Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பட்ட பகலில் ஒருவர் சுட்டுக்கொலை
பட்ட பகலில் ஒருவர் சுட்டுக்கொலை
இலங்கை பாணந்துறை- பல்லேமுல்ல பகுதியில் ஆட்டோவில் பயணித்து
கொண்டிருந்த நபர்களை பின் தொடர்ந்து சென்ற நபர்கள் சுட்டதில்;
சம்பவ இடத்தில்,அவர் பலியானர்
தாக்குதலை நடத்தியவர்கள் மோட்ட சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர் .,
மேற்படி தாக்குதல் குறித்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
சர்வதேச நீதிமன்றில் இலங்கை – ஐநா அதிரடி அறிவிப்பு
சர்வதேச நீதிமன்றில் இலங்கை – ஐநா அதிரடி அறிவிப்பு
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள்
விதிக்கப்படலாம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட்
வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது. அத்துடன், யுத்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை பெறுவதற்கான சர்வதேச பொறிமுறையொன்று குறித்தும் பரிந்துரை செய்துள்ளார்.
இந்நிலையில், ஆதாரங்கள் எவையும் நிருப்பிக்கப்படாதவர்களிற்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என
தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே அவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
“அவசியமற்ற சில விடயங்கள் அந்த அறிக்கையில் இந்த தருணத்தில் காணப்படுவதாக நாங்கள் கருதுகின்றோம்
எங்களுக்கு அவதூறு கற்பிக்கமுனையும் நாடுகள் சிலவற்றை விட இலங்கையர்களான நாங்கள் அமைதியாகவும் ஸ்திரதன்மை
மிக்கவர்களாகவும் காணப்படுகின்றோம்” என்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
முன்னைய அறிக்கைகளை விட இந்த அறிக்கை மோசமானது இலங்கையில் ஆபத்தான போக்கு தென்படுகின்றது எனவும்
அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஜயனத் கொலம்பகே, அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தீர்மானித்ததும் அதனை பகிரங்கப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள இன அழிப்பு – தொடரும் கேட்டா வன்முறை
சிங்கள இன அழிப்பு – தொடரும் கேட்டா வன்முறை



ட்ரம்பின் வெளியேற்றம் இலங்கைக்கு ஒரு பாடம்-மனோ கணேசன்
ட்ரம்பின் வெளியேற்றம் இலங்கைக்கு ஒரு பாடம்
-மனோ கணேசன்
ட்ரம்ப்பின் தோல்வி, தொழிற்படுகின்ற அமெரிக்க அமைப்பின் சிறப்பு அடையாளம். இது இலங்கைக்கு ஒரு பாடம். நிறைவேற்று
அதிகாரம், பாராளுமன்றம், நீதித்துறை, ஊடகத்துறை ஆகியவை ஒன்றை ஒன்று, திருத்தி, கட்டப்பாட்டுக்குள் கொண்டுவருமே தவிர,
இலங்கையை போல கூட்டு சேர்ந்து கும்மாளம் அடிக்காது என அமெரிக்கா நிருபித்து விட்டது என கொழும்பு மாவட்ட எம்பியும்,
ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
அமெரிக்க ஜனநாயக தேச அமைப்பின் ஏனைய தூண்கள், “ஆம் ஐயா” (இயஸ் சேர்) என்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடம் சரணடையவில்லை.
நீதித்துறையும், பாராளுமன்றமும், ஊடக துறையும் ஜனாதிபதி ட்ரம்பை வெளுத்து வாங்கி வெளியேற்றி உள்ளன. இன்று
“ஜனாதிபதி சேர்” தோற்றுபோய் அவமானப்பட்டு வெளியேறியுள்ளார். அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பு வென்றுள்ளது.
அமெரிக்காவின் தேர்தலை அடுத்த ஆட்சி மாற்ற குளறுபடிகளை பார்த்து, இலங்கையின் பல பேரினவாத “அறிவாளிகள்”
அமெரிக்காவை எள்ளி நகையாட தொடங்கினர். அமெரிக்காவை விட தங்களை, மிகப்பெரும் ஜனநாயகவாதிகளாக காட்ட
முற்பட்டனர். உலகிற்கு அறிவுரை கூற அமெரிக்கா தகுதியற்றது எனக்கூறி தங்களது இனவாத அட்டூழியங்களுக்கு நியாயப்பாடுகளை தேட முற்பட்டனர்.
இன்று இவர்களுக்கு, நெற்றியில் செருப்பால் அடித்ததை போல் அமெரிக்க ஜனநாயக அமைப்பு நிமிர்ந்து நிற்கிறது. நிறைவேற்று
அதிகாரம், பாராளுமன்றம், நீதித்துறை, ஊடகத்துறை ஆகியவை ஒன்றை ஒன்று, திருத்தி, கட்டப்பாட்டுக்குள் கொண்டுவருமே தவிர
, இலங்கையை போல கூட்டு சேர்ந்து கும்மாளம் அடிக்காது என அமெரிக்கா நிருபித்து விட்டது.
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு வெளியுறவு கொள்கைகள் தொடர்பான எங்களது கருத்து முரண்பாடுகள் அப்படியே இருக்க,
அமெரிக்காவின் இந்த உள்நாட்டு ஜனநாயக வெற்றியை நாம் பாராட்டுகிறோம்.
இப்போது இந்த இடைக்காலத்தில், அமெரிக்காவை விமர்சித்த இலங்கை இனவாத வீரர்களை தேடுகிறோம். காணவில்லை.
ஒரு குடும்பத்தில் கொரோனாவால் இருவர் மரணம்
மட்டக்களப்பு, கோட்டமுனை மூர் வீதியில் முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரது
மனைவி கொரோனா தொற்றால் இன்று (22) உயிரிழந்துள்ளார் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றால்
மரணித்தோரின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை
(15) மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவரது கும்பத்தில் மனைவி உட்பட 5 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டு, காத்தான்குடி ஆதார
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், உயிரிழந்த நபரின் மனைவி, இன்று உயிரிழந்துள்ளார்.
இதேவேளை குறித்த பகுதியான அரசடி கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட
அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் இதுவரை 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா
சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட ஆண்டிஜன், பிசிஆர் பரிசோதனைகள்
இரண்டிலும் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பவித்ராவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆண்டிஜன் பரிசோதனையில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அவர்
தனிமைப்படுத்தப்பட்டு நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவுகள் இன்று (23) வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரையில் மூன்று அமைச்சர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்கள்
நால்வருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நில நடுக்கம் – குலுங்கிய வீடுகள்
வலப்பனை பிரதேசத்தை அண்மித்த பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு
உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக
புவிச்சரிதவியல் மற்றம் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.
ரிக்டர் அளவுகோலில் 1.8 ஆக குறித்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வியலுவ எகிரிய கிராமத்திலும் குறித்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
எச்சில் துப்பியவருக்கு ஆறு வருடங்கள் சிறை
எச்சில் துப்பியவருக்கு ஆறு வருடங்கள் சிறை
பொதுசுகாதார அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய, பட்டாரகம அட்டளுகமையைச்
சேர்ந்தவருக்கு 6 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர், பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
பண்டாரக – அட்டளுகம பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல
டிசெம்பர் 2ஆம் திகதி வந்த போது பொதுசுகாதார அதிகாரிகள் மீது அவர், எச்சில் துப்பியுள்ளார்.
இலங்கையில் கொரோனா: தொற்றாளர்கள் , 276 மரணம்
இலங்கையில் கொரோனா: தொற்றாளர்கள் , 276 மரணம்
இன்றைய தினம் (21) மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 202 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் 873 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இவர்களில் 536 பேர் பேலியகொட கொவிட்
கொத்தணியுடன் சம்பந்தப்பட்டவர்களாவர். சிகிச்சை பெற்று வந்த 769 கொவிட் தொற்றாளர்கள் இன்று வைத்தியசாலைகளில் இருந்து
வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைவாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 55526. சிகிச்சை பெறும் நோயாளிகள் 7266.
கொரோனா தொற்றின் காரணமாக இன்றைய தினம் (21) இருவரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம்ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைப்பு
மாணவர்களுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம்ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைப்பு
அக்கரைப்பற்று லீடர் அஷ்ரப் கனிஷ்ட பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா
பெறுமதியான 50 கதிரைகளை தேசிய அரச சார்பற்ற நிர்வனத்தினால் இன்று (16) வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் ஐ.நைஸர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று வலய கல்வி பிரதிப் பணிப்பாளர் ஏ.ஜி.பஸ்மீல் மற்றும் தேசிய அரச சார்பற்ற நிர்வனத்தின்
தவிசாளரும், குறித்த பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளருமாகிய எஸ்.எம்.லாபீர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
லீடர் அஷ்ரப் கனிஷ்ட வித்தியாலயத்தை கொண்டு வருவதற்காக பல போராட்டங்களைச் செய்யவேண்டி இருந்தது. அந்தப்
போராட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற இந்தப் பாடசாலை பல சாதனைகளை அடைந்து செல்கிறது. இது எம் பிரதேசத்திலுள்ள பெற்றோர்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று தேசிய அரச
சார்பற்ற நிர்வனத்தின் தவிசாளரும், குறித்த பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளருமாகிய எஸ்.எம்.லாபீர்தெரிவித்தார்.
பாடசாலையை முன்னெற்றுவதும், பின்னடையச் செய்வதும் அந்தப் பிரதேசத்திலுள்ள
பெற்றோர்களின் கைகளில்தான் தங்கியிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்பாடசாலை ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை தரம் 1, 2, 3, 4 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் கற்றல்
உபகரணங்களை குறித்த நிர்வனத்தின் தவிசாளரினால் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில்
பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்



மாணவர்களுக்கு
சென்னை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !
சென்னை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !
இலங்கைத்தீவில் இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான வெளி தமிழ்மக்களுக்கு இல்லாத நிலையில், சென்னை மெரினா
கடற்கரையிலோ அல்லது சென்னையின் வேறு பகுதியிலோ முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் ஒன்றினை தமிழ்நாட்டு அரசு
நிறுவ வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை தொடர்பில் இடம்பெற்றிருந்த
கவனயீர்ப்பு கண்டன கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே இக்கோரிக்கையினை அவர் விடுத்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கான அரசியல்வெளி இல்லாத நிலையில்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தது.
தற்போது நினைவுகூர்வதற்கான வெளிiயும் தமிழ்மக்களுக்கு அங்கில்லாத நிலையில், அதற்கான வெளியினை
இலங்கைத்தீவுக்கு வெளியே உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
உலகின் தலைநகரங்களில் முள்ளிவாய்க்கால் அடையாளச்சின்னங்களை உருவாக்கும் வகையில், அதற்கு முன்மாதிரியாக தமிழகத்தின் சென்னை மெரீனா கடற்கரையிலோ
அல்லது சென்னையின் வேறு பகுதியிலோ முள்ளிவாய்க்கால் அடையாளச்சின்னத்தை தமிழ்நாட்டு அரசு உருவாக்க வேண்டும்
என கோருகின்றோம். இதற்கு தமிழ்நாட்டின் கட்சிகள், அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் ஆதரவு வழங்க வேண்டுகிறோம்.
இதுமட்டுமல்லாது மே-18 முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாளினை உலகெங்கும் வாழும் தமிழர்களை அடையாளப்படுத்தும் விதமாக
‘உலகத்தமிழர் தேசிய துக்க நாளாக’ மே-18ஐ தமிழ்நாட்டு அரசு பிரகடனப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
35100 லட்சத்தை சிகரட் வாங்கிட கடன் வழங்கும் கோட்டா அரசு
35100 லட்சத்தை சிகரட் வாங்கிட கடன் வழங்கும் கோட்டா அரசு
இலங்கையில் மகா கொள்ளையர்களாக விளங்கி வரும் சிவப்பு சால்வை
சகோதரர்களான மகிந்த ,கோட்டா கூட்டாட்சியில் தனியார் நிறுவன
முதலாளி ஒருவருக்கு சுமார் 35100 லட்சம் ரூபாய்களை கடனாக வழங்க வாங்கி ஒன்று முன் வந்துள்ளது
மக்கள் அபிவிருத்தி ,வாழ்வாதாரத்தை மேம்படுத்த ,மறுத்து தனியார்
முதலாளிகள் ஊடாக பல கோடிகளை இலாபமாக ஈட்டி வருகிறார் ,ஆளும்
வியாபாரியான கோட்டா மேற்படி விடயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன
பிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன் – கோட்டா முழக்கம்
பிரபாகரனை கொன்று இழுத்து வந்தேன் – கோட்டா முழக்கம்
விடுதலை புலிகளின் தலைவர் பிரகாரனை கொன்று கட்டி இழுத்து வந்தேன்
என ஆளும் இலங்கை ஜனாதிபதியும் தமிழ் இன கொலையாளியுமான கோட்டா தெரிவித்துள்ளார்
நாட்டில் அனைத்து சமூகங்களும் இணைந்து வாழும் நல்லாட்சி அரசு
அரசாள்கிறது என கோட்டா தெரிவித்து வரும் நிலையில் சிங்கள பவுத்த
பேரினவாத மக்கள் மத்தியில் புலி இனவாதத்தை கக்கி ,மீளவும் தனி
பெரும்பாண்மை வாக்குகளுடன் வென்றிட வேண்டும் என்ற நிலையில் கோட்டா துடிக்கிறார் .
இவ்வாறு பேசிய இவரை அமெரிக்கா உள்ளிட்டவை கருத்தில் கொண்டு
அதனை வாய்மூல சாட்சியாக ஏற்று தண்டனை வழங்க வேண்டும் என பாராளுமன்றங் உறுப்பினர் ஸ்ரீதரன் கேட்டுள்ளார்
வடக்கில் இருந்து தமிழர்களை விரட்ட அரசாங்கம் சதி
வடக்கில் இருந்து தமிழர்களை விரட்ட அரசாங்கம் சதி
ஒரு நாடு, ஒரு சட்டம்” என ஜனாதிபதி தெரிவிக்கின்றபோதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஒரு சட்டமும் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொள்ளும்
பெரும்பான்மையினத்தினருக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு – பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பகுதியில், மேய்ச்சல் தரை காணிகளை ஊர்காவல் படையினருக்கு முந்திரிகை செய்கைக்கு
வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று (19) மாலை நேரில் சென்று ஆராய்ந்த போதே, அவர் மேற்படி தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்
என்.புஸ்பலிங்கம், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி, பிரதேச சபை உறுப்பினர்களும் அப்பகுதிக்குச் சென்று
, அங்குள்ள நிலைமைகள் குறித்து கால்நடை பண்ணையாளர்களுடன் கலந்துரையாடினார்கள்.
கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தமல்லி தோட்டம், வெட்டிப்போட்டசேனை போன்ற பல பகுதிகளில், தமது முதாதையர்கள் முதல் நீண்டகாலமாக தாங்கள் கால்நடைகளை
மேய்த்துவருவதாகவும் ஆனால் தற்போது தமது
சுமார் 1,500 மேய்ச்சல் தரை காணிகளை சுற்றி முந்திரிகை வளர்ப்பு
எனக் கூறி, வேலியமைக்கப்படுவதாக கால்நடை பண்ணையாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.
இதனையத்து கருத்துத் தெரிவித்த கோவிந்தன் கருணாகரம் எம்.பி, “அரசாங்கம், தமிழர்களை நசுக்குவது மாத்திரமல்லாமல், இந்த நாட்டில் இருந்து தமிழர்களை விரட்டியடிப்பதற்காக கங்கணம்
கட்டிக்கொண்டிருக்கின்றார்கள். மேய்ச்சல் தரைகள், சேனைப்பயிர்ச்செய்கை இடங்களாக மாற்றப்படுகின்றன. இது
பெரும்பான்மையினத்தின் குடியேற்றங்களாகவும் மாறிவருகின்றன.
“கால்நடை பண்ணையாளர்கள் தங்களது வாடிகளில் ஒரு தீப்பெட்டி வைத்திருக்கமுடியாது. பாதுகாப்புக்காக ஒரு கத்தி வைத்திருக்க முடியாது. கால்நடைகளை வைத்திருப்பவர்கள் ஒரு கம்புகூட
வெட்டமுடியாத நிலையிலும் அவ்வாறு வெட்டினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு, பெருமளவான பணம் தண்டப்பணமாக அறவிடப்படுகின்றது.
“பயன்தரும் பல மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு, அந்த மரங்களைக் கொண்டே பல தசாப்தங்களாக மேய்ச்சல் தரையாக வரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் வேலிகள்
அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் தடைசெய்யப்பட்ட பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்தும் முள்கம்பிகளைக்கொண்டு வேலிகள்
அமைக்கப்படுகின்றன. அந்த வேலியில் மாடுகள் படும்போது ஏற்படும் காயங்கள் இலகுவில் மாறாது என பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.
“இந்த பகுதி மட்டுமல்ல, மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திவுலானையில் இருந்து பட்டிப்பளையில் மணலேற்றம்,
காத்தார்சேனை, விச்சுக்குளம், வவுணதீவில் வெட்டிப்போட்டசேனை, செங்கலடியில் கார்மலை, மயிலத்தமடு, மாதவனை போன்ற பகுதிகள் கபளிகரம் செய்யப்படுகின்றன.
“மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தியென்ற மாயைக்குள் தள்ளி, வெறும் கொங்கிறிட் பாதைகளையும் சிறிய அபிவிருத்திகளையும் மேற்கொண்டு, தமிழ் மக்களின்
அடிவயிற்றில் அடிக்கும் இவ்வாறான பொருளாதார அழிவுகளை பார்த்துக்கொண்டு, ஓர் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் தங்களுக்குள்ளேயே அடிபடுகின்றார்கள்.
“எமது மாவட்டத்தை உண்மையில் நேசிப்பவர்களாக இருந்தால், அவர்கள் இந்தப் பகுதிக்கு வரவேண்டும். வெறுமனே மாவட்ட
செயலகத்தில் அதிகாரிகளை கூட்டி கூட்டங்களை நடத்தாமல், இங்கு வந்து இந்த மக்களின் கண்ணீரை துடைக்கவேண்டும்.
“இவ்வாறான கபளீகரம் செய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டுமானால், காணி உரிமையுடன் கூடிய அதிகார
பரவலாக்கல் எங்களுக்கு கிடைக்கவேண்டும். அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்துவருகின்றோம்” என்றார்.
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு – டக்கிளஸ் கூவல்
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு – டக்கிளஸ் கூவல்
அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர்கள் வழமைபோன்று எதுவித தடைகளும் இன்றி தமது கடற் தொழில் நடவடிக்கைகளை
முன்னெடுக்க முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முன்னர் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த ஒருவர் அண்மையில் இந்திய கடலோர காவற்படையால் கைதுசெய்யப்பட்டதை அடுத்து
இப்பகுதியின் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாக யுத்த காலங்களில் நடைமுறையில் இருந்த பாஸ் நடைமுறை
பின்பற்றப்பட வேண்டும் என அப்பிரதேச கடற்படை அதிகாரியால் தொழிலாளர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கப்பட்டுவந்ததாகவும்
தெரிவித்து குறித்த பகுதி தொழிலாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
இந்நிலையில் கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானத்தில் கொண்ட அமைச்சர் குறித்த பிரதேச கடற்படை
அதிகாரிகளுடன் விடயம் தொடர்பில் ஆராய்ந்ததுடன் அவ்வாறான நடைமுறைகளை உடனடியாக இல்லாது செய்து அல்லைப்பிட்டி
கடற்றொழிலாளர்களது பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
தமிழர் பகுதிகளில் பரவும் மரம் நோய் – இறக்கும் ஆடு,மாடுகள்
தமிழர் பகுதிகளில் பரவும் மரம் நோய் – இறக்கும் ஆடு,மாடுகள்
தமிழர் வடக்கு பகுதியில் முதன்மையாக வைத்து புதியவகை மர்ம நோய்
ஒன்று பரவி வருகிறது ,இதன்மேல் ஆடுகள் ,மாடுகள் என்பன இறந்து வருகின்றன
கடந்த மூன்று மாத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கால்நடைகள் இருந்துள்ளன
அம்மை நோய் போன்று இது உள்ளதாக பாதிக்க பட்ட கால்நடையின்
உரிமையாளர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர் ,தமிழர் பகுதியில்
மட்டும் இந்த நோயானது முதன்மையாக எவ்வாறு பரவி வருகிறது என்ற கேள்வி முன் வைக்க படுகிறது
லண்டனில் சிறந்த தமிழ் விளையாட்டு வீரர் கொரானாவுக்கு பலி
லண்டனில் சிறந்த தமிழ் விளையாட்டு வீரர் கொரானாவுக்கு பலி
யாழ் இந்துக் கல்லூரியின் 2007ம் உயர்தரப்பிரிவு மாணவனும்,
இந்துக்கல்லூரி 2004ம்,2005ம் ஆண்டுகளின் துடுப்பாட்ட அணியின் தலைவரும்,
மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளரும், துடுப்பாட்ட வீரனுமாகிய மயூரப்பிரியன் (வயது 32)
அவர்கள் லண்டனில் Corona தாக்கத்தினால் இன்று காலமாகிவிட்டார் என்பதை மிகவும் வேதனையுடன்
அறியத்தருகின்றோம் இவ்வாறு முகநூலில் சொந்தங்கள் அஞ்சலி கண்ணீரால் நனைகிறது
இவரது திறன் வாய்ந்த விளையாடடு சாதனைகள் ,இவர் மறைந்தாலும் மறையாது என்பது அந்த பாடசாலை மாணவர்கள் கருத்தாக உள்ளது .
இவருடன் இதுவரை முப்பதுக்கு மேற்பட்ட தமிழர்கள்
பலியாகியுள்ளதுடன் நூறுக்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் இந்த
நோயினால் பாதிக்க பட்டுள்ளதும் ,சிலர் குணமடைந்து தேறியுள்ளதும் குறிப்பிட தக்கது
மிச்சம் ,லூசியம் ,ஈஸ்டம் பகுதியிலேயே அதிக தமிழர்கள் பாதிக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது

காணாமல் போகும் மோட்டார் சைக்கிள்கள் – திருடர்கள் கைவரிசை
காணாமல் போகும் மோட்டார் சைக்கிள்கள் – திருடர்கள் கைவரிசை
மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்று (18) மாத்திரம் மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள்
தொடர்பில் 06 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
திட்டமிடப்பட்டகுழுவினால் இந்த திருட்டுச் சம்பவங்கள்
முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் தமது மோட்டார் சைக்கிளை
பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அடி காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு
அடி காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு
வவுனியா, தரணிக்குளம் பகுதியில், தலையில் காயங்களுடன், மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில், இன்று (19) அதிகாலை
சடலமொன்று கிடப்பதாக, அவ்வழியே சென்றவர்கள், பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த ஆ.யேசுதாசன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்றும் பிரேத பரிசோதனைகளுக்காக,
சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கபபட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவ தலைமையக ஊடக பணிப்பகத்திற்கு புதிய பணிப்பாளர் பதவியேற்பு
இராணுவ தலைமையக ஊடக பணிப்பகத்திற்கு புதிய பணிப்பாளர் பதவியேற்பு
ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையக ஊடக பணியகத்தின் புதிய பணிப்பாளராக இராணுவ பீரங்கி படையணியின்
பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இன்று 19 ஆம் திகதி காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
குறித்த பணியகத்தின் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்கவுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். மகா
சங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் தனது பதவியேற்பிக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 ஆவது படைப்பிரிவின் 551 ஆவது பிரிகேட்டின் தளபதியாக
சேவையாற்றிய பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தற்போது இராணுவ ஊடக பணியகத்தின் பணிப்பாளராக கடமை ஏற்றுள்ளார்.
கண்டியில் பிறந்த பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன 1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டதோடு 1992 இல் தியதலவை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில்
பயிற்சியினை நிறைவு செய்ததன் பின்னர் இரண்டாம் லெப்டின்னாக நியமிக்கப்பட்டார். பின்னர் அமெரிக்கா கலிபோர்னியா, கடற்படை முதுகலைமானி கல்லூரியில் பாதுகாப்பு
ஆய்வுகளை பட்டத்தை பெற்றதுடன், இராணுவ கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பயின்ற போது இலங்கை களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளில் முதுகலை பட்டமும்
பெற்றார். மேலும் அவர் இந்தியாவில் இளம் அதிகாரிகளுக்கான பாடநெறியையும் பாகிஸ்தானில் பீரங்கியாளர் உயர் கற்கை நெறியையும் நிறைவுசெய்துள்ளார்.
இவரின் முன்னைய நியமனங்களில் 6 ஆவது இலங்கை கள பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரியாகவும், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிற்றுவிப்பதிகாரியாகவும், 211 ஆவது
பிரிகேட்டின் பிரிகேட் மேஜராகவும், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் கற்கை நிலைய பதவி நிலை அதிகாரி, 16 ஆவது இலங்கை பீரங்கி படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி
இலங்கை இராணுவத் தலைமையகத்தில் பொது நிர்வாக அதிகாரி 1, இராணுவத் தளபதி சேவைகள் உதவி அதிகாரி (2011-2013),
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியின் செயலாளர் (2013-2014), 16 ஆவது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி ,
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பயிலிளவல் அதிகாரிகள் பிரிவின் பிரதம பயிற்சி அதிகாரி போன்ற முக்கிய பதவிகளை
வகித்துள்ளார். மேலும், மேற்கு சகாரா ஐக்கிய நாடுகள் சபை (2008 -2009) இராணுவ அவதானிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அவரது இராணுவ வாழ்க்கையில் ரண சூர பதக்கம் மற்றும் உத்தம சேவை பதக்கம் ஆகியவை பெற்றதுடன் ; ‘The Impact of Changing
External Conditions on Counter Insurgency: The Sri Lankan Experience’ என்ற நூலின் நூல் ஆசிரியரும் ஆவார்







