கடல்கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை
நீர்கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை, முல்லைத்தீவு வரையிலான கடல் பிரதேசம்
எதிர்வரும் சில மணித்தியாலங்களில் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இந்த கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் ; மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் வரை அதிகரிக்கலாம்
என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கடற்தொழிலாளர்கள் மற்றும் கடல்நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வலியறுத்தப்பட்டுள்ளனர்.