இதயம் இல்லாதவர்கள் இதை பார்க்காதீர்கள்|palestine news today tamil |Ethiri News
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இதயம் இல்லாதவர்கள் இதை பார்க்காதீர்கள்|palestine news today tamil |Ethiri News

இதயம் இல்லாதவர்கள் இதை பார்க்காதீர்கள்|palestine news today tamil |Ethiri News

இந்த பாலைவன படுகொலைக்கு காரணம் என்ன ,..?

கண்ணிருந்தும் குருடான காவலரே -உங்கள்

நெஞ்சுக்குள் ஈரம் உள்ளதா இதை பாருங்கள் .

வீடியோ

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

கத்திகள் எழுகிறது …!

கத்திகள் எழுகிறது …!

வன்னி மைந்தன் கவிதைகள்

திண்ணையில உட்க்கார்ந்து
தீங்குரைக்கும் நெஞ்சுகளே
குஞ்சுகளை காணாது
குருவிகள் அலைகிறதாம்

பஞ்சு வெடிக்கின்ற
பங்குனி வெய்யிலில்
கஞ்சிக்கு வழியில்லா
கால்கள் நடக்கிறதாம்

இதயம் இருக்கென்று
இன்றமர்ந்து பேசும்
கோடிகளில் கொஞ்சத்தை
கொட்டி கொடுங்கள்

கேடில்லை தான்
கேட்பாரும் இல்லைத்தான்
நாட்டை தின்றுவிட்டு
நம் வயிற்றில் அடித்தீரே

கோடிகளில் கொஞ்சத்தை
கொட்டி கொடுங்கள்
பாவ சுமையில்
பாதி கழுவட்டும்

ஆளை கொன்று
அரியணை பிடித்தீர்
அம் மக்கள் விழித்தார்
ஆட்சி துறப்பீர்

கஞ்சா காடழிக்க
கத்திகள் எழுகிறது
நாடு சுத்தமிட
நல்புரட்சி வெடிக்கிறது …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 31-03-2022

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    எங்கள் தலைவிதி ….!

    எங்கள் தலைவிதி ….!

    இளம் காற்று பாடும் ஈழ கரையோரம்
    இதயங்கள் நொறுங்கும் சோக துயரம்
    எவர் செய்த சதியோ இத்துயர் கோலம்
    எங்களின் வாழ்வில் ஏனோ இப் பாரம்

    கரும்புகை ஏறி வானை மறைக்கும்
    கந்த துகளில் மூச்சு உறையும்
    வெடியோசை மண் கிளற வீழ்ந்தே இறந்தோம்
    உடன் இருந்தார் விட்டே ஊர் ஏறி கடந்தோம்

    வலியில் நெஞ்சு வாடி தவிக்க
    வழி தெரியா நின்றோம்
    உரிமை போரும் முடிவில் தவிக்க
    உதவுவார் இன்றி ஏங்கி தவித்தோம்

    தரணியில் நாங்கள் பிறந்தது கேடா
    தமிழனாய் இங்கு வாழ்தல் பிழையா
    சுதந்திரம் கேட்டோல் சூடு காடா
    சுதந்திர தேசமே நீதி இல்லையா

    மொத்த தமிழன் அழித்தான் உலகில் நடக்கிறான்
    ஒட்டு துணி இல்லா தமிழன் தவிக்கிறான்
    இத்துயரில் தினமும் எங்களின் தேசம்
    இதயம் இல்லா நடக்கும் உலகம்..!

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 25-03-2021
    http://ethirinews.com/

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      உயிரே இதயம் மாறாதே

      உயிரே இதயம் மாறாதே

      உன் முகம் என் விழியில்
      ஊர்வலம் போகுதே
      உள்ளம் மட்டும் ஏனோ
      உனக்காய் ஏங்குதே ….

      தவம் என்ன கொண்டாயோ – இதயம்
      தந்திட மறுக்கிறாய் …?
      வரம் என்ன சொல்லிடு
      வாங்கி தந்திட மாட்டேனோ ..?

      ஓடும் நதி எல்லாம்
      கடலில் தானே கலக்குதே
      ஆண்கள் மனம் எல்லாம்
      அடி பெண்ணில் தானே மிதக்குதே

      வீசும் காற்றிலே
      வீதி எங்கும் குப்பையே
      கொட்டும் மழையிலே
      கொடும் கறைகள் கழுவதே

      இயற்கை நிலைகளோ
      இது தான் காணாய்
      இதயம் தந்திட – நீ
      இன்று ஏனோ மறுக்கிறாய் …?

      வன்னி மைந்தன்
      ஆக்கம் -09-11-2020

      வன்னி மைந்தன் கவிதைகள்