தீ குளித்த
Posted in Uncategorized

ஆலயத்தில் தீ குளித்த இளம் பெண் மரணம்

ஆலயத்தில் தீ குளித்த இளம் பெண் மரணம்

கொழும்பு ஆமர் வீதியிலுள்ள ஆலயமொன்றின் வருடாந்த திருவிழாவில் இடம்பெற்ற தீமிதிப்பு

நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 26 வயதுடைய தாயொருவர் தீக்காயங்களால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான அக்குருவிட்ட ஆராச்சிகே இரேஷா மதுரங்கனி என்றும் அவர் 10 வயது குழந்தையின் தாயார் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 14ஆம் திகதி இரவு இடம்பெற்ற தீமிப்பில் பங்கேற்ற அந்தப் பெண்ணின் கால்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், தீக்காயங்களுக்கு சிகிச்சைப் பெறாமல் வீட்டில் இருந்த அந்த பெண் மறுநாள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    தமிழ்க் கட்சிகளின் கடிதத்துக்கு அரசாங்கம் பதில்

    தமிழ்க் கட்சிகளின் கடிதத்துக்கு அரசாங்கம் பதில்

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்க் கட்சிகள் சில இணைந்து, கடிதமொன்றை

    தயாரித்தது. அந்தக் கடிதம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் நேற்று (18) கையளிக்கப்பட்டது.

    இந்நிலையில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், இந்தக் கடிதம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

    அந்தக் கேள்விகளுக்கு பதிலளித்துகொண்டிருக்கும் அமைச்சர் உதய கம்மன்பில,

    “ எம்முடன் பேசாமல் எங்குச் சென்று பேசினாலும் அதில் பலன் இல்லை. இந்தியாவின் ஒரு

    மாநிலம் இலங்கை இல்லை. இது தனிநாடாகும். ஆகையால், அந்தக் கடிதத்தைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை” என்றார்.

      Posted in இலங்கை செய்திகள்

      யாழில் சூறாவளி -60 பேர் பாதிப்பு

      யாழில் சூறாவளி -60 பேர் பாதிப்பு

      யாழ்ப்பாணம், கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று

      முன்தினம் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர்

      பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

      கரணவாய் பகுதியின் ஜே348 மற்றும் ஜே350 பிரிவுகளிலேயே இந்தச் சேத விவரங்கள்

      பதிவாகியுள்ள அதேவேளை, 15 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

      இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திடீரென பெய்த மழை காரணமாக 119.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      வெடி குண்டுடன் நபர் கைது

      வெடி குண்டுடன் நபர் கைது

      இலங்கை சுதர்சன மாவத்தை பகுதியில் வெடி குண்டுடன் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

      கைதானவர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

      Posted in இலங்கை செய்திகள்

      விபச்சாரம் புரிந்த 7 இளம் பெண்கள் கைது

      விபச்சாரம் புரிந்த 7 இளம் பெண்கள் கைது

      இலங்கை கல்கிசை காவல்துறை பகுதிக்குள் உடல் பயிற்சி நிலையம் என இயங்கி வந்த கட்டடம்

      ஒன்றுக்குள் இடம்பெற்று வந்த விபச்சாரம் மடக்கி பிடிக்க பட்டுள்ளது

      இந்த சுற்றி வளைப்பின் பொழுது அங்கிருந்த ஏழு இளம் பெண்கள் கைது செய்ய பட்டு நீதிமன்றில்

      நிறுத்த பட்டு;ள்ளனர்

        Posted in இலங்கை செய்திகள்

        காணமல் போன மீனவர்கள் – சடலமாக மீட்பு

        காணமல் போன மீனவர்கள் – சடலமாக மீட்பு

        இலங்கை வாகரை பகுதி மீனவர்கள் காணாமல் போயினர்


        இவ்விதம் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்க பட்டுள்ளனர்

        தொடராக இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை மக்கள் மத்தியில் பீதியை

        கிளப்பியுள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        இரு வெளிநாட்டவர் கைது

        இரு வெளிநாட்டவர் கைது

        இலங்கையில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்து இரு நையீரிய நாட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

        கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

        Posted in இலங்கை செய்திகள்

        கோட்டா உரை வெறும் குப்பை: பெசிலிடம் சம்பந்தன் பாய்ச்சல்

        கோட்டா உரை வெறும் குப்பை: பெசிலிடம் சம்பந்தன் பாய்ச்சல்

        ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் ஜனாதிபதியிடம் கூறுங்கள்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

        ஜனாதிபதியின் சகோதரரும் நிதி அமைச்சருமான பெசில் ராஜபக்சவிடம் முகத்துக்கு நேரில் காட்டத்துடன் சீறி விழுந்து கூறியிருக்கிறார் சம்பந்தன்

        9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத் தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை ஆரம்பித்து வைத்தார். அதன்பின்னர் அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பில் தகவல் வெளியிட்ட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தத் தகவலை வெளியிட்டார்.

        இது தொடர்பில் சுமந்திரன் எம்.பி. மேலும் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

        “ஜனாதிபதியின் பேச்சை செவிமடுத்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அதையொட்டி இன்று பெரும் கோபம் கொண்டார். பேச்சு முடிந்த கையோடே எழுந்து பாராளுமன்றில் பகிரங்கமாகத் தம் எதிர்ப்பை பதிவு செய்ய அவர் விரும்பினார். அதற்காக எழுந்தார். எனினும், யோசித்தவர், பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி நடக்கக் கூடாது என்பதற்காக அப்படி கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்துக் கொண்டார்.

        ஆனால், பாராளுமன்றை விட்டு வெளியே வரும்போது ‘லொபி’யில் தமக்கு முன்னால் எதிர்ப்பட்ட நிதி அமைச்சர் பெசில் ராஜபக்சவிடம் தமது கோபத்தை சம்பந்தன் ஐயா காட்டினார்.

        ‘ஜனாதிபதியின் இந்தப் பேச்சு வெறும் குப்பை. உருப்படியாக இதில் எதுவும் இல்லை. இதைப் போய் அவரிடம் சொல்லுங்கள். நான் தேநீர் உபசாரத்துக்கு வரவில்லை. வந்தால் இதை நானே அவருக்கு நேரடியாகக் கூற வேண்டியிருக்கும். அப்படி வேண்டாம் என்பதற்காகத்தான் தேநீர் உபசாரத்தையே தவிர்த்துக் கொண்டிருக்கின்றேன்.

        இந்தப் பேச்சு வெறும் குப்பை தவிர வேறு எதுவுமில்லை என்பதை நான் கூறினேன் என்பதை அவரிடம் போய்ச் சொல்லுங்கள். எங்களுடைய நாட்டின் தேசிய பிரச்சினை குறித்து ஏதும் இந்தப் பேச்சில் சொல்லப்படவில்லை.

        இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உங்களுக்கு எதுவும் சரிப்பட்டு வராது. உருப்படவே மாட்டீர்கள் என்பதை அவரிடம் போய்ச் சொல்லுங்கள்” என்று சம்பந்தன் ஐயா சீற்றத்துடன் கூறினார்.

        இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத பெசில் ராஜபக்ச விடயத்தைச் சமாளித்து, ‘தாங்க்யூ, தாங்க்யூ…!’ என்று கூறி அங்கிருந்து அகன்றார்” – என்று தகவல் வெளியிட்டார் சுமந்திரன் எம்.பி.

        வெடித்து சிதறிய பயணிகள் ரயில்
        Posted in Uncategorized

        வெடித்து சிதறிய பயணிகள் ரயில்- ரயிலோடு எரிந்த பயணிகள்

        வெடித்து சிதறிய பயணிகள் ரயில்- ரயிலோடு எரிந்த பயணிகள்

        பாகிஸ்தான் Jaffar Express பயணிகள் ரயில் மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில்

        அந்த ரயில் முற்றாக சேதமடைந்தது

        குண்டு வெடித்த பொழுது அந்த ரயில் தீயில் எரிந்துள்ளது ,இவ்வேளை அதற்குள் இருந்த பலடசின் மக்கள் எரிந்து பலியாகியுள்ளனர்

        மேலு பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் ,குறித்த குண்டு தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

          போர் ஒத்திகை
          Posted in Uncategorized

          ஈரான்,சீனா ,ரஷியா கூட்டு போர் ஒத்திகை – மிரளுமா அமெரிக்கா

          ஈரான்,சீனா ,ரஷியா கூட்டு போர் ஒத்திகை – மிரளுமா அமெரிக்கா

          மத்திய தரைக் கடல் பகுதியில் சீனா ,ஈரான் ,ரஷியா ஆகிய நாடுகள் கூட்டிணைந்து பெரும் போர்

          ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளன

          இந்த ஒத்திகை மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

          ,எனினும் இந்த கூட்டு நகர்வின் ஊடக அவை மிரண்டு விடுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

            Posted in Uncategorized

            மனித வெடிகுண்டு தாக்குதல்- 14 பேர் பலி

            மனித வெடிகுண்டு தாக்குதல்- 14 பேர் பலி

            சோமாலியா Mogadishu பகுதியில் தற்கொலை குண்டுதாரி நடத்திய திடீர் மனித வெடிகுண்டு

            தாக்குதலில் சிக்கி 14 பேர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்

            காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

            தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

              Posted in சினிமா

              சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி

              சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி

              மனைவி சமந்தாவை பிரிவதாக அறிவித்த நடிகர் நாகசைதன்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தனக்கு ஏற்ற ஜோடி அவர்தான் என்று கூறியிருக்கிறார்.

              சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி – நாக சைதன்யா
              சமந்தா – நாக சைதன்யா


              நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா விவாகரத்து அறிவிப்பு வெளியாகி நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது.

              ஆனாலும், இவர்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் பேட்டியளித்த நாகசைதன்யா விவாகரத்து என்பது இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு

              என்றும் விவாகரத்துக்கு பின் சமந்தா சந்தோசமாக இருந்தால் தனக்கும் சந்தோசம்தான் என்றும் தெரிவித்திருந்தார்.

              நாக சைதன்யா – சமந்தா

              இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘திரையில் தனக்கு சரியான ஜோடி சமந்தா தான் என்றும் அவருக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரி சரியாக ஒத்துப்போகும் என்றும்

              கூறியிருக்கிறார். மேலும் சமந்தா நடித்த ’மஜ்லி’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

                Posted in சினிமா

                தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து- கஸ்தூரி காட்டம்

                தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து- கஸ்தூரி காட்டம்


                தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்த நிலையில், பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைத் தளத்தில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

                தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து… பிரபல நடிகை கருத்து
                தனுஷ் – ஐஸ்வர்யா


                கடந்த 18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி திடீரென பிரியப்போவதாக நேற்று சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

                இது அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலக பிரபலங்களுக்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

                தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த முடிவு குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

                அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

                விவாகரத்து என்பது பெற்றோர்களுக்கு வேண்டுமானால் சரியான முடிவாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு அது ஒரு தவறான முடிவு.

                குழந்தைகளின் நலனுக்காக ஒன்றாக வாழ வேண்டும் என நமது முன்னோர்கள் சரியாக கூறி

                இருக்கிறார்கள். குடும்பத்தில் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்களுக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும் என்று கஸ்தூரி பதிவு செய்து இருக்கிறார்

                  157mph வேகத்தில் பறந்த கார்
                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  157mph வேகத்தில் பறந்த கார் – துரத்திய கார்

                  157mph வேகத்தில் பறந்த கார் – துரத்திய கார்

                  லண்டன் கென்ட் டாட்போர்ட் பகுதி வேக சாலையில் பயணித்த கார் ஒன்று சுமார் 157mph
                  வேகத்தில் பயணித்துள்ளது

                  மேற்படி காரின் வேகத்தை கண்காணித்த சாலையோர கமரா குறித்த சாரதிக்கு டிக்கட் அனுப்ப

                  பட்டுள்ளதுடன் புள்ளியும் பறிக்க பட்டுள்ளது

                  இந்த வருடத்தில் குறித்த பகுதியில் பயணித்த ஐந்தாவது வேகமாக ஓடிய கார் இதுவாக பதிய

                  பெற்றுள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    தந்தை முன் நீரில் அடித்து செல்ல பட்ட மகன் – கண்ணீரில் குடும்பம்

                    தந்தை முன் நீரில் அடித்து செல்ல பட்ட மகன் – கண்ணீரில் குடும்பம்

                    இலங்கை பாணந்துறை பகுதியில் தந்தையுடன் நீராட சென்ற மகன் ஒருவர் ஓடை ஒன்றில் தவறி விழுந்து நீரில் அடித்து செல்ல பட்டுள்ளார்

                    நீரில் அடித்து செல்ல பட்ட இவரது சடலத்தை மீட்கும் பணியில் போலீசார் ,மற்றும் சுழியோடிகள் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

                    இதுவரை சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை – 5தாவது கொரனோ பரவும் அபாயம்

                      இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை – 5தாவது கொரனோ பரவும் அபாயம்

                      இலங்கையில் ஐந்தாவது கொரனோ அலை உருவாகும் அபாயம் உள்ளதாக அரச அதிகாரிகள்

                      எச்சரித்துள்ளனர்

                      மேலும் இந்த நோயின் பரவலை தடுக்க மக்கள் சுகாதர விதிமுறைகளை பின்பற்றி செயல் பட வேண்டும் என வேண்ட பட்டுள்ளது

                      மக்கள் நடைமுறை விதிகளை மீறி அலட்சியமாக செயல் படுவதால் இம்முறை உயிரிழப்பு

                      அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                        மின்சார பணம் செலுத்தாத மக்கள்
                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

                        இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

                        இலங்கை மின்சார சபை ஊழியர்கள் திட்டமிட்ட படி இன்று சுகவீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

                        சம்பள உயர்வு கோரி வந்த போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது

                        நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து செல்லும் நிலையில் இவ்வாறான

                        போராட்டங்களும் தொடராக
                        இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி

                        லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி

                        எல்பிட்டி பகுதியில் பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்று மோட்டர் சைக்கிள் ஒன்றுடன்

                        மோதியதில் அந்த வண்டியை ஒட்டி சென்ற 21 வயது மகனும் ,47 வயது தாயும் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்

                        விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி தப்பி ஓடிய நிலையில் தற்போது கைது செய்ய பட்டு நீதி

                        மன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

                        Posted in இலங்கை செய்திகள்

                        மகிந்தவுடன் ஆளும் கட்சி எம்பிக்கள் திடீர் சந்திப்பு

                        மகிந்தவுடன் ஆளும் கட்சி எம்பிக்கள் திடீர் சந்திப்பு

                        இன்று இலங்கை பாராளுமன்றில் பிரதமர் மகிந்தவுடன் ஆளும்கட்சி எம்பிக்கள் விசேட சந்திப்பு

                        ஒன்றை நடத்துகின்றனர்

                        இந்த சந்திப்பில் முக்கிய விடயங்கள் விவாதிக்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                          கொட்டல் அறைகள்
                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் கொட்டல் அறைகள் வாடகை திடீர் அதிகரிப்பு

                          இலங்கையில் கொட்டல் அறைகள் வாடகை திடீர் அதிகரிப்பு

                          இலங்கையில் கொட்டல் அறைகளின் விலையில் திடீர் அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது

                          மூன்றாம் கொரனோ அலையின் பின்னர் இலங்கைக்கு நாள் தோறும் மூவாயிரம் உல்லாச

                          பயணிகள் வந்தடைகின்றனர் ,இதனால் இந்த கொட்டல் அறைகள் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது