Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் இல்போர்ட்டில் பெண் கொலை கொலையாளி கைது

லண்டன் இல்போர்ட்டில் பெண் கொலை கொலையாளி கைது

கடந்த 13 ஆம் திகதி லண்டன் இல்போர்ட்டில் நபர் ஒருவர் 32 வயது இளம் பெண் ஒருவரை கோரமாக கொலை செய்துள்ளார்

பிணமாக கிடந்த பெண்ணின் சடலம் மீட்க பட்டு இடம்பெற்ற மரண பரிசோதனையில் இது

கொலை என கண்டு பிடிக்க பட்டதை அடுத்து தற்போது கொலையாளி கைது செய்ய பட்டுள்ளார் ,
கைதானவர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

    Posted in உலக செய்திகள்

    இரு கொரியா கடலுக்குள் நுழைந்த 180 சீனா மீன் பிடி படகுகள்

    இரு கொரியா கடலுக்குள் நுழைந்த 180 சீனா மீன் பிடி படகுகள்

    இரு கொரியா கடல் பகுதிக்குள் அத்துமீறி சீனாவின் 180 க்கு மேற்பட்ட மீன் பிடி படகுகள் நுழைந்து மேனி பிடியில் ஈடுபட்டுள்ளன

    சீனாவும் ,வடகொரியாவும் நண்பர்களாக உள்ள பொழுதும் .இந்த அத்துமீறல் இடம்பெற்றுள்ளது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

      Posted in உலக செய்திகள்

      சிரியாவில் குண்டு வெடிப்பு -பலர் காயம்

      உலக

      சிரியாவில் குண்டு வெடிப்பு -பலர் காயம்

      சிரியாவில் மக்களை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி
      ஒருவர் பலியாகினர் ,மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்

      பத்து ஆண்டுகள் கடந்து இடம் பெற்று வரும் சர்வதேச இராணுவ ஆக்கிரமிப்பில் சிக்கி , அழகிய

      நாடு சுடுகாடாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in உலக செய்திகள்

        லேசர் ஏவுகணையை சிரியாவில் சோதனை செய்த ரஷியா

        லேசர் ஏவுகணையை சிரியாவில் சோதனை செய்த ரஷியா

        உலகின் முதலாவது சோவியத் வல்லரசாக திகழ்ந்த ரசியா ,உடைக்கப்பட்டு அமெரிக்கா உலகில்

        முதல் வல்லரசாக மாற்றம் பெற்றுள்ளது ,சதிகளின் மூலம் ரசியாவைஉடைத்து அதன் மூலம் முதல்தர வல்லரசாக அமெரிக்கா வளர்ச்சி அடைந்தது

        அதன் பின்னர் ரசியாவால் மீள் எழுந்து கொள்ள முடியவில்லை ,ஆனாலும் ரசியாவுடன் தனித்து

        சென்று அமெரிக்கா ஒரு போதும் சண்டையிட்டதில்லை ,அவ்விதம்ம் சென்றால் அமெரிக்கா அழிக்க பட்டு விடும் என்பதும் கள நிலவரம்

        லேசர் ஏவுகணை சோதனை

        இவ்விதம் நிகழ்வுகள் நடந்தேறிய வண்ணம் இருக்க ,ஆயுத போட்டி அதிகரித்துள்ளது ,புதிய ஆயுதங்களை கண்டு பிடிப்பதில் ரசியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது ,அவ்விதம் தற்போது

        கண்டு பிடிக்க பட்ட புதிய வகை லேசர் ஆயுதம் ஒன்றை சிரியாவில் வைத்து ரசியா சோதனை செய்துள்ளது

        இந்த ஆயுத சோதனையின் பொழுது சுமார் அறுபது முக்கிய ஆயுத தயாரிப்பு நிபுணர்கள் கலந்து கொண்டு அதன் சோதனையை நேரடியாக பார்வை இட்டனர்

        சிரியாவுக்கு உதவி என்ற போர்வையில் களம் இறங்கிய ரசியா தனது புதிய ஆயுதங்களை அங்கு வைத்து தனது எதிரிகள் மீது சோதனை செய்து வருகின்றமை தற்போது அம்பலமாகியுள்ளது

        Posted in உலக செய்திகள்

        இஸ்ரேல் பயங்கரவாதத்தை உலக புரிந்திருக்கும் – துருக்கிய அதிபர் பேச்சு

        இஸ்ரேல் பயங்கரவாதத்தை உலக புரிந்திருக்கும் – துருக்கிய அதிபர் பேச்சு

        உலகில் இஸ்ரேல் மிக பெரும் பயங்கரவாத நாடு என்பதை நடந்து முடிந்த பாலஸ்தீனம் ,இஸ்ரேல்

        12 நாள் போரில் உலக மக்கள் கண்டு கொண்டிருப்பார்கள் என துருக்கிய அதிபர் எடகோன் தெரிவித்துள்ளார்

        அப்பாவி மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து ,மிக மோசமான குண்டு தாக்குதலை

        நடத்தியது ,மேலும் ஊடக நிறுவனங்களை தகக்கியது என அதன் போர்க்குற்ற இனவழிப்பை கண்டு கொள்ள முடியும்

        இஸ்ரேல் மிக பெரும் பயங்கரவாதம் கொண்ட நாடு என்பதை உலகம் உணர்ந்து கொண்டிருக்கும்

        என துருக்கியை , தொடர்ந்து மேலும் சில நாடுகள் கடும் கண்டன குரல்வளை எழுப்பி வருவது இஸ்ரேலுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள்து

          Posted in உலக செய்திகள்

          சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய – ஈரான் கிளர்ச்சி படைகள்

          சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய – ஈரான் கிளர்ச்சி படைகள்

          சவூதி நாட்டின் தலைநகரில் இருந்த து சுமார் 522 மைல்களுக்கு அப்பால் , ஏமான் பகுதியில் பறந்து

          கொண்டிருந்த உளவு விமானம் ஒன்றை ஈரானிய கிளர்ச்சி படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன ,


          மேற்படி கிளார்ச்சி படைகளிற்கு ஈரான் ஆயுதங்கள் ,மற்றும் நிதி உதவி அளித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in உலக செய்திகள்

            பலஸ்தீன மக்களை தனிமையில் விட்டு ஒடோம் – ஈரான் முழக்கம்

            பலஸ்தீன மக்களை தனிமையில் விட்டு ஒடோம் – ஈரான் முழக்கம்

            பலஸ்தீன மக்களை தனிமையில் தவிக்க விட்டு ஒருபோதும் ஈரான் செல்லாது என புரட்சி படை தளபதி தெரிவித்துள்ளார்


            ,மேலும் அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் நாம் செய்வோம் .

            இஸ்ரேலினால் அடித்து நொறுக்க பட்டு ,மக்கள் தாக்குதலுக்கு உள்ளான Al-Aqsa Mosque மாசூதிக்கு ஈரான் விரைவில் நுழையும் எனவும் சவால் விட்டுள்ளார்

            இது மீளவும் ஒரு பெரும் போரை இஸ்ரேலுடன் நடத்திட கூடும் என அஞ்ச படுகிறது

              Posted in உலக செய்திகள்

              இஸ்ரேல் 50 விமானங்கள் தாக்குதல் -கமாஸ் 40 குகைகள் அழிப்பு

              இஸ்ரேல் 50 விமானங்கள் தாக்குதல் -கமாஸ் 40 குகைகள் அழிப்பு

              கமாஸ் சுரங்க வழி குகை ஊடாக ஆயுதங்களை கடத்தி வருகிறது ,இவ்விதம் அடையாளம் காணப்பட்ட

              சுமார் நாற்பது குகைகளை ,இஸ்ரேலின் ஐம்பது விமானங்கள் குண்டு வீசி அழித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது

              இந்த நிலத்தடி குகைகளை பயன் படுத்தியே ஆயுத கடத்தலில் கமாஸ் ஈடுபட்டு வந்ததாக இஸ்ரேல் தெரிவிக்கிறது

              ஆயுத வினியோக வழிகளை தடுத்து விட்டால் தமது நாடு மீதான தாக்குதலை இவர்களினால் தொடுக்க முடியாது என இஸ்ரேல் கருதுகிறது

              இதுவரை 72 கமாஸ் போராளிகள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

              இதில் மூன்று முக்கிய தளபதிகள் உள்ளிட்டவர்கள் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது ,தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                Posted in உலக செய்திகள்

