Tag: தனுஷ் – ஐஸ்வர்யா
மனைவி ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்
.மனைவி ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்
தனுஷ்-ஐஸ்வர்யா இருவரின் திருமண வாழ்க்கை பிரிவிற்கு பிறகு தனுஷ், ஐஸ்வர்யாவை வாழ்த்திய விதத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்… ரசிகர்கள் அதிர்ச்சி
தனுஷ் – ஐஸ்வர்யா
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தற்போது ‘பயணி’ என்ற இசை ஆல்பம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த இசை ஆல்பம் தமிழில் ‘பயணி’, தெலுங்கில் ‘சஞ்சாரி’, மலையாளத்தில் ‘யாத்ரக்காரன்’, இந்தியில் ‘முசாபிர்’ என்ற பெயரில் தயாராகி உள்ளது.
இந்த ‘பயணி’ இசை ஆல்பத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் வரிகள் எழுதியுள்ளார். இந்த பாடலை நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த
தனுஷ்- ஐஸ்வர்யா, கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை
முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பயணி இசை ஆல்பத்தை பகிர்ந்து, ஐஸ்வர்யாவை தோழி என குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து
தெரிவித்தார். இந்நிலையில், தனது இசை ஆல்பத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த தனுஷுக்கு,
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து- கஸ்தூரி காட்டம்
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து- கஸ்தூரி காட்டம்
தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்த நிலையில், பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைத் தளத்தில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து… பிரபல நடிகை கருத்து
தனுஷ் – ஐஸ்வர்யா
கடந்த 18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி திடீரென பிரியப்போவதாக நேற்று சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
இது அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலக பிரபலங்களுக்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த முடிவு குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
விவாகரத்து என்பது பெற்றோர்களுக்கு வேண்டுமானால் சரியான முடிவாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு அது ஒரு தவறான முடிவு.
குழந்தைகளின் நலனுக்காக ஒன்றாக வாழ வேண்டும் என நமது முன்னோர்கள் சரியாக கூறி
இருக்கிறார்கள். குடும்பத்தில் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்களுக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும் என்று கஸ்தூரி பதிவு செய்து இருக்கிறார்






