Author: நலன் விரும்பி
கிளிநொச்சியில் வீடுபுகுந்து ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல்
கிளிநொச்சியில் வீடுபுகுந்து ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல்
கிளிநொச்சி அக்கரையான் பகுதியில் சுய தொழில் வாய்ப்பை பெற்று நடத்தி வந்த வீட்டுக்குள் இரவு வேளை
புகுந்த 15 க்கு மேற்பட்ட வாள்வெட்டு குழுக்கள் அங்கிருந்த வளர்ப்பு பன்றிகள் ,வான்கோழிகள்
என்பனவற்றை வெட்டி வீழ்த்தியதுடன் ,அந்த வீட்டின் பெண்மணி மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்
போலீசார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
பாதிக்க பட்ட பெண் கிளிநொச்சி மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
போலியாக செய்திகளை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் வாலிபர் கைது
போலியாக செய்திகளை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் வாலிபர் கைது
சமூக வலைத்தளம் ஊடக போலியான தகவலை பரப்பினார் என்ற குற்ற சாட்டில் கம்போல
பகுதியில் வைத்து வாலிபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுளளார்
கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளார்
இலங்கையில்ஒரே நாளில் 1451 பேருக்கு கொரோனா -தயராகும் லொக்கடவுன்
இலங்கையில்ஒரே நாளில் 1451 பேருக்கு கொரோனா -தயராகும் லொக்கடவுன்
இலங்கையில் ஒரே நாளில் சுமார் 1451 பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
,மேலும் இந்த நோயாளர்கள் தொற்றுக்கு உள்ளன கிராம புரங்கள் தொடர்ந்து தனிமை படுத்த
பட்டு இராணுவம் ,போலீசார் காவல்புரிந்து வருகின்றனர்
தொடர்ந்து இந்த நோயானது அதிகரித்து செல்கின்ற காரணத்தினால் அவசரகால சட்டத்தின்
பிரகாரம் நாடு முடக்க படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கையில் சிறுவர்களுக்கு கொரனோ தொற்றும் அபாயம் – எச்சரிக்கை
இலங்கையில் சிறுவர்களுக்கு கொரனோ தொற்றும் அபாயம் – எச்சரிக்கை
இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிறுவர்கள்
,குழைந்தைகள் அதிகளவு பாதிக்க படும் அபாயம் உள்ளதாக தொற்று நோய் நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
அரசு விடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி தமது உயிர்களை பாதுகாத்தது கொள்ளுமாறு
தொடர்ந்து வேண்டுதல் விடுக்க பட்டு வருகிறது
ஆனால் மக்கள் அதனை அலட்சியம் செய்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை கவனிக்க தக்கது
நாடு முடக்க படும் அபாயம் – பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் – பீதியில் மக்கள்
நாடு முடக்க படும் அபாயம் – பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் – பீதியில் மக்கள்
இலங்கையில் பரவி வரும் நோயின் அதிகரிப்பால் நாடு முற்றுமுழுதாக முடக்க படும் நிலைக்கு
செல்லும் அபாயம் உள்ளதாக இராணுவம் எச்சரித்துள்ளது
இதனால் மக்களை முன் கூட்டியே பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுமாறு வேண்டுதல்
விடுக்க பட்டுள்ளது
மக்களே எச்சரிக்கை முந்தி கொள்ளுங்கள்எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்பது களநிலவரம்
சீன மயமாகும் இலங்கை – யாழில் சீனா எழுத்துடன் பூங்கா
சீன மயமாகும் இலங்கை – யாழில் சீனா எழுத்துடன் பூங்கா
தமிழர் தாயகமான யாழ்ப்பாண பகுதியில் சீனா அமைத்து வரும் பூங்கா ஒன்றில் சீன எழுத்து எழுதப்பட்டுள்ளது
அதன் எழுத்து அருகில் ஆங்கிலமோ தமிழோ எதுவும் இல்லாது தனி சீனத்தில் எழுத பட்டுள்ளது
இது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் முகமாக நகரத்து படும் வலை பின்னல் என்பது வெளிப்படையாகிறது
இதுக்கு தானே இந்திய புலிகளை அழித்தாய் ..?
கோட்டா பாய சீன பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு photo
கோட்டா பாய சீன பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு photo
இலங்கைக்கு சீனா பாதுகாப்பு அமைச்சர் தனது சிறப்பு தூது குழுவுடன் பயணம் செய்துள்ளார்
,இவரது இந்த பயணம் இலங்கை வரலாற்றில் அதி முக்கிய விடயங்கள் பேசப்பட்டுள்ளதுடன் ,மிக முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட பட்டுள்ளது
இலங்கையை சீனா குத்தகைக்கு எடுத்துள்ள விடயம் அங்கு இடம் பெறும் பல்வேறு பட்ட நகர்வுகள் மூலம் சமீப காலங்களில் அவதானிக்க முடிகிறது ,
சீனா ,இலங்கை நெருக்கம் அமெரிக்கா ,இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு விருப்பற்று நகர்கிறது
,இதுவே இலங்கை எதிர்காலத்தில் மிக பெரும் நெருக்கடிக்குள் சிக்கும் நிலைய இலங்கையில் மாறுபட்ட
அரசியல்,மாற்று ஆயுத கிளர்ச்சிகள் ஏற்படும் நிலையை தோற்றுவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது


இந்திய மக்களுக்காக பிரார்த்திப்போம். நம்மையும் பாதுகாத்து கொள்வோம்-மனோ கணேசன்
இந்திய மக்களுக்காக பிரார்த்திப்போம். நம்மையும் பாதுகாத்து கொள்வோம்.
- மனோ கணேசன் எம்பி
எம்மைவிட மோசமாக கொரோனா பேராபத்தில் விழுந்து விட்ட அப்பாவி இந்திய மக்களுக்காக, எல்லா பேதங்களையும் தள்ளி வைத்து விட்டு, மனிதத்தின் பெயரால் பிரார்த்தனை செய்யுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
சுமார் 130 கோடி ஜனத்தொகை கொண்ட பாரத தேசம், இன்று கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அல்லலுறுகின்றது. இந்திய நகரங்களிலும், கிராமங்களிலும் வாழும் மக்களின் கண்ணீர் எமக்கு தெரிகிறது. இது கொரோனா சுனாமி அவலம் என கூறப்படுகின்றது.
எமது நாட்டிலும் இந்த கொரோனா கொடுமை புதிய வீரியத்துடன் பரவி வருகின்றது. நாட்டின் சுகாதார துறையினருக்கு வழங்கும் பூரண ஒத்துழைப்பின் மூலம் இதை நாம் எதிர் கொள்ள
வேண்டும். அரசாங்கத்தை பொறுப்புடன் செயற்படுமாறு கூறும், அதேவேளை பொதுமக்களாகிய நாமும் பொறுப்புடன் நடந்து இந்த பேரழிவை எதிர்கொள்ள வேண்டும்.
மிகப்பெரிய ஜனத்தொகையை கொண்டுள்ள எமது மிக நெருங்கிய அயல் நாடான இந்தியாவில், ஒட்டு மொத்த ஜனத்திரளின் மத்தியில் வீரியமுள்ள கொரோனா கிருமிகள் வேகமாக பரவி
வருவதை செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பாரதம் இந்த கொடுமையிலிருந்து விரைவில் மீள வேண்டும் என்ற நோக்கில் நாம் நமது வீடுகளில் இருந்தபடி பூஜை, நமாஸ், பிரார்த்தணைகளில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பிரித்தானிய தமிழர்கள் தொடர்பில் பொய் சொன்ன பிரித்தானிய அரசாங்கம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !
பிரித்தானிய தமிழர்கள் தொடர்பில் பொய் சொன்ன பிரித்தானிய அரசாங்கம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !
2009ம் ஆண்டுக்கு பின்னர் பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தமிழர்களிடத்தில் ஆதரவில்லை என பிரித்தானிய அரச தரப்பு முன்வைத்திருந்த கருத்து உண்மைக்கு புறம்பானது
என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குவதற்கான தமது விருப்பினை பிரித்தானிய வாழ் தமிழர்கள் வெளிப்படுத்துவதற்கான அவசர அழைப்பொன்றினை விடுத்துள்ளார்.
விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்குவது தொடர்பில் பிரித்தானிய வாழ் சிங்கள மக்களிடத்திலும் எதிர்ப்பு காணப்படுகின்றது என தடை செய்யப்பட்ட அமைப்புக்களுக்கான
மேன்முறையீட்டு சிறப்பு நீதிமன்றில் தெரிவித்திருந்த பிரித்தானிய உள்துறை அமைச்சு, தடையினை நீக்கினால் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் எனவும் தனது வாதுரையில் முன்வைத்திருந்தது.
இதனை சுட்டிக்காட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், விடுதலைப்புலிகள் மீதான பற்றும், மதிப்பும் தமிழர்களிடத்தில் ஒருபொழுதும் குறையவில்லை.
தடை செய்யப்பட்ட அமைப்புக்களுக்கான மேன்முறையீட்டு சிறப்பு நீதிமன்றில் பிரித்தானிய உள்துறை அமைச்சு முன்வைத்த வாதம் பொய்யானது என்பதனை வெளிப்படுத்த, தடையினை
நீக்குவதற்கான தமது அரசியல் விருப்பினை பிரித்தானிய வாழ் தமிழ் உறவுகள் lifttheban.uk இந்த இணையதளத்தின் மூலம் வெளிபடுத்த வேண்டிய தருணம் இது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பிரித்தானிய தமிழர்களை நோக்கிய அழைப்பு விடுக்கையில்,
பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய
உள்துறையமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையம் தனது முதல் தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) தெரிவித்துள்ளது.
தனது இரண்டாம் கட்டத்தீர்ப்பில், தடையினை நீக்குவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய பிரித்தானிய அரசாங்கத்துக்கு 90 நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ளது.
தடையினை நீக்குவதற்கான சட்டப்போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து அதில் முதல்கள வெற்றினையும் கண்டுள்ள நிலையில், அதனை அரசியல்ரீதியான வெற்றியாக்குவது தற்போது பிரித்தானிய வாழ் மக்களுடைய கைகளிலேயே உள்ளது.
விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது நாடாளுமன்றத்தின் ஊடாகவே கொண்டு வரப்பட்டிருந்தது. இந்நிலையில் தமது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடையினை
நீக்க கோரும் தமது விருப்பினை பிரித்தானிய வாழ் தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களது அழுத்தம் உள்துறை அமைச்சரை நோக்கி செல்லும்.
https://youtu.be/rMT6QYurLGk
இதற்காகவே lifttheban.uk எனும் இணையத்தளம் உருவாக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது. இந்த இணையத்தளத்துக்கு சென்று தடை நீக்கத்திற்கான தமது விருப்பினை வெளிப்படுத்த வேண்டிய தமிழர்கள் ஒவ்வொருவரினதும் வரலாற்று கடமையாகவுள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது அழைப்பில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை செவ்வாய்க்கிழமை பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தினை விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் ” WALK FOR LIFT THE BAN” வந்தடையவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேல்ஸ் நாடாளுமன்ற தொகுதியில் தொடங்கியிருந்த இந்த நடைப்பயணம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது, பிரித்தானிய வாழ் தமிழர்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிப்பதோடு, தமது சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளுக்கும் தடையாக இருக்கின்றது என வலியுறுத்தியிருந்தது.
