Posted in இலங்கை செய்திகள்

சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

கடற்றொழில்சார் சட்ட விரோத செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையிலான 24 மணித்தியாலங்களும் செயற்படும்

பொறிமுறை ஒன்றினை கடற்படையினருடன் இணைந்து உருவாக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன், மண்ணெண்ணை விநியோகம் மீ்ண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கும்

மண்ணெண்ணை கிடைப்பதை உறுதிப்படுத்துவதுடன், அதுதொடர்பான அறிக்கையினை தனக்கு சமர்பிக்குமாறும் கடற்றொழில் அமைச்சர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

அதேவேளை கடலட்டை வளர்ப்பு தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளை சேர்ந்த தனியார் முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றமையினால்,

அவர்களைப் பயன்டுத்தி, உடனடித் தேவையாக எமக்கு இருக்கின்ற கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்க வேண்டும எனவும கற்றொழல் அமைச்சர் தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சில் 24.08.2022 நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர்,


கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தல்

    பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தல்

    கொரோனா வைரசினால் ஏற்படக்கூடிய இறப்புக்களை குறைக்க, Covid-19 க்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை பெறுவதன் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

    அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சமித்த கினிகே

    தெரிவிக்கையில், கொவிட் -19 அபாயம் தற்போது அதிகரித்துள்ளதாகவும், பூஸ்டர் டோஸ்க்களை பெறாதவர்களை விரைவில் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

    Covid-19 பரவலால் நாட்டில் பாரிய பாதிப்பு ஏற்படவில்லை எனவும் எதிர்காலத்தில் புதிய வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு பூஸ்டர்
    டோஸ் பெறுவது மிக அவசியமானது எனவும் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்தார்.

      Posted in இலங்கை செய்திகள்

      உலகின் மிகப் பெரிய பெஷன் சந்தையான மெஜிக் லாஸ் வேகாஸ் அமெரிக்காவில் இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் வெற்றிகரமாக பங்கேற்பு

      உலகின் மிகப் பெரிய பெஷன் சந்தையான மெஜிக் லாஸ் வேகாஸ் அமெரிக்காவில் இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் வெற்றிகரமாக பங்கேற்பு

      2022 ஆகஸ்ட் 7 முதல் 10 வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ‘மெஜிக் லொஸ் வேகாஸ்’ ஆடை விற்பனை வர்த்தகக் கண்காட்சியில் ஒன்பது இலங்கை ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்றன.

      அமெரிக்கா மற்றும் வடக்கு மற்றும் தென் அமெரிக்க சந்தைகளை அணுகும் நிகழ்வில் உருவாக்கப்பட்ட ஏராளமான வணிக வாய்ப்புகளை நிறுவனங்கள் வெற்றிகரமாக பயன்படுத்தின. இது பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

      பெறுமதியான நேரடியான சந்தை வாய்ப்புக்களைப் பெறுவதற்கு வழிவகுத்ததுடன், அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவிற்கு வெளியில் உள்ள நிறுவனங்களுடன் பெருமளவிலான

      வர்த்தகத் தொடர்புகளை நிறுவி ஒருங்கிணைத்து, இலங்கையை முக்கிய ஆடை ஏற்றுமதி இடமாக மேம்படுத்துவதற்கான தீவிர முயற்சியை மேற்கொண்டது.

      லக்கி இண்டஸ்ட்ரீஸ், ஜே.கே. கார்மென்ட்ஸ், ஸ்க்ரீன்லைன், காஷ் கார்மென்ட்ஸ், கோல்மன்ஸ் கார்மென்ட்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சரசவி எக்ஸ்போர்ட்ஸ், குயின்ஸ் வேர்க் வெயார், ஜியா மொடா மற்றும் ஹவார்ட்

      உலகின் மிகப் பெரிய பெஷன் சந்தையான மெஜிக் லாஸ் வேகாஸ் அமெரிக்காவில் இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் வெற்றிகரமாக பங்கேற்பு

      ஃபெஷன் ஆகிய இலங்கை ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்றன. இலங்கைக் கூடம் 90 சதுர மீட்டர் இடத்தை ஆக்கிரமித்திருந்ததுடன்,

      பெண்களுக்கான ஆடைகள், ஆண்களுக்கான ஆடைகள், குழந்தைகள் மற்றும் வேலை செய்யும் உடைகள் மற்றும் காலுறைகள், லேபிள் அச்சிடுதல் போன்றவற்றை ஊக்குவிக்கும் பத்து தனிப்பட்ட கண்காட்சி அரங்குகளைக் கொண்டிருந்தது.

      அமெரிக்காவின் லாஸ் வேகாஸ், நெவாடாவில் (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) ஆண்டுக்கு இரண்டு முறை பெண்கள் மற்றும் ஆண்கள் ஆடைகள், பாதணிகள், அணிகலன்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆதார

      வளங்களைக் காண்பிக்கும் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் விரிவான ஃபெஷன் சந்தையாக மெஜிக் லாஸ் வேகாஸ் கருதப்படுகிறது. சில்லறை வரவேற்பு, பொருத்தமான தெரிவுத் திட்டங்கள் மற்றும் உறவுகளை மேம்படுத்துதல் போன்ற சிறந்த சேவைகளுடன் வாங்குபவர்களுக்கும் தரநாமங்களுக்கும் இடையே இணைப்புக்களை எளிதாக்குவதன் மூலம் இது ஃபெஷன் வணிகத்தை எரிபொருளாக்குகின்றது.

      மேலும், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் புதிய மற்றும் திரும்பும் கண்காட்சி தரநாமங்களுடன் கற்றுக் கொள்ளவும், வலையமைப்பு செய்யவும், வணிகத்தை நடத்தவும் வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்வு கோவிட்-19

      பரவலில் இருந்து மீண்ட பிறகு வெற்றிகரமாக முடிவடைந்ததுடன், அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள 13,500 க்கும் மேற்பட்ட

      வாங்குபவர்களின் பங்கேற்புடன் உலகெங்கிலும் உள்ள 65 க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் வாங்குபவர்கள் மற்றும் கண்காட்சியாளர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.

      வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம், வணிகச் சட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தால் நிதியளிக்கப்பட்ட திட்டத்தில் நெருக்கமாகச் செயற்பட்டு வருகின்றது. இலங்கையின்

      உலகளாவிய ஏற்றுமதியில் 25% க்கும் அதிகமான ஏற்றுமதியை உள்வாங்கும் இலங்கையின் முதன்மையான ஏற்றுமதி இலக்கான மற்றும் இலங்கையின் ஏனைய முக்கிய ஏற்றுமதி இடங்களிலும் உள்ள இந்தத் திட்டம், நாட்டின்

      வர்த்தகம் தொடர்பான சட்ட உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், அமெரிக்க சந்தையில் நாட்டின் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா

      வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்குகிறது.

      இலங்கை துணைத் தூதரகத்தின் அமைச்சர் ஆலோசகர் (வணிகம்) லாஸ் ஏஞ்சல்ஸ் அனில் சிறிமான்னவின் உதவியால், வொஷிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகத்தின் அமைச்சர் (வணிகம்) சரித

      யத்தோகொட, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, இலங்கை வர்த்தகத் திணைக்களம் மற்றும் கூட்டு ஆடைகள் சங்க மன்றத்துடன் இணைந்து

      அமெரிக்க சந்தையில் இலங்கையின் வர்த்தக நலன்களை ஊக்குவிக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் ‘மெஜிக் லாஸ் வேகாஸில் இணைதல்’ இல்

      இலங்கையின் பங்கேற்பை ஒழுங்கமைக்க முன்முயற்சிகளை மேற்கொண்டனர்.

      கண்காட்சியாளர் இடம், அரங்குகளின் கட்டுமானங்கள் மற்றும் தளபாடங்கள், காட்சி அடுக்குகள் போன்ற ஏனைய தனிப்பட்ட கண்காட்சியாளர்கள்

      தொடர்பான ஒட்டுமொத்த செலவுகளுக்கு அனுசரணை வழங்கிய சி.எல்.டி.பி. மூலம் அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் உதவியுடன்


      ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முக்கியமான வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்க இலங்கையால் முடிந்தது.

        Posted in உலக செய்திகள்

        சிரியாவில் இரண்டு அமெரிக்கா முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்

        சிரியாவில் இரண்டு அமெரிக்கா முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்

        சிரியாவில் உள்ள இரண்டு அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

        சிரியாவில் அமெரிக்கா இராணுவம் ,எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் வேளையில் ,அவ்வாறான அந்த அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ,இந்த திடீ ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

        எதிரிகளின் இந்த ஏவுகணை தாக்குதலினால் அமெரிக்கா இராணுவத்தினருக்கு , ஏற்பட்ட இழப்புக்கள் இதுவரை தெரியவில்லை .

        ஈராக் ,சிரியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா, இராணுவம் மீது தொடராக தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டன் கடலுக்குள் சுறா அடித்து மூட பட்ட பீச்

          பிரிட்டன் கடலுக்குள் சுறா அடித்து மூட பட்ட பீச்

          பிரிட்டன் Folkestone பகுதி பீச்சில் சுறா மீன்கள் வருகை அதிகரித்த நிலையில் ,அந்த பேச்சு 24 மணித்தியாலம் கடலில் மக்கள் இறங்கிட தடை விதிக்க பட்டுள்ளது .

          இதனால் அங்கு திரண்ட மக்கள், ஏமாற்றத்துடன் கரையில் நின்றவாறே பொழுதை போக்கி சென்றுள்ளனர் .

          சுறா மீன்களின் தாக்குதல் ,இடம்பெறலாம் என்ற ,அச்சம் காரணமாக இந்த இடைக்கால அவசர தடை விதிக்க பட்டிருந்தது .

          நாளை மறுதினம் போல பீச் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர் பார்க்க படுகிறது .

            Posted in பங்கு சந்தை தொடர்புகளுக்கு

            பங்கு சந்தையில் இணைந்து எவ்வாறு வீட்டில் இருந்த படியே பணம் உழைப்பது

            பங்கு சந்தையில் இணைந்து எவ்வாறு வீட்டில் இருந்த படியே பணம் உழைப்பது

            வணக்கம் உறவுகளே ,பங்கு சந்தையில் இணைந்து எவ்வாறு வீட்டில் இருந்த படியே பணம் உழைப்பது என்கின்ற கேள்வி உங்களுக்கு எழும்

            இதோ உங்களுக்கான பதில் , இதில் அழுத்தி முதலில் நீங்கள் இந்த நிறுவனத்தில் பதிவு செய்த்து கொள்ளுங்கள்

            இந்த நிறுவனத்தில் சதத்தின் அடிப் படையில் cent ரேடிங் செய்து கொள்ள முடியும் ,.,ஆதாலால் நீங்கள் பத்து டொலர் முதலே வர்த்தகத்தை ஆரம்பிக்க முடியும் .

            மேலும் பழகி கொள்பவர்கள் ,அல்லது இழப்பை சந்திப்பவர்கள் இந்த நிறுவனத்தை பயன் படுத்தி கொள்வது புத்திசாலித்தனமானது .

            இதில் அழுத்தி பதிவு செய்க 1

            இல்லை நாம் ஸ்டாண்டட் லொட் மூலம் தான் , டிரேடிங் செய்து கொள்ள விருப்பம் என்றால் இதோ அதற்கும் வழியுள்ளது .

            அதற்கு நீங்கள் இந்த நிறுவனத்தில் பதிவு செய்திட கீழ் உள்ள இந்த இணைப்பை அழுத்தி கொள்ளுங்கள் .

            இதில் அழுத்தி பதிவு செய்க 2

            இவற்றில் இனைந்தவுடன் அல்லது இணையும் பொழுது ஏதாவது உதவி தேவை பட்டால் ,எம்மை தொடர்பு கொள்ளுங்கள் ,உதவிட தயாராக உள்ளோம் .

            இந்த பங்கு சந்தை வர்த்தகத்தில் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள் .

              Posted in இலங்கை செய்திகள்

              ஒருவர் வெட்டி கொலை தொடரும் குழு மோதல்

              ஒருவர் வெட்டி கொலை தொடரும் குழு மோதல்

              இலங்கை மத்துகமவில் பகுதியில் இளம் வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார் .

              பாதாள உலக குழுக்களுக்கு இடையில், இடம்பெற்று வரும், குழு மோதல்களில், இந்த நபர் சரமாரியாக , இவ்வாறு வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார் ,

              இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலமாக மீட்க பட்டுள்ள்ளார் .

              குறித்த வெட்டி கொலை சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

                Posted in இலங்கை செய்திகள்

                ஒருவர் சுட்டு கொலை ஆயுததாரிகள் வெறியாட்டம்

                ஒருவர் சுட்டு கொலை ஆயுததாரிகள் வெறியாட்டம்

                இலங்கை கம்பஹா பகுதியில், ஊந்துருளியில் வந்த மர்ம நபர்களினால் ஒருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .

                குறித்த நபர் மீது சரமாரியாக சுட்டு விட்டு ,மர்ம கும்பல் தப்பி சென்றுள்ளது .

                பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான, நபர் அவ்விடத்திலேயே பலியானார்.

                இளநகையில் நாள் தோறும் இவ்விதமானதுப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கை வந்தடைந்த டீசல் கப்பல்

                  இலங்கை வந்தடைந்த டீசல் கப்பல்

                  நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 30 ஆயிரம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இன்று தரையிறக்கப்படவுள்ளது.

                  இதேபோன்று மசகு எண்ணெய்யுடனான மற்றுமொரு கப்பல் நேற்று (23) நாட்டை வந்தடைந்ததாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

                  இலங்கை வந்தடைந்த டீசல் கப்பல்

                  ஒட்டோ டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் இலங்கை வரவுள்ளது. ஒக்ரைன் 92 வகை பெற்றோலை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக அமைச்சர் கூறினார்.

                  இதேவேளை,  மண்ணெண்ணெயின் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நேரடியாக நிதி

                  உதவியை வழங்கும் தீர்மானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்த யோசனையாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

                  குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கோடு இந்தத் தீரு;மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

                  ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்திற்கு அமைச்சர் மனோ கணேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    லங்கா சதொசவில் ,அத்தியாவசிய ஜந்து உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு

                    லங்கா சதொசவில் ,அத்தியாவசிய ஜந்து உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு

                    லங்கா சதொசவில் அத்தியாவசிய ஜந்து உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன.

                    நேற்று முதல் இந்த பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் திரு.பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

                    இதற்கமைவாக விலை குறைக்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறு.
                    இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா ஒரு கிலோ 194 ரூபா.
                    ஒரு கிலோ பருப்பு 460 ரூபா.
                    ஒரு கிலோ சிவப்பு சீனி 310 ரூபா.
                    இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டரிசி 198 ரூபா.
                    ஒரு கிலோ நெத்தலி 1,375 ரூபா

                    இவ்வருடம் ஜூன் மாதம் முதல் 12 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த லங்கா சதொசவின் தலைவர் திரு.பசந்த யாப்பா அபேவர்தன, மக்களுக்கு அதிகபட்ச நிவாரணத்தை வழங்குவதற்கு

                    சதொச நிறுவனம் செயற்படும் எனவும், பொருட்களின்
                    விநியோகத்தை கருத்திற்கொண்டு ஏனைய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோருக்கு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள விசேட கருமபீடம்

                      வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோருக்கு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள விசேட கருமபீடம்

                      வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோர் விரைவில் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வசதியாக குடிவரவு திணைக்களத்தில் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது.

                      இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கடந்த வாரம் இடம்பெற்ற

                      கலந்துரையாடலை அடுத்து இந்த விசேட விசேட கருமபீடத்தை திறப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அங்கீகாரம் அளித்திருந்தார்

                      முன்னேடி திட்ட நடவடிக்கைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பும் அனைத்து

                      இலங்கையர்களுக்கும் வசதியாக நேற்று (23) முதல் இந்த விசேட கருமபீடத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது.

                      இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இருந்து தமது வெளிநாட்டு தொழில்வாய்ப்பு தொடர்பான கடிதத்தைப் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரர்கள் அதற்கான தமது ஆரம்பச் செயற்பாடுகளை

                      நிறைவுசெய்த பின்னர் , இந்த விசேட கருமபீடத்தில்
                      ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தமது கடவுச்சீட்டை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        லண்டனில் தலைக்கீழாக கவிழ்ந்த கார்

                        லண்டனில் தலைக்கீழாக கவிழ்ந்த கார்

                        லண்டன் Belmont Road பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று முடக்கு திரும்புகையில் சாரதியின் கட்டு பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது .

                        இந்த கார் தலைக்கீழாக கவிழ்ந்த பொழுதும் சாரதி காயங்களுடன் தப்பிக்கொண்டார் .

                        தற்போது கார் சாரதி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற பொழுதும் ,உயிர் ஆபத்து ஏதும் இல்லை என தெரிவிக்க படுகிறது .

                        லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கார் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது.

                          Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

                          கனடா 63 ரஷ்ய முக்கிய நபர்கள் மீது தடை விதிப்பு

                          கனடா 63 ரஷ்ய முக்கிய நபர்கள் மீது தடை விதிப்பு

                          கனடா அரசு அதிரடியா 63 ரஷ்ய முக்கிய நபர்களுக்கு தடை விதித்துள்ளது .

                          இந்த தடை உத்தரவு ரஷ்ய செல்வந்தர்கள் ,அரசியல்வாதிகள், இராணுவ மற்றும் பாதுகாப்பு ,தரப்பை சேர்ந்தவர்கள் உள்ளடக்க படுகின்றனர் .

                          உக்கிரேன் மீதான ,தொடர் இராணுவ ஆக்கிரமிப்பு ,தாக்குதலை அடுத்து ,ரஷ்ய மீதான தடைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .

                          அமெரிக்கா நேச கூட்டு நாடுகளின் தொடர் ,இவ்விதமான அறிவிப்பால் , ரஸ்யாவின் பொருளாதாரம் மற்றும் ,அதன் செயல்படும் திறன் முடக்க படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .

                          கனடா 63 ரஷ்ய முக்கிய நபர்கள் மீது தடை விதிப்பு

                          மத்திய கிழக்கு நாடுகள் மீது ,அமெரிக்கா மற்றும் ,அதன் நேச நாடுகள் தொடர்ந்து வரும், பயங்கரவாதம் ,என்ற போரின் போது ,அதன் நேச நாடுகளுக்கு இவ்விதமான தடைகள் எதுவும் விதிக்க படவில்லை .

                          இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் , ரஷ்யா உக்கிரேன் மீதான போரை தொடுத்துள்ளது .


                          அதற்கு இவ்விதாமன் அதிரடி தடைகளை கனடா ,அமெரிக்கா அணிசேர் நாடுகள் விதித்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .

                            Posted in இலங்கை செய்திகள்

                            கோட்டபாயவுக்கு பல மில்லியன் மக்கள் பணம் செலவு நெருக்கடியில் இலங்கை

                            கோட்டபாயவுக்கு பல மில்லியன் மக்கள் பணம் செலவு நெருக்கடியில் இலங்கை

                            இலங்கையில் மக்களினால் துரத்தியடிக்க பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயாவுக்கு , பல மில்லியன் மக்கள் பணம் செலவு செய்திட பட்டுள்ளது .

                            இலங்கை வரவுள்ள கோட்டாவுக்கு ,மேலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு மற்றும் விசேட உலங்குவானூர்தி என்பன கோர பட்டுள்ளன .

                            தேவை ஏற்படும் பொழுது அவர் உலங்குவானூர்தி மூலம் ,தப்பி செல்ல இந்த விசேட ஏற்பாடுகள் கோரப்பட்டுள்ளன .

                            நாடு எதிர் நோக்கியுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியில் ,கோட்டபாயவுக்கு ,இதுவரை நூறு மில்லியன் டொலர்கள் வரை, செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.

                            இலங்கை வரும் கோட்டாவுக்கு ,மேலும் மக்கள் எதிர்ப்பு வலுக்கும் எனவும் ,ராஜபக்ச குடும்பங்கள் மீளவும், இலங்கையில்
                            மக்களினால் ஒட்டுமொத்தமாக துரத்தியடிக்க ,படும் நெருக்கடி ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

                              சிறுவர்கள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்
                              Posted in இலங்கை செய்திகள்

                              சிறுவர்கள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்

                              சிறுவர்கள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்

                              இலங்கை காலி பகுதியில் உள்ள சிறுவர் ,மையத்தில் தங்கி இருந்த மூன்று சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் .

                              இவ்வாறு தப்பி ஓடியவர்களில் பத்து மற்றும், எட்டு வயதுடைய சிறுமிகள் மற்றும் 12 வயதுடைய சிறுவன் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.

                              இவ்வாறு தப்பி ஓடிய மூன்று சிறுவர்களையும் ,தேடி கண்டு பிடிக்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

                              இலங்கைக்கு 367 பொருட்கள் இறக்குமதி செய்திட தடை
                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கைக்கு 367 பொருட்கள் இறக்குமதி செய்திட தடை

                              இலங்கைக்கு 367 பொருட்கள் இறக்குமதி செய்திட தடை

                              இலங்கையில் இன்று முதல் 367 பொருட்கள் இறக்குமதி செய்திட அரசு தடை விதித்துள்ளது .

                              விசேட வர்த்தமானி மூலம் இந்த அதிரடி உத்தறவு பிறப்பிக்க பட்டுள்ளது .

                              இவ்வாறு தடை விதிக்க பட்டுள்ளவற்றில் சொக்கலைட் ,மற்றும் வாசனை திரவியங்கள் ,ஆடம்பர பொருட்கள் என்பன அடக்கப் பட்டுள்ளது .

                              இந்த பொருட்கள் யாவும் வெளிநாடுகளில் இருந்து ,இலங்கைக்கு இறக்குமதி செய்ய படுகின்றன .

                              அதனால் ,இதற்கு முக்கியத்துவம் இல்லை என கருதி ,இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .

                              மேற்படி பொருட்களை மைய படுத்தி இறக்குமதியில் ஈடுபட்ட ,மிக பெரும் கம்பெனிகள் ,பெரும் இழப்பை சந்திக்க கூடும் எனவும் ,எதிர் வரும் நாட்களில்
                              இலங்கையில் ,இவ்வாறான பொருட்கள் , அதிக விலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

                                தமுகூ தலைவர் மனோ கணேசன் குழுவினர் - அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்திப்பு
                                Posted in இலங்கை செய்திகள்

                                தமுகூ தலைவர் மனோ கணேசன் குழுவினர் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்திப்பு

                                தமுகூ தலைவர் மனோ கணேசன் குழுவினர் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்திப்பு

                                தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் தூதக அதிகாரிகளுக்கும் அவசர சந்திப்பு சற்றுமுன் இடம்பெற்றது. கூட்டணி சார்பில்

                                தலைவர் மனோ கணேசனுடன், அரசியல் குழு உறுப்பினர் எம். உதயகுமார் எம்பி, பொது செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் இடம் பெற்றனர். அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.


                                “பயனுள்ள இந்த சந்திப்பில் இலங்கையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பயங்கரவாத தடை சட்டம்,


                                தமிழர் தேசிய பிரச்சினைகள், தேசிய அரசாங்கம்,தேசிய பொருளாதார நெருக்கடி, புலம் பெயர்ந்த தமிழர்


                                விவகாரம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதித்துவம் செய்யும் பெருந்தோட்ட மக்கள் பிரச்சினைகள்


                                ஆகியவை தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டன” என மனோ கணேசன் எம்பியின் டுவீட்டர் தளத்தில் கூறப்பட்டுள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மாணவனின் சப்பாத்துக்கள் பாம்பு

                                  மாணவனின் சப்பாத்துக்கள் பாம்பு

                                  கொழும்பில் உயர் தரம் கற்கும் மாணவன் ,ஒருவரது சப்பாத்துக்குள் பாம்பு ,குட்டி ஒன்று இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                                  கொழும்பில் உள்ள தனது பாடசாலைக்கு வந்து ,அந்த சப்பாத்தை கழற்றி பார்த்த பொழுது ,அதற்குள் பாம்பு குட்டி ஒன்று உள்ளது கண்டு பிடிக்க்க பட்டுள்ளது.

                                  எனினும் மாணவனுக்கு பாம்பின், விஷ பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது.

                                  மாணவர்கள் மற்றும் மக்கள் சப்பாத்தை அணிவதற்கு ,முன்னர் அதனை சோதனை செய்த பின்னர் ,அணிந்து செல்லும் அப்டி அறிவிக்க பட்டுள்ளது.

                                    சிரியாவில் 137 டாங்கிகளில் எரிபொருள் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்
                                    Posted in உலக செய்திகள்

                                    சிரியாவில் 137 டாங்கிகளில் எரிபொருள் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்

                                    சிரியாவில் 137 டாங்கிகளில் எரிபொருள் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்

                                    சிரியா நாட்டில் ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா இராணுவம் , அங்கிருந்து 137 டாங்கிகளில் எரிபொருளை திருடி சென்றுள்ளது .

                                    பயங்கரவாதம் என்ற போர்வையில் இராணுவத்தை ஏவியுள்ள , அமெரிக்கா மற்றும் ,அதன் நேச நாடுகள் ,இவ்விதம் எரிபொருள் திருட்டில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது.

                                    இந்த வாரம் மட்டும் 137 டாங்கிகளில் எரிபொருள், திருடிசென்றுள்ளது அம்பலமாகியுள்ளது.

                                    அமெரிக்கா இராணுவத்தின் , இந்த எரிபொருள் திருட்டில் ,மூலம் பல மில்லியன் டொலர்களை ஆண்டுக்கு வருமானமாக பெற்று வருகின்றனர் .

                                    உலக மகா கொள்ளையில் அமெரிக்கா,இராணுவம் ஈடுபட்டுள்ளது ,இதன் மூலம் அமபலமாகியுளளது.

                                      துருக்கி இராணுவம் குருதீஸ் போராளிகள் மீது தாக்குதல்
                                      Posted in உலக செய்திகள்

                                      துருக்கி இராணுவம் குருதீஸ் போராளிகள் மீது தாக்குதல்

                                      துருக்கி இராணுவம் குருதீஸ் போராளிகள் மீது தாக்குதல்

                                      துருக்கி இராணுவம் ஈராக் பகுதியில் உள்ள குருதீஸ் போராளிகள் பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .

                                      துருக்கிய இராணுவம் நடத்தி வரும், இந்த தாக்குதல்களில் சிக்கி பலத்த சேதங்களை குருதீஸ் பகுதி உள்ளாகியுள்ளது .

                                      துருக்கி இராணுவத்தின் தாக்குதல்களில் மக்கள் வாழ்விடங்கள் சேதமாக்க பட்டுள்ளன.

                                      தொடரும் துருக்கி இராணுவத்தின் தாக்குதல்களினால் ,குருதீஸ் மக்கள் அகதிகளாக இடம்பெயந்தரந்த வண்ணம் உள்ளனர்.