Tag: தலை
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு ,கொஸ்கொட கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மனித சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொஸ்கொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவ்வாறு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளமையால் குறித்த நபர் பல நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

இணைந்து வாழ்வோம் இன்றே வா
இணைந்து வாழ்வோம் இன்றே வா
வென்றதாய் உலகில் ஏறியே நன்று
வெடி குண்டாய் முழங்கிறாய்
வென்றே தமிழர் ஆள்வார் நன்று
வெட்கியே தலை குனிவாய்
தீர்வு வழங்கிட தீர்வு இருந்தும்
தீர்த்திட மறுக்கிறாய்
தீயாய் கலவரம் நாட்டில் வெடிக்க
தீயிடை நீ மடிவாய்
ஆண்டைய நாட்டில் அன்றைய வாதி
ஆள்கிறார் இன்று மறவாய்
முன்னைய வாதி தீவிரவாதி
முளைவிட்டான் இன்று பாராய்
வெள்ளையன் கொள்கை அறியா உலகில்
வெறியுடன் அலைகிறாய் -நாளை
வெடிகுண்டு தந்தே உயிர்களை தின்பான்
வெட்கியே தலை குனிவாய்
ஒற்றை ஆட்சியில் மிதக்கிறாய் நன்றோ
ஒருகணம் திரும்பி பாராய்
கடாபி நிலை காலடி சுற்றும்
கதறியே நன்று மடிவாய்
இதுவரை சொன்னேன் இனவெறி என்றால்
இன்றே உயிரை குடிப்பாய்
பூகோள அரசியல் புதிரை அறிந்தால்
புன்னகை வீசி தீர்வு கொடுப்பாய் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 25-09-2021
வன்னி மைந்தன் கவிதைகள்