இலங்கையில் கோர தாண்டவம் ஆடும் பிரிட்டன் கொரனோ
இலங்கையில் கோர தாண்டவம் ஆடும் பிரிட்டன் கொரனோ
இலங்கையில் தற்போது மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயானது பிரிட்டனில் பரவிய
கொரனோ என மருத்துவ ஆர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
மிகவும் வீரியமான இந்த நோயில் இருந்து மக்களை காப்பாற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன
,மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே வந்த கொடிய நோயில் இருந்து
உயிர்ப்பலிகளை தடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்
ஆபிரிக்க நாடுகளில் பரவிய உடல் அழுகி ஊற்றும் நோயானதும் பிரிட்டனில் பரவி வந்தமை இங்கே குறிப்பிட தக்கது
பொலிசார் பாய்ச்சல் – 145 பேர் அதிரடி கைது
இலங்கை
பொலிசார் பாய்ச்சல் – 145 பேர் அதிரடி கைது
இலங்கையில் கொரனோ விதிகளை மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் 145 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதான பலருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட சுமாரானவர்கள் நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
பொலிஸாரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்து மக்கள் தொடர்ந்து உலாவி வருகின்றனர் ,இந்த
நோயின் தாக்குதல் தொடர்பான தெளிதல் இல்லாததே இதற்கு கரணம் என தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கையில் நிரம்பி வழியும் மருத்துவ மனைகள் – இடம் இன்றி நோயாளர் அவதி
இலங்கையில் நிரம்பி வழியும் மருத்துவ மனைகள் – இடம் இன்றி நோயாளர் அவதி
இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் அதிகரிப்பால் பல்லாயிரம் மக்கள் ஒரே
தடவையில் பாதிக்க பட்டுள்ள நிலையில் மருத்துவமனைகள் நிறைந்து வழிகின்றன
இவர்களை பராமரிப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது
மேலும் நோயானது பரவாமல் தடுத்திட பல கிராமங்கள் தனிமை படுத்த பட்டு இராணுவ போலீஸ் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
எனினு மக்கள் அலட்சியமாக செல்வதை அவதானிக்க முடிகிறது
கொரனோ கொலைவெறி -இலங்கையில் 100 கிராமங்கள் தனிமை படுத்தல்
கொரனோ கொலைவெறி -இலங்கையில் 100 கிராமங்கள் தனிமை படுத்தல்
இலங்கையில் இரண்டாம் அலையாக மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் காரணாமாக
இதுவரை நூறுக்கு மேற்பட்ட கிராமங்கள் அடித்து மூடப்பட்டுள்ளன ,இராணுவம் போலீசார் இங்கு பாதுகாப்பபில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .
முற்றாக தனிமை படுத்த பட்டு மக்கள் நடமாட்டம் முடக்க பட்டுள்ளது
மேற்படி நோயானது கர்ப்பிணிகளை மிக வேகமாக தாக்கி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
யாழில் ஆலய நிர்வாகிகள் கைது – போலீசார் அடாவடி
யாழில் ஆலய நிர்வாகிகள் கைது – போலீசார் அடாவடி
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாச்சி அம்மன் கோவிலின் பொறுப்பாளர் சபையின்
தலைவர் மற்றும் செயலாளர்ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்துள்ளனர்
கொரனோ தொற்று காலப்பகுதியில் நிகழ்கால விதிகளை பின்பற்றாது அதிக மக்களை
ஆலயத்திற்குள் அனுமதித்த குற்ற சாட்டில் இந்த இருவரும் கைது செய்ய பட்டுள்ளனர்
மேற்படி விடயம் மக்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது
போலி நகை தயாரிப்பு கம்பெனி சுற்றிவளைப்பு
போலி நகை தயாரிப்பு கம்பெனி சுற்றிவளைப்பு
இலங்கை பியகம பகுதியில் போலி நகை தயாரித்து விற்பனை செய்து வந்த நிறுவனம் ஒன்றினை
காவல்துறையின் சுற்றிவளைத்தனர்
பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது
இடம்பெற்றுள்ளது
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்
- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்
- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா
ரிசார்த் பதியூனுக்கு மூன்று மாதம் தடுப்பு
ரிசார்த் பதியூனுக்கு மூன்று மாதம் தடுப்பு
இலங்கையின் முன்னாள் அமைச்சரும் மகிந்த விசுவாசியுமாக விளங்கிய ரிச்சர்டு பதியுதீனுக்கு
மூன்று மாதம் விளக்கமறியலில் வைக்க பட்டுளளார்
தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கு இவரே முக்கிய காரணி என்ற அடிப்படையில் இந்த தடுப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
குண்டு வெடிப்பு இருவர் காயம் – இராணுவம் சுற்றிவளைப்பு
குண்டு வெடிப்பு இருவர் காயம் – இராணுவம் சுற்றிவளைப்பு
இலங்கை பன்னல பகுதியில் குண்டு ஒன்று வெடித்து சிதறியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
,மேலும் அங்கு நிறுத்தி வைக்க பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளது
இதில் படுகாயமடைந்த 22 மாற்று 27 வயதுடைய வாலிபர்கள் குருணாகல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளனர்
குறித்த பகுதி இராணுவத்தினரின் கட்டு பாட்டில் கொண்டுவரப்பட்டு சோதனைகள் ,மற்றும் ஆய்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இதில் வெடித்து சிதறிய குண்டு எவ்வகையை சேர்நதது என்பது தொடர்பில் தெரிய வரவில்லை

யாழில் இராணுவ வண்டி மோதல் -13 இராணுவம் காயம்
யாழில் இராணுவ வண்டி மோதல் -13 இராணுவம் காயம்
யாழ்ப்பாணம் கோப்பாய் உரும்பிராய் சந்தியில் சிங்கள இராணுவத்தினர் பயணித்த டிரக்
வாகனமும் ,டிப்பர் லொறி ஒன்றுடன் நேரெதிர் மோதியதில் 13 இராணுவத்தினர் உள்ளிட்ட 14 பேர்
படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

ரிசாத் கைது, ஹரின், மனுஷா மீது அச்சுறுத்தல் ஆகியவற்றை நிபந்தனை இல்லாமல் கண்டிப்போம்-மனோ கணேசன்
ரிசாத் கைது, ஹரின், மனுஷா மீது அச்சுறுத்தல் ஆகியவற்றை நிபந்தனை இல்லாமல் கண்டிப்போம்
தமுகூ தலைவர் மனோ கணேசன்
ரிஷாத் பதுர்தீன் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிக்கள் ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் மீதும் கைது மேகங்கள் சூழ்கின்றன. இவற்றை மூலம் இன்றைய அரசு,
எதிர்கட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து, நாட்டின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க முயல்கிறது.
இவை தொடர்பில் ஆராய நாளை ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இவை பற்றி நாம் ஆழமாக ஆராய்வோம் என தமிழ் முற்போக்கு
கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
ரிசாத் கைது, ஹரின், மனுஷா மீது அச்சுறுத்தல் ஆகியவற்றை நிபந்தனை இல்லாமல் கண்டிப்போம்.
நண்பர் ரிஷாத் பதுர்டீன், மீதான பொதுவான சமூக வலைத்தள குற்றச்சாட்டுகளை நானறிவேன். அவரது கட்சியினர் 20ம் திருத்தம் தொடர்பில் அரசுக்கு ஆதரவளித்த “அரசியல் சூழல்”
தொடர்பிலும் எனக்கு மனவேதனை இருக்கின்றது. ஆனால், இவற்றை காரணமாக இன்று கூறி, அவரது கைதை நியாயப்படுத்தவோ, அரசின் அராஜக போக்குக்கு ஒரு சாட்டு தேடி தரவோ
கூடாது. எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல், அவரது கைதை, அவர் கைது செய்யப்பட்ட முறைமையை நமது கட்சி கண்டிக்கின்றது.
கைது அச்சுறுத்தல் எனக்கு புதிதல்ல. இதைவிட மிக பயங்கரமான 2007ம் ஆண்டு, இன்றைய ஜனாதிபதி பலமிக்க பாதுகாப்பு செயலாளாராக பணியாற்றியபோது, கோர யுத்தம் வடகிழக்கில் நடக்கிறது.
அப்போது, எனது தொகுதி கொழும்பில் அடைக்கலம் புகுந்த வடகிழக்கு தமிழர்கள் வகைதொகை இல்லாமல் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் புறநகர் பகுதிகளில்
வீசப்பட்டிருந்த வேளை, அந்த அரச பயங்கரவாத அராஜகத்துக்கு எதிராக தெருவில் இறங்கி போராடினேன் என்பதற்காக, என்னை பயங்கரவாத தடுப்பு பிரிவில் வைத்து, கொடுமையாக விசாரித்து, பயமுறுத்தினார்கள்.
அப்போது எனக்கு ஆதரவாக எந்த ஒரு தமிழ், முஸ்லிம் எம்பீயும் வாயை திறக்கவில்லை. அரசுடன்
சேர்ந்து பலர் அமைதி காத்தார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எம்பீகள் அல்லாத சில சிங்கள முற்போக்காளர்கள் மட்டுமே எனக்காக குரல் கொடுத்தார்கள்.
ஆனால், அந்த தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு இன்று எனது நிலைபாடுகளை நான் தீர்மானிக்க முடியாது. அந்தளவு “சிறுமனதாளன்” அல்ல, நான்.
இப்போது, பகிரங்கமாக கொழும்பில் குடும்பத்துடன் வாழும் ரிசாத் பதுர்தீன் எம்பீயை, அதிகாலை அமைதியை ஊடறுத்து, அவரது வீட்டை சுற்றி வளைத்து, ஒரு பாதாள உலக கேடியை இழுத்து
செய்வதை போல் கொண்டு சென்றதன் மூலம் இந்த அரசு எமக்கு சொல்கின்ற செய்தி என்ன?
“தன் மீது குற்றம் சாட்ட சாட்சியங்கள் இருந்தால், தன்னை விசாரியுங்கள்” என அவரே பலமுறை கூறியுள்ளார். ஆனால், எதிர்கட்சியில் இருக்கும்போது, தினசரி வரிசையாக வந்து, அவர் மீது
சீஐடியில் புகார் செய்து விட்டு, பின் ஊடகங்களில் வசை பாடி விட்டு, சாட்சியங்கள் இருப்பதாக கூறி விட்டு, ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் சூத்திரதாரிகளை தூக்கில் போடுவோம் எனவும் கூவி
விட்டு, ஆளும்கட்சியாக மாறிய பின், சுமார் இரண்டு வருடங்கள் சும்மா இருந்து விட்டு, இப்போது நௌபர் மௌலவி என்பவரே சூத்திரதாரி எனவும் அறிவித்து விட்டு, இப்போது ரிஷாடை இந்த அரசு கைது செய்துள்ளது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, நௌபர் மௌலவியை “சூத்திரதாரியாக” ஒப்புக்கொள்ளாததால், அவரை சமாளிக்க இவரை இந்த அரசு கைது செய்கிறது என்ற பலத்த சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
இதேபோல்தான், நண்பர்கள் ஹரின், மனுஷ ஆகியோர் மீதும் கைது மேகங்கள் சூழ்கின்றன. நாளை இது இன்னும் மேலும் பலரையும் சுற்றி வளைக்கும். ஆகவே நாம் இந்த பின்னணியை புரிந்துக்கொள்ள வேண்டும்.
ரிசாத் கைது பற்றி, சனிக்கிழமை காலையிலேயே எதிர்கட்சி தலைவர் சஜித்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவராக நான் பேசினேன். தற்போது நாளை ஐக்கிய மக்கள் சக்தியின்
விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இவை பற்றி நாம் ஆழமாக ஆராய்வோம் என நம்புகிறேன்.
கொரனோ வேளையில் நுவரெலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்- விசாரணைகள் ஆரம்பம்
கொரனோ வேளையில் நுவரெலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்- விசாரணைகள் ஆரம்பம்
இலங்கையில் அதிவேகமாக கொரனோ நோயானது பரவி வரும் இவ்வேளையில் நுவரெலியாவில் புத்தாண்டு தின பந்தய போட்டிகள் இடம்பெற்றுள்ளன
இந்த நிகழ்வில் 175 சாராய போத்தல்களும் வழங்க பட்டு விசேடமாக குறித்த நிகழ்வு நடத்த பட்டுள்ளது
நாட்டில் நிலவி வரும் பெரும் உயிர் கொல்லி கொரனோ விதிகளை பின் பற்றாது இந்த நிகழ்வு
நடத்த பட்டுள்ள நிலையிலும் குறித்த நகர பிதாவும் இதில் கலந்து கொண்டது சர்ச்சையை
கிளப்பியுள்ளது ,
மேற்படி நிகழ்வு தொடர்பான விசேட விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன













