
உயிரே வாழ்ந்து விடு
ஊர் கதையை காதில் விட்டால்
உயிரே வாழ மாட்டாய்
உனக்கான சாலை இட்டால்
உயிரே நீ வாழ்ந்திடுவாய்
நானிருக்கும் காலமதில்
நாம் வாழ வேண்டுமடி
நம்பிக்கை நட்டவளே
நலமுடன் பதிலிடுவாய் ….!
வன்னி மைந்தன்
ஆக்கம் 12-08-2021
http://ethirinews.com/
வன்னி மைந்தன் கவிதைகள்
நீ வேண்டும் எனக்கு
நீ வேண்டும் எனக்கு
தேம்ஸ் நதியின் ஓரத்திலே
தெரு விளக்காய் எரிபவளே
நயாகரா அருவியாக
நான் ஓடி வந்திடவா ..?
கூலி இன்றி ஆறு வெட்டி
குரல் எழுப்பி ஆடி வரும்
அழகான நதி போல
அன்பே நான் வந்திட வா …?
உள்ளிருந்து துள்ளி வரும்
உருவத்தில் சிறிதான
மீன் போல நான் வரவா
மின்னல் போல் ஒளி தரவா ..?
குமரியில பூவெய்தி
குலை குலையாய் காய் காய்த்து
பழமாய் உதிர்கின்ற
பருவத்தில் வந்திட வா …?
எதுவாக நான் வரவோ
என் அன்பே பதில் தர வா
ஏங்கும் மனதொன்றின்
ஏக்கத்தை தனித்திட வா …..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 11-08-2021
உலக புகழ் பெற்ற
தேம்ஸ் நதி (லண்டன்
நயாகரா ( கனடா )
http://ethirinews.com/






