கனகபுரம் மாவீரர் நாள் வீடியோ திரண்ட தமிழ் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

கனகபுரம் மாவீரர் நாள் வீடியோ திரண்ட தமிழ் மக்கள்

கனகபுரம் மாவீரர் நாள் வீடியோ திரண்ட தமிழ் மக்கள்

video

https://www.youtube.com/watch?v=QSm3LkZ85p4
சீமான் மாவீரர் நாள் எழுச்சியுரை 2023! திருச்சியில் வரலாறு பதிவானது! | Seeman Speech Maaveerar Naal
Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

சீமான் மாவீரர் நாள் எழுச்சியுரை 2023! திருச்சியில் வரலாறு பதிவானது! | Seeman Speech Maaveerar Naal

சீமான் மாவீரர் நாள் எழுச்சியுரை 2023! திருச்சியில் வரலாறு பதிவானது! | Seeman Speech Maaveerar Naal

seeman full speach

https://www.youtube.com/watch?v=gDbPfV4bous
மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம் video
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம் video

மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம்

video

மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம் video
மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த பெரும் அதிர்ச்சி சம்பவம் video
யாழ்ப்பாணம் நல்லூர் மாவீரர் நாள் video
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் நல்லூர் மாவீரர் நாள் video

யாழ்ப்பாணம் நல்லூர் மாவீரர் நாள் video

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மாவீரர் நாள்

கார்த்திகை கண்ணீர் சொரியும் மாவீரர் நாள்

video

https://www.youtube.com/watch?v=emAzxxT0YRM
துவரகா பேச்சு|பிரபாகரன் மகள் துவரகா|Maaveerar Naal 2023|thuvraga|Prabhakaran's daughter Dwaraka
Posted in இலங்கை செய்திகள்

துவரகா பேச்சு|பிரபாகரன் மகள் துவரகா|Maaveerar Naal 2023|thuvraga|Prabhakaran’s daughter Dwaraka


துவரகா பேச்சு|பிரபாகரன் மகள் துவரகா|Maaveerar Naal 2023|thuvraga|Prabhakaran’s daughter Dwaraka

பிரபாகரன் மகள் துவாரகா மாவீர நாள் பேச்சு 2023 ,போலி துவரகா


என்பது அடையாள படுத்த பட்டுள்ளது|Maaveerar Naal 2023|thuvraga|Prabhakaran’s daughter Dwaraka

video

பிரபாகரன் மகள் துவாராக இன்று மக்கள் முன்பாக தோன்றி பேசுகிறார்
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரன் மகள் துவாராக இன்று மக்கள் முன்பாக தோன்றி பேசுகிறார் live video in

பிரபாகரன் மகள் துவாராக இன்று மக்கள் முன்பாக தோன்றி பேசுகிறார்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் மகள் மக்கள் முன்பாக தோன்றி இன்று பேசுகிறார் என்ற தகவலை புலி அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது .

எதிர் பார்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள இவரது வருகை மற்றும் பேச்சு எதிர்ப்பரப்பை கிளப்பியுள்ளது

உண்மையில் இவர் பிரபாகரன் புதல்வி தானா அல்லது வாடகை வாயா என்பது தொடர்பில் தெரியவரும் என எதிர்பார்க்க படுகிறது

https://www.youtube.com/watch?v=jfMxXFRrs7U

video

மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் இன்று கதவடைப்பு
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் இன்று கதவடைப்பு

மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் இன்று கதவடைப்பு

மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் இன்று முழுமையான கதவடைப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளில அனைவரும்
கலந்துகொள்ள வேண்டும் என்றும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்

நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு

டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு

மேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள பொது இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் நுளம்புகள் பெருகும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 74 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் நளின் ஆரியரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்

பாராளுமன்ற சிறப்புரிமை குழு இன்று முதல் கூடுகிறது
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற சிறப்புரிமை குழு இன்று முதல் கூடுகிறது

பாராளுமன்ற சிறப்புரிமை குழு இன்று முதல் கூடுகிறது


பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழு இன்று (27) முதல் மூன்று நாட்களுக்கு கூடவுள்ளது.

குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இது கூடவுள்ளது.

ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் 09 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 6 மனுக்களை ஆராய சிறப்புரிமைக் குழு இன்றும் நாளையும் (28) நாளை மறுதினமும் (29) கூடவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இது தொடர்பான முறைப்பாடுகளை இந்த வாரம் முன்னுரிமை வழங்கி விசாரிக்குமாறு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற சிறப்புரிமை குழு இன்று முதல் கூடுகிறது

இதன்படி, இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேராவுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம், நாடாளுமன்ற உதவிச் செயலாளர் நாயகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி விடுத்த

அச்சுறுத்தல், இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்னவிற்கு எதிரான முறைப்பாடு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு என்பன விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார ஆகியோருக்கு எதிரான முறைப்பாடு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிரான முறைப்பாடு இங்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த முறைப்பாடுகளை அவசரமாக விசாரித்து வரவு செலவுத் திட்டத்தை இறுதி செய்வதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.

குடு சலிந்துவின் போதைப்பொருள் பணம் சிக்கிய விதம்
Posted in இலங்கை செய்திகள்

குடு சலிந்துவின் போதைப்பொருள் பணம் சிக்கிய விதம்

குடு சலிந்துவின் போதைப்பொருள் பணம் சிக்கிய விதம்

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் சந்தேக நபர் ஒருவரையும் பிரதான போதைப்பொருள் வியாபாரி

ஒருவரின் தாயையும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பண்டாரகம மற்றும் அலுபோமுல்ல பிரதேசங்களில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரகம பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கிக் கணக்கில் வழமைக்கு மாறாக பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதையும் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து அந்த பணம் விரைவாக எடுக்கப்படுவதை அவதானித்த விசாரணை

அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைக்கு அமைய 34 வயதான சந்தேக நபர் மற்றும் பிரதான கடத்தல்காரரின் 67 வயதான தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடு சலிந்துவின் போதைப்பொருள் பணம் சிக்கிய விதம்

குடு சலிந்துவின் பண முகாமையாளர் என கருதப்படும் “லோகு முதலாலி” என அழைக்கப்படும் பிரதீப் நிஷாந்த என்ற சந்தேகபரே கைதாகியுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் இவர், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டிய பணத்தை வங்கி கணக்கில் வரவு வைப்பதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தில் 3 கோடி ரூபாயானது, கட்டுமானத்தில் உள்ள வீட்டின் நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு அடியில் கொங்கிரீட் போட்டு சீல் வைக்கப்பட்டிருந்த இரகசிய அறையில் இருந்துள்ளது.

அத்துடன், அலுபோமுல்லையில் உள்ள கடத்தல்காரருக்குச் சொந்தமான வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்பில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட

குற்றவாளியான குடு சலிந்துவின் பெயரில் வெளியிடப்பட்ட 21 வவுசார் ஆவணங்களையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

தலைவர் பிறந்த நாளுக்கு லண்டன் சிறுமியின் அசத்தல் video
Posted in இலங்கை செய்திகள்

தலைவர் பிறந்த நாளுக்கு லண்டன் சிறுமியின் அசத்தல் video

தலைவர் பிறந்த நாளுக்கு லண்டன் சிறுமியின் அசத்தல் video

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 69 தாவது பிறந்த நாளை உலகம் மக்கள் கொண்டாடி வருகின்றனர்

லண்டன் மிச்சம் பகுதியில் உள்ள சிறுமி ஒருவர் தனது இல்லத்தில் உள்ள தலைவர் படத்தின் முன்பாக ,அவரை வணங்கி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

இந்த காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது .

தலைவர் பிறந்த நாளுக்கு லண்டன் சிறுமியின் அசத்தல்

கடல் கடந்து வந்த பொழுதும் ,மண்ணில் பிறவாது இந்த நாடுகளில் பிறந்து ,வளர்த்த பொழுதும் எமது தேசியத்தையும் மண்ணையும் நேசிக்கும் இவ்வாறான குழந்தைகள் நினைவு திறனும் ,பற்றும் போற்றுதலுக்கும் உரியது

நய வஞ்சகத்தால் தலைவர் பிரபாகரன் வீழ்த்த பட்டு அந்த போர் மழுங்கடிக்க பட்ட பொழுதும் ,விழுதுகள் அவரது கனவை தாங்கி பயணிக்கும் இந்த விடயங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது .

வாழ்த்துக்கள் அம்மாடி .

video

தலைவர் அகவையே கொண்டாடிய தேனிசை செல்லப்பா
Posted in இலங்கை செய்திகள்

தலைவர் அகவையே கொண்டாடிய தேனிசை செல்லப்பா

தலைவர் அகவையே கொண்டாடிய தேனிசை செல்லப்பா

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் 69 அகவை நாளில் ,தமது இல்லத்தில் கேக் வெட்டி தலைவன் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த தேனிசை செல்லப்பா குடும்பம் .

தலைவரும் தமிழீழமும் செழித்து , வளம் பெற தனது மதுர குரலினால் பலத்தை வழங்கி ஈழம்
உயிர்ப்போடு துடிக்க நின்றவர் தேனிசை செல்லப்பா .

தலைவர் அகவையே கொண்டாடிய தேனிசை செல்லப்பா

அவ்வாறான தேனிசை செல்லப்பா அவர்கள் தலைவர் பிறந்த நாளில் தனது உள மகிழ்வை இவ்விதம் வெளிக்காட்டியுள்ளார் .

இவரை போல தமிழர்கள் பலர் தமது தலைவனை நினைவு கூர்ந்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் .

தேசம் அழிந்தாலும் ,தேச புதல்வர்கள் மறைந்தாலும் ,
அவர்கள் விட்டு சென்ற வழி தடங்கல் தமிழர் மனதில் இருந்து விலகாது என்பதற்கு இந்த நிகழ்வுகள் உதாரணமாகும்

தலைவர் அகவையே கொண்டாடிய தேனிசை செல்லப்பா
தலைவர் அகவையே கொண்டாடிய தேனிசை செல்லப்பா
தலைவர் அகவையே கொண்டாடிய தேனிசை செல்லப்பா
பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கொள்கை நாட்டி நடந்தவன்
கொடி நாட்டி தேசம் ஆண்டவன்
வல்வை ஊரில் பிறந்தவன்
வையம் வியந்திட வைத்தவன்

பெரும் சமராடி வென்றவன்
பெரும் தலைவனாகி நின்றவன்
நஞ்சு உடல் தரித்தவன்
நய வஞ்சகத்தால் வீழ்ந்தவன்

ஈழம் கனவய் கொண்டவன்
ஈகம் தந்தே உயர்ந்தவன்
போரில் வெல்ல பயந்தவன்
பொறுக்கி ஒன்றால் வீழ்ந்தவன்

ஆளும் காலம் இல்லை தான்
ஆறா வலிகள் நெஞ்சில் தான்
அகவை உந்தன் நாளிலே
அண்ணா உன்னை வாழ்த்துகிறோம் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-11-2023

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, கட்டுகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

vdeo

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

திடீர் சுற்றிவளைப்பில் 40 பேர் கைது

திடீர் சுற்றிவளைப்பில் 40 பேர் கைது

இன்று (26) அதிகாலை வெல்லம்பிட்டி, சிங்கபுர பிரதேசத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 04 பெண்கள் உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள், அதிகரித்த குற்றங்கள் மற்றும் போதைப்பொருள்கள் உள்ளிட்ட காரணங்கால் 138 பொலிஸ்

அதிகாரிகள் மற்றும் 200 இராணுவ அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்

தேஷ்பந்து தென்னகோன், மேல் மாகாணம் தெற்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பன, மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவின்

திடீர் சுற்றிவளைப்பில் 40 பேர் கைது

பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் லித் அபேசேகர ஆகியோரின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கையின் கீழ், 61 வீடுகள் மற்றும் 196 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர்.

இதன்போது ஹெரோயின், ஐஸ், சட்டவிரோத மதுபானம், வாள்கள், மன்னா, தடைசெய்யப்பட்ட கத்திகள் மற்றும் 12 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையில் 40 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் வாள்வெட்டுத் தாக்குதல்

பருத்தித்துறையில் வாள்வெட்டுத் தாக்குதல்

பருத்தித்துறையில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவத்தில் கந்தவுடையார் ஒழுங்கை, பருத்தித்துறையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் டிலக்சன் (வயது 23) என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.

வீதியால் சென்ற இளைஞரை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வாளால் வெட்டியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

video

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

குளியலறையில் இருந்து பழைய சடலம் மீட்பு

குளியலறையில் இருந்து பழைய சடலம் மீட்பு

இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியிலுள்ள குளியலறையில் மூன்று நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும்

நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பன்னிபிட்டிய, மலபல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஹோமாகம டென்சில் கொப்பேகடுவ

மாவத்தையைச் சேர்ந்த சுதத் சிந்தனை ரூபசிங்க (39), என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தனியார் வங்கியொன்றின் நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றுகின்றார்.

குளியலறையில் இருந்து பழைய சடலம் மீட்பு

குறித்த நபர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மேற்படி முகவரியில் தனது தாயாருடன் வசித்து வந்ததாகவும், பின்னர் தனது தாய் பாதிரியார் ஆனதன் காரணமாக இந்த இடத்தில் தனியாக வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இவர் வசித்த அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் 119 என்ற அவசர இலக்கத்திற்கு வழங்கிய

தகவலின் பேரில் பொலிஸார் வந்து அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குறித்த நபரின் சடலம் கிடப்பதை கண்டுள்ளனர்.

video

கட்டுநாயக்கவில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

விமான நிலையத்தில் சலசலப்பு

விமான நிலையத்தில் சலசலப்பு

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கணனி அமைப்பு இன்று (26) மதியம் முதல் செயலிழந்துள்ளதையடுத்து வெளிநாடுகளுக்குச் செல்ல வந்த ஆயிரக்கணக்கான விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோபமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பு பல தனியார் நிறுவனங்களால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும், சரியான பராமரிப்பு இல்லாததால், இது ஒரு மாதத்திற்கு பல முறை இதுபோன்று செயலிழந்து வருவதாகவும் குடிவரவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் சலசலப்பு

        மேலும், இந்த கணினி அமைப்பு சர்வதேச இன்டர்போல் பொலிஸுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், அதன் வேகம் குறைவதால் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்களத்தின் கணினி அமைப்பு பலவீனமடையும் என்று பேச்சாளர் கூறினார்.

          11/26 நண்பகல் 12.20 மணியளவில் கணினி அமைப்பு படிப்படியாக மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், விமான நிலையத்தில் அதிக பயணிகள் போக்குவரத்து சிறிது தளர்த்தப்படுவதாகவும் பேச்சாளர் மேலும் கூறினார்.

           11/26 பிற்பகல், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பல விமானங்களும் அவ்வாறான இடங்களிலிருந்து விமான நிலையத்திற்கு வரும் பல விமானங்களும் இதனால் பாதிக்கப்படலாம் என்றும் பேச்சாளர் எச்சரித்தார்.

யானை தாக்கி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி

யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளக்கல்மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர்

உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த மற்றுமொருவர் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சனிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் இலுப்படிச்சேனை, வேப்பவெட்டுவான் வீதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய கந்தையா கீர்த்திகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார். .

யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி

மாடு மேய்க்கச் சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் வேளையில் காட்டு யானை வழிமறித்துத்தாக்கியுள்ளதாகவும்

ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றய நபர் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு தீடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம் நஸீர் சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்

மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

video

சுனாமி பேரழிவு நினைவு நாள்
Posted in இலங்கை செய்திகள்

சுனாமியால் இலங்கைத் தீவே காணாமல் போகும் நடிகர் ஆரூடம்

சுனாமியால் இலங்கைத் தீவே காணாமல் போகும் நடிகர் ஆரூடம்

அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும் என்றும் இலங்கை எனும் தீவே காணாமல் போய்விடும் என்றும் நடிகர் அனுமோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் அனுமோகன் கோவையைச் சேர்ந்தவர். இவர் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துள்ளார். இவர் 1980களில் இயக்குநராக அறிமுகமானார். இவர் இது ஒரு தொடர் கதை, நினைவு சின்னம், மேட்டுப்பட்டி மிராசு, அண்ணன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிக் கொண்டே பல படங்களில் நடிக்கவும் செய்தார். கொங்கு தமிழில் இவர் பேசும் வசனங்கள் அருமையாக இருக்கும். அர்ச்சனை பூக்கள், விஐபி, மூவேந்தர், நட்புக்காக. மன்னவரு சின்னவரு, படையப்பா, சுயம்வரம், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சுனாமியால் இலங்கைத் தீவே காணாமல் போகும் நடிகர் ஆரூடம்

இவர் அண்மைக்காலமாக சித்தர் ஏட்டுக்குறிப்புகளை கொண்டு சில விஷயங்களை கூறி வருகிறார்.

அந்த வகையில் அவருக்கு படவாய்ப்பு கிடைத்தது எப்படி என கூறியுள்ளார். அதில் எனக்கு 2, 3 ஆண்டுகளுக்கு பட வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

என் மனைவி சென்னை பனகல் பார்க்கில் உள்ள முப்பாத்தம்மன் வேண்டிக் கொண்டு 9 வாரங்களுக்கு பாம்பு புற்றுக்கு பால் ஊற்றியதால் படையப்பா படத்தில் வாய்ப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அது போல் அவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்தும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அதில் இந்தியா உலக கோப்பையை வெல்லும். இப்போது 10 ஆவது உலக கோப்பை. இனி 25 க்கு பிறகு தொடர்ச்சியாக இந்தியா ஜெயித்துக் கொண்டே இருக்கும். 30 போட்டிகள் வரை தொடர்ந்து வெல்வார்கள் என்றார்.

ஆனால் உலக கோப்பையில் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது. இதையடுத்து அவரை நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகிறார்கள்.

அது போல் அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் 31.12.2024 க்குள் ஒரு பெரிய அழிவு வரும். இலங்கை எனும் தீவு சுனாமியால் காணாமல் போகும். இது சித்தர் ஏட்டுக் குறிப்புகளில் இருக்கிறது.

ஏற்கெனவே இலங்கை சுனாமி வந்ததால்தான் தமிழ்நாட்டை விட்டு பிரிந்து தனித்து தீவாக காணப்படுகிறது.

2004 ஆம் ஆண்டு சுனாமி வரும் என சொன்னோம். அதை யாரும் நம்பவில்லை. எனவே இலங்கை சுனாமியால் இந்த முறை அழியும்.

மேலும்,
சுனாமி காரணமாக, சென்னை தேனாம்பேட்டை வரை கடலாக மாறிவிடும் என்றும் பீதியூட்டும்வகையில் தெரிவித்துள்ளார்

video