Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பொத்துவில் முதல் பொலிகண்டி -லண்டனில் தமிழர்களினால் போராடட்ம – video
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிக்கு வலு சேர்க்கும்
வகையில் பிரித்தானிய தமிழர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
இடை நடுவில் பொலிசாரினால் மறிக்கப்பட்டு கொவிட் சட்டம் அமுலில்
இருக்கும் நிலையில் தொடர முடியாது என எச்சரிக்கப்பட்டதுடன் வாகன
இலக்கத் தகடுகள் பதிவு செய்யப்பட்டு கொடிகள் அகற்றப்பட வேண்டும்
என கோரியதுடன் மீளவும் தேவையற்ற பிரயாணமாக இந்த வாகனங்கள்
வெளியில் செல்லுமிடத்து தண்டப்ப அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதில் அழுத்தி வீடியோ பார்க்கவும்
வீதியில் நடந்த சோகம் – தந்தை ,மகன் மரணம் – கண்ணீரில் குடும்பம்
வீதியில் நடந்த சோகம் – தந்தை ,மகன் மரணம் – கண்ணீரில் குடும்பம்
இலங்கை எம்பிலிப்பிட்டிய பகுதியில் சாலையில் பயணித்து
கொண்டிருந்த தந்தையும் அவரது 11 வயது மகனும் பிக்கப் ரக
வாகனம் ஒன்று மோதியதில் சம்பவ இடத்தில பலியாகினர்
நாள் தோறும் இலங்கையில் வீதி விபத்துக்களில் நால்வர் பலியாகி
வருகின்றனர் என்ற புள்ளி விபரம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
காவல்துறையின் அலட்சிய போக்கே இந்த சம்பவங்கள் நிகழ காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
நாளை தனிமை படுத்தலில் இருந்து பல பகுதிகள் விடுதலை – இராணுவ தளபதி அறிவிப்பு
நாளை தனிமை படுத்தலில் இருந்து பல பகுதிகள் விடுதலை –
இராணுவ தளபதி அறிவிப்பு
இலங்கையில் பரவி வரும் நோயின் காரணமாக மக்கள் நடமாட
தடை செய்ய பட்டுள்ள பகுதிகள் சில நாளை காலை முதல் மக்கள்
பாவனைக்கு விடுவிக்க படவுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி
சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
18 பேருக்கு கொரனோ – சந்தைக்கு பூட்டு
18 பேருக்கு கொரனோ – சந்தைக்கு பூட்டு
இலங்கை கம்பாக பகுதியில் உள்ள பொது சந்தை ஒன்றில் பணி
புரிந்த பதினெட்டு பேருக்கு கொரனோ நோயுள்ளது கண்டு பிடிக்க
பட்ட நிலையில் மேற்படி சந்தை மறு தேதி வரை அடித்து பூட்ட
பட்டுள்ளது
தற்போது பொது சந்தைக்கு கிருமி நாசினி தெளிக்கும் நகர்வில்
சுகாதர பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்
11,000 கைதிகளை விடுவித்த கோட்டா – எதற்கு இந்த அவசரம் ..?
11,000 கைதிகளை விடுவித்த கோட்டா – எதற்கு இந்த அவசரம் ..?
இலங்கை சிறைகளில் பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு
பட்டு அடைத்து வைக்க பட்டிருந்த சுமார்
11,000 கைதிகள் ஆளும் கோட்டா அரசினால் விடுதலை செய்ய
பட்டுள்ளனர் ,
மேலும் எதிர்வரும், வெசாக் தினத்தை முன்னிட்டும் நூற்றுக்கு
மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்ய படவுள்ளனர் என
சிறைச்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
கிளிநொச்சியைச் சென்றடைந்த பேரணி
கிளிநொச்சியைச் சென்றடைந்த பேரணி
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரிலிருந்து
வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகர் வந்தடைந்து மாங்குளம்
ஊடாக முறிகண்டி வந்தடைந்து இன்று மாலை கிளிநொச்சியை வந்தடைந்தது.
இப்பேரணியானது இரவு கிளிநொச்சியில் தங்கி நாளை காலை 8.00 மணியளவில்
கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணம்
சென்றடையவுள்ளது.
முல்லைத்தீவில் துறைமுகம் அமைக்க சீனா முஸ்தீபு
முல்லைத்தீவில் துறைமுகம் அமைக்க சீனா முஸ்தீபு
முல்லைதீவு பகுதியில் பெரும் கோட்டை துறைமுகம் ஒன்றை இஸ்தாபிக்க
சீனாவுடன் இலங்கை இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது .திருமலை
,காங்கேசன்துறையை போன்று இந்த துறைமுகத்தை வரலாற்று கேந்திர
முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைக்க திட்டம் இடப்பட்டு வருகிறது
மேற்படி சீனாவின் இந்த திட்டத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவிக்கும்
என எதிர்பார்க்கலாம் , ,அதையும் மீறி சீனாவுடன் இலங்கை
இணைந்து இதனை உருவாக்கும் என்றே உட் கசிவுகள் தெரிவிக்கின்றன
இந்தியா எங்கள் நண்பன் – மகிந்தா குத்துக்கரணம்
இந்தியா எங்கள் நண்பன் – மகிந்தா குத்துக்கரணம்
இந்தியா எங்கள் உற்ற நண்பன் என ஆளும் இலங்கை பிரதமர் மகிந்த
தெரிவித்துள்ளார் ,சீனாவுடன் மிக நெருக்கமாக உலாவி வரும் இலங்கையின்
இந்த அரசியல் பந்து வீச்சில் சிக்கி இந்தியா மண்டையை பிய்த்து கொண்டுள்ள
நிலையில் ,தற்போது மோடியின் நெஞ்சுக்கு பால்வாக்கும் நிலைக்கு மகிந்த
சென்றுள்ளது மிக பெரும் ஆப்பு இந்தியாவுக்கு வைக்க இவர்கள் திட்டமிட்டுள்ளதாக குசும்பர்கள் பேசி வருகின்றனர்
இலங்கையில் கொரனோவால் 343 பேர் மரணம்
இலங்கையில் கொரனோவால் 343 பேர் மரணம்
இலங்கையில் அதிகரித்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி இதுவரை 343 பேர் பலியாகியுள்ளனர்
அதே தினம் மேலும் பாதிக்க பட்ட நிலையில் நானூருக்கு
மேற்பட்டவர்கள் அடையாளம் காண பட்டுள்ளனர்
இலங்கையில் இடம் பெறும் இந்த நோயின் மரணங்களை ஆளும்
கோட்டா அரசு மூடி மறைத்து வருவதான குற்ற சட்டு வலுத்து
வருகின்றமை குறிப்பிட தக்கது
அடக்குமுறை அரசு, போராட்டத்தை நோக்கி தமிழ் பேசும் மக்களை தள்ளுகிறது-மனோ கணேசன்
அடக்குமுறை அரசு, போராட்டத்தை நோக்கி தமிழ் பேசும் மக்களை தள்ளுகிறது
பொத்துவில்-பொலிகண்டி போராட்டம் தொடர்பில் மனோ கணேசன்
தமிழ் பேசும் இலங்கையர்களின் தேசிய இருப்பை அழித்தொழிக்கும், ஒடுக்குமுறை ராஜபக்ச அரசு, தமிழ் மொழியை
பேசுகின்ற, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதங்களை கடைபிடிக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை ஜனநாயக
போராட்டங்களை நோக்கி தள்ளி விட்டுள்ளது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி
தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள்,
சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,
நடப்பு ராஜபக்ச அரசின் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற என்ற கூச்சல் நடைமுறையில், “ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம்”
என்பதில் வந்து நிற்கிறது. இதை நாம் இன்று தெளிவாக புரிந்துக்கொண்டுள்ளோம். இந்த ஏகபோக கொள்கையை நாம்
ஒருபோதும் ஏற்க முடியாது. இதை இந்நாட்டு அரசும், உலகமும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
உண்மையில் ஒளிவு மறைவு இல்லாமல் இதை இந்த அரசு செய்வதை எண்ணி நாம் மகிழத்தான் வேண்டும். உள்ளொன்று
வைத்து புறமொன்று செய்யவில்லையே, இவர்கள்..! இந்நிலையில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டி இந்த
அடக்குமுறைகளுக்கு எதிராக, இந்நாட்டில் எமது இருப்பை உறுதி செய்துக்கொள்ள நாம் போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
நீண்டகாலமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய ஜனநாயக போராட்டம் இப்போது ஆரம்பித்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.
இந்த இலங்கை திருநாடு, “பன்மொழி, பன்மத, பல்லின” அடிப்படையை கொண்ட பன்மைத்துவ நாடு என்ற இலக்கு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை இந்த போராட்டம் தொடர வேண்டும்.
இந்நாட்டின் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பங்கும், இன்றைய இலங்கை நாட்டின் ஆட்சியுரிமை, இறைமை
ஆகியவற்றில் தமிழ் பேசும் மக்களுக்கு இருக்கின்ற மறுக்கப்பட முடியாத உரிமையும் உறுதிப்படுத்தப்படும்வரை இப்போராட்டம் தொடர வேண்டும்.
தமிழ் பேசும் மக்களையும் உள்ளடக்கியதே இலங்கை நாடு என்ற அடிப்படை உண்மையை சிங்கள முற்போக்கு சிந்தனையாளர்கள் ஏற்றுக்கொண்டு கண் திறக்கும்வரை இப்போராட்டம் தொடர வேண்டும்.
இதுவே ராஜபக்ச ஆட்சியின் “ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி” என்ற கொள்கைக்கு உரிய தர்க்கரீதியான அரசியல் பதிலாகும்.
இந்த ஜனநாயக போராட்டத்துக்கு எமது ஆதரவை நல்குகிறோம். ஜனநாயக போராட்ட களத்தில் நிச்சயமாக நாம் கரம் கோர்ப்போம்
.
அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் தமிழ் பெண் சடலமாக மீட்பு
அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் தமிழ் பெண் சடலமாக மீட்பு
வவுனியா பூவரசங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட எருக்கலம்
கல் பகுதியில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் இன்று வீட்டில் இருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில்
சடலமாக கிடந்துள்ளார். இதனை அவதானித்த குறித்த பெண்ணின்
கணவர் சம்பவம் தொடர்பில் அயலவர்களிற்கும், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினார்.
குறித்த பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் சடலத்தினை
மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் எருக்கலம்கல் பகுதியை சேர்ந்த சிவகுமார் சித்திரகலா
என்ற 36 வயதான பெண்ணே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது தலைப்பகுதியில் பலத்த காயம் ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் மலைப் பகுதிக்குள் தங்கம் கண்டு பிடிப்பு
இலங்கையில் மலைப் பகுதிக்குள் தங்கம் கண்டு பிடிப்பு
இலங்கையில் ,மத்திய ,கிழக்கு ,ஊவா ,மாகாணங்கள் மற்றும்
பதுளை பலாங்கொடை ,பண்டாரவளை
மாத்தளை ,இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் பவள
பாறைகளுக்குள் தங்க படிமங்கள் உள்ள; கண்டு பிடிக்க பட்டுள்ளது
இந்தியாவில் மலை ஒன்றுக்குள் தங்கம் உள்ளது போன்று
இலங்கையிலும் உள்ளது தெரியவந்துள்ளதை அடுத்து ,ஆளும் அரசு
குஷியில் உறைந்துள்ளது
இலங்கையில் 5,286 பேருக்கு கொரனோ தடுப்பூசி போட பட்டது
இலங்கையில் 5,286 பேருக்கு கொரனோ தடுப்பூசி போட பட்டது
இந்தியாவால் வழங்க பட்ட கொரனோ தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்த
நிலையில் இன்று முதன் முதலாக 5,286 பேருக்கு போடப்பட்டுள்ளது
,முன்னரணில்
பணிபுரியும் முக்கிய நபர்களுக்கே இந்த தடுப்பூசி பட்டுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கைக்கு அமெரிக்கா மீளவும் எச்சரிக்கை
இலங்கைக்கு அமெரிக்கா மீளவும் எச்சரிக்கை
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி மக்கள்
பலியாகிய வண்ணம் உள்ளனர் ,இதில் முஸ்லீம் மக்களே அதிகம் பலியாகியுள்ளனர்
,இவ்வாறு மரணமானவர்கள் சடலங்களை அடக்கம் செய்திட ஆளு இனவாத அரசு பல தடைகளை இட்டுள்ளது
இதனால் சீற்றமுற்ற அமெரிக்கா அணைத்து மக்களின் பாரம்பரிய ,கலாச்சாரங்களை
மதித்து அவர்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது
ஒரு வாரத்தில் அமெரிக்காவிடம் இருந்து வெளிப்பட்ட இரண்டாவது
சிக்கனல் இதுவாக உள்ளமை குறிப்பிட தக்கது
1,223 கடைகள் ,நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
1,223 கடைகள் ,நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இலங்கையில் பாவி வரும் கொரனோ நோயின் விதிகளை பின்பற்றாது
தமது நிறுவண்னங்கள் மற்றும் கடைகளை நடத்தி வந்த 1,223 நிறுவனங்களுக்கு
எதிராக சட்ட நடவடிக்கை மேக்கொள்ள பட்டுள்ளதாக இலங்கை
காவல்துறை தெரிவித்துள்ளது
இவர்களுக்கு விடுக்க பட அறிவுறுத்தலையும் ,சட்ட விதிகளையும் மீறி செயல்
பட்ட காரணத்தால் இந்த நடவடிக்கையை இந்த நிறுவனங்கள் மீது
தொடர பட்டுள்ளதாக குறிப்பிட பட்டுள்ளது
இலங்கையில் கொரனோ வேட்டைக்கு 297 பேர் மரணமாம்
இலங்கையில் கொரனோ வேட்டைக்கு 297 பேர் மரணமாம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
இதுவரை ந் 97 பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் தடுப்பூசிகள் கிடைக்க பெற்றுள்ள நிலையில் மரண
எண்ணிக்கை குறைவடையும் என நம்ப படுகிறது
இலங்கை 28 இராணுவ அதிகாரிகள் சிவில் பணியில் – அம்பலப்படுத்திய ஐநா
இலங்கை 28 இராணுவ அதிகாரிகள் சிவில் பணியில் – அம்பலப்படுத்திய ஐநா
இலங்கையில் ஆளும் அரசினால் மேற்கொள்ள பட்ட தமிழ் இனப் படுகொலையில்
இருந்து தப்பித்து கொள்ளும் முகமாக தனது நடவடிக்கைகளை நகர்த்தி வருகிறது
போர் குற்றவாளிகள் அனைவரும் முக்கிய பதவிகளில் அமர்த்த பட்டுள்ளனர் ,
மேலும் புலனாய்வு பணியில் ஈடுபடுத்த பட்ட 28 இராணுவ அதிகாரிகள்
மக்கள் சிவில் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் எனவும் ,இவை இலங்கையின்
அத்து மீறல்களை கான் பிப்பதாக ஐநா தெரிவித்துள்ளதுடன்
,சர்வதேச நீதிமன்றில் இலங்கையை பாரப்படுத்துவது தொடர்பிலும் குறிப்பிட்டுளள்து
இலங்கைக்கு இனியும் உதவ முடியாது – அமெரிக்கா திடீர் பெல்ட்டி
இலங்கைக்கு இனியும் உதவ முடியாது – அமெரிக்கா திடீர் பெல்ட்டி
இலங்கையில் இடம்பெற்ற மனித படுகொலை தொடர்பான
விசாரணைக்கு இலங்கைக்கு உதவிட முடியாது என அமெரிக்கா
கையை விரித்துள்ளது
இலங்கையில் சீனா தொடர்ந்து அகல கால் பதித்துள்ள நிலையில் ,அதிக
உதவிகளை செய்து வருகிறது ,இதனால் இலங்கை ஆளும் அரசு
புரிந்த இனப்படுகொலையை இப்பொழுது கையில் எடுத்துள்ளது
வளைந்து கொடுக்க மறுத்த அமெரிக்காஇப்பொழுது பெரும் நெருக்கடியில்
சிக்கியுள்ளது ,அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இலங்கையை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது
தமிழின கொலைகளை கண்ணுற்ற நேரடி சாட்சிகளை தேடும் சிங்கள இராணுவம்
தமிழின கொலைகளை கண்ணுற்ற நேரடி சாட்சிகளை தேடும் சிங்கள இராணுவம்
இலங்கையில் இறுதி போரின் பொழுது சிங்கள அரசை பயங்கரவாதம்
மேற்கொண்ட தமிழ் இன படுகொலை தொடர்பான விசாரணைகள் ஐநாவில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை வழங்கவும் ,குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து தண்டிக்கும் படி ஐநா உத்தரவிட்டது
அதற்குரிய கால அவகாசமும் தாராளமாக வழங்கியது ,ஆனால் அவை எவையும் பொருட்படுத்தாது
சிங்கள அரச இனவாதிகள் ஆடி மகிழ்ந்தன ,தற்போது சர்வதேச நீதிமன்றில் இலங்கை நிறுத்த முற்படும் அபாய ஒலி முழங்கும்
பொழுது ,இவர்களின் கொலைகளை நேரடியாக கண்ணுற்ற மக்கள் மற்றும்
சித்திரை வதைகளிற்கு உள்ளிட்டவர்கள் ,அதில் இருந்து தப்பித்து வெளிநாடுகளில்
தஞ்சம் கோரிய முக்கிய சாட்சிகளை கைது செய்தும் நகர்வில் சிங்கள உ ளவுத்துறை ஈடுபட்டுள்ளது
அவர்கள் ஆதாரம் திரட்டும் நகர்வில் தீவிரமாக செயல் பட்டு வருகிறது
,இவை தொடர்பான பல மர்ம முடிச்சுக்கள் விரைவில் அவிழ்வதுடன் காட்டி
கொடுப்பில் ஈடுபட்டுள்ள முகமூடிகள் கிழியும் நிலை ஏற்பாட போகிறது என்பது திண்ணம் .
கோட்டா ,மகிந்தா,இராணுவ தளபதிகள் வெளிநாடுகள் செல்ல முடியாத அபாயம்
கோட்டா ,மகிந்தா,இராணுவ தளபதிகள் வெளிநாடுகள் செல்ல முடியாத அபாயம்
இலங்கை புரிந்த தமிழ் இனப்படுகொலையை அடுத்து அந்த கொலையை
புரிந்த ஆட்சியாளர்கள் மற்றும் அதனை வழி நடத்திய இராணுவ தளபதிகள்
உள்ளிட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சுதந்திரமாக பயணம் செய்திட முடியாத புதிய நெருக்கடி இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது
குற்றங்கள் புரிந்தவர்கள் பயணங்கள் மாற்று சொத்து உடைமைகள் என்பன
முடக்க படுவதுடன் அவர்களும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ள நிலையில் இந்த சிக்கலை எதிர் நோக்கியுள்ளது
பொல்போர்ட் ஆட்சியில் இடம்பெற்ற கொலைக்கு 20 வருடம் கழித்தே தீர்வு
கிடைத்தது போல ,இலங்கைக்கும் ஆண்டு இருபதுக்குள் ,இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்க போகிறது
ஏன் இப்போ புலிகளை அழித்தோம் என என்னும் நிலைக்கு சிங்களம்
செல்ல போகிறது ,வரும் காலம் இந்த விடயங்களை வலியோடு பகிரும் அதிரடி நகர்வுகள் ஆரம்பமாகியுள்ளன






