Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
ஏழை மக்கள் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – சத்யராஜ் மகள்
ஏழை மக்கள் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – சத்யராஜ் மகள்
கொரோனாவில் இருந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – திவ்யா சத்யராஜ்
பிரபல நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், கொரோனா பீதி காரணமாக பள்ளிகள்
இயங்காததால், வறுமையில் வாடும் குடும்பங்களில் வசித்து வரும் குழந்தைகளுக்கு சத்தான சாப்பாடு கிடைக்காமல் அவர்கள்
ரத்தசோகை மற்றும் இரும்பு சத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெரிவிக்கும் விதமாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது… ” கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் அரசு பள்ளி குழந்தைகளில் வைட்டமின் குறைபாடு குறித்து ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டேன்.
அப்போது… கார்ப்பரேஷன் பள்ளிகளில் 38% சிறுவர்கள் மற்றும் 40% இளம் பருவ பெண் குழந்தைகளுக்கு, இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை இருப்பது தெரியவந்தது.
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக அரசிடம் பேசினேன். அப்போது இரும்புச்சத்து குறைபாடு
மற்றும் இரத்த சோகையை அவர்களின் மதிய உணவு திட்டத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் பணியில் அரசாங்கம் இறங்கியது.
இந்நிலையில் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டதால், கார்ப்பரேஷன் பள்ளி குழந்தைகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த
உணவு மற்றும் மதிய உணவு திட்டத்தால் வழங்கப்படும் இரும்புச் சத்துக்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இரும்புச்சத்து நமது
உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையான ரத்த சிவப்பு அணுக்களுக்கு அத்தியாவசியமான ஒன்று.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் அந்த குழந்தைகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்க முடியாது. அவர்களுக்கு கொரோனா வரும் வாய்ப்புகள் அதிகம்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளும் கொரோனாவில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை வசதியான குழந்தைகளுக்கு மட்டும்தான் என்பது நியாயம் கிடையாது. எனவே குறைந்த
வருமானம் கொண்ட குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கொண்ட உணவுகளையும் இரும்புச்சத்து
மருந்துகளையும் இலவசமாக வழங்குமாறு அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமந்தாவுடன் நடிக்க மறுக்கும் நடிகர் – அடம் பிடிக்கும் நடிகை
சமந்தாவுடன் நடிக்க மறுக்கும் நடிகர் – அடம் பிடிக்கும் நடிகை
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், சமந்தாவுடன் இணைந்து நடிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சமந்தாவுடன் நடிக்க மறுப்பது ஏன்? – பிரபாஸ் விளக்கம்
சமந்தா, பிரபாஸ்
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, நயன்தாரா, திரிஷா என பல முன்னணி
ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஆனால் அவர் இதுவரை சமந்தாவுடன் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை.
இதுகுறித்து பிரபாஸிடம் சமீபத்திய பேட்டியில் கேட்கப்பட்டது. இதற்கு அவர் அளித்த விளக்கம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அவர் கூறியதாவது: எனக்கும் சமந்தாவிற்கும் இடையே உயரம் பிரச்சனையாக உள்ளது. அதுதான் நாங்கள் இருவரும் இணைந்து
பணியாற்றாததற்கு முக்கிய கரணம் என கூறியுள்ளார். கடந்தாண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ
திரைப்படத்தில் சமந்தா நடிப்பதாக இருந்தது. பின்னர் அவருக்கு பதில் இந்தி நடிகை ஷ்ரத்தா கபூரை ஒப்பந்தம் செய்தனர்.

சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர்.
சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர்.
படங்களை வெளியிடுவது தொழில் சுதந்திரம், இணையதளத்தில் படத்தை வெளியிடக் கூடாது என்று மிரட்டுவது நியாயம் அல்ல என பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர்
சூர்யா
ஜோதிகா கதாநாயகியாக நடித்து, ஜே.ஜே.பிரடரிக் என்ற புது டைரக்டர் இயக்கியுள்ள படம், ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவின் 2டி
நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினை
காரணமாக படம் திரைக்கு வருவது தள்ளிப்போய் இருக்கிறது. ‘பொன்மகள் வந்தாள்’ படம், ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில்
தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை ஒரு இணையதள நிறுவனம் ரூ.9 கோடி கொடுத்து வாங்கி, இணையதளத்தில் வெளியிடுவதற்கான
ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கு திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.
ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்
தேசிய விருது பெற்ற ‘தங்க மீன்கள்’ உள்பட பல படங்களை தயாரித்த பட அதிபர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் கூறுகையில்,
“படங்களை வெளியிடுவது தொழில் சுதந்திரம். முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியுமா? என்று ஒவ்வொரு தயாரிப்பாளரும்
கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், இணையதளத்தில் படத்தை வெளியிடக் கூடாது என்று மிரட்டுவது
நியாயம் அல்ல. தயாரிப்பாளரை மிரட்டுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது” என்றார்

.
தமன்னாவின் தலையணை சேலஞ்சிற்கு குவியும் லைக்ஸ்
தமன்னாவின் தலையணை சேலஞ்சிற்கு குவியும் லைக்ஸ்
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் தலையணை சேலஞ்சை செய்து நடிகை தமன்னா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமன்னாவின் தலையணை சேலஞ்சிற்கு குவியும் லைக்ஸ்
தமன்னா
தமன்னா 2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக
நீடிக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக
நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி திருப்பு முனையாக அமைந்தது. அடுத்ததாக தமிழில் வெப் சீரிஸ் ஒன்றில்
நடித்து முடித்துள்ள தமன்னா, தெலுங்கில் சீட்டிமார் படத்தில் கபடி பயிற்சியாளராக நடிக்கிறார்.
தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் தமன்னா, சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது
விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நடிகை தமன்னா, சமூக வலைத்தளங்களில்
வைரலாகி வரும் தலையணை சேலஞ்சை செய்துள்ளார். தலையணையை மட்டும் அணிந்துகொண்டு, தரையில் படுத்தபடி
புகைப்படம் ஒன்றை தமன்னா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.

மலை ஏற முடியாமல் வருத்தத்தில் இருக்கும் ராய் லட்சுமி
மலை ஏற முடியாமல் வருத்தத்தில் இருக்கும் ராய் லட்சுமி
தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை ராய் லட்சுமி மலையேற முடியாமல் வருத்தத்தில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
மலை ஏற முடியாமல் வருத்தத்தில் இருக்கும் ராய் லட்சுமி
நடிகை ராய் லட்சுமி
மலை ஏறும் டிராக் முறை நடிகைகள் பலருக்கு சிறந்த பொழுதுபோக்கு. ராய் லட்சுமியும் அதில் ஒருவர். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் அடிக்கடி மலை ஏற சென்றுவிடுவார்.
கடந்த மார்ச் மாதத்தில் இது போல் கேரள மலைகளுக்கு செல்ல ராய் லட்சுமி முடிவு செய்திருந்தார்.
அதற்குள் கொரோனா பீதி அதிகரிக்க தொடங்கிவிட்டது. பிறகு ஊரடங்கும் தொடங்கிவிட்டதால் டிராக் செல்ல முடியவில்லை என்று ராய் லட்சுமி வருத்தத்தில் இருக்கிறார்.
‘மலை ஏறுவது எனது சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்று. இது எனக்கு திரில் அனுபவத்தை தரும்.
6 மாதங்களுக்கு ஒரு முறை டிராக் சென்றுவிடுவேன். இந்த தடவை ஊரடங்கு
காரணமாக நான் எங்கும் செல்ல முடியவில்லை. இது எனக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது என்கிறார் ராய் லட்சுமி
திடீரென மொட்டை அடித்த நடிகை
திடீரென மொட்டை அடித்த நடிகை
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள
நடிகை திடீரென மொட்டை அடித்ததால் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.
திடீரென மொட்டை அடித்த நடிகை….. ரசிகர்கள் ஷாக்
ஜோதிர்மயி
தமிழில் தலைநகரம், இதய திருடன், நான் அவனில்லை, வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்
ஜோதிர்மயி. இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2004-ல் நிஷாந்த் குமார் என்பவரை திருமணம்
செய்து 8 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து விட்டு 2011-ல் அவரை விவாகரத்து செய்து விட்டார். பின்னர் ஒளிப்பதிவாளரும்,
இயக்குனருமான அமல் நீரத் என்பவரை 2015-ம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அமல் நீரத் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் மனைவி ஜோதிர்மயியின் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு
ஷாக் கொடுத்துள்ளார். அதில் ஜோதிர்மயி மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறார். “தமசோமா ஜோதிர்கமய” என்ற
சமஸ்கிருத ஸ்லோகத்தை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதன் பொருள், இறைவா எங்களை இருளில் இருந்து வெளிச்சத்தற்கு
கொண்டு செல் என்பதாகும். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ஜோதிர்மயிக்கு என்னாச்சு? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதை செய்யாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது – திரிஷா
அதை செய்யாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது – திரிஷா
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா நடிக்காமல் இருப்பதே வருத்தமளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.
நடிக்காமல் இருப்பது வருத்தம் – திரிஷா
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர்
படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுபயணம் சென்று விடுவார்.
தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருப்பது போர் அடிப்பதாக சொல்கிறார் திரிஷா.
இது குறித்து அவர் கூறுகையில், நான் சுதந்திர பறவை. எப்போதும் வீட்டில் நான் இருந்தது கிடையாது. தோழிகளுடன் அரட்டை
அடிப்பதில் பிசியாக இருப்பேன். அவர்களுடன் ஊர் சுற்றுவேன். இது எல்லாம் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் நான் நேரம் போக்கும் முறை.
இப்போது வீட்டிலே இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. தோழிகளுடன் கூட வீடியோ காலில் பேசி விடுகிறேன்.
ஆனால் படப்பிடிப்புக்கு சென்று கேமரா முன்னால் நடிக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்றார் திரிஷா.
ஜோதிகா சர்ச்சை கருத்துக்கு-மக்கள் கொந்தளிப்பு
ஜோதிகா சர்ச்சை கருத்துக்கு-மக்கள் கொந்தளிப்பு
சமீபத்தில் விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகாவின் கருத்துக்கு இந்து தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜோதிகா கருத்துக்கு இந்து தலைவர்கள் கண்டனம்
நடிகை ஜோதிகா
முன்னணி நடிகையாக இருக்கும்போதே ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின்
சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தவர், 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.
சமீபத்தில் தனியார் அமைப்பு நடத்திய விழாவில் ராட்சசி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இது
சமீபத்தில் தனியார் டிவியில் ஒளிபரப்பானது. அதில் ஜோதிகா பேசிய பேச்சுக்கு தற்போது கண்டனங்கள் எழுந்துள்ளன.ஜோதிகா பேசியதாவது:-
நடிகை ஜோதிகா
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மிகவும் அழகானது. உதய்பூர் அரண்மனை போல் அழகாக இருக்கும். இதற்கு முன் நான்
பார்த்துள்ளேன். அங்கு போகாமல் இருக்காதீர்கள் என சிலர் கூறினர்.
ஆனால், கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை.
இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது.
கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி
மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் கோவிலுக்கு செல்ல
முடியவில்லை’ என பேசி உள்ளார்.ஜோதிகாவின் இந்த கருத்துக்கு இந்து தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அழுதேன்.. ஏமாற்றப்பட்டேன்… பார்வதி
அழுதேன்.. ஏமாற்றப்பட்டேன்… பார்வதி
தமிழ் மலையாள மொழிகளில் மிகப் பிரபலமாக இருக்கும் பார்வதி, அழுதேன், ஏமாற்றப்பட்டேன் என்று சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
அழுதேன்.. ஏமாற்றப்பட்டேன்… பார்வதி
பார்வதி
இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ‘பூ’ படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி. இதை தொடர்ந்து தனுஷ் உடன்
‘மரியான்’, ‘பெங்களூர் டேஸ்’ தமிழ் ரீமேக்கான ‘பெங்களூர் நாட்கள்’, ‘உத்தம வில்லன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்நிலையில் நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தைப்பருவ போட்டோவை பகிர்ந்து, ”எனக்கு கேமரா
என்றாலே பயம். அந்த லென்ஸ் மிக ஆழமாக என்னைக்குறி வைக்கும் போது நான் அழுவதை நிறுத்தவில்லை. சில, பல
முயற்சிகளுக்கு பிறகு நான் அங்கே தைரியமாக நின்றேன்.
குழந்தைப்பருவத்தில் பார்வதி
அந்த சிரிப்பு அங்கே எப்படி வந்தது ? நான் ஏமாற்றப்பட்டேன் மக்களே. நான் சிரித்தால் ஜெம்ஸ் (சாக்லெட்) வெளியில் வரும் என்றார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாராவை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி
நயன்தாராவை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி
இயக்குநர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ரீ ரெட்டி தற்போது நயன்தாராவை வம்புக்கு இழுத்திருக்கிறார்.
நயன்தாராவை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி
நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீ ரெட்டி
சினிமா துறையில் தொடர்ந்து சர்ச்சையாக பல விஷயங்கள் செய்து வருபவர் ஸ்ரீரெட்டி. இவர் தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல சினிமா நட்சத்திரங்கள் ஏமாற்றி விட்டார்கள் என பகிரங்கமாக புகார் கூறினார்.
மேலும் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழி சினிமா நட்சத்திரங்கள் பலருடன் படுக்கையை பகிர்ந்ததாக பெயர்களை வெளிப்படையாக கூறினார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர் “இது என் உடல்..
நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஏன் இங்கு வந்து கமெண்ட் செய்கிறீர்கள்” என கேட்டுள்ளார்.
“எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் பாய்பிரென்ட்டை மாற்றி கொண்டு தான் இருப்பேன்.”
“இதையே பெரிய ஹீரோயின்கள் பற்றி கமெண்ட் செய்வீர்களா? நயன்தாரா கூட தான் திருமணம் ஆன ஆண்கள், ஆகாதா ஆண்கள்
என பலருடன் காதலில் இருந்தார். அவரை பற்றி கமெண்ட் செய்ய உங்களுக்கு தைரியம் இருக்கா?. ஒரு ஸ்டார் ஹீரோயினுக்கும்,
வாய்ப்பு இல்லாமல் போராடும் நடிகைக்கும் இது தான் வித்தியாசம்,” என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
நயன்தாராவை இப்படி வெளிப்படையாக ஸ்ரீரெட்டி வம்புக்கு இழுத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தீப்பெட்டி கணேசனை நேரில் சந்தித்து உதவிய சினேகன்
தீப்பெட்டி கணேசனை நேரில் சந்தித்து உதவிய சினேகன்
பிரபல பாடலாசிரியர் மற்றும் பிக்பாஸ் சினேகன், ரெனிகுண்டா புகழ் தீப்பெட்டி கணேசனை சந்தித்து உதவி செய்துள்ளார்.
தீப்பெட்டி கணேசனை நேரில் சந்தித்து உதவிய சினேகன்
தீப்பெட்டி கணேசனை நேரில் சென்று சந்தித்து பேசிய சினேகன்.
ரெனிகுண்டா படத்தில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். இவர் சமீபத்தில் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டார்.
அதில் தனது குடும்பத்துக்கு உதவி தேவைப்படுவதாகவும், இது அஜித்துக்கு தெரிந்தால் கண்டிப்பாக உதவுவார் என்றும்
வீடியோவில் பேசினார். இதையடுத்து நடிகர் லாரன்ஸ், அஜித்திடம் இதை கொண்டு சேர்க்க முயற்சி செய்வதாகவும், அவரின் பிள்ளைகளின் படிப்புக்கு உதவுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரபல பாடலாசிரியருமான சினேகன் தீப்பெட்டி கணேசனை நேரில் சென்று சந்தித்துள்ளார். மேலும் அவரின்
சினேகம் செயலகம் அறக்கட்டளை சார்பில், தீப்பெட்டி கணேசனின் குடும்பத்திற்கு 2 வாரத்துக்கு தேவையான உணவு பொருட்களை
வழங்கியதோடு, அவரின் இரண்டு குழந்தைகளின் இந்த வருட கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதுபோல்
கஷ்டப்படும் கலைஞர்களுக்கு உதவ பலர் முன் வர வேண்டும் என மேலும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நடிகர் video
தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நடிகர் video
கொரொனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில், பிரபல நடிகர் அவரது தந்தைக்கு சேவிங் செய்து அசத்தி இருக்கிறார்.
தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நடிகர்
தந்தைக்கு சேவிங் செய்து அசத்திய நடிகர் சதீஷ்
கொரொனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கின்றனர். வழக்கமாக செய்யம் செயல்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
முக்கியமாக ஆண்களுக்கு முடி வெட்டும் பிரச்சனை பெரும் பிரச்சனையாய் மாறி இருக்கிறது. பல பிரபலங்களும் மீசை தாடி வளர்ந்த நிலையில் புகைப்படங்கள் வெளியிடுகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சதீஷ் அவரது தந்தைக்கு சேவிங் செய்து அழகு படுத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
🤓🤓🤓 pic.twitter.com/6jeRC3mgFx
— Sathish (@actorsathish) April 21, 2020
மாஸ்க் செய்ய கற்றுக் கொடுக்கும் வித்யா பாலன்
மாஸ்க் செய்ய கற்றுக் கொடுக்கும் வித்யா பாலன்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் எப்படி செய்வது என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறார்.
மாஸ்க் செய்ய கற்றுக் கொடுக்கும் வித்யா பாலன்
கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமா நடிகைகள் விதவிதமாக எதையாவது செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் பாலிவுட்
நடிகை வித்யா பாலன், வீட்டில் இருக்கும் துணிகளை கொண்டு எளிதாக மாஸ்க் தயாரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனாவைத் தடுப்பதில் மாஸ்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் உலகம் முழுவதுமே மாஸ்குகளுக்கு
தட்டுப்பாடு ஏற்பட்டள்ளது. நமது பிரதமர் கூறியதை போன்று நமக்கு தேவையான மாஸ்கை நம் வீட்டிலேயே உருவாக்க முடியும்.
துப்பட்டா, தாவணி, பழைய சேலை இப்படி ஏதாவது பயன்படுத்தாத பழைய துணியை எடுத்துக் கொள்ளுங்கள்.
இரண்டு வளையங்கள் தேவைப்படும், பைகள், ஸ்கிரீன்களில் உள்ள வளையத்தையோ அல்லது நாம் தலை மற்றும் காதுகளில்,
கைகளில் பயன்படுத்தும் வளையத்தையோ, அல்லது ரப்பர் பேண்டையே எடுத்துக் கொண்டு துணிகளை நான்கு மடங்காக
மடித்து அதன் ஓரத்தில் வளையத்தை மாட்டி எளிமையான முறையில் மாஸ்க் தயாரித்து விடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

நான் சைவம்! திண்கிறது அசைவம்தான்சீமான் video
நான் சைவம்! திண்கிறது அசைவம்தான் video
ஐயா எனக்கு வயது 62 ஆகிறது. எனக்கும் உங்கள் கானொளிகளை கேட்டபிறகு
தான் நான் தமிழன் என்ற பெருமையும் என் வரலாறும் தெரிந்தது. அதுவரை
நான்( நாங்கள் ) சான்சி ராணியையும் சிவாசி வரலாற்றையும்தான் படித்தோம்.
இப்பொழுதெல்லாம் என்னால் இயன்ற வரை தூய தமிழில் எழுதவும் பேசவும் செய்கிறேன்.
நன்றி.வாழ்க வளமுடன்.உங்கள் பின்னால் இளைஞர்கள் மட்டுமல்ல என்னைப்போன்ற
மூத்த குடிமகன்களும் உள்ளார்கள். நாம்தமிழர் அதிகாரம் விரைவில் நம் கையில். இந்த பிரபஞ்ஞம் சக்தி உள்ளது. சத்தியமாக உள்ளது. நாம் தமிழர். நாமே தமிழர்.
இந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் – கங்கனா ரணாவத்
இந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் – கங்கனா ரணாவத்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், இந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் – கங்கனா ரணாவத் வற்புறுத்தல்
கங்கனா ரணாவத்
பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத். இவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான ‘தலைவி’ படத்தில் நடித்து வருகிறார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதுகளையும்
பெற்றுள்ளார். இவரது சகோதரி ரங்கோலி சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வந்தார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின.
சமீபத்தில் மொராதாபாத்தில் கொரோனா வைரஸ் சோதனைக்காக சென்ற சுகாதார பணியாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து
டுவிட்டரில் கருத்து பதிவிட்டார். இதனால் அவருக்கு கண்டனங்கள் எழுந்தன. ரீமா காக்தி என்ற பெண் இயக்குனர் ரங்கோலியை கைது செய்ய வேண்டும் என்றார். டுவிட்டருக்கும் புகார்கள் அனுப்பினர்.
கங்கனா ரணாவத்
இதைத் தொடர்ந்து டுவிட்டர் நிறுவனம் ரங்கோலியின் கணக்கை முடக்கியது. இதனால் ஆத்திரமான கங்கனா ரணாவத் சகோதரிக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
. அதில் பேசி இருப்பதாவது: எனது சகோதரி மருத்துவர்களையும், காவல் துறையினரையும் தாக்கியவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்றுதான் கூறினார்.
எந்த சமூகத்துக்கும் எதிராக அவர் கருத்து சொல்லவில்லை. அவர் மீது பாராகானும், ரீமாவும் தவறான குற்றச்சாட்டை சுமத்தி
உள்ளனர். இந்தியாவில் டுவிட்டர் தளத்தை முடக்கிவிட்டு நமது நாட்டுக்கு சொந்தமாக ஒரு புதிய சமூக வலைத்தளத்தை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஊரடங்கு நேரத்தில் மதுபானம் விற்ற நடிகர் கைது.
ஊரடங்கு நேரத்தில் மதுபானம் விற்ற நடிகர் கைது.
ஊரடங்கை மீறி காரில் மதுபானம் விற்ற சினிமா துணை நடிகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மதுபானங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊரடங்கு நேரத்தில் மதுபானம் விற்ற துணை நடிகர் கைது
கைது செய்யப்பட ரிஸ்வான்
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதை பயன்படுத்தி யாராவது சட்டவிரோதமாக மதுபானம் விற்கிறார்களா? என போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு
வருகின்றனர். இந்தநிலையில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கே.கே.நகர், பிருந்தாவன் நகர்
பகுதியில் ரிஸ்வான் (வயது 30), என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்றபோது எம்.ஜி.ஆர். நகர் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர், சினிமாவில் துணை நடிகராக நடித்து வருவது தெரிந்தது. அவரிடமிருந்து 69 மதுபாட்டில்கள் மற்றும்
ரூ.2,500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ரிஸ்வான் துணை நடிகர் என்பதால் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிந்தது.
அதேபோல் விருகம்பாக்கம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தசரதபுரம், மீன்
மார்க்கெட் அருகில் காரில் வந்து மதுபானம் விற்பனை செய்த 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள்,
சூளைமேட்டை சேர்ந்த தேவராஜ்(40), சாலிகிராமத்தை சேர்ந்த பிரதீப்(31) என்பது தெரிந்தது.
2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 189 மது பாட்டில்கள், ரூ.20 ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல்
செய்தனர். பின்னர் கைதான துணை நடிகர் உள்பட 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

டிக் டாக் வீடியோவில் போதையில் ஆடும் நடிகை திரிஷா
டிக் டாக் வீடியோவில் போதையில் ஆடும் நடிகை திரிஷா
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் நடிகை திரிஷா, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் திரிஷா
நடிகை திரிஷா
கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில், நடிகை திரிஷா டிக் டாக் பக்கம் களமிறங்கி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் பிசியாக வலம் வந்த நடிகை திரிஷா, கேமரா
முன் நிற்க முடியாமல் இருக்கும் தருணத்தை ரொம்ப மிஸ் பண்ணுவதாக இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
டிக் டாக் வீடியோவில் நடிகை திரிஷா
திரிஷா இந்த நேரத்தில் வெளியே போக முடியாததால், டிக் டாக் அக்கவுண்ட் தொடங்கி ரசிகர்களுக்காக தினமும் வித விதமாக
டான்ஸ் ஆடும் வீடியோக்களை போட்டு வைரலாக்கி வருகிறார். தனது இன்ஸ்டா பக்கத்திலும் டிக் டாக் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்

விவசாயம் செய்யும் இளம் நடிகை – வைரலாகும் வீடியோ
விவசாயம் செய்யும் இளம் நடிகை – வைரலாகும் வீடியோ
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் இளம் நடிகை ஒருவர் விவசாயம் செய்து வருகிறார்.
விவசாயம் செய்யும் இளம் நடிகை – வைரலாகும் வீடியோ
கீர்த்தி பாண்டியன்
பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கடந்தாண்டு வெளியான தும்பா படம் மூலம் திரையுலகில்
அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கி பிரபலமான கோகுல் டைரக்டு செய்யும் இப்படத்தில் கீர்த்தி
பாண்டியனின் தந்தை அருண் பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கில் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன்
சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கீர்த்தி பாண்டியன் டிராக்டர் ஓட்டியபடி சென்று நிலத்தில் உழுவது
போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. “கொரோனா விடுமுறையில் சொந்த நிலத்தில் உழுவதற்காக வந்து விட்டேன். இது சுற்றிலும்
வேலிகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்ட இடம். பொது இடம் அல்ல. சொந்த நிலத்தில் உழுவது ஊரடங்கை மீறுவது போன்று
ஆகாது நாங்கள் ஊரடங்கை மதிக்கிறோம்” என்றும் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் நடிகை
அமெரிக்காவில் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் நடிகை
அமெரிக்காவில் சரியான தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் தவித்து வருவதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சரியான தங்குமிடம் இல்லை…. நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் நடிகை
சவுந்தர்யா சர்மா
அனுபம் கெர் தயாரித்த ராஞ்சி டைரிஸ் படம் மூலம் அறிமுகமானவர் சவுந்தர்யா சர்மா. இந்த படத்துக்காக சில பட
விழாக்களில் அறிமுக நடிகை விருதை வாங்கினார். பல் மருத்துவரான இவர், நடிப்பு ஆர்வம் காரணமாக, தேசிய
நாடகப்பள்ளியில் பயின்றார். சொந்தமாக மஸ்டர்ட் அண்ட் ரெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இதன் மூலம் படங்கள் தயாரிக்க இருக்கிறார். இவர் தனது அடுத்த பட வேலைகளுக்காக, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிலிம்
அகாடமியில் நடக்கும் ஒர்க்ஷாப்பில் கலந்துகொள்ள சென்றிருந்தார். கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அங்கு சிக்கியுள்ளார்.
சவுந்தர்யா சர்மா
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரதாண்டவம் ஆடுகிறது. இந்நிலையில் நியூயார்க்கில் சிக்கியுள்ள சவுந்தர்யா,
மாணவர்களை மீட்க இந்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ‘சுமார் 400 மாணவர்கள் இங்கு
சிக்கியுள்ளனர். வாழ்வதற்கு கடினமான சூழல் நிலவுகிறது. ஒவ்வொருவருக்கும் சவாலான நேரம்.
சரியான தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகிறார்கள். இந்திய தூதரகம் அவர்களுக்கு எந்த
உதவியையும் செய்யவில்லை. அதனால் மத்திய வெளியுறவு அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா நமக்கு உணர்த்திய பாடம் – காஜல்
கொரோனா நமக்கு உணர்த்திய பாடம் – காஜல்
கொரோனா நமக்கு பாடத்தை உணர்த்தி இருக்கிறது என்று தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கூறியிருக்கிறார்.
கொரோனா நமக்கு உணர்த்திய பாடம் – காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏதேதோ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் கடைசியாக மகிழ்ச்சியான
வாழ்க்கைக்கு தேவையானது மன அமைதி மட்டும்தான். அது இருந்தால் வேறு எதுவும் இல்லாமல் போனாலும் பரவாயில்லை
என்று இந்த கொரோனா காலத்தில் எல்லோருக்கும் புரிந்து இருக்கும்.
எனது சின்ன வயதில் நான் கூட எல்லா வசதிகளுடன் ஆடம்பரமாக வாழ்கிறவர்களை பார்க்கும்போது நாமும் இப்படி வாழ வேண்டும்
என்று நினைத்தேன். ஆனால் இப்போது வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்த பிறகு மன அமைதியை தவிர முக்கியமானது
வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு நன்றாக புரிந்துள்ளது. எந்த மாதிரியான நெருக்கடியும் இல்லாமல் அமைதியாக இருக்கத்தான்
நான் விரும்புகிறேன். எவ்வளவு பணம் இருந்தாலும் அமைதி இல்லாமல் போனால் என்ன பயன். இப்போது கொரோனாவால்
மக்கள் கஷ்டப்படும் இந்த நேரத்தில் பணத்தை விட மன அமைதி முக்கியம் என்பது எல்லோருக்குமே புரிந்து இருக்கும்.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.







