காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு
Posted in YouTube Tamil News இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

வவுனியாவில் ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றாவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியாவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு செல்லும் பாதையில் வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றாவுக்கு போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும் அவரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்பட்ட போராட்டகாரர்களை

தடுத்து நிறுத்திய பொலிசார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர்.

இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது.

இதனை அடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றா மற்றும் போராட்டத்தினை காணொளி எடுத்த மீரா ஜாஸ்மின் ஆகிய இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்ற கட்டளையினை அவமதித்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அமைதிக்கு பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வவுனியா பொலிஸார்

அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றாவை எதிர்வரும் 8 ஆம்

திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் போராட்டத்தினை காணொளி எடுத்த பெண்ணிற்கு பிணை வழங்கியும் வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இன்று (08) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி சி. ஜெனிற்றாவுக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீடியோ

Posted in சினிமா

இந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் – கங்கனா ரணாவத்

இந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் – கங்கனா ரணாவத்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், இந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டுவிட்டரை முடக்க வேண்டும் – கங்கனா ரணாவத் வற்புறுத்தல்
கங்கனா ரணாவத்


பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத். இவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான ‘தலைவி’ படத்தில் நடித்து வருகிறார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதுகளையும்

பெற்றுள்ளார். இவரது சகோதரி ரங்கோலி சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வந்தார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின.

சமீபத்தில் மொராதாபாத்தில் கொரோனா வைரஸ் சோதனைக்காக சென்ற சுகாதார பணியாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து

டுவிட்டரில் கருத்து பதிவிட்டார். இதனால் அவருக்கு கண்டனங்கள் எழுந்தன. ரீமா காக்தி என்ற பெண் இயக்குனர் ரங்கோலியை கைது செய்ய வேண்டும் என்றார். டுவிட்டருக்கும் புகார்கள் அனுப்பினர்.

கங்கனா ரணாவத்

இதைத் தொடர்ந்து டுவிட்டர் நிறுவனம் ரங்கோலியின் கணக்கை முடக்கியது. இதனால் ஆத்திரமான கங்கனா ரணாவத் சகோதரிக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

. அதில் பேசி இருப்பதாவது: எனது சகோதரி மருத்துவர்களையும், காவல் துறையினரையும் தாக்கியவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்றுதான் கூறினார்.

எந்த சமூகத்துக்கும் எதிராக அவர் கருத்து சொல்லவில்லை. அவர் மீது பாராகானும், ரீமாவும் தவறான குற்றச்சாட்டை சுமத்தி

உள்ளனர். இந்தியாவில் டுவிட்டர் தளத்தை முடக்கிவிட்டு நமது நாட்டுக்கு சொந்தமாக ஒரு புதிய சமூக வலைத்தளத்தை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.