ஜோதிகா சர்ச்சை கருத்துக்கு-மக்கள் கொந்தளிப்பு

Spread the love

ஜோதிகா சர்ச்சை கருத்துக்கு-மக்கள் கொந்தளிப்பு

சமீபத்தில் விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகாவின் கருத்துக்கு இந்து தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜோதிகா கருத்துக்கு இந்து தலைவர்கள் கண்டனம்
நடிகை ஜோதிகா


முன்னணி நடிகையாக இருக்கும்போதே ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின்

சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தவர், 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.

    சமீபத்தில் தனியார் அமைப்பு நடத்திய விழாவில் ராட்சசி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இது

    சமீபத்தில் தனியார் டிவியில் ஒளிபரப்பானது. அதில் ஜோதிகா பேசிய பேச்சுக்கு தற்போது கண்டனங்கள் எழுந்துள்ளன.ஜோதிகா பேசியதாவது:-

    நடிகை ஜோதிகா

    தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மிகவும் அழகானது. உதய்பூர் அரண்மனை போல் அழகாக இருக்கும். இதற்கு முன் நான்

    பார்த்துள்ளேன். அங்கு போகாமல் இருக்காதீர்கள் என சிலர் கூறினர்.

    ஆனால், கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை.

    இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது.

    கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி

    மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் கோவிலுக்கு செல்ல

    முடியவில்லை’ என பேசி உள்ளார்.ஜோதிகாவின் இந்த கருத்துக்கு இந்து தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

        Leave a Reply