Tag: ரகுல் பிரீத் சிங்
காதலனை அறிமுகம் செய்து வைத்த ரகுல் பிரீத் சிங்
காதலனை அறிமுகம் செய்து வைத்த ரகுல் பிரீத் சிங்
பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
பிறந்தநாளன்று காதலனை அறிமுகம் செய்து வைத்த ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்
தமிழில் அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். அதன்பின், கார்த்தி ஜோடியாக ‘தேவ்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’,
சூர்யாவின் ‘என்ஜிகே’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த அவர், தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘அயலான்’ படத்தில் நடித்துள்ளார்.
இதுதவிர பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக
நடித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ரகுல் பிரீத் சிங், சமூக வலைதளம் வாயிலாக தனது காதலனை அறிமுகம் செய்து வைத்துள்ளார். நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானி என்பவரை காதலிப்பதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
பதிவிட்டுள்ளதாவது: “இந்த வருடம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு நீ. என் வாழ்வை வண்ண மையமாக்கியதற்கும், என்னை இடைவிடாமல் சிரிக்க வைப்பதற்கும் நன்றி” என குறிப்பிட்டு காதலனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
அதிக வாய்ப்புகள் வருகிறது -நடிகை ரகுல் பிரீத் சிங்
அதிக வாய்ப்புகள் வருகிறது -நடிகை ரகுல் பிரீத் சிங்
சினிமாவோடு ஓ.டி.டி. தளமும் படிப்படியாக முன்னேறினால்தான் சினிமா துறை சிறப்பாக இருக்கும் என நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
ஓ.டி.டி. தளங்களால் அதிக வாய்ப்புகள் வருகிறது -நடிகை ரகுல் பிரீத் சிங் சொல்கிறார்
ரகுல் பிரீத் சிங்
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: “ஓ.டி.டி. தளத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதன்
மூலம் நடிகர் – நடிகைகள், இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. கொரோனா காலத்தில் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பது இயலாத காரியம்.
இதனால் ரசிகர்கள் பார்வை ஓ.டி.டி. பக்கம் திரும்பி இருக்கிறது. இதன் மூலம் படங்களை உலக அளவில் ரசிகர்கள் எல்லோரும் பார்க்கிறார்கள். நல்ல கதையம்சம் இருந்தால் அதை பாராட்டவும்
செய்கிறார்கள். பெரிய திரையில் படங்களை பார்த்து சந்தோஷப்படும் ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அதேபோல் இப்போது ஓ.டி.டி.யில் வரும் படங்களை விரும்பும் ரசிகர்களும் அதிகரித்து வருகிறார்கள்.
ரகுல் பிரீத் சிங்
பொழுது போக்கு தளங்கள் எத்தனை இருந்தாலும் தியேட்டரில் பெரிய திரையில் படம் பாக்கும் மேஜிக் மட்டும் அப்படியேதான் இருக்கும். ஆனால் சினிமாவோடு ஓ.டி.டி. தளமும் படிப்படியாக
முன்னேறினால்தான் சினிமா துறை சிறப்பாக இருக்கும். ஓ.டி.டி. தளங்களை நான் ஆதரிக்கிறேன்.’’ இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.
பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் ரகுல் பிரீத் சிங்.
பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் ரகுல் பிரீத் சிங்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் பிரீத் சிங், பிரபல ஹாலிவுட் நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்
விஷ்ணு விஷால் நடித்து கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் ராட்சசன். இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ராம்குமார் இயக்கி இருந்த இப்படத்தில், விஷ்ணு விஷால் ஜோடியாக அமலாபால் நடித்து இருந்தார்.
அக்ஷய் குமார்
அக்ஷய் குமார் – ரகுல் ப்ரீத் சிங்
இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தை தயாரித்து
நடிக்க இருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
குடும்பமே அந்த நடிகைக்கு ரசிகையாகிவிட்டோம் – ரகுல் பிரீத் சிங்
குடும்பமே அந்த நடிகைக்கு ரசிகையாகிவிட்டோம் – ரகுல் பிரீத் சிங்
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங், முன்னணி நடிகை ஒருவரை புகழ்ந்து பேசி இருக்கிறார்.
எங்கள் குடும்பமே அந்த நடிகைக்கு ரசிகையாகிவிட்டோம் – ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்,
மனோஜ் பாய்பாய், சமந்தா, பிரியாமணி நடிப்பில் அமேசானில் வெளியாகியுள்ள வெப் தொடர் தி பேமிலி மேன்-2. இந்த தொடரை ஒளிபரப்பக்கூடாது என்று வைகோ, பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு பக்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், மறு பக்கம் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.
சமந்தா
சமந்தா – ரகுல் பிரீத் சிங்
இந்நிலையில் நடிகை ரகுல் சிங் டுவிட்டரில், ‛‛தி பேமிலி மேன்-2 தொடரில் நடித்துள்ள மனோஜ்பாஜ்பாயின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அதேபோல் சமந்தா ராஜி
கேரக்டரை மிக அற்புதமாக செய்திருக்கிறார். இந்த தொடரை பார்த்த பிறகு எங்கள் குடும்பமே சமந்தாவின் ரசிகைகளாக மாறி விட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்
சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங்
சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங்
பிரபல பாலிவுட் இயக்குனர் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிக்கும் புதிய பாலிவுட் படத்தில் ரகுல் பிரீத் சிங் நடிக்க
ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மராத்தி இயக்குனர் தேஜஸ் தியோஸ்கர் இயக்கும் இந்த படம்
காமெடி கலந்த சமூக படமாக தயாராகிறது. இதில் ரகுல் பிரீத் சிங் காண்டம் பரிசோதனையாளராக நடிக்கிறார்.
ரகுல் பிரீத் சிங்
இந்த கேரக்டரில் நடிக்க அனன்யா பாண்டே, சாரா அலிகான் இருவரையும் தான் முதலில் அணுகினார்கள்.
ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். ரகுல் பிரீத் சிங் கதையையும், படத்தில் வரும் காட்சிகளையும் கேட்டுவிட்டு
நடிப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது
- ஈரான் அமெரிக்கா கடலில் போர்
- 39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா
- ஈரான் மீதான போர் ‘மிக விரைவில் முடிவுக்கு வரலாம்’ என்கிறார் டிரம்ப்
- அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ‘உண்மையான பயங்கரவாதிகள்’ என ஈரான் அதிபர் சாடினார்
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது
- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை
- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்
ரகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா
ரகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா
சமீபத்தில் குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வந்த நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சுற்றுலா சென்று வந்த ரகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு
ரகுல் பிரீத் சிங்
கொரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கி, பல்வேறு முன்னணி
நடிகர்களும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அனைத்துப் படப்பிடிப்புகளுமே கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை
நடவடிக்கையுடன்தான் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங், சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத்
திரும்பினார். தற்போது படப்பிடிப்புக்குச் செல்வதற்காக அவர் ஆயத்தமாகி வந்தார். இதனிடையே, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரகுல் பிரீத் சிங் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரகுல் பிரீத் சிங் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ரகுல் பிரீத் சிங்
“எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்னை நானே
தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தற்போது நன்றாக இருக்கிறேன்.
நன்கு ஓய்வெடுத்த பின்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். என்னைச் சந்தித்த அனைவரும் கொரோனா
பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, பாதுகாப்பாக இருக்கவும்”.
இவ்வாறு ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
கொரனோவால் வீட்டை ஜிம்மாக மாற்றிய நடிகை
கொரனோவால் வீட்டை ஜிம்மாக மாற்றிய நடிகை
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், ஊரடங்கால் தன்னுடைய வீட்டை ஜிம்மாக மாற்றி இருக்கிறார்.
வீட்டை ஜிம்மாக மாற்றிய ரகுல் பிரீத் சிங்
நடிகை ரகுல்பிரீத் சிங்
கொரோனா ஊரடங்கில் நடிகர்-நடிகைகள் பலரும் வீட்டிலேயே உடற்பயிற்சிகள், யோகா செய்து தேகத்தை கட்டுக்கோப்பாக
வைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
நடிகை ரகுல்பிரீத் சிங் உடற்பயிற்சி செய்யும் காட்சி
நடிகை ரகுல்பிரீத் சிங்கும் உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விதம் விதமாக உடற்பயிற்சிகள் செய்யும்
புகைப்படங்களையும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.
இப்போது ஜிம்முக்கு செல்லும் நிலைமை இல்லாததால் வீட்டையே உடற்பயிற்சி கூடமாக மாற்றி இருக்கிறார்.
வீட்டில் இருக்கும் மரச்சாமான்கள் உதவியோடு உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் செய்கிறார்.
வீட்டுக்குள்ளேயே அந்தரத்தில் தொங்குவது, ஓடுவது, குதிப்பது என்றெல்லாம் உடற்பயிற்சிகள் செய்கிறார்.
ஊரடங்கு நமது ஆரோக்கியத்துக்கு தடையாக இருக்க கூடாது. கலோரிகளை
கரைக்க ஜிம்முக்குதான் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே எளிமையான உடற்பயிற்சிகளை செய்யலாம் என்றார்.

ராணாவுடன் காதலா? – ரகுல் பிரீத் சிங்
ராணாவுடன் காதலா? – ரகுல் பிரீத் சிங்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரகுல் பிரீத் சிங். அவர் பாகுபலி நடிகர் ராணாவை காதலிக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரகுல் பிரீத் சிங் இதற்கு விளக்கமளித்துள்ளார்
அவர் கூறியுள்ளதாவது: “எங்கள் இருவரது வீடும் மிக அருகில் தான் உள்ளது. நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்தே ராணாவை தெரியும். நாங்கள் நண்பர்களாக மட்டுமே பழகி வருகிறோம். நான் சிங்கிள் தான். இதுவரை யாரையும் காதலித்ததில்லை. அதற்கு நேரமும் இல்லை” என கூறியுள்ளார்.
ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங் தமிழில் யுவன், தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன், தேவ், என்ஜிகே ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே. 14, இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.














