Author: நலன் விரும்பி
தீபாவளியை புறக்கணித்த மக்கள்
தீபாவளியை புறக்கணித்த மக்கள்
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பொருள்களின் விலை ஏற்றம் மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், மன்னார் மாவட்டத்தில், தீபாவளி கொண்டாட்டங்களில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.
குறிப்பாக, பொருள்கள் மற்றும் ஆடைகளின் விலைகள் அதிகரித்துள்ளமையால், பொருள்களின் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.
மேலும், தொடர்ச்சியாக மன்னாரில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையால், இம்முறை தீபாவளி திருநாள் கொண்டாட்டங்களில், மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.
அதேநேரம், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கோவில்களில் சிறிய அளவிலான விசேட
வழிபாடுகள் இடம்பெற்றதுடன், மக்கள் குறைந்த அளவிலேயே கோவில்களுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்
பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சீனி, பருப்பு, பாசிப்பயறு, நெத்தலி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன்,
கடலை, கோதுமை மா, கருவாடு, தேங்காய், கோழி இறைச்சி, பால்மா மற்றும் சோளம் ஆகியவற்றின் அதிகபட்ச சில்லைறை விலைகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன.
தமிழன் இறந்த நாளை கொண்டாடும் தமிழர்கள்
தமிழன் இறந்த நாளை கொண்டாடும் தமிழர்கள்
இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் ஆகிய இரண்டு தேசிய இனங்கள் மோதல் நிலையில் இருந்து வருகின்றனர் .
ஆனால் இவர்கள் இருவரும் தீபாவளி பண்டிகையை ஒன்றாக இணைந்து கொண்டாடி
வருகின்றனர்,இது எவ்வாறு சாத்தியம் என்பதை கூட அறியாது தமிழர்கள் தமது தமிழ் அரசனை
அழித்த அதே நாளில் சிங்களவர்கள் போல கொண்டாடி வருகின்றனர்
அதற்கு ஆளும் இனவெறி அரசு தமிழர் பாடசாலைகளிற்கு விடுமுறை அளித்து ஊக்கமளித்துள்ளது குறிப்பிட தக்கது
முகமலையில் 316 ஏக்கர் காணிவிடுவிப்பாம் – இராணுவம்
முகமலையில் 316 ஏக்கர் காணி விடுவிப்பாம் – இராணுவம்
சிங்கள அரச பயங்கரவாத இராணுவத்தால் ஆக்கிரமிக்க பட்ட தமிழர் பகுதிகளில் உள்ள 316 ஏக்கர் காணியினை தாம் விடுத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
முகமாலை கிராமசேவர் பிரிவில் உள்ள காணிகள் இவ்வித விடுவிக்க பட்டுள்ளனவாம்
இந்த பகுதியில் இராணுவத்தின் முன்னரங்க வேலிகள் அமைக்க பட்டு உக்கிர சமர் இடம்பெற்ற பகுதி என்பது இங்கே குறிப்பிட தக்கது
சாமி கும்பிடட விஷால் – எதுக்கு தெரியுமா ..?
சாமி கும்பிடட விஷால் – எதுக்கு தெரியுமா ..?
தீபாவளி தினத்தில் எனிமி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், தனது வேண்டுதலை நடிகர் விஷால் நிறைவேற்றி இருக்கிறார்.
வேண்டுதலை நிறைவேற்றிய விஷால்
விஷால்
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘எனிமி’. ஆனந்த் சங்கர் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்
. இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படக்குழுவினர் புரமோஷன் பணிகளை சென்னையில் முடித்து விட்டு, ஐதராபாத்தில் பட வெளியீட்டு நிகழச்சிகளில் பங்கேற்றனர்.
விஷால்
இதற்கிடையில், நடிகர் விஷால் தன் நெடுநாள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பதி பெருமாளை தரிசிக்க சென்றுள்ளார். கடந்த வருடமே திருப்பதி சென்று கடவுளை தரிசிக்க
திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அவரால் செல்ல
முடியவில்லை. திருப்பதி சென்ற அவர் கீழ் திருப்பதியிலிருந்து மேல்திருப்பதிக்கு மலையில் நடந்தே சென்று ஏழுமலையானை தற்போது தரிசனம் செய்து இருக்கிறார்.
விஜய்சேதுபதி மீது தாக்குதல் video
விஜய்சேதுபதி மீது தாக்குதல் video
முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி மீது பெங்களூரு விமானநிலையத்தில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
பெங்களூரு விமான நிலையத்தில் விஜய்சேதுபதி மீது தாக்குதல்…. வைரலாகும் வீடியோ
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ்
படத்திற்காக டெல்லி சென்று தேசிய விருது பெற்றார். அதன்பின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில் படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்றிருக்கிறார் விஜய் சேதுபதி. அங்கு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜய்
சேதுபதியை ஒருவர் தாக்க வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
கோல்டன் விசா பெற்றார் திரிஷா
கோல்டன் விசா பெற்றார் திரிஷா
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்ற திரிஷா, முதல் தமிழ் நடிகை இந்த சலுகையை பெற்றிருப்பது சந்தோசம் அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றார் திரிஷா
திரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பர் திரிஷா. இவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள்
மற்றும் அறிவியல், அறிவு மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள சிறப்புத் திறமையாளர்கள்
கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். கோல்டன் விசா ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் மற்றும் தானாகவே புதுப்பிக்கப்படும்.
கோல்டன் விசா பெற்ற திரிஷா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டான் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ எனப் பதிவிட்டுள்ளார்.
ஷாருக் கான், போனி கபூர், அர்ஜூன் கபூர், மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான் போன்
சினிமா நட்டசத்திரங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழீழத்தை கண்ட பின்னரே நான் மரணிப்பேன் செல்லப்பா உருக்கம் – வீடியோ
தமிழீழத்தை கண்ட பின்னரே நான் மரணிப்பேன் செல்லப்பா உருக்கம் – வீடியோ
தமிழீழத்தின் தேசிய பாடல்களில் முதல்வராக விளங்கி வரும் செல்லப்பா அவர்கள்
மரணமானதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பட்டு வந்தன ,ஆனால் தற்போது அவர்
உயிருடன் உள்ளேன் என நேரலையில் தோன்றி செய்தியை வெளியிட்டுள்ளார்
தமிழீழத்தை கண்டே பின்னரே நான் மரணிப்பேன் என செல்லப்பா உருக்கம்
சாரதியை அடித்து துன்புறுத்தி நிர்வாணமாக்கிய சிங்கள பொலிஸ்
சாரதியை அடித்து துன்புறுத்தி நிர்வாணமாக்கிய சிங்கள பொலிஸ்
இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசில் சாரதி ஒருவர் கைது செய்ய பட்டு துன்புறுத்த பட்டு நிர்வாணமாக்க பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .
கடையில் கொத்துரொட்டி சண்டை – கொலையில் முடிந்த பரிதாபம்
கடையில் கொத்துரொட்டி சண்டை – கொலையில் முடிந்த பரிதாபம்
இலங்கை பத்தேகம- நாகொட பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் கொத்துரொட்டி சாப்பிட வந்த வாலிபனுக்கும் அந்த கடை உரிமையாளருக்கும் இடையில்இடம்பெற்ற சண்டையில் உணவு அருந்த வந்த வாலிபர் அடித்து கொலை செய்ய பட்டுள்ளார்
இந்த சம்பவத்தில் கொட்டல் உரிமையாளரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
வேகமாக பரவும் நோய் – மக்களுக்கு எச்சரிக்கை
வேகமாக பரவும் நோய் – மக்களுக்கு எச்சரிக்கை
கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் குறிப்பாக ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இருந்து வயிற்றோட்டம் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சிறுவர்கள் மாத்திரம் இன்றி பெரியவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இது தொடர்பில் அவதானம் தேவை என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட
விரிவுரையாளரும் மட்டு. போதனா வைத்தியசாலையின் விசேட குழந்தை நல வைத்திய நிபுணருமான டொக்டர் விஜி திருக்குமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்: “இதன் அறிகுறிகளாக காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றோட்டம்
காணப்படும். சில சமயம் இரத்தம் கலந்த சளியுடன் வயிற்றோட்டம் காணப்படும். இது ஒருவகை பற்றீரியா தொற்றினால் ஏற்படுகிறது.
“சில சமயம் வயிற்றோட்டம் இல்லாமல் அல்லது குறைவான வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிறு ஊதுதல் போன்ற குணங்குறிகளுடன் தோன்றலாம்.
“சிறுவர்கள், உணவு மற்றும் நீர் அருந்துவது குறைவாகவும் நீர் இழப்பு அதிகமாகவும் இருப்பதால் சோர்வு மற்றும் மயக்க நிலை ஏற்படும்.
“எனவே, இவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுவது அவசியம்.
“மேலும், கொரோனா தொற்றின் பின் சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற Miss-C எனப்படும் பல்தொகுதி அழற்சி நோய் நிலையின் போதும் காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகள்
தோன்றும். எனவே, உங்கள் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு காணப்படுமாயின் விரைவாக வைத்தியசாலையை நாடுதல் சாலச்சிறந்தது” என்றார்
வீடு பெற்றுத்தருவகக மோசடி புரிந்த நபர் கைது
வீடு பெற்றுத்தருவகக மோசடி புரிந்த நபர் கைது
இலங்கையில் அரச வீடுகளை பெற்று தருவதாக கூறி மக்களிடம் பணமோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் காவல்துறையினரால கைது செய்ய பட்டுள்ளார்
பாதிக்க பட்டடவர்கள் மக்களுக்கு வழங்கிய தகவலை அடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது
குறிப்பிட தக்கது
வடக்கு தமிழர்களுக்கு இந்தியா உதவும் என அறிவிப்பு
வடக்கு தமிழர்களுக்கு இந்தியா உதவும் என அறிவிப்பு
போரினால் பாதிக்க பட்ட வடக்கு தமிழர்களுக்கு இந்திய மாபெரும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறை படுத்தி உதவும் என இந்தியா தூதர் யாழில் தெரிவித்துள்ளார்
வடபகுதியின் புதிய ஆளுனருடன் இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளது
செல்லப்பா மரணமானதாக போலியான செய்தி பரப்பல் – குடும்பத்தினர் கவலை
செல்லப்பா மரணமானதாக போலியான செய்தி பரப்பல் – குடும்பத்தினர் கவலை
தமிழத்தின் தேசிய குரலாக ஒலித்து வரும் பாசறைப்பானார் செல்லப்பா அவர்கள்
மரணமானதாக போலியான செய்திகள் பரப்ப பட்டு வருகின்றன
அவர் உடல் நலம் குன்றி இருந்தமைஉண்மை தான் ஆனால் தற்போது அல்ல எனவும் ,வேண்டும்
என விஷமிகள் திட்டமிட்டு இவ்வாறான செய்திகள் பரப்ப பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் நமக்கு
தெரிவித்தனர்
நலமுடன் ஐயா அவர்கள் உள்ளது மிக பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,விரைவில் பல
பாடல்களை அவர் நமக்கு வழங்குவார் என எதிர்பார்க்கலாம்
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் படைத்த சாதனை
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் படைத்த சாதனை
முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் படைத்த சாதனை
டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன்
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். பிரியங்கா மோகன்
ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் வினய், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா, தீபா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
திரையரங்குகளில் வெளியான இப்படம் 25வது நாளை எட்டியுள்ளது. அதே சமயம் இப்படம் தியேட்டரில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக படக்குழுவினர்
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
தொழில் தொடங்கினார் வனிதா
தொழில் தொடங்கினார் வனிதா
நடிகை வனிதா விஜயகுமார் கைவசம் ‘அனல் காற்று’, ‘2 கே அழகானது காதல்’, ‘அந்தகன்’, ‘அநீதி’, ‘பிக்கப் டிராப்’ போன்ற படங்கள் உள்ளன.
புதிதாக தொழில் தொடங்கினார் வனிதா
வனிதா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-
வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில மாதங்களிலேயே அவரை குடிகாரர்
என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். இதையடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
வனிதா
இவர் கைவசம் ‘அனல் காற்று’, ‘2 கே அழகானது காதல்’, ‘அந்தகன்’, ‘அநீதி’, ‘பிக்கப் டிராப்’ போன்ற படங்கள் உள்ளன.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் வனிதா, தற்போது புதிதாக தொழில் தொடங்கி உள்ளார். பெண்களுக்கான ஆடை, அணிகலன்கள், அழகுசாதன பொருட்கள் ஆகியவற்றை
உள்ளடக்கிய கடையை அவர் புதிதாக திறந்துள்ளார். இதையறிந்த ரசிகர்கள் வனிதாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
வேதாளம் ரீமேக்கில் இணைந்த தமன்னா
வேதாளம் ரீமேக்கில் இணைந்த தமன்னா
தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் தற்போது ‘போலா ஷங்கர்’ என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.
வேதாளம் ரீமேக்கில் இணைந்த தமன்னா
தமன்னா
சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘வேதாளம்’. இப்படம்
தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘போலா ஷங்கர்’ என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தில் இணைந்து நடித்திருந்த
தமன்னா, தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 11-ந் தேதி பூஜையுடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இலங்கை தமிழர்களுக்கு,இந்தியாவில் வாழ்விடம்
இலங்கை தமிழர்களுக்கு,இந்தியாவில் வாழ்விடம்
இலங்கை தமிழர்களுக்கு 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய
முதலமைச்சர் ஸ்டாலின், ‘தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான்,’ எனப் பேசியுள்ளார்.
வேலூர் மாவட்டம் மேல் மொணவூரில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.142 கோடி செலவில் 3,510
வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:
ஒவ்வொரு முறை திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பேற்றதும் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி
தி.மு.க., தான். கடந்த 10 ஆண்டுகளாக அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம் இலங்கை தமிழர்களுக்காக எந்த திட்டங்களையும் செய்யவில்லை.
இலங்கை தமிழர் நல வாழ்வு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசாங்கமே ஏற்கும்.
தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான்; நாம் அனைவரும் தமிழினத்தை
சேர்ந்தவர்கள், கடல் தான் நம்மை பிரிக்கிறது. இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் மேலும் தொடரும். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல.
தி.மு.க., அரசாங்கம் இலங்கை தமிழர்களுக்கு என்றைக்கும் துணை நிற்கும். என்னை உங்களின் உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்..
பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில்
பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில்
சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைய இராணுவத்தினரால் 3 ஆவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் தேசிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் நேற்று (01) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முன்னனி சுகாதாரத்துறை ஊழியர்கள் உட்பட முப்படை, பொலிஸார், சுகாதார மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் தெரிவுசெய்யப்பட்ட ஏனைய முன்கள ஊழியர்களும் இத்திட்டத்தில் இணைத்து கொள்ளவுள்ளனர்.
இத்திட்டம் நேற்று காலை பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சுற்றுலா, விமான நிலையம் மற்றும் ஏனைய துறைகளில் தொற்று நோய் தடுப்பு பணிக்காக முன்னணியிலிருந்து பணிபுரியும் அனைவருக்கும் வழங்கப்படும் என்று பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
ஆறு மாதங்களுக்குப் முன்பாக தடுப்பூசிகள் இரண்டினையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க முடியும் என்றும், தற்போதும் நாளாந்தம் 500 – 600 வரையான தொற்றாளர்கள் கண்டறியப்படும் அதேவேளை சுமார் 14,000 வரை தனிமைப்படுத்தலில் உள்ளமையால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியிலும் பொதுமக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார்.
பூஸ்டர் தடுப்பூசிகளாக பைஸர் தடுப்பூசியை தொற்று நோய் பரவல் தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் முன்னணி பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற ஒழுங்கில் வழங்க தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறால் வளர்ப்பாளர்களுக்கு கடன் சலுகை
இறால் வளர்ப்பாளர்களுக்கு கடன் சலுகை
இரால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் வனமி இறால் வளர்ப்பாளர்களை ஊக்குவிப்பதற்கு கடன் சலுகை திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வனமி இறால் வளர்ப்பாளர்களை ஊக்குவிப்பதற்கு தேவையான மூலதனங்களை வழங்குவதற்காக அரச வங்கிகள் மூலம் சலுகை ரீதியான கடன் முறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
இது தொடர்பாக 01.11.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
- இறால் பண்ணை வளர்ப்பை ஊக்குவிப்பதன் மூலம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கிலான கடன் சலுகை முறையொன்றை நடைமுறைப்படுத்தல்
2020 ஆம் ஆண்டில் 8,000 மெட்ரிக்தொன் அளவிலான எமது நாட்டு இறால் உற்பத்தியை 2025 ஆம் ஆண்டளவில் 50,000 மெட்ரிக்தொன்களாக அதிகரிப்பதற்கு இலங்கை தேசிய நீரியல் வேளாண்மை அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இறால்
வளர்ப்பை அதிகரிக்கும் நோக்கில் வனமி இறால் வளர்ப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இறால் அதிக வளர்ச்சி வேகத்துடன் கூடிய, நோயால் பீடிக்கப்படும் தன்மை குறைவான, சிறிய தடாகங்களில் வளர்க்கும் போது அதிக அடர்த்தியாக விடக்கூடியதாக இருப்பதால் அதிகளவிலான
அறுவடையைப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை காணப்படுகின்றது. குறித்த இறால் வகை ஒரு வருடத்தில் மூன்று போகங்கள் வளர்ப்பை மேற்கொள்வதற்கு இயலும். ஆனாலும் அடர்த்தியுடன் வளர்ப்பை மேற்கொள்வதற்காகவும், ஆகவே அதிகளவில் தடாகத்தில் சேர்கின்ற
கனிமக்கழிவுகளை அகற்றுவதற்கான வசதிகளை வழங்குவதற்காக வளர்ப்புக்காக பயன்படுத்தப்படும் வழக்கமான சேற்றுத் தடாகம் அதிக அடர்த்தியுடன் கூடிய பொலிஎத்தலீன் பயன்படுத்தப்படும் நவீனப்படுத்தல் அவசியமாகும். மேலும், அதற்குச் சமாந்தரமாக, அதிகரிக்கும்
இறால் அறுவடைகளை ஏற்றுமதிக்கான களஞ்சியப்படுத்தல் வசதிகள், அதன் மூலம் பெறுமதிசேர் உற்பத்திகளை பதனிடுவதற்காக இறால் பதினிடல் நிலையத்தின் இயலளவை அதிகரிப்பதற்கும், அவற்றை புதிய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி நவீனமயப்படுத்த வேண்டிய தேவையும்
உள்ளது. அதற்கமைய, வனமி இறால் வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தேவையான மூலதனங்களை வழங்குவதற்காக அரச வங்கிகள் மூலம் சலுகை ரீதியான கடன் முறைகளை
நடைமுறைப்படுத்துவதற்காக கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.












