Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் இளவரசர் உடல் 17 நல்லடக்கம்

பிரிட்டன் இளவரசர் உடல் 17 நல்லடக்கம்

பிரிட்டன் இளவரசர் பிலிப் அவர்கள் தனது 99 தாவது வயதில் மரணமானார் ,இவரது உடல் ராயல்

குடும்பத்தின் முறைப்படி எதிர்வரும் 17 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப் படும் என குடும்பம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது

இவரது இறுதி கிரியைகளின் பொழுது 800 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்க பட்டுள்ளனர்

,மேலும் மிக நெருங்கிய உறவினர் முப்பது பேர் மட்டும் நல்லடக்கம் செய்யப் படும் பகுதியில் அனுமதிக்க படுகின்றனர்

அதிக வேண்டியவர்கள் வருகை தரவுள்ளதால் ஆளும் பிரதமர் போரிஸ் அங்கு செல்லாது

தவிர்த்து கொள்கிறார் என தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள்

    சிவப்பு கடல் பகுதியில் வைத்து ஈரான் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல்

    சிவப்பு கடல் பகுதியில் வைத்து ஈரான் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல்

    இந்த வார முற் பகுதியில் சிவப்பு கடல் பகுதியில் வைத்து ஈரானுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது

    தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக உலங்குவானூர்தி ஒன்று பறப்பில் ஈடுபட்டு

    கண்காணித்துள்ளது ,அதன் பின்னர் ஒருமணி இடைவெளிக்குள் இரண்டு வேக தாக்குதல் படகுகள் குறித்த சரக்கு கப்பலை சுற்றிவளைத்து தாக்கின .

    மேற்படி தாக்குதல் சம்பவம் ராடர் ,சாட்லைட் உதவியுடன் கண்டுபிடிக்க பட்டுள்ளது

    குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் மீது நாம் பழிவாங்கும் தாக்குதல்களை தொடுப்போம் என ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது நாடுகளுக்கு இடையில் போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது

    இஸ்ரேல் மேற்படி தாக்குதலை நடத்தியுள்ளதாக முக்கிய உளூவுத்துறை ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

    இஸ்ரேல் தாக்குதல்
    இஸ்ரேல் தாக்குதல்
      Posted in உலக செய்திகள்

      ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க தயார் – அமெரிக்கா

      ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க தயார் – அமெரிக்கா

      ஈரான் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கையெழுத்து போட்டன.

      ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க தயார் – அமெரிக்கா அறிவிப்பு

      ஈரான் 2015-ம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கையெழுத்து போட்டன. முழுமையான கூட்டு செயல்திட்டம்

      என்றழைக்கப்படுகிற இந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிடவும், யுரேனியம் கையிருப்பை 15 ஆண்டுகளில் குறைக்கவும், அதற்கு பதிலாக

      அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அந்த நாட்டின்மீதான பொருளாதார தடைகளை திரும்பப்பெறவும் வழிவகை செய்துள்ளது.

      ஒபாமா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து, அவருக்கு பின்னர் வந்த டிரம்ப் காலத்தில் (2018) அமெரிக்கா விலகியது. இப்போது அமெரிக்காவில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜோ பைடன் ஜனாதிபதியாகி இருக்கிறார். இந்த நிலையில், அணுசக்தி தவிர்ப்பு

      ஒப்பந்தத்துக்கு ஒவ்வாத வகையில் ஈரான் மீது போடப்பட்ட பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

      இதுகுறித்த அறிவிப்பை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ளார். ஆனால் அதுபற்றிய கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

      வியன்னாவில் அமெரிக்காவும், ஈரானும் திரைமறைவு பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

        Posted in உலக செய்திகள்

        ரஷியா-உக்ரைன் எல்லை பதற்றம்… போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா

        ரஷியா-உக்ரைன் எல்லை பதற்றம்… போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா

        ரஷியா-உக்ரைன் எல்லை பதற்றம்… போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா
        ரஷிய கடற்படையின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, அமெரிக்க கடற்படை உளவு

        கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

        ரஷியா-உக்ரைன் எல்லை பதற்றம்… போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா
        பயிற்சியில் ஈடுபட்டுள்ள ரஷிய படை

        உக்ரைன் எல்லை அருகே ரஷிய ராணுவம் பயிற்சியில் ஈடுபட்டது. உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லை பகுதியான டான்பாஸ் மாகாணத்தை கைப்பற்ற ரஷியா முயற்சி செய்வதாக அந்நாடு

        குற்றம்சாட்டி வருகிறது. இதனால் ரஷிய எல்லையில் உக்ரைன் படைகளை குவித்து வருகிறது. இதை காரணம் காட்டி ரஷியாவும் தன் பங்கிற்கு படைகளை குவித்து வருகிறது. எல்லையில் ரஷியா மேற்கொண்டுள்ள ராணுவ பயிற்சி பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

        இந்த சூழ்நிலையில், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை விரைவில் கருங்கடல் பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அமெரிக்க கடற்படை வழக்கமாக கருங்கடலில் பயிற்சி

        மேற்கொள்கிறது. ஆனால் இப்போது போர்க்கப்பல்களை அனுப்புவதன்மூலம், ரஷியாவுக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவிப்பதையே காட்டுகிறது.

        மேலும், ரஷிய கடற்படையின் நடவடிக்கைகள் மற்றும் கிரிமியாவில் துருப்புக்களின் நகர்வுகளை கண்காணிப்பதற்காக, அமெரிக்க கடற்படை கருங்கடல் பகுதியில் உள்ள சர்வதேச

        வான்வெளியில் உளவு கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        தொடரும் Northern Ireland கலவரம் எரிக்க பட்ட பேரூந்து

        தொடரும் Northern Ireland கலவரம் எரிக்க பட்ட பேரூந்து

        பிரிட்டன் – வட அயர்லாந்து பகுதியில் கலகக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் தொடர்

        வன்முறைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இந்த கலவரத்தில் பேரூந்து ஒன்றை மடக்கி பிடித்த கலக காரர்கள் அதனை தீ வைத்து எரித்தனர்

        இதனால் அந்த பேரூந்து முற்றாக எரிந்து அழிந்தது ,அருகில் உள்ள கட்டடங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன

        இதுவரை முப்பதுக்கு மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது

        எரிக்க பட்ட பேரூந்து
        எரிக்க பட்ட பேரூந்து
          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டனில் வெடித்து சிதறிய பக்டரி வீடியோ

          பிரிட்டனில் வெடித்து சிதறிய பக்டரி வீடியோ

          சற்று முன்னர் லண்டன் பகுதியில் அமைய பெற்றுள்ள Ohio என்ற பெயிண்ட் தயாரிக்கும்

          தொழில்சாலை ஒன்று திடீரென வெடித்து சிதறியது .

          இந்த வெடிப்பு சம்பவத்தில் அந்த நிறுவனம் பற்றி எகிறது .

          மேற்படி வெடி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,இதனால் ஏற்பட்ட முழுமையான சேதங்கள் இந்த செய்தி எழுதும் வரை தெரியவரவில்லை

          மேற்படி சம்பவம் தொடர்ப்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

          வெடித்து சிதறிய பக்டரி

          வெடித்து சிதறிய பக்டரி
            Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

            இஸ்ரேல் உளவாளிகளை மடக்கி பிடித்த ஈரான்

            இஸ்ரேல் உளவாளிகளை மடக்கி பிடித்த பிடித்த ஈரான்

            ஈரான் நாட்டுக்குள் நுழைந்து அவர்களது முக்கிய நடமாட்டங்களை அறிந்து தகவல் அனுப்பி வந்த

            இஸ்ரேல் உளவாளிகள் ஏழுக்கு மேற்பட்டவர்களை தென் வடக்கு பகுதியில் வைத்து ஈரான் இரகசிய நடவடிக்கை பிரிவினர் கைது செய்துள்ளனர்

            கைதானவர்களிடம் உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது

            ஈரானின் அணுஉலைகள் மீது தாக்குதல் நடத்த படும் என்ற நேரடியாக மிரட்டல் விடுத்து ,இஸ்ரேல் போர் முழக்கத்தை வெளியிட்டது

            இவ்விதமான அறிவித்தல் வெளியாகி சில மாதங்களில் இந்த உளவாளிகள் கைது செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

              Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

              ஒரே வீட்டுக்குள் ஆறு சடலங்கள் – நடந்த கொடூர படுகொலை

              ஒரே வீட்டுக்குள் ஆறு சடலங்கள் – நடந்த கொடூர படுகொலை

              அமெரிக்கா suburban Dallas பகுதியில் ஒரே வீட்டுக்குள் ஆறு பேர் சடலங்களாக மீட்க பட்டுள்ளனர்

              ,18 வயது மதிக்க தக்க சகோதரர் , தாய்,தந்தை,பாட்டி,இவர்களை கொலை செய்து பின்னர் இருவரும் தற்கொலை புரிந்துள்ளனர்

              குறித்த நபர்கள் சடலம் குறித்த வீட்டுக்குள் ஒருவாரமாக அழுகிய நிலையில் இருந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்

              இந்த அதிர்ச்சிகர படுகொலைக்கு உரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,கொரனோ

              காலத்தில் மன அழுத்தம் காரணாமாக பல தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                காட்டுக்குள் கடும் சண்டை 22 இந்திய இராணுவம் பலி -தொடரு ம் வேட்டை

                காட்டுக்குள் கடும் சண்டை 22 இந்திய இராணுவம் பலி -தொடரு ம் வேட்டை

                மாவோயிஸ்டுகளுடன் நடந்த சண்டையில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

                சத்தீஸ்கரை அதிர வைத்த என்கவுண்டர்… வீரர்கள் பலி 22 ஆக உயர்வு
                துப்பாக்கி சண்டை நடந்த பகுதி
                ராய்ப்பூர்:

                சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. அங்குள்ள காட்டுப்பகுதிகளில் பதுங்கி இருக்கும் மாவோயிஸ்டுகளை பிடிக்க சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு படையினர் தேடுதல்

                வேட்டை நடத்தி வருகிறார்கள். சுக்மா, பிஜப்பூர், தண்டேவாடா உள்ளிட்ட மாவட்டங்களின் காட்டுப் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

                இந்த நிலையில் நேற்று சி.ஆர்.பி.எப்.பின் சோப்ரா கமாண்டோ படை, மாவட்ட ரிசர்வ் படை மற்றும் சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்ட படைப் பிரிவுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து காட்டுப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

                சுக்மா-பிஜப்பூர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

                துப்பாக்கி சண்டை நடந்த பகுதி

                மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் காயம் அடைந்த 30 பாதுகாப்பு படை வீரர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

                பல வீரர்களை காணவில்லை. அவர்கள் காட்டுக்குள் வழி தவறி சிக்கினார்களா? அல்லது ஆபத்தில் இருக்கிறார்களா? என்பது தெரியாமல் இருந்தது. அவர்களை மீட்கும் பணியை தீவிரப்படுத்தினர். அதேசமயம், தப்பி ஓடிய மாவோயிஸ்டுகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

                அதேசமயம், பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 9 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டார்கள். இதில் ஒரு பெண் மாவோயிஸ்டும் அடங்கும்.

                இந்த நிலையில் காணாமல் போன வீரர்களில் 17 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதன்மூலம், உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 22 வீரர்கள் உயிரிழந்ததை பிஜப்பூர் எஸ்பி கமலோச்சன் காஷ்யப் உறுதி செய்தார்.

                மாவோயிஸ்டுகளுடன் நடந்த சண்டையில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதில் வீரர்களின் தியாகம், என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். காயமடைந்த வீரர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

                மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டுவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியதாவது:

                சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த நமது துணிச்சலான பாதுகாப்பு படை வீரர்கள் தியாகத்திற்கு நான் தலை வணங்குகிறேன்.

                அவர்களின் வீரத்தை தேசம் ஒருபோதும் மறக்காது. அவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

                அமைதி மற்றும் முன்னேற்றத்தில் எதிரிகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன், என்று கூறி உள்ளார்.

                  Posted in உலக செய்திகள்

                  கமல்ஹாசன் குறித்து அவதூறு: கோவையில் நடிகர் ராதாரவி மீது வழக்கு

                  கமல்ஹாசன் குறித்து அவதூறு: கோவையில் நடிகர் ராதாரவி மீது வழக்கு

                  கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதாவை சேர்ந்த வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.

                  கமல்ஹாசன் குறித்து அவதூறு: கோவையில் நடிகர் ராதாரவி மீது வழக்கு
                  நடிகர் ராதாரவி
                  கோவை:

                  கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்பிரமணியனிடம் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஒரு புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

                  கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதாவை சேர்ந்த வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.

                  கமல்ஹாசன்

                  இவருக்கு ஆதரவாக கடந்த 28-ந் தேதி நடிகர் ராதாரவி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசனின் தனிப்பட்ட நடத்தை குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

                  இதனை ஆராய்ந்து பார்த்த தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்பிரமணியன் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் கொடுத்தார்.

                  அதன்பேரில் நடிகர் ராதாரவி மீது தனிப்பட்ட நபரின் நடத்தை குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    லண்டனில் பொலிஸ் வானை தீவைத்து எரித்த வாலிபர்

                    லண்டனில் பொலிஸ் வானை தீவைத்து எரித்த வாலிபர்

                    பிரிட்டனில் அமெரிக்காவில் இடம்பெற்ற கறுப்பினத்தவர் கொலையை அடுத்து லண்டன் Bristol city பகுதியில் மாபெரும்

                    ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது ,இதில் கலந்து கொண்ட இருபத்தி ஐந்து வயதுடைய வாலிபர் ஒருவர்

                    அங்கு மக்கள் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ,பயன் படுத்திய போலீஸ் வான் ஒன்றினை தீ வைத்து எரித்துள்ளார்

                    மேற்படி தீவைப்பு சம்பவத்துடன் ,மேலும் ஐந்து கிரிமினல் குற்ற சாட்டின் கீழ் குறித்த வாலிபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்த பட்டுள்ளார்

                    இவருக்கு பல்லாண்டு சிறை தண்டனை வழங்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது

                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      பிரிட்டனில் இரத்த உறைதல் அச்சத்திற்கு மத்தியிலும் Oxford/AstraZeneca ஊசிகளை செலுத்தும் மக்கள்

                      பிரிட்டனில் இரத்த உறைதல் அச்சத்திற்கு மத்தியிலும் Oxford/AstraZeneca ஊசிகளை செலுத்தும் மக்கள்

                      பிரிட்டனில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் அச்சம் தொடர்ந்த வண்ணம் இருக்க இந்த நோயிற்கு முதல் தடுப்பு மருந்து கண்டு பிடிக்க பட்டது .

                      Oxford/AstraZeneca நிறுவனங்களின் மருந்துகள் இரத்த உறைதலை ஏற்படுத்தி மரணங்கள் நிகழ்வதான

                      கருத்து ஏற்பட்டுள்ள நிலையிலும் ,அவ்விதமான சில மரணங்கள் இடம் பெற்றுள்ள நிலையிலும் ,அது தாண்டி மக்கள் இதனை தொடர்ச்சியாக செலுத்தி வருகின்றனர் .


                      சமீப நாட்களில பிரிட்டனில் அதிகளாவான மக்கள் இதனை செலுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                      ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இவை நிறுத்த பட்டும் ,60 வயதுக்கு மேலானவர்களுக்கு மட்டும் செலுத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        பிரிட்டனில் £122 மில்லியனை லொத்தரியில் அள்ளி சென்ற நபர்

                        பிரிட்டனில் £122 மில்லியனை லொத்தரியில் அள்ளி சென்ற நபர்

                        பிரிட்டனில் நேற்று இடம்பெற்ற யூரோ மில்லியன் லொத்தர் குழுக்களில் 122 மில்லியன் பவுண்டுகளை நபர் ஒருவர் அள்ளி சென்றுள்ளார் .

                        இதுவரை இடம்பெற்ற குழுக்களில் ஐந்தாவதாக அதிக கூடிய தொகையை பெற்ற நபராக இவர் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்

                        இவர் பெற்ற மொத்த தொகை £122,550,350.80. என அறிவிக்க பட்டுள்ளது

                        கொரனோ காலத்தில் அதிக தொகையை தட்டி சென்ற நபராக இவர் விளங்குகின்றமை குறிப்பிட தக்கது

                        The winning numbers are 04, 21, 34, 40, 47, and the Lucky Stars are 02 and 05.

                          Posted in உலக செய்திகள்

                          பாட்டிக்கு வந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு 3 பேர் பலி – 4 பேர் காயம்

                          பாட்டிக்கு வந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு 3 பேர் பலி – 4 பேர் காயம்

                          அமெரிக்கா வடக்கு கரோலினா பகுதியில் இடம் பெற்ற பாட்டி ஒன்றுக்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் அங்கு

                          கலந்து கொண்டவர்களில் மூவர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் நால்வர் மிக ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                          இந்த கொலை வெறி தாக்குதலுக்கு உரிய காரணம் இதுவரை தெரியவரவில்லை , ,மேற்படி

                          சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                            Posted in உலக செய்திகள்

                            13 வயது சிறுவனை சுட்டு கொன்ற பொலிஸ் – கொந்தளிப்பில் மக்கள்

                            13 வயது சிறுவனை சுட்டு கொன்ற பொலிஸ் – கொந்தளிப்பில் மக்கள்

                            அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கி வைத்திருந்த நிலையில் அவனை காவல்துறையினர் சுட்டு படு கொலை செய்துள்ளனர்

                            கையில் வைத்திருந்த துப்பாக்கியினை கீழே போடும் படி போலீசார் அறிவித்தல் விடுத்த

                            பொழுதும் அதனை அவன் செய்திட மறுத்த நிலையில் இந்த சூட்டு தாக்குதல் இடம் பெற்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்

                            மேற்படி சிறுவன் படுகொலை தொடர்பாக நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது

                            ,அமெரிக்கா காவல்துறையின் இனவெறி தொடர்ந்து நீடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                              Posted in உலக செய்திகள்

                              கொரனோ எதிரொலி- லண்டனுக்குள் 39 நாட்டு மக்கள் நுழைய தடை

                              கொரனோ எதிரொலி- லண்டனுக்குள் 39 நாட்டு மக்கள் நுழைய தடை

                              இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ நோயின் தீவிர பரவலை அடுத்து ஆப்பிரிக்கா, மத்திய

                              கிழக்கு நாடுகள் மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட 39 நாடுகளை சேர்ந்த நாட்டு மக்கள் நுழைய தடை விதிக்க பட்டுள்ளது

                              ஆப்பிரிக்கா நாட்டில் பரவி வரும் கொரனோவை விட கொடிய நோயானது பிரிட்டனில் பரவி

                              வருகிறது ,அதனை தடுக்கவே இந்த சிவப்பு பட்டியல் தடையை பிரிட்டன் விதித்துள்ளது குறிப்பிட தக்கது

                                Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                                ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

                                ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

                                திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 2 அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

                                மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
                                முக ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
                                சென்னை:

                                தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன.

                                அதேநேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

                                தேர்தலில் பண வினியோகத்தைக் கட்டுப்படுத்த பறக்கும் படையினர் வீதி வீதியாக சோதனை நடத்தி வரும் நிலையில், வருமான வரித்துறையினரும் தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

                                அந்த வகையில் திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 16 இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை நடைபெற்றது.

                                திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் எ.வ.வேலுவை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்று இருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கி இருந்த கல்லூரியிலேயே சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

                                இந்தநிலையில் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை மருமகன் சபரீசன் ஆகியோர் வசிக்கும் நீலாங்கரை வீட்டில் இன்று வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

                                காலை 7 மணி அளவில் நீலாங்கரையில் உள்ள செந்தாமரை இல்லத்துக்கு சென்ற வருமான வரித்துறையினர் அங்கு பணம் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி அதிரடி சோதனை நடத்தினார்கள். வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை நடைபெற்றது.

                                அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மோகன் எம்.எல்.ஏ.வின் மகன் கார்த்திக் மோகன் மற்றும் ஜி ஸ்கொயர் பாலா உள்ளிட்டோரின் வீடுகள் உள்பட 4 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

                                வருமானவரித்துறையினர் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர்.

                                அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளரும் தொழில் அதிபருமான சந்திரசேகரன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.8 கோடி பணம் சிக்கியது.

                                இதேபோன்று அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினரான இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி ரூ.8 கோடி வரை பணத்தை கைப்பற்றினார்கள்.

                                இந்தநிலையில்தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

                                மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனுக்கு கார்த்திக் மோகன், ஜி ஸ்கொயர் பாலா ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

                                அந்த அடிப்படையில் தான் சபரீசன் வீட்டில் சோதனை நடைபெற்ற அதே நேரத்தில் இவர்களது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

                                  Posted in உலக செய்திகள்

                                  கவுதிய இராணுவம் அல்கெய்தாவுடன் தொடர்பாம் – இஸ்ரேல் அறிவிப்பு

                                  கவுதிய இராணுவம் அல்கெய்தாவுடன் தொடர்பாம் – இஸ்ரேல் அறிவிப்பு

                                  ஈரானிய ஆதரவுடன் இயங்கி வரும் கவுதிய இராணுவ படைகள் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து செயல் பட்டு வருவதாக எமன் நாட்டு எதிரி படைகள் தெரிவித்துள்ளன

                                  இவர்களை மிக பெரும் உலக மகா பயங்கரவாத அமைப்பு என எமன் அரசும் குற்றம் சுமத்தி வருகிறது ,


                                  இஸ்ரேல் ,அமெரிக்கா,சவுதிக்கு எதிராக குறித்த இராணுவத்தினர் தாக்குதல்களை அதிகரித்து

                                  செல்வதால் இவ்விதமான கதைகளை கட்டவிழ்த்து வருகிறது மேற்படி நாடுகளின் உளவு அமைப்பு என்பது குறிப்பிட தக்கது

                                    Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                                    போனெட் இல்லாது கார் ஓடி சென்ற நபர் – துரத்தி பிடித்த பொலிஸ்

                                    போனெட் இல்லாது கார் ஓடி சென்ற நபர் – துரத்தி பிடித்த பொலிஸ்

                                    பிரிட்டனில் Great Yarmouth, Norfolk பகுதியில் சாரதி ஒருவர் தனது சிறிய ரக கார் ஒன்றினை போனெட்

                                    இன்றி ஒட்டி சென்றுள்ளார் ,இதனை அவதானித்த மக்கள் வழங்கிய தகவலை அடுத்து .அவரை துரத்திய போலீசார் மடக்கி பிடித்தனர்

                                    சாலையோர ,மக்கள் பாதுகாப்பை கருதி இவ்விதம் வண்டிகள் செலுத்திட தடைகள் விதிக்க

                                    பட்டுள்ளது ,அவ்விதமான விதிகளை மீறி இவர் இவ்விதம் செலுத்தியுள்ளது குறிப்பிட தக்கது,குசும்புக்கார சாரதி தான் போங்க

                                    Posted in உலக செய்திகள்

                                    கண்ணி வெடியில் சிதறிய வண்டி – பலர் காயம்

                                    கண்ணி வெடியில் சிதறிய வண்டி – பலர் காயம்

                                    சிரியாவின் இட்லி பகுதியின் Al-Nayrab and Qumaynas டவுன் நோக்கி பயணித்த வண்டி ஒன்று மறைத்து

                                    வைக்க பட்ட கண்ணி வெடியில் சிக்கியதால், அதில் பயணித மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                    வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது ,இதே பகுதியில் தொடர் மோதல்கள் இடம்பெற்று வருகின்ற

                                    யுத்த வலயமாக உள்ளமை குறிப்பிட தக்கது