Author: நலன் விரும்பி
இதை செய்தால் கிரிமினல் குற்றம் – மிரட்டும் அரசு
இதை செய்தால் கிரிமினல் குற்றம் – மிரட்டும் அரசு
சமூக வலைத்தளங்களில் போலியான செய்த்தகிகள் பாம்பினால் கிரிமினல் குற்றம்
இலங்கையில் ஆளும் காசுக்கு எதிராக சமூகவலைத்தளங்கள் ஊடாக போலியான செய்திகளை
பரப்பினால் அவை கிரிமினல் குற்றமாகும் ,அத்துடன் அந்த செய்திகளை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை
பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்குள்ளானதால் பாதிக்கப்பட்டுள்ள
மீனவருக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை முதல் இடம் பெறும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ள பாணதுறை முதல் நீர்கொழும்பு வரையான
கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் (11) பிரதமர் ஆலோசனை வழங்கினார்.இதன்போதே இந்த கொடுப்பனவு தொடர்பாக பிரதமர் அறிவித்தார்.
கப்பல் விபத்துக்குள்ளானதால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது.
இழப்பீட்டை பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு
பிரதமர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணங்கள்
இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணங்கள்
மரணத்திற்கான காரணத்தைக்கண்டறிவதில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் மரண சான்றிதழ்
வழங்கி மரண நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் ஏற்பட தாமதங்களுக்கு மத்தியிலேயே கொவிட் மரணங்கள் தொடர்பான அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
சில மரணங்கள் தொடர்பான விடயங்கள் நீதி மன்றங்களில் நிலுவையில் இருந்ததன. அவற்றை நிறைவு செய்வதில் சில காலம் செல்வது வழமை. இவ்வாறான நிலைக்கு மத்தியலேயே இந்த
அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இக்காலப் பகுதியில் அறிக்கையிடப்படாத மரணங்கள் தொடர்பாக அறிக்கைகளை
முடிந்தவரையில் நேற்றைய தினம் முழுமைப்படுத்த முயற்சித்தோம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக நாளந்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை திடீரென
அதிகரித்ததிற்கான காரணத்தை தெளிபடுத்திய போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 72 மணித்தியாள காலப்பகுதிக்குள் அல்லது 96 மணித்தியாளங்களில்
மரணித்தோரின் அறிக்கைகளை வெளியிட எதிர்பார்க்கின்றோம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன மேலும் கூறினார்
இலங்கையில் திடீர் எகிறிய வேட்டை -1,353 பேர் கைது
இலங்கையில் திடீர் எகிறிய வேட்டை -1,353 பேர் கைது
இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் சுமார் 1,353 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைதானவர்கள் முகக்கவசம் அணிய மறுத்தமை மற்றும் மாகாண எல்லைகளை
தாண்டிய குற்ற சாட்டுக்களில் இந்த கைது இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
தமிழ் தம்பதிகளை அவுஸ்ரேலியாவில் தங்க அனுமதிக்க வேண்டும் – எம்பிக்கள் குரல்
தமிழ் தம்பதிகளை அவுஸ்ரேலியாவில் தங்க அனுமதிக்க வேண்டும் – எம்பிக்கள் குரல்
அவுஸ்ரேலியாவில் அகதியாக நுழைத்த இலங்கை ஈழ தமிழர்களான பிரியா மற்றும் அவரது
கணவர் நடேஸ் முருகப்பன் ஆகியோர் குயின்லாண்ட் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் அடைக்க பட்டனர்
இவர்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகள் உள்ளனர் , அதில் தரணிக்கா தற்போது மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்
இவரது நான்காவது பிறந்த நாள் தினத்தன்று இரு எம்பிக்கள் அவர்களை அவுஸ்ரேலியாவில் தங்க அனுமதிக்க வேண்டும்
என குரல் கொடுத்துள்ளனர் ,மேலும் மக்களும் ஆளும் அரசுக்கு அவர்கள் அங்கு தங்கிட அனுமதிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இரு குழந்தைகள் நலன் கருதி இந்த கோரிக்கை முன் வைக்க பட்டுள்ளது

இந்தியா செல்லும் இலங்கையர்கள் 14நாட்கள் தடுத்து வைப்பு
இந்தியா செல்லும் இலங்கையர்கள் 14நாட்கள் தடுத்து வைப்பு
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் இலங்கையர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தல் சோதனைக்கு உள்ளாக்க படுவார்கள் என இந்தியா அறிவித்துள்ளது
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இந்த புதிய விதிகள் அறிமுக படுத்த பட்டுள்ளன
இதனால் பயணிகள் பெரிதும் அவதியுற்ற வண்ணம் உள்ளனர்
கனடா செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் கைது
கனடா செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் கைது
இலங்கையில் இருந்து கனடாவுக்கு அழைத்து செல்வதற்காக தங்கி இருந்த முப்பத்தி எட்டு இலங்கையர்கள் இந்திய பெங்களூரில் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் அனைவரும் பத்து லட்சம் ரூபா வழங்கி கடல் வழியாக கனடாவுக்கு செல்ல தயாராக இருந்த வேளை காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதான அனைவரும் கியூ பிராஞ்சின் விசாரணை வளையத்திற்குள் முடக்க பட்டுள்ளனர் ,இவர்கள் தங்கி இருக்க இருப்பிடங்கள் ஏற்பாடு செய்து கொடுத்த எட்டு பேரும் கைது செய்ய பட்டுள்ளனர்
