அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் சுட்டு கொலை

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் சுட்டு கொலை

அமெரிக்காவின் இருவேறு பகுதிகள் நடத்த பாட் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் .

அமெரிக்காவில் நாள் தோறும் அதிகரித்து , செல்லும் துப்பக்கி சூட்டு சமப்வத்தினால், மக்கள் பெரிதுக்கும் பீதியில் உறைந்துள்ளனர்,

இந்த வருடம் மட்டும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் சிக்கி, 180 பேர் பலியாகியுள்ளனர்.

துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்லும் நிலையில், அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டை நிறுத்திடும், புதிய நகர்வு ஆரம்பிக்க படவுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையிடம் பிரித்தானியா முக்கிய வேண்டுதல்

    இலங்கையிடம் பிரித்தானியா முக்கிய வேண்டுதல்

    பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

    பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது எனவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

    இந்த சட்டத்தை பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கான உறுதிமொழிகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் கோரியுள்ளது.

      ஆட்டோ தொழில்சாலைக்கு திடீரென பயணித்த போக்குவரத்து அமைச்சர்
      Posted in இலங்கை செய்திகள்

      தமிழர்களை அடக்கிட புதிய சட்டம்

      தமிழர்களை அடக்கிட புதிய சட்டம்

      எதிர்வரும் காலங்களில் பயங்கரவாத தடைச்சட்டம் இரத்து செய்யப்படவுள்ளது என அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

      இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

      பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் அச்சட்டம்
      நிறைவேற்றப்பட்டதும் பயங்கரவாத தடைச்சட்டம் இரத்துச் செய்யப்படும் என்றார்.

      Posted in இலங்கை செய்திகள்

      ரணில் வீட்டில் சாராய போத்தல் திருடியவர் கைது

      ரணில் வீட்டில் சாராய போத்தல் திருடியவர் கைது

      இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீட்டில், சாராய போத்தல் திருடிய குற்ற சாட்டில் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .

      ரணில் விக்கிரமசிங்க வீட்டை சுற்றிவளைத்து எரியூட்டிய பொழுது, அங்கிருந்த விலை உயர்வான மதுபான போத்தல்களை, திருடி சென்றனர்என்ற குற்ற சாட்டில் ,இந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார்.

      போராட்டக்காரர்களை தொடராக கைது செய்து மிரட்டும் நகர்வை, ரணில் விக்கிரமசிங்க அரசு முடுக்கி விட்டுள்ளது .

      இவை கோட்டபாய மீள நாடு வரும் பொழுது இவ்வாறான போராட்டங்கள் ,மீள் எழுச்சி கொள்ளாது இருக்க ,ரணில் விக்கிரமசிங்க அதனை புரிந்து வருகிறார்.

      ஆனால் ரணில் அரசுக்கு எதிராக விரைவில் மக்கள் போராட்டம் ,நாடு முழுவதும் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது.

        Posted in இலங்கை செய்திகள்

        திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் மடக்கி பிடிப்பு

        திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் மடக்கி பிடிப்பு

        பண்டாரகம, நாமலுவ பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் பணத்தை திருட முற்பட்ட 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

        குறித்த கடை உரிமையாளர் அவரைத் தடுக்க முயற்சி செய்த போது சிறுவன் கடை உரிமையாளரை கத்தியால் தாக்கி, கடையில் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

        சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், மறைந்திருந்த நிலையில் பொலிஸார், அவரை கைது செய்துள்ளனர் .

        33 வயதான கடை உரிமையாளரின் வயிறு மற்றும் வலது கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமான குறித்த சிறுவன் இதற்கு முன்னர் பல தடவைகள்
        கடைக்கு வந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளதாக கடை உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

          Posted in இலங்கை செய்திகள்

          பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது

          பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது

          தரம் 10ல் கல்வி கற்கும் மூன்று பாடசாலை மாணவிகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் டிக்வெல்ல பாடசாலை சங்கீத பாட ஆசிரியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

          சங்கீத வகுப்புக்கு சென்ற மூன்று சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதின் பெயரில் கிடைத்த முறைப்பாடுகளின் விசாரணைகளின்

          அடிப்படையில், குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

          பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது

          குறித்த சிறுமிகளின் பெற்றோர்கள் குழந்தை பராமரிப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்ததையடுத்து, பொலிசார் விசாரணைகளை தொடங்கி

          உள்ளத்துடன், இதனுடன் தொடர்புடைய 14 மற்றும் 15 வயதுடைய மூன்று பள்ளி மாணவிகளையும் மருத்துவப் பரிசோதனைக்காக ஜே.எம்.ஓ.வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

          சந்தேக நபர் 38 வயதான நபர் எனவும், அவரை மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் பாண் விலை குறைக்க படும் எப்போது

            இலங்கையில் பாண் விலை குறைக்க படும் எப்போது

            பாண் ஒன்றுக்கான விலையை 50 ரூபாவாலும், பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

            வெதுப்பக தொழிற்துறையை தற்போது கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் பாரிய

            விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக உற்பத்திகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது என இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

            அரசாங்கம் மற்றும் அதனுடைய நிறுவனங்கள் உதவி வழங்குமாயின் வெதுப்பக உற்பத்தி


            பொருட்களின் விலையினை குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

              பின்தங்கிய மக்களுக்கு மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக மனோ கணேசன்
              Posted in இலங்கை செய்திகள்

              பின்தங்கிய மக்களுக்கு மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக மனோ கணேசன்

              கொழும்பிலும், பெருந்தோட்டங்களிலும் பின்தங்கிய மக்களுக்கு மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக

              மண்ணெண்ணெய் விலையேற்றத்தை சமாளிக்கும் முகமாக, குறைவருமான மக்களுக்கு,
              பணக்கொடுப்பனவுகளை நேரடியாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமது தினசரி வாழ்வு
              தேவைகளுக்காக மண்ணெண்ணெயை பயன்படுத்தும் பின்தங்கிய மக்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கதாகும்.

              பின்தங்கிய மக்களுக்கு மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக மனோ கணேசன்

              எனினும் இந்த நிவாரணம், மண்ணெண்ணெயை தவறாது பயன்படுத்தும் மலைநாட்டு பெருந்தோட்டங்களில்
              வாழும் பின்தங்கிய மக்களுக்கும், கொழும்பு மாநகரத்தில் வாழும் பின்தங்கிய குடியிருப்பு மக்களுக்கும் வழங்கப்படுவதை
              கட்டாயமாக உறுதிப்படுத்தும்படி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன்,
              மின்சக்தி மற்றும் வலுசக்தி கஞ்சன விஜேசேகரவிடம் வலியுறுத்தி தெரிவித்துள்ளார்

                இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்
                Posted in இலங்கை செய்திகள்

                சீனா கப்பல் இலங்கையில் இருந்து வெளியேறியது

                சீனா கப்பல் இலங்கையில் இருந்து வெளியேறியது

                இலங்கை கம்பந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரம் இட்டிருந்த,சீனாவின் ஆய்வு கப்பல் இன்று அங்கிருந்து விலை செல்கிறது.

                இந்தியா ,அமெரிக்காவின் கடும் கண்டனத்திற்கு மத்தியில் ,இலங்கையில் தரித்து நின்ற சீனா ஆய்வு கப்பல் அங்கிருந்து விலகி சென்றுள்ளது .

                இந்த சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை , வருகை தொடர்பில் இலங்கை மீது இந்த கடும் சீற்றத்தில் உறைந்துள்ளது .

                சீனா இலங்கையில் தான் நினைத்ததை ,சாதித்துள்ளதை மேற்படி கப்பல் வருகை அம்பல படுத்தியுள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் இருவர் சுட்டு கொலை அதிகரிக்கும் ஆயுத கொலைகள்

                  இலங்கையில் இருவர் சுட்டு கொலை அதிகரிக்கும் ஆயுத கொலைகள்

                  இலங்கை அம்பலாங் கொடை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ,நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை,அடுத்து இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்.

                  மேலும் இருவர் துப்பாக்கி சூட்டு , தாக்குதலில் காயமடைந்துள்ளனர் .

                  இந்த உணவகத்தில் நடத்தப் பட்ட துப்பாக்கி சூட்டில், காயமடைந்த இருவர் மீட்க பட்டு மருத்துவமனையில் ,சிகிச்சை பெற்று வருகின்றனர் .

                  இந்த தாக்குதலை நடத்தியவர்களை ,கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

                    வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
                    Posted in இலங்கை செய்திகள்

                    மகனை அடித்து கொன்ற தந்தை அதிர்ச்சியில் கிராம மக்கள்

                    மகனை அடித்து கொன்ற தந்தை அதிர்ச்சியில் கிராம மக்கள்

                    இலங்கை காலி பகுதியில் மகனை, தந்தை ஒருவர் அடித்து கொன்றுள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                    காலிப் பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ,இடம்பெற்ற வாய் தர்க்கத்தில் சீற்றமடைந்த தந்தை ,மகனை கோரமாக தாக்கி படுகொலை செய்துள்ளார் .

                    மகனை கொலை செய்த தந்தை ,தற்போது காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .

                    மகனை தந்தை கொன்ற செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      அரசியலில் இருந்து நான் ஒதுங்க மாட்டேன் மகிந்த அறிவிப்பு

                      அரசியலில் இருந்து நான் ஒதுங்க மாட்டேன் மகிந்த அறிவிப்பு

                      இலங்கையில் தொடர்ந்து அரசியலில் நான் இருப்பேன் என மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார் .

                      இலங்கை மக்களினால் ராஜபாக்ச குடும்பம், துரத்தபட்ட நிலையில் ,மகிந்த ராஜபக்ச இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

                      இவரது இந்த திடீர் அறிவிப்பு மக்கள் மத்தியில் மேலும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

                      மக்களினால் விரட்டியடிக்க பட்ட நிலையிலும் ,ஆணவத்தின் நிலையில் இருந்து மகிந்த ராஜபக்சவின்
                      இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு சென்ற 8 தமிழர்கள்

                        இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு சென்ற 8 தமிழர்கள்

                        இலங்கையில் இருந்து கடல்வழியாக தமிழகத்திற்கு , எட்டு தமிழர்கள் சென்றுள்ளனர் .

                        இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி, மற்றும் வேலைவாய்ப்பு இன்மை காரணமாக ,ஏற்பட்டுள்ள நெருங்கடியால் ,மக்கள் அகதிகளாக இந்தியாசென்ற வண்ணம் உள்ளனர்.

                        இவவாறு சென்ற எட்டு பேரில் சிறுவர்கள் ,பெண்கள் உள்ளடங்கும் என தெரிவிக்க படுகிறது .

                        அகதிகளாக செந்தர்வர்கள் விசாரணைகளின் பின்னர் ,முகமக்களில் தங்க வைக்க படுவார்கள் என தெரிவிக்க படுகிறது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் இன்று இரவு மண் எண்ணெய் விலை உயர்வு

                          இலங்கையில் இன்று இரவு மண் எண்ணெய் விலை உயர்வு

                          இலங்கையில் இன்று இரவு உடனடி அமுலுக்கு வரும் நிலையில் மண் எண்ணெய் லீற்றர் ஒன்று 253 ரூபாவால் அதிகரிக்க படுகிறது.

                          இந்த மண் எண்ணெய் விலை அதிகரிப்பு ,மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                          இலங்கையில் நாள் தோறும் பொருட்களின் விலை , அதிகம் உயர்ந்து செல்வதால் ,மக்கள் அங்கு பெரும் ,நெருக்கடியை சந்தித்து வருகின்றனர் .


                          அன்றாடம் கூலிகள் இதனால் பெருமளவு பாதிக்க பட்டுள்ளனர்.

                          ஆனால் அவர்களை கருத்தில் கொள்ளாது , அரசியல் வாதிகளும் வர்த்தகர்களும் கொள்ளை இலாபம் பெற்று வருகின்றனர் ,என்கிறது மக்கள் மன்றம் .

                            அமெரிக்காவில் வீதியில் தரை இறங்கிய விமானம்
                            Posted in உலக செய்திகள்

                            அமெரிக்காவில் வீதியில் தரை இறங்கிய விமானம்

                            அமெரிக்காவில் வீதியில் தரை இறங்கிய விமானம்

                            அமெரிக்காவின் Orlando பகுதியில் அதிக வாகன நெரிசல் கொண்ட வீதியில் ,இலகுரக விமானம் ஒன்று அவசரமாக தரை இறங்கியது.

                            அந்த வீதியில் உள்ள வீடு ஒன்றின். நுழைவாயிலுக்குள் , நுழைந்த விமானம் முன் பகுதி சேதமடைந்துள்ளது .

                            இதன் பொழுது விமானி ,பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றார் .

                            ஏனையவர்கள் காயங்கள் ஏதுமின்றி தப்பித்து கொண்டனர்.

                            இந்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                            அமெரிக்காவில் இவ்விதமான விமான விபத்துக்கள் ,தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

                              அமெரிக்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல்
                              Posted in உலக செய்திகள்

                              அமெரிக்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல்

                              அமெரிக்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல்

                              ஈராக் Saladin மாகாணத்தின் எல்லையில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தின் , வாகன தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

                              இந்த தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தின் , கவச வண்டிகள் சேதமடைந்துள்ளன .


                              மேலும் இதில் அமெரிக்கா படையினர் பலியாகியுள்ளனர் என்கிறது ஈராக்கின் முக்கிய ஊடகம் ஒன்று.

                              ஆனால் இந்த தாக்குதலில் தமக்கு ஏற்பட்ட, இழப்பு தொடர்பில் இதுவரை அமெரிக்கா இராணுவம், எதனையும் வெளியிடவில்லை.

                              ஈராக்கில் அமெரிக்கா இராணுவம் மீது தொடர், தாக்குதல்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்ற பொழுதும் ,
                              அமெரிக்கா அங்கிருந்து வெளியேற மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது.

                                உக்கிரனின் ஆட்டிலறி தளங்கள் அழிப்பு ரஷ்ய பதிலடி
                                Posted in உலக செய்திகள்

                                உக்கிரனின் ஆட்டிலறி தளங்கள் அழிப்பு ரஷ்ய பதிலடி

                                உக்கிரனின் ஆட்டிலறி தளங்கள் அழிப்பு ரஷ்ய பதிலடி

                                உக்கிரேனில் உள்ள அமெரிக்காவின் ஆட்டிலறி தளங்கள் இரண்டினை ,ரஷ்ய வெற்றிகரமாக அழித்துள்ளது .

                                இந்த ஆட்டிலறி தளங்கள், மூலம் ரஷ்ய இராணுவத்தினருக்கு பாரிய நெருக்கடி தரும், தாக்குதலை உக்கிரேன் வழங்கியுள்ளது .

                                தமது இராணுவத்தினர் ,அமெரிக்காவின் ஆட்டிலறி தளங்களை, உக்கிரேன் Kherson பகுதியில் வைத்து அழித்துள்ளதாக ,ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

                                ரஸ்யாவுக்குள் உக்கிரேன் இராணுவம், ரஷ்ய ஆயுத தளம் மற்றும் விமான தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது .

                                அதற்கு பதலடியாக, இந்த மிக பெரும் ஆட்டிலறி ஏவுகணை தளத்தை ,ரஷ்ய அழித்துள்ளதாக ,ஆதார காட்சிகளுடன் ரஷ்ய இராணுவம் வெளியிட்டுள்ளது.

                                இது அமெரிக்காவுக்கு பெரும் அவனமானதை ஏற்படுத்தியுள்ளது.

                                தமது போராயுதங்களை உக்கிரேனில் வைத்து சோதனை செய்து வரும் அமெரிக்காவுக்கு ,ரஷ்ய வழங்கிய இந்த தாக்குதல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,என்கிறது ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு .

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையில் திடீரென இராணுவம் குவிப்பு பதட்டத்தில் மக்கள்

                                  இலங்கையில் திடீரென இராணுவம் குவிப்பு பதட்டத்தில் மக்கள்

                                  இலங்கையில் நாடெங்கும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் வீதி பாதுகாப்பில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .

                                  தேவை ஏற்படும் பொது சோதனைக்ளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

                                  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் அடிப்படையில் நாடெங்கும் ஆயுதம் தாங்கிய படையினர் குவிக்க படும் வர்த்தமானி அறிவித்தல் விடுக்க பட்டுள்ளது.

                                  மக்கள் எழுச்சியை தடுக்கும் முகமாக, இந்த இராணுவ குவிப்பை , ரணில் விளக்கிரமசிங்க மேற்கொள்வதான குற்ற சாட்டு , முன் வைக்க பட்டுள்ளது .


                                  மேலும் பசில் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பின் பின்னர் ,இந்த இராணுவ குவிப்பு நடவடிக்கை வேகப்படுத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

                                  கொழும்பில் 16 வது மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் மாரணம்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கொழும்பில் 16 வது மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்

                                  கொழும்பில் 16 வது மாடியில் இருந்து வீழ்ந்து ஒருவர் மரணம்

                                  கொழும்பு கொள்ளு பிட்டி பகுதியில் நிர்மாணிக்க பட்டு வரும் ,மாடி வீட்டில் இருந்து நபர் ஒருவர் தவறி வீழ்ந்து மரணமாகியுள்ளார் .

                                  மரணமானவர் சடலம் மீட்க பட்டு வைத்தியசாலையில் வைக்க பட்டுள்ளது .

                                  கட்டட தொழிலாளர்கள் பாதுகாப்பு முறைமை இங்கு முறையாக பின்பற்ற வில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது .

                                  மேற்படி நபரது மரணம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    வீட்டு வேலைக்கு சென்ற இளம் பெண் நீச்சல் குளத்தில் சடலமாக மீட்பு

                                    வீட்டு வேலைக்கு சென்ற இளம் பெண் நீச்சல் குளத்தில் சடலமாக மீட்பு

                                    மலையகத்தில் இருந்து இளம் பெண் நீச்சல் குளத்தில் சடலமாக மீட்க ப் பட்டுளளார்.

                                    கம்பாக பகுதியில் வேலைக்குச சென்ற வீட்டில் அமைக்க பட்டிருந்த நீச்சல் குளத்தில் 17 வயது சிறுமி சடலமாக மீட்க பட்டுள்ளார் .

                                    இந்த சிறுமி சடலம் மீட்க பட்டு உடல்கூற்று பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது.


                                    இது கொலையா அல்லது விபத்து மரணமா ,என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                                    சிறுமியின் குடும்பத்தினர் கண்ணீரில் தவித்த வண்ணம் உள்ளனர் .