லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி
லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி
தெற்கு லெபனானில் உள்ள அரப் சலீம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலையில் அப்பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் கேட்டுக்கொண்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் எல்லா வாவேயா,
ஹிஸ்புல்லாவின் தளம் என்று அவர் கூறிய ஒரு கட்டிடத்தை சிவப்பு நிறத்தில் குறிக்கும் வரைபடத்தைப் பகிர்ந்து,
அதன் குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேறுமாறும், அருகிலுள்ள கட்டிடங்களிலிருந்து குறைந்தது 300 மீட்டர் தூரத்தில் விலகி இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.