                துருக்கி இராணுவ முகாம் மீது விமான தாக்குதல்

                துருக்கி இராணுவ முகாம் மீது விமான தாக்குதல்

                துருக்கிய இராணுவத்தின் Diyarbakir இராணுவ முகாம் மீது இரண்டு ஆள் இல்லா உளவு

                விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன

                இதில் இராணுவத்தினருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ள போதும்

                இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது வெளியாகவில்லை

                  Posted in உலக செய்திகள்

                  இஸ்ரேலின் Tel Aviv பகுதியை தாக்குவோம் – கமாஸ் மிரட்டல்

                  இஸ்ரேலின் Tel Aviv பகுதியை தாக்குவோம் – கமாஸ் மிரட்டல்

                  இஸ்ரேலின் மிக முக்கிய அணு உலைகள் கொண்டதும் ,இராணுவ நிலைகளை கொண்டதுமான

                  டெல் அவிவ் பகுதியை தாக்குவோம் என Qasam Brigades, படை பிரிவின் பேச்சாளர் தெரிவித்துளளார்

                  இங்கே தான் இஸ்ரேலுளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது ,சொத்துக்கள் ,மக்கள் காயம் என்பன ஏற்பட்டுள்ளது ,இவ்விடத்தில் துல்லியமாக வீழ்ந்த ஏவுகணை தாக்குதல் காரணமாக அமைந்துள்ளது

                  வரலாறு காணாத பேரழிவை இஸ்ரேல் சந்தித்த நிலையிலேயே ஆளும் அதிபர் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்

                  தனது நெருக்குவரங்களை குறைக்கவே கமாஸ் அழிக்க படுகிறது என்ற தோரணையில் பரப்புரை மேற்கொள்ள பட்டு வருகிறது


                  இதை விட பலமடங்கு தாக்குதல் வீச்சுடன் கமாஸ் விரைவில் தாக்குதல் நடத்தும் எனவும் இதற்கு ஈரான் பின்புல ஆயுத உதவிகளை வழங்கும் என எதிர் பார்க்க படுகிறது

                  மேற்படி தாக்குதல்கள் தொடரும் என எதிர் பார்க்கும் இஸ்ரேலும் கமாஸ் ,ஹிஸ்புல்லா ,மற்றும் ஈரான் முக்கிய தலைவர்களையும் ,தளபதிகளையும் பாடுகொலை செய்திடும் நகர்வை தீவிர படுத்தியுள்ளது

                  காமஸ் ,ஈரான்,ஹிஸ்புல்லா தலைவர்களை கொலை செய்வோம் என இஸ்ரேல் உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                    Posted in உலக செய்திகள்

                    காசாவுக்கு செல்ல ஈரான் மருத்துவ குழு தயார் நிலையில் – அதிர்ச்சியில் இஸ்ரேல்

                    காசாவுக்கு செல்ல ஈரான் மருத்துவ குழு தயார் நிலையில் – அதிர்ச்சியில் இஸ்ரேல்

                    இஸ்ரேல் தொடர்ந்து காசா பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது,

                    இதுவரை 230 பேர் மரணமாகியும் 1400 பேர் படு காயம் அடைந்துள்ளனர்

                    மேலும் தாக்குதல்கள் தொடரும் எனின் எவ்வேளையும் பாலஸ்தீனம் செல்ல ஈரான் மருதுவக்குழு

                    தயார் நிலையில் உள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது

                    மேற்படி அறிவிப்பு இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

                    Posted in உலக செய்திகள்

                    இஸ்ரேலிய பொலிஸாருக்குள் புகுந்த கார் – 7 பேர் காயம் – video

                    இஸ்ரேலிய பொலிஸாருக்குள் புகுந்த கார் – 7 பேர் காயம் – video

                    பலஸ்தீனம் அருகில் உள்ள இஸ்ரேல் கட்டு பாட்டு பகுதியான கிழக்கு Holy பகுதியில் கூட்டமாக

                    கூடி நின்ற போலீசாருக்குள் பலஸ்தீனர் ஒருவர் செலுத்தி வந்த கார் ஒன்று புகுந்தது

                    இதில் ஏழு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர்

                    திட்டமிட்டே வேகமாக காரினை செலுத்தி இவ்வாறு படுகொலை முயற்சியில் மேற்படி நபர் ஈடு

                    பட்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    பிரிட்டன் Lancashire பெரும் வெடிப்பு ஒருவர் மரணம் 4 பேர் காயம்

                    பிரிட்டன் Lancashire பெரும் வெடிப்பு -ஒருவர் மரணம் 4 பேர் காயம்

                    கடந்த தினம் பிரிட்டன் Lancashire பகுதியில் திடீரென வீடு ஒன்றில் வெடிப்பு சம்பவம்

                    இடம்பெற்றுள்ளது ,இதன் பொழுது இரண்டு வீடுகள் இடிந்து வீழ்ந்து சிதறின

                    இதில் நான்கு வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் நால்வர் படுகாயமாய்ந்துள்ளனர்

                    ,இதில் பெண் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

                    மேற்படி வெடிப்பு சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                    Lancashire பெரும் வெடிப்பு
                      Posted in உலக செய்திகள்

                      இஸ்ரேலுக்கு வாலாட்டும் ஊடகங்களுக்கு செருப்படி கொடுக்கும் அல்ஜசீரா

                      இஸ்ரேலுக்கு வாலாட்டும் ஊடகங்களுக்கு செருப்படி கொடுக்கும் அல்ஜசீரா

                      இஸ்ரேல் தனது தேசிய பாதுகாப்பை உறுதி படுத்த தமது எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி

                      வருகிறது ,அதற்கு அவர்களு உரிமை உண்டு என அமெரிக்கா ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

                      மேலு இஸ்ரேல் பலஸ்தீன மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தொடர் தாக்குதலை நடத்தி

                      வருகிறது .மக்களை இழப்புக்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு பெரும் நெருக்கடியை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியது

                      இதனால சர்வதேச ஊடகங்களுக்கு கட்டு பாடுகள் விதித்துள்ளது ,மேலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இந்த தொடர் போரை தடுக்கவில்லை ,வேடிக்கை பார்க்கிறது

                      இஸ்ரேல் புரியும் மனித குலத்துக்கு எதிரான கொலை வெறி தாக்குதல்களை பிபிசி ,சீ சீ என்

                      போன்றவை நிறுத்தியுள்ள நிலையில் ,அல்ஜசீரா தொடர்ந்து நேரலை செய்து வருவது இஸ்ரேலுக்கு வாலாட்டும் ஊடகங்களுக்கு செருப்படி வழங்கியுள்ளது எனலாம்

                        Posted in உலக செய்திகள்

                        கமாஸ் தற்கொலை விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்

                        கமாஸ் தற்கொலை விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்

                        இஸ்ரேல்பகுதிக்குள் தற்கொலை தாக்குதலை நடத்தும் நோக்குடன் வந்து கொண்டிருந்த ஆள் இல்லா உளவு விமானம் ஒன்றை இஸ்ரேல் போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளன

                        மேற்படி விமானத்தின் குண்டு தாக்குதல் இலக்கு நோக்கி தாக்கி இருப்பின் பயங்கர சேதங்கள் ஏற்பட்டு இருக்கும் என தெரிவிக்க படுகிறது

                        இஸ்ரேல் தாக்குதல்

                        இதே வேளை காச பகுதியில் தொடர்ந்து இஸ்ரேல் விமானங்கள் தாக்குதலை நடத்தி வருகிறது ,அத்துடன் ஆட்டிலறி மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்திய வண்ணம் உள்ளது ,

                        இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தில் சேர்ந்த பத்து பேர் பலியாகியுள்ளனர்

                        இவ்வாறு பலியான அணைத்து மக்களும் காமாஸ் பயங்கரவாதிகள் என சிங்கள இராணுவ பாணியில் அறிவித்துள்ளது

                          Posted in உலக செய்திகள்

                          புயலில் சிக்கிய சீனா 6 பேர் மரணம் -218 பேர் காயம் photo

                          புயலில் சிக்கிய சீனா 6 பேர் மரணம் -218 பேர் காயம் photo

                          கொரனோவின் தாயகமாக விளங்கும் சீனாவின் குவான் மாகாணத்தில் தற்போது கோர புயல் தாக்கி வருகிறது

                          ,இந்த புயலின் தாக்குதலில் சிக்கி இதுவரை 6 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் சுமார் 218 பேர் படுகாயமடைந்துள்ளனர்
                          நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் ,வாகனங்கள் சேதமாகியுள்ளன

                          இதேவேளை பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன ,வீடுகளுக்குள் வெள்ள நீர்

                          புகுந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்

                            Posted in உலக செய்திகள்

                            ஒரு ஏவுகணை தாக்குதல் இடிந்து விழும் மாடிகள் – தளபதி படுகொலை – வீடியோ

                            ஒரு ஏவுகணை தாக்குதல் இடிந்து விழும் மாடிகள் – தளபதி படுகொலை – வீடியோ

                            காமாஸ் பகுதியில் இருந்து இஸ்ரேலிய நகரங்கள் மீது 1500 ஏவுகணை தாக்குதலுக்கு முக்கிய

                            மூளையாக செயல் பட்ட கமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் உள்ளிட்ட மூவர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                            இந்த மூவரும் தளபதிகள் நிலையில் உள்ளவர்கள்
                            இவர் தங்கி இருந்த 15 மாடி அடுக்குமாடி கட்டடம் ஒன்றுக்கு இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய

                            ஏவுகணை தாக்குதலில் அந்த கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்கிறது ,அதற்குள் அவரும் சிக்கி இறந்துள்ளார்

                            அந்த கட்டிடங்களும் இருந்த பல மக்கள் பலியாகியுள்ளனர் ,இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பலஸ்தீன அமைப்புக்கள் தெரிவித்துள்ளன

                            இஸ்ரேல் நடத்திவரும் பயங்கரவாத தாக்குதலை தடுத்து நிறுத்துவது யார் ..? அவர்கள் புரிந்துவரும் இனப் படுகொலைக்கு தீர்வு எப்போது ? உலக மக்கள் எழுப்பி வரும் கேள்வி இது தான்

                            Posted in உலக செய்திகள்

                            லொத்தரியில் 30 மில்லியனை அள்ளி சென்ற நபர்

                            லொத்தரியில் 30 மில்லியனை அள்ளி சென்ற நபர்

                            அவுஸ்ரேலியாவில் நடந்த லொத்தர் குழுக்களில் நபர் ஒருவர் ஒரு டிக்கட்டில் முப்பது மில்லியன்

                            டொலர்களை அள்ளி சென்றுள்ளார்

                            இவரது இந்த வெற்றி மிக பெரும் சாதனைகளில் ஒன்றாக அவரது வாழ்வில் பார்க்க படுகிறது

                            ,கொரனோ காலத்தில் இந்த லொத்தரியில் வெற்றி பெற்றது பெரும் மகிழ்ச்சியை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது

                              Posted in உலக செய்திகள்

                              தீயில் எரிந்த சிறை சாலை வாகனம் -நடந்தது என்ன ..?

                              தீயில் எரிந்த சிறை சாலை வாகனம் -நடந்தது என்ன ..?

                              அவுஸ்ரேலியாவில் சிறைச்சாலை வாகனம் ஒன்று திடீரென தீ பிடித்துள்ளது ,இதன் பொழுது அதில் பயணித்தவர்கள்

                              சிறு காயங்களுடன் உயிர் தப்பினர் ,இந்த வாகனத்தில் எவ்விதம் தீப்பிடித்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                              வாகனம் பலமாக சேதமான நிலையில் மீட்க பட்டுள்ளது

                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                வடக்கு லண்டனில் மின்னல் தாக்கி சிறுவன் பலி

                                வடக்கு லண்டனில் மின்னல் தாக்கி சிறுவன் பலி

                                வடக்கு லண்டன் பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில் ஒன்பது வயது சிறுவன் பலியாகியுள்ளான்

                                மேற்படி சம்பவம் மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                                இலங்கையை போல பிரிட்டனில் மின்னல் தாக்கி மக்கள் பலியாகுவதில்லை ,அதனை தடுக்கும்

                                கருவிகள் பொருத்த பட்டியிருப்பதால் மக்கள் ,பாதிப்பின்றி தப்பித்து கொள்கின்றனர்

                                ஆனால் அவை கடந்து இந்த உயிர் பலி இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது