Tag: எதற்கடா உனக்கு திருமணம்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்
எதற்கடா உனக்கு திருமணம்
எதற்கடா உனக்கு திருமணம்
சீதனத்து கொடுமைகளை
சினத்தோடு உரைக்க வந்தால்
மேதினத்து மேனிகளோ
மோதி இன்றி வீழ்கின்றார்
பானை வயிறு உடல் தாங்கி
பாதி வழி அலைகின்ற
வேலையில்லா வேந்தர்களின்
வேண்டுதல் இதுவாம்
உதடெல்லாம் விஷம் வைத்து
ஊறுகின்ற பாம்பே
முதுகெலும்பு இன்றி
முன்னே கேட்க்கிறான்
உள்ளான் பானையிலே
ஊற்றியே வைக்கிறான்
இல்லாதான் வேண்டியே
இல்லறத்தில் கூடுறான்
உன் இச்சை தீர்ப்பதற்கு
உனக்கு வரி செலுத்தி
நடக்கிற திருமணம்
நாயே எதற்கு …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 12-09-2021
வன்னி மைந்தன் கவிதைகள்