கடல்வழியாக செல்வது என்பது மிக பெரும் ஆபத்து என்பது உணராது நம்ம இலங்கையர்கள்
,இலங்கை வெப்ப வளையம் என கனடாவை நினைத்து செல்ல முனைந்தது எவ்வாறான முட்டாள் தனம் என்பது இதன் ஊடாக தெரிகிறது
இலங்கை பங்கு சந்தை கடும் வீழ்ச்சி -4 52.6 மில்லியன் இழப்பு
இலங்கை பங்கு சந்தை கடும் வீழ்ச்சி -4 52.6 மில்லியன் இழப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இலங்கையின் பங்கு சந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது
கடந்த வைகாசி மாதம் மட்டும் சுமார் 452.6 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
கண்டியில் புதிய கொரனோ மருத்துவமனை
கண்டியில் புதிய கொரனோ மருத்துவமனை
கண்டி, குண்டசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் இடைநிலை சிகிச்சை மத்திய நிலையம் சுகாதார பிரிவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பான நிகழ்வு இன்று காலை ஒன்பது முப்பதுக்கு இடம்பெறவுள்ளது.இந்த நிகழ்வில்
வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்
கொவிட் வைரசு தொற்று பரவலை தடுக்கும் செயல்திட்டதின் கீழ் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுவரும்
இடைநிலை சிகிச்சை நிலைய திட்டத்தின் கீழ் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம்
நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் வசதிகளை இந்த மத்திய நிலையம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடல்கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடல்கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை
நீர்கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை, முல்லைத்தீவு வரையிலான கடல் பிரதேசம்
எதிர்வரும் சில மணித்தியாலங்களில் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இந்த கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் ; மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் வரை அதிகரிக்கலாம்
என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கடற்தொழிலாளர்கள் மற்றும் கடல்நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வலியறுத்தப்பட்டுள்ளனர்.
மிருசுவில் பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து தள்ளிய லொறி
மிருசுவில் பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து தள்ளிய லொறி
யாழ்ப்பாணம் கண்டி விதி கொடிகாமம் மிருசுவில் பகுதியில் நிர்மாணிக்க பட்டிருந்த
வீதியோயோர பிள்ளையார் கோவில் ஒன்றை அவ்வழியாக பயணித்த லொறி ஒன்று இடித்து சேதமாக்கியது
இதனால் அந்த சிலை முற்றாக சேதமடைந்த நிலையில் தற்போது புதிதாக நிர்மாணிக்க பட்டு வருகிறது
மேற்படி குற்ற செயலை புரிந்த சாரதி கைது செய்ய பட்டுள்ளார்
கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சார்லி புகார்
கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சார்லி புகார்
பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் சார்லி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சார்லி புகார்
சார்லி
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, விக்ரம், அஜித், விஜய், சூர்யா என மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து
நடித்தவர் காமெடி நடிகர் சார்லி. இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
சார்லி
இந்த புகாரில் நடிகர் சார்லி கூறியிருப்பதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடகம், திரைப்படங்களில் நடிகராக பணியாற்றி வரும் நான், எந்த ஒரு சமூக வலைதளத்திலும் இல்லை
என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பெயரில் என்னுடைய அனுமதி இன்றி, ட்விட்டரில் போலியாக கணக்கு துவங்கப்பட்டு உள்ளது. இதை ஆரம்பத்திலேயே தடை
செய்து நடவடிக்கை எடுக்குமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சமந்தா
மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சமந்தா
தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நடிகை சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சமந்தா
சமந்தா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார். பிரபல பாலிவுட் இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே
ஆகியோர் இந்த தொடரை இயக்கி இருந்தனர். பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே கடந்த வாரம் ஓடிடியில் வெளியான இந்த வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமந்தா
இந்நிலையில், நடிகை சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் அந்த வெப் தொடரை தயாரிக்க உள்ளதாக
கூறப்படுகிறது. மேலும் இந்த வெப் தொடரை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
நடிகை மீது தேசத்துரோக வழக்கு
நடிகை மீது தேசத்துரோக வழக்கு
லட்சத்தீவு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரஃபுல் படேல் என்பவர் பற்றி பேசிய நடிகை மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை மீது தேசத்துரோக வழக்கு பதிவு
ஆயிஷா சுல்தானா
பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் லட்சத்தீவு விவகாரம் குறித்து பேசினார். அப்போது லட்சத்தீவு நிர்வாகியாக நியமனம்
செய்யப்பட்டுள்ள பிரஃபுல் படேல் என்பவர் மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட பயோவெப்பன் என்று பேசி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகை ஆயிஷா சுல்தானா மீது பாஜக பிரமுகர் அப்துல் காதர் ஹாஜி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் நடிகை சாயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது பேச்சு குறித்து ஆயிஷா சுல்தானா கூறும்போது, லட்சத்தீவு நிர்வாகி
பிரஃபுல் பட்டேலை பயோவெப்பன் என தான் பேசியது நாட்டையோ அரசையோ குறிப்பிடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
பயணக்கட்டுப்பாடு-நீடிப்பு – மக்கள் அவதி
பயணக்கட்டுப்பாடு-நீடிப்பு – மக்கள் அவதி
நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 04 மணி
வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று(12) தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள
பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என நேற்று(10) அறிவிக்கப்பட்டது.
எனினும், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை
பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.
ஆற்றுக்குள் பாய்ந்த லொறி – சாரதி மரணம்
ஆற்றுக்குள் பாய்ந்த லொறி – சாரதி மரணம்
பிபிலவில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விக்டோரியா நீர்த்தேக்கத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி மற்றும் தெல்தெணிய பொலிஸின் சுழியோடிகளின் உதவியுடன் சாரதியின் சடலம் மற்றும் லொறி மீட்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெறும் போது லொறியில் சுமார் 1,600 கோழிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் – ரவுடிகள் அட்டகாசம்
பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் – ரவுடிகள் அட்டகாசம்
வவுனியா முருகனூர் பகுதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு இளைஞர் குழுவொன்று தப்பிச் சென்றுள்ளனர்.
முருகனூர் பகுதியில் இன்று (12) காலை 7.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிதம்பரபுரம் பகுதியிலிருந்து வவுனியா இராசேந்திரகுளம்
ஆடைத்தொழிற்சாலை நோக்கி ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்திற்கு முருகனூர் விவசாய பண்ணைக் அருகே முகங்களை மறைந்தவாறு நின்ற இளைஞர் குழுவினர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கல்வீச்சு தாக்குதலையடுத்து பேரூந்தினை சாரதி நிறுத்திய போது பேரூந்தினுள் புகுந்த அவ் இளைஞர் குழுவினர் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.
இலங்கையில் எரிபொருட்கள் விலை அதிகரிப்பு – 20 ரூபாவால் எகிறும் பெட்ரோல்
இலங்கையில் எரிபொருட்கள் விலை அதிகரிப்பு – 20 ரூபாவால் எகிறும் பெட்ரோல்
இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசினால் எரிபொருட்கள் விலை திடிரென அதிகரிக்க படுகிறது
இன்று நள்ளிரவு முதல் உயர்ரத்த படும் இந்த எரி பொருட்கள் விலையால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்
பெற்றோல் லிட்டருக்கு 20 ரூபாவால்; அதிகரிக்க படுகிறது ,அதேபோல டீசல் 7 ரூபாவில் அதிகரிக்க படுகிறது
கொரனோ காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு திணறி வரும் நிலையில் இந்த விலை ஏற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தொடரும் காவல்துறை வேட்டை -1,027 பேர் கைது
தொடரும் காவல்துறை வேட்டை -1,027 பேர் கைது
இலக்கையில் தன்மை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் கடந்த தினம் மட்டும் சுமார் 1,027 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதான அனைவரும் முகக்கவசம் மற்றும் மாகாண எல்லைகளை கடந்த குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கையில் 8.000 டெங்கு நோயாளர்கள்
இலங்கையில் 8.000 டெங்கு நோயாளர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக டெங்கு நோயானது அதிகமாக பரவி வருகிரது
இந்த நோயின் தாக்குதலில் சிக்கி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
சுற்றுப்புற சூழல் அசுத்தம் காரணமாகவே இந்த நோயானது பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது












