Author: நலன் விரும்பி
இலங்கையில் கொரனோ தொற்றில் சிக்கி 709 பேர் மரணம்
இலங்கையில் கொரனோ தொற்றில் சிக்கி 709 பேர் மரணம்
இலங்கையில் இதுவரை பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 709 பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் பல்லாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து வேகமெடுக்கும் இந்த நோயினை கட்டு படுத்த முடியாது இலங்கை திணறி
வருகின்றமை குறிப்பிட தக்கது
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
மண்சரிவு அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் கேகாலை மாவட்டத்தில் மண் சரிவு அபாயம் உள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை
விடுக்க பட்டுள்ளது ,மலை பகுதிகளை அண்மித்த வீடுகளுக்கு இதனால் பெரும் சேதங்கள்
ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மேற்படி அறிவிப்பால் அங்கு பதட்டம் நிலவுகிறது
இலங்கையில் இன்று நடப்பது என்ன ..? கொரனோ எவ்வாறு பரவுகிறது VIDEO
இலங்கையில் இன்று நடப்பது என்ன ..? கொரனோ எவ்வாறு பரவுகிறது VIDEO
கொரானா பாதிப்பு இலங்கையில் மீண்டும் மோசமடைந்து வரும் நிலையில் கொவிட் 19 நெருக்கடி நிலைமை தொடர்பாக
அரசாங்கமும் வைத்தியத்துறையும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை முன்வைக்கின்றன.
இந்த இரண்டு தரப்புக்கும் அப்பால் இந்த விடயம் தொடர்பாக ஒரு வைத்தியராக திரு.நாகநாதன் அவர்களின் கருத்துக்கள்
கடலில் சிங்கள கடற்படை திடீர் ரோந்து அதிகரிப்பு
கடலில் சிங்கள கடற்படை திடீர் ரோந்து அதிகரிப்பு
இலக்கை கடல்பகுதிகள் எங்கும் சிங்கள கடற்படையின் ரோந்து கண் காணிப்பு அதிகரிக்க பட்டுள்ளது
இலங்கைக்குள் இந்தியாவில் இருந்து சட்டவிரோத அகதிகள் நுழைகின்றனர் என்ற குற்ற சாட்டை முன்வைத்து இந்த ரோந்து அதிகரிக்க பட்டுள்ளது
இலங்கை கடல் வழியை பயன்படுத்தி அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து அகதிகள்
செல்கின்றனர் என கூறி ஐந்து ரோந்து படகுகளை இலங்கைக்கு அவுஸ்ரேலியா வழங்கி இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது
26 மில்லியனை கடத்தி செல்ல முற்பட்டவர் கைது
26 மில்லியனை கடத்தி செல்ல முற்பட்டவர் கைது
இலங்கை கட்டுநாயக்க வான்தளம் ஊடாக 26 மில்லியன் ரூபாய்களை அமெரிக்காவில் இருந்து
பெற்று அதனை அரேபிய நாடு ஒன்றுக்கு கடத்தி செல்ல முற்பட்ட கிண்ணியாவை சேர்ந்த
ஒருவரை குற்ற புலனாய்வு துறையினரால் கைது செய்ய பட்டுளளார்
இவர்களுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இலங்கை வருகிறார் சீனா வெளியுறவு மந்திரி
இலங்கை வருகிறார் சீனா வெளியுறவு மந்திரி
இலங்கைக்கு சீனாவின் பாதுகாப்பு மந்திரி வந்து சென்றதன் பின்னர் தற்போது எதிர்வரும் வாரம் அளவில்
சீனாவின் வெளியுறவு மந்திரி வருகை தரவுள்ளார்
தொடராக முக்கிய அதிகாரிகள் வருகை இலங்கையை சீனாவுக்கு ஆளும் சகோதர ஆட்சி விற்பதான குற்ற சாட்டு எழுந்துள்ளது
இவர்கள் செயல் பாடுகள் இந்தியாவை கொதிப்பில் ஆழத்தியுள்ளது
புலிகளை வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது
புலிகளை வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது
இலங்கை மட்டக்களப்பு பகுதியில் சமூக வலைத்தளம் ஊடக புலிகளை வளர்த்தார் என்ற குற்ற
சாட்டில் 56 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
இவரது சமூக வலைத்தள பதிவுகளில் புலிகள் தொடர்பான விடயங்கள் காணப்பட்டதாகவும் அதன்
ஊடாக புலிகளை மீள் உருவாக்கும் நிலையில் செயல் பட்டார் என சிங்கள படைகள் தெரிவித்துள்ளன
மிரட்டும் கொரனோ – முடக்க பட்ட மேலும் 8 கிராமங்கள்
மிரட்டும் கொரனோ – முடக்க பட்ட மேலும் 8 கிராமங்கள்
இலங்கையில் தொடரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அதிகமாக பாதிக்க
பட்ட எட்டு கிராமங்கள் முற்றாக மக்கள் தொடர்புகள் இன்றி தூண்டிக்க பட்டு தனிமை படுத்த பட்டுள்ளது
இந்த பகுதிக்குள் உள்வரவோ ,வெளி செல்லவோ எவராலும் முடியாத நிலை ,இராணுவம் போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
யாழில் ஆறு பேருக்கு கொரனோ
யாழில் ஆறு பேருக்கு கொரனோ
தமிழர் தியாகத்தின் கலாச்சார பட்டினமாகி விளங்கும் யாழ்ப்பாணத்தில் ,நிகழ் காலத்தில் பரவி
வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் ஏழு பேர் பாதிக்க பட்டுள்ளதாக
வடமாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
மேலும் இந்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 4857 பேர் கைது
தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 4857 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய சுமார் 4857 பேர் இதுவரை கைது செய்ய
பட்டுள்ளனர்
இவர்களில் கடந்த தினம் மட்டும் 215 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக பொலிஸ்மா பேச்சாளர்
தெரிவித்துள்ளார்
தேர்தலில் மூன்றாவது அணியாக வளர்ந்துள்ள சீமான் – மாறிய ஆடு களம் – வீடியோ
தேர்தலில் மூன்றாவது அணியாக வளர்ந்துள்ள சீமான் – மாறிய ஆடு களம் – வீடியோ
தமிழகத்தில் இடம் பெற்ற தேர்தலில் நாம் தமிழர் காட்சி ஆசனங்களை பெறாது போதும் ,வாக்கு
வீதத்தில் அந்த கட்சி மூன்றாவது இடத்தை நோக்கி வளர்ந்துள்ளது
இது அடுத்து வரும் தேர்தலில் சீமானுக்கு பெரும் வெற்றி வாய்ப்பை தேடி தரும் என எதிர்பார்க்க படுவதால்
,நாம் தமிழர் காட்சிக்குள் உடைவுகளை ஏற்படுத்தும் நகர்வுகள் ,கைதுகள் என்பன எதிர் காலத்தில்
ஆளும் புதிய முதல்வரினால் தொடுக்க பட கூடிய சாத்தியங்கள் அதிகமாக உள்ளன
தமிழ புதிய முதல்வராக பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலின் வாழ்த்தி வரவேற்போம்-மனோ கணேசன்
தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்
தமுகூ தலைவர் மனோ கணேசன்
தமிழகத்தின் ஆளும் கட்சியாக பொறுப்பேற்க உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தையும், தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள தளபதி மு.க.ஸ்டாலினையும் வாழ்த்தி வரவேற்க தயாராவோம்
என்று கூறியுள்ள, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பிவைத்துள்ள டுவீட்டர் செய்தியில், “திமுக கூட்டணியை வழிநடத்தி
நீங்கள் பெற்றுள்ள மகத்தான வெற்றி உலகத்தமிழர்களின் பார்வையை உங்கள் மீது திருப்பியுள்ள நிலையில், எம் தந்தையர் நாடு தமிழகத்தின் முதல்வராக பொறுப்புகளை ஏற்கும் உங்களை
இலங்கை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் மனமாற வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
தமிழக தேர்தல் முடிவுகளில் நேரடியாக தலையிட, நாம் அங்கே வாக்காளர்கள் அல்ல. ஆனால் அதுபற்றி நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது. என்னை பொறுத்தவரையில் இலங்கை எமது தாய்நாடு. இந்திய தமிழகம் எங்கள் தந்தையர் நாடு.
அறிஞர் அண்ணா உருவாக்கி, மறைந்த முன்னாள் முதல்வர், கலைஞர் முத்துவேலு கருணாநிதி வளர்த்து விட்ட திராவிட முன்னேற்ற கழகத்துக்கும், புரட்சி தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன்
உருவாக்கி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் வளர்த்து விட்ட அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் இடையில்தான் ஆரம்பத்தில் இருந்தே பிரதான போட்டி. ஏனைய அனைத்து கட்சிகளும் துணை அரசியல் பாத்திரங்களையே வகிக்கின்றன.
தமிழக உடன் பிறப்புகள் தரும் ஜனநாயக முடிவுகளை ஏற்று அதை எப்படி எமக்கு பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை மட்டுமே, இலங்கையில் நாம் கணிக்க வேண்டும்.
இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழர் பிரச்சினை என்பது, தமிழக மக்கள் முன்னாலே உள்ள பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றாகும். அங்கு வாழும் சுமார் எட்டு கோடி தமிழர், எமது
உடன்பிறப்புகள். அந்த எட்டுக்கோடி என்பது எமது பாதுகாப்பு கவசம். கடந்த காலங்களில் அந்த பாதுகாப்பு கவசம் சரியாக பயன்படாமல் போய் விட்டது. இதற்கான காரணங்கள் பல.
அவற்றை ஆராய்வது இப்போது உசிதமானதல்ல. ஆகவே, கடந்த காலங்களை மறந்து விட்டு, தமிழகத்தின் ஆளும் கட்சியையும், தமிழக முதல்வரையும் வாழ்த்தி வரவேற்போம்.
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்
- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்
- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா
- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்
- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது
- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்
ஈழத்தமிழர்களாகிய நாம் ஆர்மேனியர்களுடன் தோழமை கொண்டு நிற்கிறோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
ஈழத்தமிழர்களாகிய நாம் ஆர்மேனியர்களுடன் தோழமை கொண்டு நிற்கிறோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
ஆர்மேனிய இனவழிப்பை அங்கீகரித்த அதிபர் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தனை பாரட்டுவதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத்தமிழர்களாகிய நாம் ஆர்மேனியர்களுடன் தோழமை கொண்டு நிற்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.
1915ம் ஆண்டு இளவேனிற்காலம் தொடங்கி 1916 இலையுதிர் காலம் வரையிலும் ஆர்மேனியர்கள் மீது படுகொலைகள்,
புலப்பெயர்ச்சி, பட்டினி, மோசமான நடத்துமுறை ஆகிய வழிகளில் 1.5 மில்லியன் ஆர்மேனியர்கள் மூர்க்கமான விதத்தில் நேரடியாகவே அழித்தொழிக்கப்பட்டார்கள்.
மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
அமெரிக்க அரசு ஆர்மேனிய இனவழிப்பை அங்கீகரித்திருப்பது எப்போதோ நடந்திருக்க
வேண்டிய ஒன்று. இந்த அங்கீகாரத்திற்கு பெரிதும் காரணம் புலம்பெயர் ஆர்மேனியர்களது அயராச் செயல்முனைப்புதான். புவிசார் அரசியல் பின்விளைவுகள் பாதகமாக இருந்த போதிலும் அதிபர் பைடன் அரசினர் தமது வெளியுறவுக் கொள்கையில், மனித உரிமைகளை
மையப்படுத்தியுள்ள அறத் துணிவை நாம் பாராட்டுகிறோம்.
முதலாம் உலகப் போரில் ஆர்மேனியர்கள் றஸ்யாவின் பக்கம் சேர்ந்து கொள்ளக் கூடும் என்று ஓட்டமன் பேரரசு கற்பித்த ‘நியாயம்’ ஆர்மேனியரகளைத் துடைத்தொழிக்கும் குறிப்பான
கொடுநோக்கைத் தணித்து விடவில்லை. ஓட்டமன் துருக்கியர் தாம் நிகழ்த்திய மனிதத் தன்மையற்ற படுகொலையை ஆர்மேனியப் பிரிவினைக் கொள்கையை எதிர்க்கத் ‘தேவையான
நடவடிக்கை’ என்று நியாயப்படுத்தியமை இனவழிப்புக் குற்றத்தின் கொடுமையையும் காட்டுவிலங்காண்டித் தனத்தையும் குறைத்து விடாது.
இனவழிப்பை அங்கீகரிப்பதன் முதன்மையான நோக்கம் தீமை செய்தவர் மீது பழி சுமத்தி விட்டுப் போவது மட்டுமே அல்ல, உலகில் எங்கும் அது நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதும்தான்.
அது செயல்துடிப்பான முன்னகர்வு ஆகும். இனவழிப்புக்கு இரையாகி மடிந்தோரின் உயிர்களை மறவாமலிருப்பது அச்செயல் மீண்டும் என்றேனும் நிகழ்ந்து விடாமல் தடுத்திட மீளுறுதி கொள்வதாகும் என்று அதிபர் பைடன் கூறியுள்ளார்.
‘நாம் இதைச் செய்வது… எது நடந்ததோ அது மீண்டும் ஒருபோதும் நடவாதிருப்பதை உறுதி செய்வதற்காகவே. தவிர பழி சுமத்துவதற்காக அல்ல,’ ஓம், இனவழிப்பு ஒப்பந்தத்தின் தலைப்பே காட்டுவது போல், ஒப்பந்தம் இவ்வடிவில் வரையப்பட்டதன் நோக்கம் இனவழிப்புக் குற்றத்தைத்
தண்டிப்பது மட்டுமன்று, அக்குற்றம் புரிவதைத் தடுப்பதுமாகும். இனவழிப்பு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டுள்ள அரசுத் தரப்புகளுக்கு இனவழிப்பைத் தடுக்கும் கடமை போர்காலத்திலும்,
சமாதான காலத்திலு; உள்ளது என்று ஒப்பந்தத்தின் முதல் உறுப்பு சொல்கிறது. போஸ்னிய இனவழிப்பு வழக்கில் பன்னாட்டு நீதிமன்றம் (ஐஊது) இந்த சட்டக் கடப்பாட்டை உறுதிசெய்தது என அதிபர் பைடன் அறுதியிட்டுரைக்கின்றார்.
இனவழிப்பு இல்லாத உலகம் செய்ய நாம் சேர்ந்து முயற்சி செய்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
கொழும்பு உட்பட முடங்கிய ஏழு கிராமங்கள் – திணறும் இலங்கை
கொழும்பு உட்பட முடங்கிய ஏழு கிராமங்கள் – திணறும் இலங்கை
இலக்கையில்; வேகமெடுத்து கொரனோ பரவலை அடுத்து தற்பொழுது கொழும்பு உள்ளிட்ட ஏழு
கிராம சேவகர் பிரிவுகள் முடக்க பட்டுள்ளன
தனிமை படுத்த பட்ட பகுதிகள் எங்கும் இராணுவம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு
பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
காவல்துறையினர் திடீர் சோதனையில் 187 பேர் கைது – தொடரும் வேட்டை
காவல்துறையினர் திடீர் சோதனையில் 187 பேர் கைது – தொடரும் வேட்டை
இலங்கையில் பரவி வரும் நிகழ்கால கொரனோ நோயில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள
மறுத்து ,முக கவசம் அணிய மறுத்து உலாவிய 187 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
பல்வேறு பட்ட எச்சரிக்கைகள் விடுக்க பட்டு வருகின்ற பொழுதும் மக்கள் அதனை அலட்சியம்
செய்து உலாவுகின்றமை குறிப்பிட தக்கது
சிங்கள அமைச்சருக்கு கொரனோ – தனிமை படுத்தி கொண்டார்
சிங்கள அமைச்சருக்கு கொரனோ – தனிமை படுத்தி கொண்டார்
இலங்கையில் ஆளும் அரசின் இனவாத அமைச்சராக விளங்கி வரும் Mahindananda Aluthgamage
வுக்கு கொரனோ தொற்று உள்ளது கண்டறிய பட்ட நிலையில் தற்போது அவர் தன்னை தானே
தனிமை படுத்தி கொண்டார்
மேலும் இவருக்கு தீவிர சிகிச்சை வழங்க பட்டு வருகிறது
தீயில் எரிந்த கடை – பல லட்சம் சேதம்
தீயில் எரிந்த கடை – பல லட்சம் சேதம்
இலங்கை தலைகளை பகுதியில் உள்ள மிக பெரும் கடை ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து அழிந்துள்ளது
இந்த தீ பற்றலினால் கடையில் உள்ள பொருட்கள் யாவும் எரிந்து நாசமாகின
இதனால் பல லட்சம் ரூபா அழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்!
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்!
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நேற்றிரவு (01) கொட்டகலை கொமர்ஷல் பகுதியில்
இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு காயமடைந்து சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற வேன் ஒன்று, கொட்டகலை பகுதியிலிருந்து கொமர்ஷல் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியுடன் பின்புறத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேன், முச்சக்கரவண்டியுடன் மோதிய பின், முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கற்பாறையுடன் மோதி பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
வேன் சாரதி திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கியுடன் நபர் கைது – தொடரும் விசாரணை
துப்பாக்கியுடன் நபர் கைது – தொடரும் விசாரணை
இலங்கையில் நபர் ஒருவரிடம் இருந்து பேனை துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்ய பட்டுளளார்
வெளிநாட்டு தயாரிப்பான இந்த துப்பாக்கி இவருக்கு எவ்வாறு கிடைக்க பெற்றது என்பது
தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
யாழில் வீதிகள் துப்பரவு செய்யும் சிங்கள இராணுவம் -படங்கள் உள்ளே
யாழில் வீதிகள் துப்பரவு செய்யும் சிங்கள இராணுவம் -படங்கள் உள்ளே
யாழ்ப்பாணம் நாவற்குழி மாற்று திருநெல்வேலி பகுதிகளில் இராணுவம் கனரக வாகனங்கள்
உதவியுடன் வீதிகளை சுத்த செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது
மேற்படி உதவிக்கு அங்கு வாழும் மக்களும் உதவி வருகின்றனர் என இராணுவம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது
சுற்று புறத்தை சுத்தமாக வைத்துருப்பின் நோயில் இருந்து மனிதர்கள் தப்பித்து உயிர் வாழும்
காலம் நீடிக்கும் என்பது சுகாதார விதிகள் என்பது இங்கே குறிப்பிட தக்காது

சிங்கள இராணுவம்


















