வடக்கில் இருந்து தமிழர்களை விரட்ட அரசாங்கம் சதி

Spread the love

வடக்கில் இருந்து தமிழர்களை விரட்ட அரசாங்கம் சதி

ஒரு நாடு, ஒரு சட்டம்” என ஜனாதிபதி தெரிவிக்கின்றபோதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஒரு சட்டமும் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொள்ளும்

பெரும்பான்மையினத்தினருக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்

தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பகுதியில், மேய்ச்சல் தரை காணிகளை ஊர்காவல் படையினருக்கு முந்திரிகை செய்கைக்கு

வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று (19) மாலை நேரில் சென்று ஆராய்ந்த போதே, அவர் மேற்படி தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்

என்.புஸ்பலிங்கம், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி, பிரதேச சபை உறுப்பினர்களும் அப்பகுதிக்குச் சென்று

, அங்குள்ள நிலைமைகள் குறித்து கால்நடை பண்ணையாளர்களுடன் கலந்துரையாடினார்கள்.

கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தமல்லி தோட்டம், வெட்டிப்போட்டசேனை போன்ற பல பகுதிகளில், தமது முதாதையர்கள் முதல் நீண்டகாலமாக தாங்கள் கால்நடைகளை

மேய்த்துவருவதாகவும் ஆனால் தற்போது தமது
சுமார் 1,500 மேய்ச்சல் தரை காணிகளை சுற்றி முந்திரிகை வளர்ப்பு

எனக் கூறி, வேலியமைக்கப்படுவதாக கால்நடை பண்ணையாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.

இதனையத்து கருத்துத் தெரிவித்த கோவிந்தன் கருணாகரம் எம்.பி, “அரசாங்கம், தமிழர்களை நசுக்குவது மாத்திரமல்லாமல், இந்த நாட்டில் இருந்து தமிழர்களை விரட்டியடிப்பதற்காக கங்கணம்

கட்டிக்கொண்டிருக்கின்றார்கள். மேய்ச்சல் தரைகள், சேனைப்பயிர்ச்செய்கை இடங்களாக மாற்றப்படுகின்றன. இது

பெரும்பான்மையினத்தின் குடியேற்றங்களாகவும் மாறிவருகின்றன.

“கால்நடை பண்ணையாளர்கள் தங்களது வாடிகளில் ஒரு தீப்பெட்டி வைத்திருக்கமுடியாது. பாதுகாப்புக்காக ஒரு கத்தி வைத்திருக்க முடியாது. கால்நடைகளை வைத்திருப்பவர்கள் ஒரு கம்புகூட

வெட்டமுடியாத நிலையிலும் அவ்வாறு வெட்டினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு, பெருமளவான பணம் தண்டப்பணமாக அறவிடப்படுகின்றது.

“பயன்தரும் பல மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு, அந்த மரங்களைக் கொண்டே பல தசாப்தங்களாக மேய்ச்சல் தரையாக வரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் வேலிகள்

அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் தடைசெய்யப்பட்ட பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்தும் முள்கம்பிகளைக்கொண்டு வேலிகள்

அமைக்கப்படுகின்றன. அந்த வேலியில் மாடுகள் படும்போது ஏற்படும் காயங்கள் இலகுவில் மாறாது என பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.

“இந்த பகுதி மட்டுமல்ல, மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திவுலானையில் இருந்து பட்டிப்பளையில் மணலேற்றம்,

காத்தார்சேனை, விச்சுக்குளம், வவுணதீவில் வெட்டிப்போட்டசேனை, செங்கலடியில் கார்மலை, மயிலத்தமடு, மாதவனை போன்ற பகுதிகள் கபளிகரம் செய்யப்படுகின்றன.

“மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தியென்ற மாயைக்குள் தள்ளி, வெறும் கொங்கிறிட் பாதைகளையும் சிறிய அபிவிருத்திகளையும் மேற்கொண்டு, தமிழ் மக்களின்

அடிவயிற்றில் அடிக்கும் இவ்வாறான பொருளாதார அழிவுகளை பார்த்துக்கொண்டு, ஓர் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் தங்களுக்குள்ளேயே அடிபடுகின்றார்கள்.

“எமது மாவட்டத்தை உண்மையில் நேசிப்பவர்களாக இருந்தால், அவர்கள் இந்தப் பகுதிக்கு வரவேண்டும். வெறுமனே மாவட்ட

செயலகத்தில் அதிகாரிகளை கூட்டி கூட்டங்களை நடத்தாமல், இங்கு வந்து இந்த மக்களின் கண்ணீரை துடைக்கவேண்டும்.

“இவ்வாறான கபளீகரம் செய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டுமானால், காணி உரிமையுடன் கூடிய அதிகார

பரவலாக்கல் எங்களுக்கு கிடைக்கவேண்டும். அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்துவருகின்றோம்” என்றார்.

Author: நலன் விரும்பி

Leave a Reply