பரவச மாத்திரைகள்
Posted in இலங்கை செய்திகள்

கொலண்டில் இருந்து பொதியில் வந்த 4000 பரவச மாத்திரைகள்

கொலண்டில் இருந்து பொதியில் வந்த 4000 பரவச மாத்திரைகள்

நெதர்லாந்து நாட்டில் இருந்து பொதி ஒன்றினுள் அடைத்தவாறு சுமார் 4000 பரவச மாத்திரைகள் இலங்கை வந்தடைந்துள்ளது

இலங்கை சுங்க பிரிவினர் நடத்திய சோதனையில் மேற்படி மாத்திரைகள் சிக்கின ,இதன் மொத்த விலை சுமார் 26 மில்லியன் ரூபாய்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

யாழில் உள்ள முகவரி ஒன்றுக்கு இந்த பொதி வந்தடைந்துள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது

வெள்ளவத்தையில் இருந்து சுங்க பிரிவிற்கு வருகை தந்த நபர் ஒருவர் குறித்த பொதியை பெற்றபோது அவர் கைது செய்ய பட்டுள்ளார்

    மின்சார பணம் செலுத்தாத மக்கள்
    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் 44 மில்லியன் மின்சார பணம் செலுத்தாத மக்கள்

    இலங்கையில் 44 மில்லியன் மின்சார பணம் செலுத்தாத மக்கள்

    இலங்கையில் தொடரும் மின்வெட்டுக்கு இடையில் அந்த மின்சாரத்தை பயன்படுத்தி வந்த மக்கள்

    ,பயனாளர்கள்,தமது பயன்பாட்டு மின்சார பணத்தை செலுத்தாமை உள்ளதாக மின்சார வாரியம்

    தெரிவித்துள்ளது

    இவ்விதம் 44 மில்லியன் ரூபாய்கள் செலுத்த படாது உள்ளதாகவும் விரைவில் இவற்றை பெற்றுவிட நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    அதிவேக சாலை
    Posted in இலங்கை செய்திகள்

    புதிய அதிவேக சாலை திறப்பு – குஷியில் மக்கள்

    புதிய அதவேக சாலை திறப்பு – குஷியில் மக்கள்

    மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி பொதுப் போக்குவரத்திற்காக எதிர்வரும் 20ம் திகதி திறக்கப்படும்.

    முதல் கட்டத்தில் கண்டி – கொழும்பு மற்றும் கொழும்பு – குருநாகல் பஸ் வண்டிகளுக்கு பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும்


    . இதேவேளை, நேற்று முன்தினம் நள்ளிரவிலிருந்து நேற்று நண்பகல் வரை குறித்த வீதியில் பயணித்த வாகனங்களுக்கு எந்தவொரு கட்டணமும் அறவிடப்படவில்லை.

      Posted in சினிமா

      மனைவியை விவகாரத்து செய்தார் -தனுஷ் – அதிர்ச்சியில் ரஜனி

      மனைவியை விவகாரத்து செய்தார் -தனுஷ் – அதிர்ச்சியில் ரஜனி

      தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

      மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்தார் தனுஷ்
      ஐஸ்வர்யா – தனுஷ்


      தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த கடந்த 2004ம் ஆண்டு

      நவம்பர் 18ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விட ஒரு வயது மூத்தவர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

      இந்நிலையில், மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 18 வருடங்களாக நண்பர், தம்பதி, பெற்றோர் மற்றும் நலம் விரும்பியாக நாங்க இருந்து

      இருக்கிறோம். எங்கள் வாழ்க்கை பயணம் பல புரிதல்களோடு நெடுந்தூர பயணமாக இருந்தது.

      இன்று முதல் எங்களுடைய பயணம் வெவ்வேறாக இருக்க முடிவு செய்து இருக்கிறோம். நானும்

      ஐஸ்வர்யாவும் சேர்ந்து முடிவு எடுத்து இருக்கிறோம். எங்கள் முடிவுக்கு மரியாதை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று பதிவு செய்துள்ளார்.

        விஜய் - பிரியங்கா சோப்ரா
        Posted in சினிமா

        விஜய் கற்றுக் கொடுத்ததை இப்போதும் பின்பற்றுகிறேன் – பிரபல நடிகை

        விஜய் கற்றுக் கொடுத்ததை இப்போதும் பின்பற்றுகிறேன் – பிரபல நடிகை

        முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் நடித்த பிரபல நடிகை ஒருவர், அவரிடம் கற்றுக் கொண்ட பழக்கத்தை தற்போதும் பின்பற்றுவதாக கூறி இருக்கிறார்.

        விஜய் கற்றுக் கொடுத்ததை இப்போதும் பின்பற்றுகிறேன் – பிரபல நடிகை
        விஜய்


        விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் உலக அழகி பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு பாலிவுட் சென்றவர் நிரந்தரமாக அங்கேயே தங்கி விட்டார். ஆனால்

        விஜய்யிடம் தான் கற்ற பழக்கம் ஒன்றை இப்போது வரை கடைபிடித்து வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.

        விஜய் – பிரியங்கா சோப்ரா

        இதுபற்றி பிரியங்கா சோப்ரா கூறும்போது, “தமிழன் படத்தில் நடித்தபோது சினிமா பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒவ்வொரு காட்சி முடிந்தாலும் கூட கேரவன் பக்கமே போகாமல்

        செட்டிலேயே அமர்ந்திருப்பார் விஜய். அப்போது அவரிடம் நான் கண்டு வியந்த அந்த பழக்கத்தை இப்போதுவரை கடைபிடித்து வருகிறேன். படக்குழுவினரே வந்து அடுத்த காட்சிக்கு இன்னும் அதிக

        நேரம் ஆகும் என்று சொன்னால் மட்டுமே கேரவனுக்கு செல்வேன். மற்றபடி படப்பிடிப்பு தளத்தில் எதுபற்றியாவது தெரிந்து கொள்வதற்காக சுற்றிக் கொண்டே தான் இருப்பேன்” என கூறியுள்ளார்

          பிரிட்டன் கடற்படை
          Posted in Uncategorized

          பிரான்ஸ் கடல் எல்லையில் பிரிட்டன் கடற்படை விசேட ரோந்து

          பிரான்ஸ் கடல் எல்லையில் பிரிட்டன் கடற்படை விசேட ரோந்து

          பிரிட்டனுக்குள் பிரான்ஸ் கடல் வழியை பயன்படுத்தி படகு மூலம் அகதிகள் நுழைந்து வரும்

          நிலையில் அதனை தடுக்கும் முகமாக பிரிட்டன் கடற்படையினர் ரோந்து பணிகளை அதிகரித்துள்ளன

          பல நீரூந்து விசை படகுகள் இந்த விசேட பணியில் ஈடுபடுத்த படவுள்ளன

          இந்த படையினர் ஈடுபடுத்த பட்டாலும் இந்த அகதிகள் வரவை தடுத்து நிறுத்த முடியுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

          அகதிகள் விடயம் ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ள நிலையில் இந்த நகர்வுகள் முடுக்கி விட பட்டுள்ளன

            Posted in உலக செய்திகள்

            நில நடுக்கத்தில் சிக்கி 22 பேர் மரணம்

            நில நடுக்கத்தில் சிக்கி 22 பேர் மரணம்

            இன்று Afghanistan தெற்கு பகுதியில் இடம்பெற்ற திடீர் நில நடுக்கத்தில் சிக்கி இருபத்தி இரண்டு

            பேர் பலியாகியுள்ளனர்

            மேலேயும் உடைமைகள் பல சேதமடைந்துள்ளன

            பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

              விமானங்கள் திடீர் இரத்து
              Posted in Uncategorized

              அமெரிக்காவில் 270 விமானங்கள் திடீர் இரத்து – பயணிகள் அவதி

              அமெரிக்காவில் 270 விமானங்கள் திடீர் இரத்து – பயணிகள் அவதி

              அமெரிக்காவில் இடம்பெற்று வரும் பாரிய பனிமழை புயல் காரணமாக 2700 பயணிகள்

              விமானங்கள் இரத்து செய்ய பட்டுள்ளன

              மேலும் 1500 விமானங்கள் தாமதமாக தரை இறக்க பட்டன

              தொடர்ந்து சீரற்ற காலநிலை தொடர்ந்து வருவதால் மேலும் விமான பயணங்கள் தடை படலாம்

              என எதிர்பார்க்க படுகிறது

                லண்டன் Bromley போலீஸ்காரர்
                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                லண்டன் Bromley போலீஸ்காரர் 15 வயது சிறுவனுக்கு செக்ஸ் தொல்லை

                லண்டன் Bromley போலீஸ்காரர் 15 வயது சிறுவனுக்கு செக்ஸ் தொல்லை

                லண்டன் Bromley பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை ஊழியர் ஒருவர்

                15 வயது சிறுவன் ஒருவருக்கு பாலியல் செய்திகளை அனுப்பியுள்ளார்

                இந்த விடயமானது அம்பலமான நிலையில் அவர் கைது செய்ய பட்டதுடன் ,அவர் பணியில் இருந்து நீக்க பட்டுள்ள்ளார்

                நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் தற்போது பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார்
                எனினும் 33 வயதுடைய இவருக்கு எதிர் வரும் மாதம் தீர்ப்பு வழங்க படவுள்ளது ,அதில் இவர்

                சிறையில் அடைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                  Posted in இலங்கை செய்திகள்

                  திருமண வீட்டில் கழுத்து நெரித்து ஒருவர் கொலை

                  திருமண வீட்டில் கழுத்து நெரித்து ஒருவர் மரணம்

                  திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

                  திஸ்ஸமஹாராம, விரஹெல பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

                  நேற்று (16) இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட தகராறில்

                  உயிரிழந்தவரின் மூத்த மகளின் கணவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                  உயிரிழந்தவர் லுனுகம்வெஹெர, படவிகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                  சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                  சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                    ஆடு
                    Posted in இலங்கை செய்திகள்

                    தென்னையில் இருந்து தலைகீழாக இறங்கும் ஆடு video

                    தென்னையில் இருந்து தலைகீழாக இறங்கும் ஆடு video

                    ஆடு ஒன்று தென்னையில் இருந்து தலைகீழாக இறங்கும் காணொளி ஒன்று


                    வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

                    மேற்படி சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

                      செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                      Posted in இலங்கை செய்திகள்

                      வீதியில் மிதந்த மனித சடலம்

                      வீதியில் மிதந்த மனித சடலம்

                      ஹட்டன் நகருக்கு குடிநீரை விநியோகிக்கும் ஹட்டன்- சிங்கமலை குளத்திலிருந்து இன்று (17)

                      காலை ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

                      குறித்த வனப்பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், இந்த சடலத்தைக் கண்டு,

                      ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

                      எனினும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

                        ஆணுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்
                        Posted in இலங்கை செய்திகள்

                        மணிக்கூடு ஆடர் செய்தவருக்கு வந்த ஆணுறை

                        மணிக்கூடு ஆடர் செய்தவருக்கு வந்த ஆணுறை

                        இணையத்தள நிறுவனத்தில் கைக்கடிகாரம் ஒன்றையை பதிவு செய்த நபருக்கு ஆணுறைகள் இரண்டு வந்துள்ளது. இதனையால் அதிர்ச்சியடைந்த நபர், இதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் இந்த சம்பவம் கேரளாவில் இடம்பெற்றுள்ளது.

                        இன்றைய நவீன உலகில் எல்லாமே நமது விரல் நுனியில் உள்ளது. முன்பெல்லாம் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் மக்கள் குடும்பத்துடன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவார்கள்.

                        இதற்காக தனியாக ஒரு நாளையே ஒதுக்குவார்கள். இந்த காலமெல்லாம் மலையேறி போய் விட்டது. இப்போது நாம் விரும்பிய பொருளை இருக்கும் இடத்திலேயே பெற்றுக் கொள்ளும் வசதி வந்து விட்டது.

                        எங்கு இருந்து என்ன பொருள் பதிவுசெய்தாலும், அந்த பொருள் நம்மை தேடி வந்து விடுகின்றன. இதற்காக எக்கச்சக்கமான இணையத்தள நிறுவனங்கள் கொட்டி கிடக்கின்றன. ஆனால் இப்படி

                        பொருட்களை முன்கூட்டியே செய்யும்போது ஏகப்பட்ட தவறுகள் நிகழ்ந்து வருகின்றன. சில சமயங்களில் பொதிகளில் பொருட்களே இருக்காது. சில நேரம் நாம் பதிவு செய்யப்பட்ட பொருளுக்கு பதிலாக வேறு பொருள் வரும்.

                        இந்த நிலையில் கேரளாவில் இணையளத்தளத்தில் கைக்கடிகாரத்தை கொள்வனவு செய்யவிருந்த நபருக்கு வந்த பொதியில், ஆணுறைகள் இரண்டு இருந்துள்ளன.

                        கேரள மாநிலம் எர்ணாகுளம் தட்டாங்குளத்தை சேர்ந்தவர் அனில்குமார்(32). இவர் இணையளத்தளத்தில் கைக்கடிகாரம் ஒன்றை பதிவு செய்துவிட்டு, அதற்காக ரூ.2,400-ஐ

                        முன்கூட்டியே செலுத்தினார். 15 ஆம் திகதி அவரது கைக்கு கைக்கடிகாரம் வந்து சேருமென இணையளத்தள நிறுவனம் கூறி இருந்தது.

                        குறிப்பிட்ட நாளில் அந்த இணையத்தள நிறுவனத்தில் இருந்து ​ஒரு பொதி வந்துள்ளது. நமது புதிய கைக்கடிகாரம் எப்படி இருக்கிறது? என்பதை அறிவதற்காக அனில்குமார் அந்த பொதியை ஆர்வமுடன் பார்த்தார். அப்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் பொதியில் இருந்து சிறிய அட்டை பெட்டியில் 2 ஆணுறைகள்(கொண்டம்) இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

                        தண்ணீர் நிரப்பப்பட்ட நிலையில் ஒரு ஆணுறையும், மற்றொரு சாதாராண ஆணுறையாகவும் இருந்தது. அவற்றைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தே போனார். ”நான் கைக்கடிகாரம் தானே,

                        முன்பதிவு செய்தேன். எப்படி இது வந்தது?” என்று அவர் பொதியைக் கொண்டு வந்த நபரிடம் கேட்டார்.

                        அதற்கு அந்த நபர் ” இதில் எப்படி ஆணுறை (கொண்டம்) வந்தது என்று எனக்குத் தெரியாது. பொதியைக் கொண்டு சேர்ப்பது மட்டும்தான் எனது வேலை” என்று கூறினார்.

                        இதனை தொடர்ந்து அனில்குமார், கைக்கடிகாரத்தை பதிவு செய்த அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அவர்கள் உரிய பதிலை

                        அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் இதுபற்றி ஆலுவா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

                        முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார், வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          பாரிய விபத்து மூவர் மரணம்

                          பாரிய விபத்து மூவர் மரணம்

                          இலங்கை அம்பாறை பகுதியில் காரும் லொறியும் மோதி விபத்தில் சிக்கியதில்


                          சம்பவ இடத்தில மூவர் பலியாகியுள்ளனர்


                          மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்

                          குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ?

                            இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ?

                            இலங்கையில் அடையாளங்காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                            தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம இதுதொடர்பாக தெரிவிக்கையில் ,ஒமிக்ரோன் தொற்றாளர்களை அடையாளங்காண்பதற்காக நடத்தப்பட்ட

                            ஆய்வில் 85 விதமானவை ஓமிக்ரோன் தொற்றாளர்கள் என்பது உறுதி செய்யப்ட்டிருப்பதாக தெரிவித்தார்.

                            இதேவேளை கொழும்பு, காலி, மாத்தறை, கம்பஹா, கண்டி, திருகோணமலை மாவட்டங்களில் அதிகளவான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ‘கொரோனா

                            ஒமிக்ரோன் பிறழ்வு வைரஸ்’ தொற்றாளர்கள் இருக்கலாமென்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.

                            182 பேருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது அதில் 162 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டது. சுகாதார வழிமுறைகளை முறையாகப்

                            கடைப்பிடிக்குமிடத்து இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். கொழும்பு, காலி, மாத்தறை,

                            கம்பஹா, கண்டி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

                              Posted in சினிமா

                              இனிமேல் நான் வில்லிதான் – வனிதா

                              இனிமேல் நான் வில்லிதான் – வனிதா

                              விஜய்க்கு ஜோடியாக படங்களில் நடித்து பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும்

                              கவர்ந்தவர் வனிதா விஜயகுமார் இவர் சமிபத்தில் நடந்த விழாவில் பேசிய வீடியோ வைரலாக பரவிவருகிறது.

                              இனிமேல் நான் வில்லிதான் – வனிதா விஜயகுமார்
                              வனிதா விஜயகுமார்


                              பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான வனிதா விஜயகுமார் சமீபத்தில் தில்லு இருந்தா

                              போராடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசியது வைரலாக பரவி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது,

                              சினிமாவில் எனக்கு கிடைத்த இடத்தை நான் கோட்டை விட்டுவிட்டேன். முட்டாள்தனம் பண்ணி விட்டேன். இதை மிக தாமதமாக உணர்ந்தேன். இனிமேல், விட்ட இடத்தை பிடிக்கப் போகிறேன்

                              . இந்த படத்தின் டைரக்டர் முரளிதரன் என்னிடம் வந்து கதை சொன்னபோது, ‘பஞ்சாயத்து

                              பரமேஸ்வரி’ என்ற வில்லி வேடத்தில் நடிக்க முடியுமா? என்று தயங்கி தயங்கி கேட்டார். நடிக்கிறேன் என்று நான் சொன்னதும், அவர் முகம் மலர்ந்தது.

                              வில்லி வேடத்தில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தொடர்ந்து வில்லியாக நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். இந்த படத்தில் எனக்கு ‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’ என்ற வில்லி வேடம்.

                              இதற்காக மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றார்கள். எனக்கு கார் ஓட்ட தெரியும். வேகமாக ஓட்டுவேன். ஆனால், ‘பைக்’ ஓட்ட தெரியாது. படத்துக்காக புல்லட் ஓட்ட ஒரு நண்பரிடம்

                              கற்றுக்கொண்டேன். படத்தில் நான் புல்லட் ஓட்டி வரும் காட்சி, ‘பந்தா’வாக இருக்கும். உலக மகா வில்லியாக தெரிவேன்.

                              இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பேசினார்.

                                ராஜு ஜெயமோகன்
                                Posted in Uncategorized சினிமா

                                பிக்பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளர் யார் தெரியுமா?

                                பிக்பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளர் யார் தெரியுமா?

                                நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனின் வெற்றியாளர் யார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                பிக்பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளர் யார் தெரியுமா?
                                ராஜு ஜெயமோகன்


                                தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது இறுதி நாட்களை நெருங்கியுள்ளது. இதன் வெற்றியாளர் அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்ததுள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்ற

                                ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்புடன் பேசப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

                                சின்னத்திரையில் களம் இறங்கி பெரிய ரசிகர்களை கவர்ந்த ராஜு, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். இவர் அந்த வீட்டின் டப் காம்பட்டீட்டராக இருந்து வந்தார். இந்த சீசனில் வெற்றி

                                பெற்றது ராஜு என்று கூறப்படுகிறது. தொகுப்பாளராக பணியாற்றி பெரிய ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா 2வது இடத்தை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

                                3வது இடத்தை பாவனியும், 4வது இடத்தை அமீரும், 5வது இடத்தை நிரூப் பிடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

                                  மாடியிலிருந்து பாய்ந்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மாடியிலிருந்து பாய்ந்தார் முதியவர்

                                  மாடியிலிருந்து பாய்ந்தார் முதியவர்

                                  வௌ்ளவத்தை பிரதேசத்திலுள்ள தொடர்மாடியொன்றின் 7ஆம் மாடியிலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                                  குறித்த நபர் 7ஆம் மாடியிலிருந்து கீழ் நோக்கி பாய்ந்துள்ளதாகவும் இதன்போது பலத்த காயமடைந்த நிலையில், களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளதாக வௌ்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

                                  இவ்வாறு உயிரிழந்தவர் வௌ்ளவத்தையைச் சேர்ந்த 87 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                  மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், குறித்த முதியவர் உளநல பாதிப்பால் இவ்வாறு தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

                                    யானை
                                    Posted in இலங்கை செய்திகள்

                                    வீதியால் சென்றவரை தாக்கிய யானை

                                    வீதியால் சென்றவரை தாக்கிய யானை

                                    வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை ஆற்றங்கரை பிரதான வீதியில் இன்று (16)

                                    யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார் என வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

                                    கொண்டயன்கேணியில் இருந்து இன்று அதிகாலை இருவர் காயான்கேணி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது, மீராவோடை ஆற்றங்கரை பிரதான வீதியில் வைத்து யானை தாக்கியுள்ளது.

                                    இதன்போது ஒருவர் தாக்கப்பட்டுள்ளதுடன், மற்றவர் தப்பியோடியுள்ளார். அவர்கள் பயணித்த சைக்கிளையும் யானை சேதப்படுத்தியுள்ளது.

                                    வாழைச்சேனை, கொண்டயன்கேணியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கே.தஸீஸ்கரன் (வயது 25) என்பவரே யானையால் தாக்கப்பட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில்

                                    அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

                                    யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்துக் காணப்படும் இப்பிரதேசத்தில் யானை வேலி அமைக்காவிட்டாலும் வீதி மின் விளக்குகளைப் பொருத்தியாவது தமது பாதுகாப்பை

                                    உறுதிப்படுத்துமாறு, வாழைச்சேனை பிரதேச சபையிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்கள் கண்டுபிடிப்பு

                                      இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்கள் கண்டுபிடிப்பு

                                      இலங்கையில் எண்ணெய் வளமுள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன

                                      தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தைத புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம ஆரம்பித்துள்ளது.

                                      இந்தத் திட்டத்திற்குத் தேவையான உபகரணங்களை 35 இலட்சம் ரூபா செலவில் பிரான்சிலிருந்து

                                      கொள்வனவுசெய்ய புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.