Posted in Uncategorized

இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணங்கள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணங்கள்

இலங்கையில் நாள்தோறும் கொரனோ நோயினால் மரணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து

செல்கிறது ,இவ்விதம் கடந்த தினம் 27 பேர் பலியாகியுள்ளனர்

இதுவரை இந்த நோயினால் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1,300 ஆக அதிகரிக்க பட்டுள்ளது

    Posted in சினிமா

    பாலியல் புகார் சுமத்தப்பட்டவருக்கு விருதா… வைரமுத்துக்கு எதிராக பிரபல நடிகை.

    பாலியல் புகார் சுமத்தப்பட்டவருக்கு விருதா… வைரமுத்துக்கு எதிராக பிரபல நடிகை.

    கவிஞராகவும், பாடலாசிரியராகவும் இருக்கும் வைரமுத்துக்கு ஓ.என்.வி விருது வழங்க பட்டத்துக்கு பிரபல நடிகை எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

    பாலியல் புகார் சுமத்தப்பட்டவருக்கு விருதா… வைரமுத்துக்கு எதிராக பிரபல நடிகை
    வைரமுத்து


    மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. இதுவரை மூத்த மலையாளப்

    படைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்து, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    முதல் முறையாக மலையாளி அல்லாத ஒரு இலக்கியவாதிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் வைரமுத்து இந்த விருது வழங்கப்பட்டதுக்கு தமிழில் பூ, மரியான் படங்களில் நடித்த மலையாள நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

    வைரமுத்து – பார்வதி
    வைரமுத்து – பார்வதி

    ஓஎன்வி சார் நமது பெருமை, ஒரு கவிஞராகவும், பாடலாசிரியராகவும் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது

    . பாலியல் புகார்கள் பல சுமத்தப்பட்டிருக்கும் ஒருவருக்கு அவர் பெயரில் விருது வழங்குவது பெரும் அவமரியாதை என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் பார்வதி.

      Posted in சினிமா

      நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்.. யார் யார் எத்தனை கோடி வாங்குகிறார்கள் தெரியுமா?

      நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்.. யார் யார் எத்தனை கோடி வாங்குகிறார்கள் தெரியுமா?

      நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள் என்றும் படம் வெற்றிபெறும்போது சம்பளத்தை ஏற்றும் நடிகைகள், தோல்வி அடையும்போது குறைப்பது இல்லை என்றும் பட அதிபர்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது.

      இந்த நிலையில் தென்னிந்திய முன்னணி கதாநாயகிகளின் புதிய சம்பள பட்டியல் இணையதளத்தில் பரவி வருகிறது. நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை

      கேட்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நயன்தாரா கைவசம் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.

      அனுஷ்கா ரூ.3 கோடி வாங்குகிறார். சமந்தா ஒரு படத்துக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இவர் கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் தெலுங்கில் சாகுந்தலம் படங்கள் உள்ளன. பேமிலிமேன் 2 வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

      தமன்னா – திரிஷா
      தமன்னா – திரிஷா

      கீர்த்தி சுரேஷ் ரூ.3 கோடி கேட்பதாக தகவல். இவர் அண்ணாத்த, சாணிகாகிதம் மற்றும் மலையாளம், தெலுங்கில் தலா ஒரு படங்கள் கைவசம் வைத்துள்ளார். காஜல் அகர்வால் ரூ.2 கோடி

      வாங்குகிறார். இந்தியன் 2, பாரீஸ் பாரீஸ், தெலுங்கில் ஆச்சார்யா உள்பட 7 படங்கள் காஜல் அகர்வாலிடம் உள்ளன. திரிஷா ரூ.2 கோடியும், சுருதிஹாசன், தமன்னா ஆகியோர் ரூ.1 கோடியே 50 லட்சமும் கேட்பதாக கூறப்படுகிறது

        Posted in சினிமா

        லாஸ்லியா… கலாய்க்கும் நெட்டிசன்கள்

        லாஸ்லியா… கலாய்க்கும் நெட்டிசன்கள்

        பிக்பாஸ் தமிழின் 3-வது சீசன் மூலம் தமிழக திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இலங்கையை

        சேர்ந்த லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, பிரண்ட்ஷிப் உள்ளிட்ட பெயரிடப்படாத மேலும் 4 படங்களில் நடித்து வருகிறார் நடிகை லாஸ்லியா.

        லாஸ்லியா

        சமூக வலைத்தளத்தில் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இதற்கு ரசிகர்கள் அதிக லைக்குகளை குவிப்பார்கள்.

        ஆனால், தற்போது காதில் பூ வைத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு நெட்டிசன்கள் பலரும் பல கருத்துகளை பதிவு செய்து கலாய்த்து வருகிறார்கள்.

          Posted in Uncategorized

          திருமலையின் வீதியோரங்களில் துள்ளி விளையாடும் மான் photo

          திருமலையின் வீதியோரங்களில் துள்ளி விளையாடும் மான் photo

          திருமலையின் அழகே, வீதியோரங்களில் துள்ளி விளையாடும் மான் கூட்டங்களே !!

          தற்போது லெக்டவுன் காரணத்தினால் திருமலையின் வீதிகளில் வாகன சத்தமும், நெருக்கடியும்

          இல்லாத காரணத்தினால் மான்கள் கூட்டம் கூட்டமாக வீதியோரங்களில் திரியும் அழகே அழகு

          மான்
          மான்
          மான்
            Posted in Uncategorized

            யாழில் மோட்டர் சைக்கிளில் இராணுவ பெண்கள் – அச்சத்தில் மக்கள்

            யாழில் மோட்டர் சைக்கிளில் இராணுவ பெண்கள் – அச்சத்தில் மக்கள்

            கொவிட் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள சுகாதார சட்டங்களை மீறுபவர்களை கைது செய்ய, மற்றும் சுகாதார சட்டங்களை மீறுகின்றவர்களைத் தேடிப் பிடிப்பதற்கும் யாழ்ப்பாணப்

            பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால், இராணுவ மகளிர் வீராங்கனைகளைக் கொண்ட விசேட மகளிர் மோட்டார் சைக்கிள் குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

            யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் தளபதி – மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் மேற்பார்வையில் இந்த விசேட மகளிர் மோட்டார் சைக்கிள் குழு நிறுவப்பட்டுள்ளது.

            இந்த புதிய மோட்டார் சைக்கிள் குழுவானது, சுகாதார சட்டங்களை மீறுகின்றவர்களைத் தேடுதல், அவசரகால வீதித் தடைகளை அமைப்பதன் மூலம் சுகாதாரச் சட்டங்களுக்கு

            இணங்காதவர்களைக் கைது செய்தல் போன்ற நோக்கங்களுக்காக நிறுவப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம், பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

            இதேவேளை, இந்த சிறப்பு மகளிர் மோட்டார் சைக்கிள் குழு இம் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து

            தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக யாழ்ப்பாணம், பாதுகாப்புப் படைத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              கடல் உணவுகளை பயமின்றி சாப்பிடுங்க – டக்கிளஸ் தாத்தா முழக்கம்

              கடல் உணவுகளை பயமின்றி சாப்பிடுங்க – டக்கிளஸ் தாத்தா முழக்கம்

              கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கப்பல் விபத்துக்குள்ளான கொழும்பு மற்றும்

              கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

              கொழும்பு துறைமுகதிற்கு இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றிவந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக உயிரினங்களுக்கு கேடு ஏற்படுத்தக்கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் கடலில் கலந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

              இதன்காரணமாகக் கடலுணவுகளை உண்பது தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையை நீக்கும் வகையில் கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

              இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

              “இதுவரையில், குறித்த சம்பவத்தினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை.

              எவ்வாறெனினும், கப்பலில் விபத்து ஏற்பட்ட நேரத்தில் இருந்து சம்மந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படடுள்ளது.

              அதேவேளை, கடலில் கலந்திருக்கக் கூடிய பாதார்த்தங்கள் தொடர்பாகவும், அவற்றினால் உருவாக்கக்கூடிய தாக்கங்கள் தொடர்பாகவும் கண்டறிவதற்கான ஆய்வுகளில் நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

              குறித்த ஆராய்ச்சி அறிக்கை கிடைக்கும் வரையில், சம்மந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடிச் செயற்பாடுகளுக்கான தடையை இறுக்கமாக அமுல்ப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

              அதேவேளை, போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியிலும் நாடளாவிய ரீதியில் கடலுணவுசார் போக்குவரத்துகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

              எனவே, பேலியகொட உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள சந்தைகளில் கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற சந்தேகத்திற்கிடமான கடல் பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இருந்து

              கொண்டு வரப்படட கடலுணவுகளே விற்பனை செய்யப்படுகின்றன என்ற அடிப்படையில், அவற்றை உட்கொள்வது தொடர்பாக மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்

                Posted in இலங்கை செய்திகள்

                காவல் துறையால் 28 வாகனங்கள் பறிமுதல்

                காவல் துறையால் 28 வாகனங்கள் பறிமுதல்

                இலங்கையில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய 28 வாகனங்கள் காவல்துறையால் பறிமுதல் செய்ய பட்டுள்ளன

                அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்யும் படியும்

                ,வாகனங்களில் செல்ல வேண்டாம் என எச்சரிக்க பட்டிருந்தது


                அவ்விதம் விடுக்க பட்ட எச்சரிக்கையை மீறி செயல் பட்டவர்களது வாகனங்களே இவ்விதம் பறிமுதல் செய்ய பட்டுள்ளது

                  Posted in Uncategorized

                  முகமாலையில் காற்றில் பறந்த வீட்டு கூரைகள்

                  முகமாலையில் காற்றில் பறந்த வீட்டு கூரைகள்

                  கடந்த தினம் முகமாலை பகுதியில் வீசிய கடும் காற்றினால் வீட்டு கூரைகள் காற்றில்

                  பறந்துள்ளது ,இதில் வயோதிபர் ஒருவர் படு காயமடைந்துள்ளார்

                  பாதிக்க பட்டவருக்கு உதவிகளை வழங்கும் பணிகள் முன்னெடுக்க பட்டுள்ளன

                  வீட்டு கூரைகள்

                  வீட்டு கூரைகள்
                    Posted in இலங்கை செய்திகள்

                    587 பேர் கைது – தொடரும் காவல் வேட்டை

                    587 பேர் கைது – தொடரும் காவல் வேட்டை

                    இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் 587 பேர் கடந்த 24

                    மணித்தியாலத்தில் கைது செய்ய பட்டுள்ளனர்

                    முககவசம் அணியாமை ,மற்றும் எல்லைகள் தாண்டிய குற்ற சாட்டில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன

                      Posted in Uncategorized

                      கோட்டா ஆட்சியில் தீயில் எரிந்த இரண்டாவது கப்பல்

                      கோட்டா ஆட்சியில் தீயில் எரிந்த இரண்டாவது கப்பல்

                      தமிழ் இனக் கொலையாளி கோத்த பாயவின் ஆட்சியில் சர்வதேச சரக்கு கப்பல்கள் இரண்டு தொடராக தீ பிடித்து எரிந்துள்ளன

                      கடந்த தினம் இவ்விதம் இரண்டாவது கப்பல் தீ பற்றி எரிந்துள்ளது ,

                      இது கோட்டா நிழல் டிவிஷன் படைகளினால் கப்பலுக்கு தீ வைக்க பட்டுஎரிக்க படுகின்றனவா என்ற சந்தேகம் வலுத்துள்ளது

                      கடந்த முறையும் இந்தியா கடல் படையே தீயில் எரிந்த கப்பலை ,தீயணைக்க உதவியது ,

                      அதே போன்று இம்முறையும் இடம் பெற்றுள்ளது ,இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகின்றன ,அபப்டி என்றால் சமாச்சாரம் வேறாக உள்ளது

                      கோட்டா ஆட்சி கவிழ்க்க பட்டதன் பின்னர் இந்த மர்மங்கள் வெளியாகும் எனலாம்

                        Posted in Uncategorized

                        லண்டனில் புலிக்கொடி பறக்கிறது – இலங்கை கவலை – லண்டனுடன் பேச்சு

                        லண்டனில் புலிக்கொடி பறக்கிறது – இலங்கை கவலை – லண்டனுடன் பேச்சு

                        இலங்கையில் புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் ,அவர்கள் செயல் பாடுகளை சர்வதேச ரீதியாக

                        தடை செய்யும் நோக்கில் சிங்கள பவுத்த பேரினவாதம் ஈடுபட்டு வருகிறது .

                        ஆனால் அதையும் கடந்து தமிழர்கள் தமது வீரம் செறிந்த விடுதலை வேட்கையை தொடர்ந்த

                        வண்ணம் உள்ளனர் ,மக்கள் எழுச்சி அவ்வாறே உள்ளது சிங்களத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                        முள்ளி வாய்க்கால் தினத்தன்று புலிக்கொடியை தாங்கிய படி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டன

                        ர் ,தற்போது லண்டன் புலிகளை ஊக்குவிக்கிறது என இலங்கை இராணுவ அமைச்சர் பாரளுமன்றில் முழங்கியுள்ளார்

                        அப்படி என்றால் புலி கொடி பிடித்தவர்கள் இலங்கை அரசினால் கைது செய்ய படும் நிலை உருவாகியுள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          புதியசட்ட மா அதிபர் பதவிப்பிரமாணம்

                          புதியசட்ட மா அதிபர் பதவிப்பிரமாணம்

                          புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி திரு.சஞ்சய் ராஜரத்னம் (Sanjay Rajaratnam) இன்று

                          (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

                          திரு.சஞ்சய ராஜரத்னம் நாட்டின் 48வது சட்ட மா அதிபராவார்.

                          சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 34 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ள திரு.ராஜரத்னம், அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், மேலதிக

                          சொலிஸிட்டர் ஜெனரல், சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் மற்றும் பதில் சொலிஸிட்டர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.

                          கொழும்பு புனித பீட்டர் கல்லூரி, ரோயல் கல்லூரிகளில் கல்விகற்றுள்ள அவர், லண்டனில் உள்ள

                          குயின்மேரி பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமானிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். திரு.ராஜரத்னம் இங்கிலாந்து மற்றும் வேல்சின் சொலிஸிட்டராவார்.

                          அவர் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்தார்

                          . சிவில் மற்றும் குற்றவியல் சட்டத்துறை குறித்து விரிவான அனுபவத்தை பெற்றுள்ள அவர், நீண்டகாலமாக உயர் நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளார்.

                          இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட சில அரசாங்க நிறுவனங்களில்

                          ஆலோசகர் பதவியை வகித்துள்ள அவர், இலங்கை சட்ட ஆணைக்குழு, சட்டக் கல்விப் பேரவை ஆகியவற்றின் உறுப்பினராவார்.

                          பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அவர்களும் பிரசன்னமாகியிருந்தார்.

                            Posted in சினிமா

                            அப்படி நடிக்க மாட்டேன் – கார்த்தி.

                            கோடி கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன் – கார்த்தி.

                            தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில்

                            கடைசியாக வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ஒரு நல்ல படமாக அமைந்துவிட்டது.

                            கார்த்தி

                            சமீபத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் மாஸ் காட்டுவதற்காக புகை பிடிக்கும் காட்சிகளை படங்களில் வைத்து வருகின்றனர்.

                            பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் வெறும் 20 படங்கள் மட்டுமே நடித்திருக்கும் கார்த்தி

                            தன்னுடைய படங்களில் பெரும்பாலும் புகைபிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்து வருகிறார். இது

                            குறித்து கூறிய கார்த்தி, கோடி ரூபாய் கொடுத்தாலும் புகைப்பிடிக்கும் படி நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              மின்சாரம் இன்றி தவிக்கும் 76 ஆயிரம் மக்கள்

                              மின்சாரம் இன்றி தவிக்கும் 76 ஆயிரம் மக்கள்

                              இலங்கையில் நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணாமாக மின்சாரம் துண்டிக்க பட்டுள்ளது

                              ,இதனால் நாடளாவிய ரீதியில் எழுபத்தி ஆறாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

                              செயல் இழந்த இணைப்புக்களை சீர் செய்வதில் மின்சார சபை ஈடுபட்டுள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                ஒரே நாளில் 29 பேர் கொரனோவுக்கு பலி

                                ஒரே நாளில் 29 பேர் கொரனோவுக்கு பலி

                                இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 29 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்

                                இதுவரை இந்த நோயில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1.298 என தெரிவிக்க பட்டுள்ளது

                                  Posted in சினிமா

                                  நான் சிங்கிள் இல்லை – லட்சுமி மேனன்

                                  நான் சிங்கிள் இல்லை – லட்சுமி மேனன்

                                  நடிகை லட்சுமி மேனன் ‘கும்கி’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதன்பிறகு சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

                                  அவர் நடிப்பில் குட்டிப்புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகிர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன.

                                  இதற்கிடையில் சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தில் நடித்தார்.

                                  முத்தையா இயக்கத்தில் உருவான இப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகி வெற்றி பெற்றது.

                                  லட்சுமி மேனன்

                                  சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் லஷ்மி மேனன், அவ்வெப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

                                  அதோடு ரசிகர்களுடனும் பேசி வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

                                  அதற்கு பதிலளித்த லட்சுமி மேனன், ஆமாம்‌‌ என்று கூறினார். அதேபோன்று மற்றொரு ரசிகர்

                                  கேட்ட கேள்விக்கு, நான் எப்போதுமே சிங்கிள் கிடையாது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து யார் அந்த காதலர் என கமெண்ட்டில் கேட்டு வருகின்றனர்

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    ஆவி தாக்கியதில் ஐவர் காயம் – கொரனோ செய்த கொலை வெறி

                                    ஆவி தாக்கியதில் ஐவர் காயம் – கொரனோ செய்த கொலை வெறி

                                    இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயில் இருந்து தம்மை தற்காத்து கொள்ள நீராவி பிடித்து வருகின்றனர்

                                    இவ்வாறு சூடான பாத்திரத்தில் வைக்க பட்ட நீர் கவிழ்ந்து தாக்கியதில் ஐவர் பலத்த

                                    எரிகாயங்களுக்கு உள்ளன நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                                    இந்த ஆவி பிடிப்பின் மூலம் மூச்சு விடுதல் இலகுவாக இருக்கும் ,அதனால் மக்கள் இதனை செய்து

                                    வருகின்றமை குறிப்பிட தக்கது

                                      Posted in Uncategorized

                                      இலங்கைக்கு சீனா 5 லட்சம் ஊசிகள் அன்பளிப்பு – போலியானதா ..? அச்சத்தில் மக்கள்

                                      இலங்கைக்கு சீனா 5 லட்சம் ஊசிகள் அன்பளிப்பு – போலியானதா ..? அச்சத்தில் மக்கள்

                                      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த சீனா அரசு இலங்கைக்கு ஐந்து

                                      லட்சம் சிநோபம தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது ,இது போன்றே இந்தியாவும் வழங்கி இருந்தது

                                      இது தவிர பைசர் ஊசிகளை கொள்வனவு செய்துடும் நடவடிக்கையிலும் இலங்கை ஈடுபட்டு

                                      வருகின்றது சீனாவின் ஊசியில் கலப்பு இருக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர் ,கடந்த முறை

                                      இலங்கைக்கு வழங்க பட்ட கொரனோ சோதனை கருவிகளில் மில்லியன் கணக்கானவை

                                      போலியானதாக உள்ளமை கண்டு பிடிக்க பட்டமை இங்கே குறிப்பிட தக்கது

                                        Posted in இலங்கை செய்திகள்

                                        கொரனோ தாக்குதலில் சிக்கி 28 பேர் மரணம்

                                        கொரனோ தாக்குதலில் சிக்கி 28 பேர் மரணம்

                                        இலக்கையில் வேகமாக பரவி வருமாம் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 28 பேர்

                                        மரணமாகியுள்ளனர் .இதுவரை இந்த நோயில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1,269 ஆக அதிகரித்துள்ளது

                                        அரசு கூறும் இந்த உயிரிழப்பை விட இரண்டு மடங்கு அதிகம் என மக்கள் கருத்துக்களை பகிர்ந்து

                                        வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது