Author: நலன் விரும்பி
குடும்பமே அந்த நடிகைக்கு ரசிகையாகிவிட்டோம் – ரகுல் பிரீத் சிங்
குடும்பமே அந்த நடிகைக்கு ரசிகையாகிவிட்டோம் – ரகுல் பிரீத் சிங்
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங், முன்னணி நடிகை ஒருவரை புகழ்ந்து பேசி இருக்கிறார்.
எங்கள் குடும்பமே அந்த நடிகைக்கு ரசிகையாகிவிட்டோம் – ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்,
மனோஜ் பாய்பாய், சமந்தா, பிரியாமணி நடிப்பில் அமேசானில் வெளியாகியுள்ள வெப் தொடர் தி பேமிலி மேன்-2. இந்த தொடரை ஒளிபரப்பக்கூடாது என்று வைகோ, பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு பக்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், மறு பக்கம் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.
சமந்தா
சமந்தா – ரகுல் பிரீத் சிங்
இந்நிலையில் நடிகை ரகுல் சிங் டுவிட்டரில், ‛‛தி பேமிலி மேன்-2 தொடரில் நடித்துள்ள மனோஜ்பாஜ்பாயின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அதேபோல் சமந்தா ராஜி
கேரக்டரை மிக அற்புதமாக செய்திருக்கிறார். இந்த தொடரை பார்த்த பிறகு எங்கள் குடும்பமே சமந்தாவின் ரசிகைகளாக மாறி விட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்
சீதையாக நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகை
சீதையாக நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகை
சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் இந்தி படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர்.
பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்திர புராண படங்கள் அதிகம் தயாராகின்றன. மலையாளத்தில் ‘அரபிக் கடலின்டே சிம்ஹம்’ எனும் சரித்திர படத்தில்
மோகன்லால் நடித்துள்ளார். தெலுங்கில் ராமாயண கதை ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் படமாகிறது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர். ரூ.500 கோடி செலவில்
இப்படம் தயாராகிறது. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.
இந்நிலையில், இந்தியிலும் ராமாயண கதை ‘சீதா’ என்ற பெயரில் படமாகிறது. சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ‘சீதா’
என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் சீதையாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். கதை கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள அவர், அப்படத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
கரீனா கபூர்
வழக்கமாக ஒரு படத்துக்கு 6 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்கும் அவர், இப்படத்திற்காக சுமார் ஒரு வருடம் கால்ஷீட் தர வேண்டி இருப்பதால் ரூ.12 கோடி கேட்கிறாராம். படக்குழுவினர், அவர்
கேட்ட தொகையை கொடுத்து ஒப்பந்தம் செய்வார்களா? அல்லது வேறு நடிகையை நடிக்க வைப்பார்களா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
புலிகளை கேவல படுத்த சினிமாவை விட அதிக சம்பளம் வாங்கிய சமந்தா
புலிகளை கேவல படுத்த சினிமாவை விட அதிக சம்பளம் வாங்கிய சமந்தா
நடிகை சமந்தா, வெப் தொடருக்காக சினிமாவை விட அதிகமாக சம்பளம் வாங்கியுள்ள தகவல் திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெப் தொடருக்காக சினிமாவை விட அதிக சம்பளம் வாங்கிய சமந்தா
சமந்தா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன.
நடிகை சமந்தா, அதிகபட்சமாக ஒரு படத்துக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், சமீபத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்காக அவர் 3 கோடி முதல் 4
கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சமந்தா, வெப் தொடருக்காக சினிமாவை விட அதிக சம்பளம் வாங்கியுள்ள தகவல் திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமந்தா
மேலும் அந்த தொடரில் நடித்த மனோஜ் பாஜ்பாயிக்கு இரண்டு சீசன்களுக்கும் சேர்த்து ரூ.10 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும், நடிகை பிரியாமணிக்கு ரூ.80 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் அதிகாரிகளாக போலி வேடத்தில் பண மோசடி
பொலிஸ் அதிகாரிகளாக போலி வேடத்தில் பண மோசடி
பயங்கரவாத விசாரணைப் பிரிவு அல்லது குற்றவியல் விசாரணைத் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகள் என தம்மை
அடையாளப்படுத்தி ஏற்படுத்தப்படும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த அழைப்பினூடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், இது தொடர்பாக அவர்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி, அழைப்பவர்களிடமிருந்து
பணமோசடியொன்று மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக கல்வியமைச்சினால் பிரகடனம்
வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக கல்வியமைச்சினால் பிரகடனம்
இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாக’மாக செயல்பட்ட வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக கல்வியமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பை கல்வி அமைச்சு நேற்று (08) திகதி வெளியிட்டுள்ளது.
‘இலங்கை, யாழ்ப்பாணப் பலகலைக் கழகத்தின் வவுனியா வளாகம் எந்தக் கட்டளையின ; மூலம் ஸ்தாபிக்கப்பட்டதோ மேற்கூறப்பட்ட சட்டத் தின் 22 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு மாச்சு மாதம் 26 ஆந் திகதிய 968 / 6 ஆம் இலக்க அதிவிசேட வர்த் தமானியில்
வெளியிடப்பட்ட அந்தக் கட்டளையை 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆந் திகதியிலிருந்து இத்தால்; இல்லாதொழிக்கின்றேன் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அந்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பல்கலைக்கழம் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவுள்ளது. வியாபார கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், தொழில்நுட்பவியல் கற்கை பீடங்களை இந்த பல்கலைக்கழம் கொண்டிருக்கும்.
வியாபார கற்கைகள் பீடத்தில் நிதி மற்றும் கணக்கியல் துறை, ஆங்கில மொழி கற்பித்தல்துறை, கருத்திட்ட முகாமைத்துவ துறை, மனிதவள முகாமைத்துவ துறை, சந்தைப்படுத்தல்
முகாமைத்துவ துறை, வியாபார பொரளியல்துறை, முகாமைத்துவம் மற்றும் தொழில் உரிமையான்மை துறை என்பன செயற்படும்.
பிரயோக விஞ்ஞான பீடத்தில் பௌதீக விஞ்ஞானத்துறை மற்றும் உயிரியியல் விஞ்ஞானத்துறை என்பன இயங்கும்;.
தொழில்நுட்பவியல் கற்கை பீடத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்துறை செயற்படும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுவிஸ் அரசு 800 மில்லியன் மருத்துவ உதவி
இலங்கைக்கு சுவிஸ் அரசு 800 மில்லியன் மருத்துவ உதவி
இலங்கையில் பரவிவரும் கொரனோ நோயில் இருந்து மக்களை காப்பாற்ற சுவிஸ் நாட்டில்
இருந்து இலங்கைக்கு 800 மில்லியன் பெறுமதியான மருத்துவ பொருட்களை காவியபடி விமானம் ஒன்று தரை இறங்கியுள்ளது
இதில் million antigen tests, 50 ventilators, 150 oxygen என்பன எடுத்துவர பட்டுள்ளன ,
சமூக வலைத்தளங்கள் ஊடக பொய் பரப்புரை செய்வோர் கைது செய்யப்படுவர் – மிரட்டும் அரசு
சமூக வலைத்தளங்கள் ஊடக பொய் பரப்புரை செய்வோர் கைது செய்யப்படுவர் – மிரட்டும் அரசு
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிரான செயல் பாடுகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக
மேற்கொள்வோர் கைது செய்யப்படுவர் என ஆளும் அரசு கடுமையாக எச்சரித்துள்ளது
இவ்வாறான நபர்கள் கைது செய்ய பட்டு தண்டிக்க படுவார்கள் என கெகலியா மிரட்டல் விடுத்துள்ளார்
தற்காலிக கொரனோ மருத்துவமனை திறப்பு
தற்காலிக கொரனோ மருத்துவமனை திறப்பு
கடற்படையினரால் கம்பஹா, வெரௌவத்தை பகுதியில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை
அளிக்கும் 650 படுக்கைகளைக் கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.
நாட்டில் வியாபித்துள்ள கொவிட்-19 பரவல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு உந்து சக்தி அளிக்கும் வகையில் இயங்கு
நிலையில் இல்லாத தொழிற்சாலையினை இடைநிலை சிகிச்சை நிலையமாக கடற்படை மாற்றி அமைந்துள்ளது.
சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கடற்படை வீரர்களின் உடல் உழைப்பினை கொண்டு முதற்கட்ட பணிகள் பூர்த்தி ஆக்கப்பட்ட நிலையில் சுகாதார அமைச்சர்
கௌரவ பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இந்த சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையின் உத்தேச திட்டத்திற்கு அமைய இந்த தொழிற்சாலை, எதிர்காலத்தில் சுமார் 2000
படுக்கைகளைக் கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையமாக விஸ்தரிக்கும் நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 1.034 பேர் கைது
இலங்கையில் 1.034 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 1,034 பேர் கைது செய்ய
பட்டுள்ளனர் ,முகக்கவசம் அணிய மறுத்தமை ,மற்றும் மாகாண எல்லைகளை கடந்தமை போன்ற குற்றங்களில் இவர்கள் கைது செய்ய பட்டுள்ளார்
வேகமாக நோயானது பரவி அதிக மரணங்கள் இடம்பெற்று வரும் நிலையில் ,மக்கள் அதனை அலட்சியம் செய்த்து வீதிகளில் உலாவிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
முதலை இழுத்து சென்ற மனிதரை – பாய்ந்து காப்பாற்றிய பிக்கு
முதலை இழுத்து சென்ற மனிதரை – பாய்ந்து காப்பாற்றிய பிக்கு
கடந்த திங்கள் கிழமை Diyamailagaswewa, Kahatagasdigiliya அருவிக்குள் குளித்து கொண்டிருந்த
எழுபது வயது முதியவர் ஒருவரை நீரடியால் பதுங்கி வந்த முதலை இழுத்து சென்றுள்ளது
இதனை கண்ணுற்ற முப்பது வயதுடைய இளம் பிக்கு ஒருவர் நீருக்குள் பாய்ந்து அந்த முதியவரை
காப்பாற்றியுள்ளார் ,இவரது இந்த துணிவும் ,அறம் சார்ந்த செயலும் தற்போது சமூக வலைத்தளத்தில்
வைரலாகி வருவதுடன் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன
இலங்கையில் மிரட்டும் கொரனோ – ஒரே நாளில் 50 பேர் மரணம்
இலங்கையில் மிரட்டும் கொரனோ – ஒரே நாளில் 50 பேர் மரணம்
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த தினம் ஒரே நாளில் ஐம்பது பேர் மரணமாகியுள்ளனர்
இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 1,844 பேர் பலியாகியுள்ளனர் ,நோயினை கட்டு படுத்த
முடியாது இலங்கை திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது
ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் சமந்தாவின் ஸ்டண்ட் வீடியோ… பாராட்டும் கூத்தாடி நடிகைகள்
சமந்தாவின் ஸ்டண்ட் வீடியோ… பாராட்டும் கூத்தாடி நடிகைகள்
சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. சீமான், பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் அந்த வெப் தொடர் ஈழ
ப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நாடு முழுவதும் தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தினமும் பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் சமந்தா.
இந்நிலையில் தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் தான் டூப் போடாமல் அதிரடியாக சண்டைக் காட்சிகளில் நடித்ததாகவும் தனக்கு ஊக்கமளித்து பயிற்சி கொடுத்த ஸ்டண்ட் இயக்குநர் யானிக்
பென்னுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பல லைக்குகளை குவித்து வருகிறது.
மேலும் இந்த வீடியோவிற்கு, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, லாவண்யா திரிபாதி உள்ளிட்ட பல நடிகைகள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
உங்க சைஸ் என்ன? … ரசிகரின் ஆபாச கேள்வி- பார்வதி நாயர்
உங்க சைஸ் என்ன? … ரசிகரின் ஆபாச கேள்வி- பார்வதி நாயர்
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பார்வதி நாயர், ரசிகர்களின் ஆபாச கேள்விகளுக்கு கூலாக பதிலளித்துள்ளார்.
உங்க சைஸ் என்ன? … ரசிகரின் ஆபாச கேள்விக்கு கூலாக பதில் அளித்த பார்வதி நாயர்
பார்வதி நாயர்
அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அந்த படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்திருந்தார். தற்போது பார்வதி தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடியபோது சிலர் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர் தனது பாணியில் பதில் அளித்து உள்ளார்.
பார்வதி நாயர்
இதில் ஒரு ரசிகர் உங்களுடைய சைஸ் என்ன? என கேட்ட போது எனது ஷூ சைஸ் 37 என்றும் டிரஸ்
சைஸ் எஸ் என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். இதேபோன்று பல சர்ச்சை கேள்விகளுக்கு அவர் கூலாக பதிலளித்துள்ளார்.
கொழும்பில் புதிய தடுப்பு முகாம் – கோட்டா ஆட்டம் ஆரம்பம்
கொழும்பில் புதிய தடுப்பு முகாம் – கோட்டா ஆட்டம் ஆரம்பம்
இலங்கையில் தமிழின படுகொலையாளியும் ஆளும் ஜனாதிபதியாக விளங்கும் கோட்டபாய
,கொழும்பில் இயங்கும் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவு கடடடத்தில் ,பயங்கரவாத தடை
சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் அனுமதி வழங்க பட்டுள்ளது
கோட்டாவின் இந்த அவசர நடவடிக்கை ஏன் என்ற சந்தேகம் ஏழுந்துள்ளதுடன் ,தமிழாக்கள் பீதியில் உறைந்துள்ளனர்
ஒரேநாளில் 2,646 பேருக்கு கொரனோ – இதுவரை 207,979 பாதிப்பு
ஒரேநாளில் 2,646 பேருக்கு கொரனோ – இதுவரை 207,979 பாதிப்பு
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,646 பேர் கொரனோ தொற்றால் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இதுவரை சுமார் 207,979 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தனிமை படுத்தல் சட்டங்கள் மற்றும் பயண தடைகள் விதிக்க பட்ட பொழுதும் நோயின் தாக்குதல் வேகமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
மக்களிடம் பணம் பறித்த சிங்கள இராணுவத்தினர் கைது
மக்களிடம் பணம் பறித்த சிங்கள இராணுவத்தினர் கைது
கற்பிட்டி பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரிடம் இருந்து மிரட்டி பணம் பறித்த
குற்றச்சாட்டில் மூன்று விமானப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களால் ஒரு இலட்சம் ரூபாய் பணம் இவ்வாறு மிரட்டி பெறப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
முல்லைத்தீவு வீதிகளில் இராணுவத்தினர் பொலிசார்
முல்லைத்தீவு வீதிகளில் இராணுவத்தினர் பொலிசார்
பயணக்கட்டுப்பாடு தொடர்ந்துவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வீதிகளில் இராணுவத்தினர்
பொலிசார் மக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் பயணத்திற்கான அனுமதியினை பரிசோதிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்கள்.
இன்று காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து முல்லைத்தீவு மாவட்டம் விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா கொத்தணி
உருவாகியதைத் தொடர்ந்து மாவட்டத்தில் 11 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று (07) காலை தனிமைப்படுத்தப்பட்ட 11 கிராமசேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்
பிரிவில் 9 கிராமங்களும், கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் இரண்டு கிராமங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன
65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசி
65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசி
நாட்டின் மொத்த சனத் தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசியை ஏற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
ஏற்கனவே 10 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. கொவிட் தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் நாளை ஆரம்பிக்கப்படவிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை 12 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேல் மாகாணம் உட்பட 9 மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றம் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 23 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. மூன்று லட்சத்து ஐம்பத்து மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் 2 தடுப்பூசிகளையும்
செலுத்தியுள்ளனர். சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட உள்ள 10 லட்சம் சைனோ பார்ம் தடுப்பூசிகளில் இருந்து 8 மாவட்டங்களுக்கு 25இ000 தடுப்பூசிகள் வீதம் பகிர்ந்தளிக்கப்படும்.
நுவரெலியா ஹம்பாந்தோட்டை அனுராதபுரம் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு தலா 50இ000 தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் சைனோ பார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் புதன்கிழமை நாட்டுக்கு வந்து சேர உள்ளன.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டதை எதிர்வரும் புதன்கிழமை பிலியந்தல பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
2 மாத குழந்தைக்கு கொரனோ – கண்ணீரில் குடும்பம்
இலங்கை
2 மாத குழந்தைக்கு கொரனோ – கண்ணீரில் குடும்பம்
கிளிநொச்சி – கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராமத்தில், 2 மாத சிசுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருந்தே, இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சிசுவின் தந்தை கிளிநொச்சியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில்
பணியாற்றுபவர் என்றும், அவருக்கு அண்மையில் தொற்றுறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதைத் தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் இரண்டு மாதக் சிசுக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில், சிசவுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதுடன், தாய்க்கு தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்டது.
இருந்த போதும், அவருக்கு இருக்கும் அறிகுறிகள், தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதனால், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்
- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்
- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா
பாயும் பறக்கும் படை – 1,028 பேர் கைது
பாயும் பறக்கும் படை – 1,028 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,028 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
உரிய முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்












