Tag: மாணவர்களுக்கு
ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது
ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது
ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது .நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலக அலுவலகங்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 14
பல்கலைக்கழக மாணவர்களுக்கு
பல்கலைக்கழக மாணவர்களுக்கு, ஜனாதிபதி நிதியம் நேற்று மடிக்கணினிகளை வழங்கியது.
இந்த விநியோக நிகழ்ச்சி ஜனாதிபதி நிதியத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முயற்சிக்கு ரூ. 5.8 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) கூற்றுப்படி, அத்தியாவசிய கல்வி உபகரணங்களை வழங்குவதன் மூலம்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவளிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
ஜனாதிபதி நிதியம்
2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி நிதியம் மூலம் இதுவரை சுமார் 30 பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி உபகரணங்களைப் பெற்றுள்ளனர்
என்றும், இந்தத் திட்டத்திற்காக இதுவரை ரூ. 9.8 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட கூடுதல் செயலாளர் ரொஷன் கமகே, ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள்,
பெற்றோர்கள் மற்றும் பிற அழைப்பாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வட்டிஇல்லா கடன் மாணவர்களுக்கு அரசுஅறிவிப்பு
வட்டிஇல்லா கடன் மாணவர்களுக்கு அரசுஅறிவிப்பு
வட்டிஇல்லா கடன் மாணவர்களுக்கு அரசுஅறிவிப்பு ,இலங்கையில் உயர் கல்விகளை படிப்பதற்கு மாணவர்கள் அரசியலமைந்து பணத்தினை பெற்று கல்வியை கற்க முடியும் என அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் கல்வி அமைச்சினால் புதிய வட்டி இல்லாத கடன் அளிப்பு விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது .
இதன் அடிப்படையில் 2017 முதலாவது மாணவர்களுக்கு இந்த கடன் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலா எட்டு லட்சம் ரூபாய் வரை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17,313 மாணவர்கள் காணப்படுவதாகவும் அவர்களுக்கு இந்த பணத்தினை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது .
மேற்கு நாடுகள் அல்லது ஐரோப்பிய நாடுகளில் மாணவர்கள் கல்வி கற்பதற்காக 30,000 பவுண்டுகள் வரை பிரித்தானியாவில் பெற்றுக்கொள்ள முடியும் .
அதுபோன்று ஐரோப்பிய நாடுகளின் காணப்படுகின்றன.
அவர்கள் வேலைகளை ஆரம்பித்த பின்னர் சம்பாதித்து அதனை செலுத்த முடியும் .அது வட்டியுடன் கடனாகவே காணப்படுகின்றன .
ஆனால் இலங்கை அரசின் தற்பொழுது உயர் கல்வியை படிக்கின்ற மாணவர்களுக்கு பட்டப்படிப்பை படிக்கின்ற மாணவர்களுக்கும் வட்டி இல்லாத கடனை அறிவித்துள்ளது .
மாணவர்களின் கல்வியில் ஊக்கத்தையும் ஆர்வத்தையும் செலுத்துவதற்கு இலங்கை ஆளும் அரசு முனைவதாக காண்பித்துள்ளது.
இது எத்தனை வீதம் சாத்தியமான விடயமாக காணப்படுகிறது எல்லா மாணவர்களாலும் இந்த கடனை பெற்றுக் கொள்ள முடியுமா என்ற கேள்வியும் அனுப்பப்பட்டுள்ளது.
உயர் கல்வியை கற்கத் துடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த கடன் உதவி ஏற்புடையது என்பதாக ஆளும் இலங்கை அரசின் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளது .
கல்வித்துறை அமைச்சர் இந்த திடீர் அறிவிப்பும் மகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது இலங்கையில் வட்டியில்லா கடனை பெற்று மாணவர்கள் கல்வியை கற்க முடியும் என்கின்ற புதிய விடையத்தினை ஆளுமரசு வரலாற்றில் எழுதியுள்ளதாகவே இந்த விடயம் பார்க்கப்படுகிறது
- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன

- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை

- திருகோணமலை கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது

- பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க அழைப்பு உதவிகள் நிறுத்தம்

- பேருந்துக் கட்டணம் உயர்வு

- மனித யானை மோதலுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என வேத்த தலைவர் கோரிக்கை

- ஸ்ரீ பாதத்தின் பருவம் அல்லாத காலத்தில் இரண்டு வழிகளில் மட்டுமே நுழைய அனுமதி

- தனியார் பேருந்து ஓட்டுநர் கைது

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
பாடசாலை மாணவர்களுக்கு இன்று (02) முதல் 30% விலைக்கழிவுடன் புத்தகங்களை வழங்க அரச அச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரச அச்சக சட்டமூலக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிமல் தர்மரத்ன,
குறித்த புத்தகங்களை கூட்டுத்தாபனத்தின் பிரதான அலுவலகம் மற்றும் கடைகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும், அதிபரின் கடிதத்தைக் கொண்டு வரும் பிரதிநிதிகளுக்கும் இந்தப் புத்தகங்களை வழங்குகிறோம்.
எமது முதன்மை அலுவலகம் மற்றும் விற்பனை நிலையங்கள் மூலம் இவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகைதரும் மாணவர்களுக்கு இலவசமாக பால்
பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகைதரும் மாணவர்களுக்கு இலவசமாக பால்
பாராளுமன்றத்தில் புதிதாக அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மூன்று நிலையியற் குழுக்கள் குறித்து மேலும் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்க நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை
அமைக்க (08) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.
வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு, வழிவகைகள் பற்றிய குழு, பொருளாதார உறுதிப்படுத்தல் குழு ஆகிய மூன்று குழுக்களுமே இவ்வாறு அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய வெளிநாட்டு அமைச்சர் கௌரவ அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா, கௌரவ
பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகைதரும் மாணவர்களுக்கு இலவசமாக பால்
எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கௌரவ சாகர காரியவசம் ஆகியோரே இந்த விசேட குழுவில் நியமிக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
தற்பொழுது நடைமுறையில் உள்ள நிலையியற் குழுக்களான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு), அரசாங்க நிதி பற்றிய குழு ஆகிய குழுக்களின்
செயற்பாடுகள் இந்தப் புதிய நிலையியற் குழுக்களின் விடயதானங்களுடன் மேற்படுகை செய்கின்றனவா என்பது குறித்து ஆராய்ந்து திருத்தங்கள்
மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அது பற்றிய பரிந்துரைகளை இந்தக் குழு முன்வைக்கும்.
இதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடி இந்தக் குழுவின் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், 2023ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான குழுநிலை விவாதத்திற்கான நேரத்தை அதிகரிப்பது குறித்து எதிர்க்கட்சி முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குழுநிலை விவாதத்துக்கு
ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை ஒன்றரை மணித்தியாலங்களினால் அதிகரிப்பதற்கும் இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய வரவுசெலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம் நடைபெறும் நவம்பர் 23ஆம்
திகதி முதல் டிசம்பர் 7ஆம் திகதி வரையான காலப் பகுதியில் பாராளுமன்ற விவாதங்கள் பி.ப 7.00 மணிவரை நடத்தப்படவிருப்பதுடன், இதற்கு முன்னர்
தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய டிசம்பர் 08ஆம் திகதி மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப 5.00 மணிக்கும் நடத்தப்படவுள்ளது.
மேலும், நாளாந்தம் பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகைதரும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஒரு கிளாஸ் பாலை வழங்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம்
தெரிவித்தார். இதற்கு அமைய நாளொன்றுக்கு ஆகக் கூடியது பாடசாலை மாணவ மாணவியர் 500 பேருக்கு அடுத்த வருடத்திலிருந்து இதனை
நடைமுறைக்குக் கொண்டுவரவும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு 4 பில்லியன் ஒதுக்கீடு அமைச்சர்
மாணவர்களுக்கு 4 பில்லிய ஒதுக்கீடு அமைச்சர்
இலங்கையில் மதியவேளை போசாக்கு உணவு வழங்கி,ட 4 மில்லியன் ரூபா மேலதிகமாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,உணவு இன்றி போசாக்கு குறைபாட்டால் மக்கள் வசித்து வருகின்றனர் .
இவ்வேளையே இந்த மதியவேளை உணவு வழங்கும் நடவடிக்கையை ஆளும் ரணில் அரசு ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது.
மாணவர்களுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம்ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைப்பு
மாணவர்களுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம்ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைப்பு
அக்கரைப்பற்று லீடர் அஷ்ரப் கனிஷ்ட பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா
பெறுமதியான 50 கதிரைகளை தேசிய அரச சார்பற்ற நிர்வனத்தினால் இன்று (16) வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் ஐ.நைஸர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று வலய கல்வி பிரதிப் பணிப்பாளர் ஏ.ஜி.பஸ்மீல் மற்றும் தேசிய அரச சார்பற்ற நிர்வனத்தின்
தவிசாளரும், குறித்த பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளருமாகிய எஸ்.எம்.லாபீர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
லீடர் அஷ்ரப் கனிஷ்ட வித்தியாலயத்தை கொண்டு வருவதற்காக பல போராட்டங்களைச் செய்யவேண்டி இருந்தது. அந்தப்
போராட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற இந்தப் பாடசாலை பல சாதனைகளை அடைந்து செல்கிறது. இது எம் பிரதேசத்திலுள்ள பெற்றோர்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று தேசிய அரச
சார்பற்ற நிர்வனத்தின் தவிசாளரும், குறித்த பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளருமாகிய எஸ்.எம்.லாபீர்தெரிவித்தார்.
பாடசாலையை முன்னெற்றுவதும், பின்னடையச் செய்வதும் அந்தப் பிரதேசத்திலுள்ள
பெற்றோர்களின் கைகளில்தான் தங்கியிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்பாடசாலை ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை தரம் 1, 2, 3, 4 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் கற்றல்
உபகரணங்களை குறித்த நிர்வனத்தின் தவிசாளரினால் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில்
பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்



மாணவர்களுக்கு












