Posted in சினிமா

அந்த நடிகருக்கு ஜோடியான ஸ்ருதிஹாசன்

அந்த நடிகருக்கு ஜோடியான ஸ்ருதிஹாசன்

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஸ்ருதிஹாசன் அடுத்ததாக வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

வயதான நடிகருக்கு ஜோடியான ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்


பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக ‘லாபம்’ திரைப்படம் வெளியானது. தற்போது பிரபாஸுடன் இணைந்து சலார் படத்தில் ஸ்ருதிஹாசன்

நடித்துள்ளார். இப்படத்தை அடுத்து பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கோபிசந்த் மாலினேனி இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று

வருகிறது. தற்போது இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன் – பாலகிருஷ்ணா

முன்னதாக, கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் வெளியான ‘க்ராக்’ படத்தின் நாயகியாகவும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    Posted in சினிமா

    2 நாளில் 100 கோடி வசூல் செய்த அண்ணாத்த

    2 நாளில் 100 கோடி வசூல் செய்த அண்ணாத்த

    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’அண்ணாத்த’ திரைப்படம் இரண்டு நாளில் எத்தனை கோடி ரூபாய் வசூல் செய்தது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

    அண்ணாத்த படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
    அண்ணாத்த


    ‘தர்பார்’ படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர்

    நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு படம் கடந்த 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

    ரஜினி

    அண்ணன் தங்கை பாசத்தை கொண்ட ‘அண்ணாத்த’ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில், அண்ணாத்த படம் உலகம் முழுக்க 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்

    செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க வெளியான முதல் நாளில் 70 கோடி

    ரூபாயும், இரண்டாம் நாளில் 42 கோடி ரூபாயும், மொத்தம் இதுவரை 112 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் இருந்து பிரான்ஸுக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

      இலங்கையில் இருந்து பிரான்ஸுக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

      இலங்கை கொழுப்பு விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் பரிசுக்கு நேரடி விமான சேவை ஒன்றை


      Air France விமான சேவை ஆரம்பித்துள்ளது

      இந்த சேவைகள் ஆரம்பிக்க படுவதால் பயணிகள் குஷியில் உறைந்துள்ளனர் ,


      நேரடி விமான சேவைகள் பலது தடுக்க பட்ட நிலையில் மீள சேவை ஆரம்பிக்க பட்டுள்ளதால்

      இலங்கையின் உல்லாச துறையில் பாரிய தாக்கத்தை இது ஏற்படுத்து என கூற படுகிறது

        Posted in Uncategorized

        அமெரிக்கா பறக்கும் கூட்டமைப்பு – அவசர அழைப்பு ஏன் ..?

        அமெரிக்கா பறக்கும் கூட்டமைப்பு – அவசர அழைப்பு ஏன் ..?

        இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று அமெரிக்காவிற்கு பயணமாகிறது ,இந்த

        பயணத்தின் பொழுது


        இலங்கை தமிழர் தொட்ரபில் பேச படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது


        அமெரிக்காவின் அழைப்பினை ஏற்று இவர்கள் பயணமாவது ஆளும் ஆட்சியாளர்களுக்கு

        கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் – அமெரிக்கா கொதிப்பு

          இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் – அமெரிக்கா கொதிப்பு

          இலங்கையில் சீனா இராணுவத்தின் பெரும் இராணுவ தளம் ஒன்றை அமைத்து வருவதாக
          அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது

          அதற்க்கான அணைத்து நகர்வுகளையு சீனா முடுக்கி விட்டுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது
          இத்தகையை சீனாவின் நிலைப்பாடு இலங்கைக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்கும் என எதிர் பார்க்க படுகிறது

          அம்பாந்தோட்டை துறைமுகஹை தமது கையக படுத்தியசீனா அது தனது நாடு போன்று உருவாக்காகி வருகிறது
          குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது ஊசி

            60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது ஊசி

            இலங்கையில் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்

            மூன்றாவது தடுப்பூசி செலுத்த படவுள்ளது என அறிவிக்க பட்டுள்ளது


            பரவி வரும் நோயின் பரவலை தடுக்கவும் ,உயிர்களை காப்பாற்றவும் இந்த நடவடிக்கை

            முன்னெடுக்க பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 13,821 பேர் மரணம்

              இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 13,821 பேர் மரணம்

              இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இது வரை
              13,821 பேர் மரணமாகியுள்ளனர்

              மேலும் 544,013 பேர் பாதிக்க பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

              Posted in சினிமா

              இணையத்தில் வெளியான அண்ணாத்த… படக்குழுவினர் அதிர்ச்சி

              இணையத்தில் வெளியான அண்ணாத்த… படக்குழுவினர் அதிர்ச்சி

              சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் அண்ணாத்த திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

              இணையத்தில் வெளியான அண்ணாத்த… படக்குழுவினர் அதிர்ச்சி
              அண்ணாத்த


              ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று

              வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தார்கள்.

              அண்ணாத்த

              இந்நிலையில் அண்ணாத்த திரைப்படம் வெளியான சில மணி நேரத்திலேயே தமிழ்ராக்கர்ஸ், மூவிரூல்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக

              வெளியாகியுள்ளது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு

              அண்ணாத்த படத்தை திருட்டு தனமாக இணையத்தில் வெளியிட உயர்நீதி மன்றம் தடை விதித்தது. தற்போது தடையை மீறி இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

              Posted in Uncategorized சினிமா

              விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள வாலிபர் கைது

              விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள வாலிபர் கைது

              நடிகர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள வாலிபரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

              விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள வாலிபர் கைது
              விஜய் சேதுபதி – விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை வாலிபர் தாக்க முயன்ற காட்சி
              தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.

              நடிகர் விஜய் சேதுபதி நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமானத்தில் சென்றார்.

              விமான நிலையத்தில் அவரும், உதவியாளரும் சென்றபோது, வாலிபர் ஒருவர் திடீரென அவரை தாக்க முயன்றார். உடனே விஜய் சேதுபதியின் பாதுகாவலர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அந்த வாலிபரை பாய்ந்து சென்று பிடித்தனர்.

              பின்னர் அவர்கள் விஜய் சேதுபதியை அங்கிருந்து மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

              அவர் போலீசாரிடம் கூறும்போது, விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை கண்டதும் அவருடன் செல்ஃபி எடுக்க விரும்பியதாகவும், தான் குடிபோதையில் இருந்ததால், அதற்கு உதவியாளர் மறுத்ததாகவும் கூறினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விஜய்சேதுபதியின் உதவியாளரை தாக்க முயன்றதாகவும் கூறினார்.

              மேலும் அந்த வாலிபர் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.

              இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் வாலிபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ காட்சிகளை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். சிறிது நேரத்தில் அந்த வீடியோ வைரலானது. அதனை பார்த்தவர்கள் விஜய் சேதுபதியை வாலிபர் தாக்கியது ஏன்? இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்றும் கேள்விகள் எழுப்பினர்.

              இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் வாலிபர் தாக்க முயன்ற வீடியோ உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. அவர்கள் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க பெங்களூரு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

              அதன்படி பெங்களூரு போலீசார் தாமாக முன்வந்து சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற வாலிபரை கண்டுபிடித்தனர். அவர் கேரளாவைச் சேர்ந்த ஜான்சன் என தெரியவந்தது. தற்போது பெங்களூருவில் வசித்து வரும் ஜான்சன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

                Posted in சினிமா

                காதலருடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதிஹாசன்.

                காதலருடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதிஹாசன்.

                லாபம் படத்தை தொடர்ந்து சலார் படத்தில் நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன், தனது காதலருடன் சேர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாடி இருக்கிறார்.

                காதலருடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதிஹாசன்.. வைரலாகும் புகைப்படம்
                ஸ்ருதிஹாசன்


                நடிகை ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக ’ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து 3, பூஜை, புலி, வேதாளம் ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் விஜய்

                சேதுபதியுடன் நடித்த ‘லாபம்’ திரைப்படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓட வில்லை. தற்போது சலார் படத்தில் நடித்து வருகிறார்.

                ஸ்ருதிஹாசன்

                ஸ்ருதி ஹாசன் தற்போது மும்பையை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக மும்பையில் வாழ்ந்து வருகின்றனர். தனது காதலருடன்

                ஜோடியாக தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  தீபாவளிக் தினத்தில் 28 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணம் கொள்ளை!

                  தீபாவளிக் தினத்தில் 28 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணம் கொள்ளை!

                  தீபாவளிக்கு வீட்டை பூட்டிவிட்டு ஆலையத்துக்கு சென்று வழிபட்டுவிட்டு வீடுதிரும்பிய போது பூட்டியவீட்டை கொள்ளையர்கள் உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்கள், உட்பட

                  28 இலச்சம் ரூபா பெறுமதியானவற்றை கொள்ளையிட்ட சம்பவம் நேற்று (04) மட்டு. ஏறாவூர்

                  பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

                  மைலம்பாவெளி பிரதான வீதியிலுள்ள குறித்த வீட்டின் உரிமையாள் உட்பட 4 பேர் வசித்துவந்துள்ள நிலையில் சம்பவதினமான தீபாவளி தினத்தையிட்டு காலை 11 மணி அளவில்

                  வீட்டை பூட்டிவிட்டு பிள்ளைகளுடன் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு மதியம் 1 மணி அளவில் வீடுதிரும்பிய போது பூட்டியிருந்த வீட்டின் முன்கதவு மற்றும் அறை கதவு உடைத்து அறையில்

                  இருந்த அலுமாரியை உடைத்து அங்கிருந்த 6 இலச்சம் ரூபா பணம் மற்றும் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தார்.

                  இதனை அடுத்து பொலிஸார் மேப்ப நாய் மற்றும் தடவியல் பிரிவு பொலிஸாரை வரவழைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    பொல்லால் அடித்து பெண் ஒருவ படு கொலை

                    பொல்லால் அடித்து பெண் ஒருவ படு கொலை

                    வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

                    இச் சம்பவம் நேற்று (04.11.2021) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

                    அயல் குடும்பத்திற்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட சண்டையை விலக்குவதற்கு சென்ற தாயே இவ்வாறு பொல்லால் அடிப்பட்டு இறந்துள்ளார்.

                    இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி வயது 57 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                    சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

                    உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

                    ஹட்டன் நீதிமன்றத்தின் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

                    கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

                    இச்சம்பவம் குறித்து அட்டன் கைரேகை அடையாள பிரிவு மற்றும் வட்டவளை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தயாராகும் ஆசிரியர்கள்

                      பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தயாராகும் ஆசிரியர்கள்

                      அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

                      அதிபர் – ஆசிரியர்கள் சங்கங்களினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என குறித்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

                      எமது அனைத்து போராட்டங்களும் ஒன்றிணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      ஹிட்லரை போல மகிந்தாவும் சாவார் – ரஜனி

                      ஹிட்லரை போல மகிந்தாவும் சாவார் – ரஜனி

                      தீபாவளி தினத்தன்று ரஜனி நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியாகியுள்ளது
                      இதில் ரஜனி அரசியல் தலைவர்களை இலக்கு வைத்து பேசுவது வழமை


                      அதில் ஹிட்லர் ,முசோலின் ,இடிஅமீன் போல நீயும் சாவாய் என்கிறார் ,அது இலங்கையில் பெரும் தமிழ் இனப்படுகொலைகளை நடத்திய மகிந்தாவுக்கு தெரிவிக்க பட்ட சொல்லாக உள்ளது

                      இதே ரஜனி இலங்கை சென்று மகிந்தாவுடன் குலாவி வந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        கொரனோவுக்கு இலங்கையில் 15 பேர் மரணம்

                        கொரனோவுக்கு இலங்கையில் 15 பேர் மரணம்

                        இலங்கையில் நேற்றைய (03) தினம் மேலும் 15 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

                        சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல்

                        திணைக்களம் இன்று (04) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

                          Posted in இலங்கை செய்திகள்

                          மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

                          மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

                          நாட்டில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

                          கண்டி, நுவரெலியா. மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறைஇ காலி மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இததொடர்பில் அவதானத்துடன் செயல்பட வேண்டுமென்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

                          தற்சமயம் நிலவும் சீரற்ற காலநிலையினால் மலையக பகுதிகளில் மண்சரிவு, மண்மேடுகள் சரிவு போன்ற அனர்த்தங்கள் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

                          இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உரிய பகுதியை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வது அவசியமாகும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

                          பொலிசாரும் முப்படையினரும் மாவட்ட பிரதேச செயலகங்களும் அனர்த்த நிலையை எதிர்கொள்ள தயார் நிலையிலுள்ளன

                          Posted in சினிமா

                          புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி

                          புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி


                          தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்சேதுபதி, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

                          புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி
                          புனித் ராஜ்குமார் சமாதியில் விஜய் சேதுபதி


                          கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்

                          மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள்,

                          திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

                          இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி

                          செலுத்தினார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். மேலும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து இருக்கிறார்.

                            Posted in சினிமா

                            அண்ணாத்த படம் வெளியானது… ரசிகர்கள் கொண்டாட்டம்

                            அண்ணாத்த படம் வெளியானது… ரசிகர்கள் கொண்டாட்டம்

                            ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று காலை வெளியாகியுள்ளது.

                            அண்ணாத்த படம் வெளியானது… ரசிகர்கள் கொண்டாட்டம்
                            அண்ணாத்த படத்தில் ரஜினி


                            சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. இப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று காலை சிறப்பு காட்சிகள் வெளியானது. பல இடங்களில்

                            ரசிகர்கள் மழை என்றும் பாராமல், உற்சாகமாக வெடி வைத்து கொண்டாடினார்கள். பேனர்,

                            தாளம், நடனம் ஆடி படத்தை வரவேற்று இருக்கிறார்கள். ரசிகர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

                            சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்

                            , குஷ்பு, மீனா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ள இப்படத்தை வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              வெடித்து சிதறிய கடை – ஓடிய மக்கள்

                              வெடித்து சிதறிய கடை – ஓடிய மக்கள்

                              வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் உள்ள சிற்றூண்டிச்சாலை ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

                              சம்பவத்தில் இருவர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                              சிற்றூண்டிச்சாலையின் எரிபொருள் சிலிண்டர் வெடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                              சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                வாகனத்தால் மக்களை இடித்து கொன்ற சிறுவன்

                                வாகனத்தால் மக்களை இடித்து கொன்ற சிறுவன்


                                இன்று காலை வெலிசர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                                கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி, குறித்த சிறுவனால் செலுத்தப்பட்ட அதிசொகுசு வாகனம், வீதியை விட்டு விலகி எதிர் திசையில் பயணித்த கார், ஓட்டோ மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

                                ‍வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், இந்த விபத்து தொடர்பில் மஹபாகே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்